Wednesday, June 8, 2016


                   தமிழில் 'பிராமணரும்', 'திராவிடரும்'

                                காலனிய சூழ்ச்சியா?


'திராவிடர் கழகமும்', 'பிராமணர் சங்கமும்';


ஒரே காலனிய சூழ்ச்சியில் சிக்கிய, நாணயத்தின் இரு பக்கங்களா?


தமிழில் 'திராவிடர்' என்ற சொல்லின் அறிமுகமானது,  காலனிய சூழ்ச்சியா? என்ற ஆய்விற்குதவும் தகவல்களை ஏற்கனவே பார்த்தோம்.

“ஆங்கிலத்தில் உள்ள 'ரேஸ்' (Race) என்ற சொல்லானது, புவியியல் அடிப்படையிலும், உயிரணு அடிப்படையிலும், தெளிவாக வேறுபடுத்தி அடையாளம் காணப்படும் பொருளில் (as largely discrete, geographically distinct, gene pools) பயன்படுத்தப்பட்டது என்பதற்கான சான்றினை முந்தையப் பதிவில் பார்த்தோம்.

ஆனால் பழந்தமிழ் இலக்கியங்களில், 'இனம்' என்ற சொல்லானது, 'நல்லினம்', 'சிற்றினம்', 'தீயினம்' என்று மனிதர்களின் பண்புகள் அடிப்படையில் வகைபடுத்தப்பட்டு, பயன்படுத்தப்பதற்கான சான்றுகளை ஏற்கனவே பார்த்தோம். ('நல்லினத்தி நூங்குந் துணையில்லை தீயினத்தின், அல்லற் படுப்பதூஉம் இல் - திருக்குறள் 460'; https://tamilsdirection.blogspot.com/2015/05/normal-0-false-false-false-en-us-x-none.html)

மேலை நாடுகளில் , ஆங்கிலத்தில் 'ரேஸ்' (Race)  என்ற சொல்லானது, தமிழில் வழக்கில் இருந்த 'இனம்' என்ற மேலே குறிப்பிட்ட‌ பொருளில் பயன்படுத்தப்படவில்லை. அப்படியென்றால், ஆங்கிலேயர் வருகைக்குப்பின், 'ரேஸ்' என்ற ஆங்கிலச் சொல்லிற்கு, தமிழில் இருந்த 'இனம்' என்ற சொல்லை யார் முதலில் திரித்து அறிமுகப்படுத்தினார்கள்? என்பது ஆய்விற்குரியது. 

தமிழில் 'பண்' என்ற சொல்லிற்கும், சமஸ்கிருதத்தில் 'ராகம்' என்ற சொல்லிற்கும் இடையில் உள்ள வேற்றுமைகளைக் கருத்தில் சொள்ளாமல், 'தனித்தமிழ்' பற்றில், தமிழில் 'ராகம்' என்ற சொல்லிற்கு பதிலாக, மொழிபெயர்ப்புகளில்,  'பண்' என்ற சொல்லை அறிமுகப்படுத்திய தவறைவிட, மிக மோசமான தவறு மேற்குறிப்பிட்டதாகும்.” (‘தமிழர்களின் அடையாளச் சிதைவும், அரசியல் நீக்கமும் (depoliticize)  (4);  'இனம்' திரிந்த பொருளில் திராவிடர்?’;  http://tamilsdirection.blogspot.com/2015/06/depoliticize-4.html  )

அதே போல, தமிழில் 'பிராமணர்' என்ற சொல்லும், காலனிய நுழைவுக்கு முன் இருந்ததற்கு சான்றுகள், எனக்கு கிடைக்கவில்லை. சங்க இலக்கியங்களில் 'பிராமணன்' என்ற சொல் இல்லை;

'பார்ப்பார்', 'பார்ப்பான்','ஐயர்', ‘ஆரியர்’, என்ற சொற்கள் இருக்கின்றன.
இவை தவிர, 'அந்தணர்',  என்ற சொல்லும் இருக்கிறது.

தமிழில் 'சாதி' என்ற சொல்லுக்கு இன்றுள்ள பொருளானது, காலனியத்திற்குப் பின், ஏற்கனவே இருந்த பொருளை திரித்து, அறிமுகமானது, என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

“இன்றுள்ள 'சாதி அமைப்பு' என்பதானது,  காலனிய ஆட்சியில் புதிதாக உருவாக்கப்பட்டு, ஆனால் காலங்காலமாக இருந்து வந்த ஒன்றாக, படித்தவர்களும் ஏமாறும் அளவுக்கு பரப்பப்பட்ட சூழ்ச்சியா?”  என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். (‘தமிழர்களில் 'தற்குறிகளை' வளர்த்தது; 'பார்ப்பன சூழ்ச்சியா'? காலனி சூழ்ச்சியா  'காலதேச வர்த்தமான' மாற்றங்களுக்கு உட்படாமல்;  பெரியார் கட்சிகள் மரணமடைந்து வருகின்றனவா?’;
http://tamilsdirection.blogspot.com/2016/01/normal-0-false-false-false-en-us-x-none_31.html)

காலனியத்திற்குப்பின் அறிமுகமான 'பிராமணர்' என்ற சொல்லின் கீழ், அடையாளப்படுத்தப்பட்டுள்ள சாதிகள் எல்லாம், மேற்குறிப்பிட்ட 'பார்ப்பார், பார்ப்பான், ஐயர், அந்தணர், ஆரியர்' ஆகிய சொற்களுடன் தொடர்புடையவர்களா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

உதாரணமாக, 'ஆரியர்' என்ற சொல்லானது, யானையை பயிற்றுவிக்கும் திறமைசாலிகள் என்பது தொடர்பான  சான்று வருமாறு. 
‘ஆரியர் பிடி பயின்று தரூஉம் பெருங்களிறு போல’‌
அகநானூறு 276: 9 – 10

'பார்ப்பான்', 'பார்ப்பார்' என்ற சொற்களும், மரியாதைக்குரியவர்கள் வரிசையில் இடம் பெற்றிருந்தது, என்பது தொடர்பான சான்றுக‌ள் வருமாறு.
' 'தோழி, தாயே,பார்ப்பான், பாங்கன்,
  பாணன், பாட்டி, இளையர், விருந்தினர்,
  கூத்தர்,விறலியர், அறிவர், கண்டோர்,
  யாத்த சிறப்பின் வாயில்கள்' என்ப‌’ தொல்காப்பியம்: பொருள்: 4; 52

'பார்ப்பார் பசித்தார் தவசிகள் பாலர்கள்
காப்பார் தமையாதும் காப்பிலார் - தூப்பால‌
நிண்டாரால் எண்ணாது நீத்தவர் மண்ணாண்டு
பண்டாரம் பற்ற வாழ்வார்''  -   ஏலாதி 54

பிராமணர்களை இழிவுபடுத்தும் சொல்லாக, 'பார்ப்பான்' என்ற சொல்லை, 'பெரியார்' கொள்கையாளர்கள் பயன்படுத்துவதும், அச்சொல்லை இழிவாக கருதி, பிராமணர்கள் அச்சொல்லை தவிர்ப்பதும்,  ஒரே காலனிய சூழ்ச்சியில் இரு சாராரும், சிக்கியதன் விளைவுகளா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

மேற்குறிப்பிட்ட வரிசையில் இடம் பெற்றுள்ள, 'பார்ப்பார்' மனம் நோகும் வகையில் நடத்தப்பட்டதற்கும், சான்று உள்ளது.
‘ஆர் புனை தெரியல் நின் முன்னோர் எல்லாம்
பார்ப்பார் நோவன செய்யலர்; மற்று இது
நீர்த்தோ நினக்கு?' என வெறுப்பக் கூறி'
புறநானூறு 43: 13 – 15

வேள்வி செய்யாத 'பார்ப்பான்' எல்லாம், 'வேளாப் பார்ப்பான்' (அகநானூறு; 1- 2) என்று இழிவுபடுத்தப்பட்டிருந்தனர்.

'நால் வருணம்' தொடர்பான சான்றுகள் சங்க இலக்கியங்களில் உள்ளன. ஆனால் 'வருணம்' என்ற சொல்லானது,மேலே குறிப்பிட்ட பதிவில் விளக்கியபடி,  காலனியம் அறிமுகப்படுத்திய சாதி அமைப்பில், சிக்கிய சமூக செயல்நுட்பமும் ஆய்விற்குரியதாகும்.

சங்க காலத்தில், வருண அமைப்பானது, எவரும் கல்வி கற்று, சிறப்பிடம் பெறும் வகையில் இருந்தது என்பதற்கான சான்று வருமாறு.

‘வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும்,
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்,
மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே’
புறநானூறு 183  8  - 10

தமிழில் இருந்த 'இனம்', 'சாதி' போன்ற சொற்களை,  காலனிய சூழ்ச்சியில் திரித்து, அந்த திரிதலின் அடிப்ப‌டையில், 'பிராமணர்', திராவிடர்' என்ற சொற்களை அறிமுகப்படுத்தி, சமூக ஒப்பீடு (Social Comparison) நோயையும் 'வீரியத்துடன்' தூண்டி, எவ்வாறு 'உயர்வு, தாழ்வு, தீண்டாமை' நோய்கள் அரங்கேறின? என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

“மேற்குறிப்பிட்ட முறையில், இன்றுள்ள சாதி முறையை காலனி ஆட்சியாளர்கள் தமது சுயநலனுக்கு உருவாக்கி, இந்தியர்களை கீழாகவும், 'தீண்டத்தகாதவர்களாகவும்' நடத்தி, சமூக ஒப்பீடு நோயில் (Social Comparison Sickness), அந்த புதிதாக உருவாக்கப்பட்ட சாதியினரை சிக்க வைத்தனரா? அந்த சமூக ஒப்பீடு நோயில் சிக்கிய சாதியினர், தமக்கு 'கீழாக' கருதிய சாதியினரை இழிவாக, நடத்த, சாதி மோதல்களுக்கான விதையூன்றப்பட்டு, ஏற்கனவே இருந்து வந்த கல்வி, தொழில் முறைகளை சிதைத்து, புதிதாக அரங்கேறிய கல்வி, வேலை வாய்ப்புகளை 'தூண்டில் மீனாக' பயன்படுத்தி, வளர்க்கப்பட்டதா? இன்று வெளிநாட்டு நிதி உதவியில் என்.ஜி.ஓக்கள் அந்த வளர்ச்சி குன்றாமல், பாதுகாத்து வருகிறார்களா? காலனியத்திற்குப்பின் இன்று வரை நடந்து வரும் சாதிக்கலவரங்கள், காலனியத்திற்கு முன், தமிழ்நாட்டில் நடந்ததற்கு சான்றுகள் உண்டா? சமூக உயர்வு/தாழ்வு, மற்றும் தீண்டாமை ஆகிய நோய்களை, காலனி ஆட்சியாளர்கள், இந்தியர்கள் மனதில் 'செயல்பூர்வமாக' விதைத்து;

அந்த சமூக உளவியல் செயல் நுட்பமானது ( Social Psychological Mechanism), 'இயல்பில்' பலகீனமானவர்களின் பங்களிப்பில், அக சீரழிவை வளர்த்து, தனித்துவமான(Unique)  சமூக சீர்குலைவு பிரிவினை நோயாக வளர்ந்துள்ளதா? ஆக, இன்று தம்மை உயர்வாக கருதிக்கொள்ளும் சாதியினர் எல்லாம், அந்த காலனியம் அறிமுகப்படுத்திய 'சமூக ஒப்பீடு' மனநோயாளிகளா? என்பவையெல்லாம் ஆய்வுக்கு உரிய கேள்விகளாகும்.” . (http://tamilsdirection.blogspot.com/2016/01/normal-0-false-false-false-en-us-x-none_31.html

மனசாட்சியற்ற 'சமூக ஒப்பீடு' மனநோயாளிகளே, 'பெரியார் சமூக கிருமிகளாக' வளர்ந்தார்களா? என்று, 'திருச்சி பெரியார் மையம்' அனுபவங்கள் அடிப்படையிலும், ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளேன். அந்த 'கிருமிகள்' குறுக்கு வழிகளில் ஈட்டிய செல்வத்தில் மயங்கி, அந்த கிருமிகளுடன் 'நல்லுறவில்' வாழ்பவர்களும், அதே வகை மனநோயாளிகளா? விவாதத்தின் போது,  'அறிவுபூர்வ' போக்கிலிருந்து தடம் புரண்டு, விவாதத்தில் எதிர் நிலையில் உள்ளவரையும் விவாதத்திற்குள் கொண்டு வந்து, விவாதத்தை சீர்குலைய செய்யும் போக்கானது, ஆதிக்கமாக வலம் வர, அந்த மனநோயாளித்தனமானது காரணமானதா?(http://tamilsdirection.blogspot.com/2015/10/normal-0-false-false-false-en-us-x-none_26.html) என்பதும் அந்த ஆய்வில் இடம் பெற்றுள்ளது. மேற்குறிப்பிட்ட காலனிய சூழ்ச்சியில் சிக்கி, தனது அறிவு வரைஎல்லைகள்  (intellectual limitations) பற்றிய புரிதலின்றி, கீழ்வரும் நோயிலும் சிக்கி, ஈ.வெ.ரா பயணித்ததே, 'பெரியார் சமூக கிருமிகள்' உற்பத்தியாக வழி வகுத்ததா? என்பதும் அந்த ஆய்வில் இடம் பெற்றுள்ளது.

“காலனி ஆட்சிக்கு அடிமைப்பட்டு, 'அரசியல் விடுதலை' பெற்ற நாடுகளில் உள்ள மக்களில் பெரும்பாலோர், அதிலும் குறிப்பாக படித்தவர்கள், தமது பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் கேவலமாகக் கருதி, தம்மை அடிமைப்படுத்திய மேற்கத்திய நாகரிகத்தை உயர்வாகக் கருதும் தாழ்வு மனப்பான்மையிலான 'மன நோய்க்கு' ஆளாக அதிக வாய்ப்புகள் உள்ளது. இந்த வகை மன நோய் ‘cultural cringe’- பண்பாட்டு அடிமைச் சேவக மனப் பாங்கு - என்று அழைக்கப் படுகிறது. அது ‘பண்பாட்டு அந்நியமாதல்’ -  "cultural alienation" - என்பதுடன் நெருக்கமாகத் தொடர்புடையதாகும்.

அத்தகைய மன நோயால் பாதிக்கப்பட்ட மக்கள் தமது சமூக வரலாறு பற்றி அறிவதில் ஆர்வமின்றி, அவை பற்றிய குறைவான அறிவுடன் நடை, உடை, பாவனை, இசை, தொலைக்காட்சி உள்ளிட்டு அனைத்திலும் அமெரிக்காவில் உள்ளதைப் போன்றவைக்காகப் 'பசியுடன்' (an appetite for all things American) வாழ்வார்கள். http://en.wikipedia.org/wiki/Cultural_cringe ) காலனிய ஆதிக்கத்திலிருந்து விடுதலைப் பெற்ற ஆப்பிரிக்க நாடுகளில், மேற்குறிப்பிட்ட சமூக மன நோயிலிருந்து தமது மக்களை மீட்க, அந்தந்த நாட்டு பேராசிரியர்கள் முயன்று வருகிறார்கள்.” (‘'காலனிய' மனநோயாளிகளும், 'திராவிட' மன நோயாளிகளும்’; http://tamilsdirection.blogspot.com/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_8.html  ) அந்நாடுகளில் உள்ள மொழிகளில் இருந்த சொற்களின் பொருளையும், காலனிய சூழ்ச்சியில் திரித்தது தொடர்பான ஆய்வுகளையும், தேடி வருகிறேன்.

'பிராமணர்'என்ற சொல்லும், 'சாதி' என்ற சொல்லும், நேர்க்குத்து (Vertical)  தரவரிசையிலான (hierarchical)  கிறித்துவ அணுகுமுறையில்,  இந்திய மொழிகளில் என்னென்ன வழிகளில் நுழைந்து, சமூக ஒப்பீடு (Social Comparison) நோயில், இந்திய சமூகத்தை சீரழித்த, சமூகசெயல்நுட்பம் (Social Mechanism) பற்றி, எவரேனும், முனைவர் பட்ட ஆய்வுகளில் ஈடுபட விரும்பினால், அவர்களுக்கு என்னால் இயன்ற உதவிகளை புரிய இயலும்

“இன்று நிலவி வரும் சாதிகள் சங்க கால சமூகத்தில் இருந்ததற்கு சான்றுகள் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் விவசாயம்,மீன்பிடித்தல் உள்ளிட்டு அனைத்து பொருளீட்டல் துறைகளில் ஈடுபட்டிருந்த சமூகப் பிரிவுகளைச் சார்ந்தவர்கள் பறைவகை இசைக் கருவிகளை இசைத்தற்கு நிறைய சான்றுகள் சங்க இலக்கியங்களில் உள்ளன. அது மட்டுமல்ல குடிமகனுக்கான(citizen)  வரையறையை கீழ்வரும் சான்று வெளிப்படுத்தியுள்ளது இன்னும் வியப்பைத் தரவல்லதாகும்.

“துடியன், பாணன், பறையன், கடம்பன், என்று
இந்நான்கு அல்லது குடியும் இல்லை; ”
புறநானூறு 335:  7 -  8


துடியன், பாணன், பறையன், கடம்பன் ஆகியோர் இசைப் புலமையுடன் வெவ்வேறு வகையிலான இசைக் கருவிகளை இசைப்பதில் வல்லவர்கள் ஆவர்.துடியன், பாணன், பறையன்,பற்றிய சான்றுகள் சங்க இலக்கியங்களில் பல உள்ளன. கடம்பன் பற்றிய சான்றுகள் குறைவே.பறை என்பது குறிப்பிட்ட வகையிலான பல தாள இசைக்கருவிகளைக் குறிக்கும் சொல்லாகும்.


சங்க காலத்தில் குடிமக்கள் என்போர் ஏதாவது ஒரு வகை இசைக் கருவியை இசைப்பதில் வல்லவர்களாக இருந்தனர் என்பது தெளிவாகிறது. அவ்வாறு இசைத்தவர்கள் சாதி அடிப்படையிலோ, தொழில் அடிப்படையிலோ உயர்வு தாழ்வு கற்பிக்கப்பட்டனர் என்பதற்கு சான்றுகள் இல்லை. செவ்விசை, நாட்டுப்புற இசை என்ற பிரிவுகளோ, அவற்றின் அடிப்படையில் உயர்வு தாழ்வோ இருந்ததற்கான சான்றுகளோ இல்லை. (‘இசையில் ' தீண்டாமை' காலனியத்தின் ‘நன்கொடை’யா?’; http://tamilsdirection.blogspot.com/2013/11/normal-0-false-false-false-en-us-x-none_13.html )
 


மேலே குறிப்பிட்ட காலனிய சூழ்ச்சியில் சிக்கியதன் காரணமாகவே, எண்ணற்றோரின் விலைமதிப்பில்லாத தொண்டும்,  தியாகமும்,  தமிழ்நாட்டை கீழ்வரும் விளைவிற்குள்ளாகியது, என்பதும் முக்கியமாகும்.

“தனிமனித அளவில் பாராட்டுக்குரியவர்களும் எதையும் தவறாகத் தொடங்கினால், அதன் பயணத்தில் தவறான மனிதர்கள் தலையெடுத்து மிகவும் பாதகமாகவே முடியும்.தமிழ் மொழியைக் காட்டுமிராண்டி மொழியாகவும்,  தமிழ் பாரம்பரியத்தை  தமிழரின் கேடாகவும் கருதிய பெரியாரின் முயற்சியானது, நோய் பிடித்த தாவரத்தின் நோயாக அதன் ஆணி வேரையே கருதி, அகற்றிய‌ வைத்தியமாகிவிட்டது.” ( http://tamilsdirection.blogspot.in/2013_10_01_archive.html )

தமிழ்நாட்டில் 'திராவிடர் கழகமும்', 'பிராமணர் சங்கமும்', ஒரே காலனிய சூழ்ச்சியில் சிக்கிய, நாணயத்தின் இரு பக்கங்களா? என்பதும் ஆய்விற்குரியதாகும். (குறிப்பு கீழே) 'சுயநல கள்வர்களாக' வாழும் 'பெரியார் சமூக கிருமிகளும்', பிராமணர்'களிடையே வாழும் சமூக கிருமிகளும்,  புறத்தில் 'எதிரிகளாக' 'காட்சி' தந்து, அகத்தில் ஒரே வகை சீரழிவுக்குள்ளாகி, ஒருவரையொருவர் 'இரகசியமாக'  காப்பாற்றி, தமிழ்நாட்டை சீரழித்து வருகிறார்களா? 1967க்கு முன்பிருந்தது போலின்றி, இன்று தமிழிலும்  ஆழ்ந்த புலமையின்றி, ஆங்கில நூல்களையும்/இதழ்களையும் படிக்கும் அறிவை வளர்ப்பதில் ஆர்வமும், உழைப்பும் இன்றி, பொது அரங்கில் 'ஆதிக்கத்துடன்' உணர்ச்சிபூர்வமாக‌ வலம் வருகிறார்களா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

அதன் தொகுவிளைவாக (Resultant), இந்தியாவில் தமிழ் மொழியும், பாரம்பரியமும், பண்பாடும், 'தனித்துவமாக' (Unique) வீழ்ச்சிக்குள்ளானதா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

உணர்ச்சிபூர்வ போக்குகளிலிருந்து விடுதலையாகி, அறிவுபூர்வ விமர்சனங்கள் மூலம், தமது கொள்கைகளையும், நிலைப்பாடுகளையும், நெறிப்படுத்திக்கொண்டு, பொதுவாழ்விலும், மனித உறவுகளிலும், 'சுயலாப கள்வர்' நோயில் சிக்காமல் பயணிப்பதன் மூலமே, தமிழும், தமிழரும், தமிழ்நாடும்,  மீட்சி திசையில் பயணிக்க முடியும். தமிழ்நாட்டின் அரசியல் வெளியானது (Political Space) காலியாகி விட்டதை, 2016 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் உணர்த்தியுள்ள நிலையில்,(http://tamilsdirection.blogspot.com/2016/05/normal-0-false-false-false-en-in-x-none.html) மீட்சிக்கான முயற்சிகள்,  வெற்றி பெறும் காலமும் நெருங்கி விட்டது.

குறிப்பு :

1. இந்திய விடுதலை நாளை, கடந்த 69 வருடங்களாக, ஈ.வெ.ராவைப் போலவே, 'அகில பாரதீய இந்து மகாசபையும்' துக்க தினமாக, கறுப்பு கொடி ஏற்றி அனுசரித்து அனுசரித்து வருகிறார்கள். http://www.coastaldigest.com/index.php/news/90118-indias-independent-day-is-black-day-for-hindu-mahasabhaகாலனி ஆட்சியை ஆதரித்ததாக குற்றம் சாட்டப்படும் ஈ.வெ,ராவும், இந்து மகாசபையும், காலனி ஆட்சியில் அனுபவித்த கொடுமைகள் அளவுக்கு, காங்கிரஸில் காந்தி‍-நேரு ஆதரவாளர்கள் அனுபவித்தார்களா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

2.சாதி அமைப்பு தொடர்பான ஆய்வு கட்டுரைகளை படிக்க;  https://groups.google.com/forum/#!topic/mintamil/uIhHgnWQ8u0


3. Language is therefore discredited as an ethnological factor. …….. but in any case the linguistic division of the tongues of India into the Sanskritic and the Tamilic counts for nothing in that problem. From: https://www.facebook.com/groups/1633520656906980/1637444939847885/ 

Monday, June 6, 2016



                     A brief on Jayamohan’s article on EVR

My attention was drawn to the following article;
'பெரியாரின் பிராமணர் எதிர்ப்புக்கு காரணம் தெரியுமா? எழுத்தாளர் ஜெயமோகன் சர்ச்சை கருத்து'

Jayamohan's Tamil book on Gandhi, had refutable blunders. Few years before, I paid the price & got the book from Pudukkottai Gnanalaya Krishnamoorthy. I started marking the portions that I could refute with the evidences. Meanwhile Gnanalaya Krishnamoorthy got the book from me, and did not return it till now. Due to lack of time, I could not work on it.

My close friend in Pudukkottai,  Thiru.Kodandapani had collected valuable references to expose Gandhi. (‘Was Mahatma Gandhi a hypocrite?’;http://www.dailyo.in/politics/mahatma-gandhi-subhas-bose-ahimsa-non-violence-british-raj-independence/story/1/4756.html ) Hope both of us will find time to work on those evidences, to bring out a book against ‘Gandhi Mania’; reason weakening, emotion banking based ‘myth making’ of the Indian leaders (like Gandhi, Nehru, EVR, etc), fuel, all kinds of anti-social, divisive forces. Encouraging emotion free, open minded intellectual debates, may help to combat the mania (without ignoring – like Jayamohan w.r.t EVR-  their sacrifices), strengthening the soft power to unify the people & to rescue the country from the divisive forces.

The soft power is a double edged weapon w.r.t unifying as well as disintegrating a country like India. The above mania, by encouraging emotions to dominate over reason,  weaken the soft power for ‘unifying the country’, while strengthening the soft power for disintegrating the country. For example the hard power of the Kashmir militants is not as powerful as the ‘soft power’ of the ‘regional chauvinistic’ state govts , in inter-state disputes, for disintegrating the country. Also unless the invisible bond (aided by the above mania, and most of the foreign funded NGOs) between the soft power and the hard power of the disintegrating forces, are exposed and weakened, they may very well succeed, with the timing under the control of the dynamics of the world vested interests.

In fact I concur with Godse's stand on Gandhi ( though I disapproved the assassination, the wrong way to oppose a person)  & surprisingly EVR exposed some them in in 1930s & 1940s in his weekly 'Kudi Aracu- குடி அரசு'.

I suggest to ‘Periyar’ parties to bring out a collection of  EVR’s articles on Gandhi, in 'குடி அரசு'.  ( some of them unbelievably humorous under the pen name ‘Chiththira Puththiran- சித்திர புத்திரன்’)   I am willing to support it, to the extent possible at my end.

Similarly Jayamohan's article on EVR was written, without referring to all the evidences.

For example, Why did EVR seek the support of Rajaji & his Brahmin supporters for his ' independent Dravida Nadu" & why they openly supported the demand? (‘Good that Dravida Nadu was not separated- நல்லவேளை, திராவிடநாடு பிரியவில்லை’; http://tamilsdirection.blogspot.in/2015/04/normal-0-false-false-false-en-us-x-none_21.html )

Probably Jayamohan did not refer to EVR's address in a Chennai Brahmins' forum, published in  Anaimuthu's 'Periyar EVR's Thoughts- ஆனைமுத்துவின் 'பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள் தொகுப்பு'.  

The above article suggests that Jayamohan may be suffering from the ‘Social Colour Blindness’ w.r.t EVR (as 'black') & Gandhi (as 'white'). (http://tamilsdirection.blogspot.in/2013/12/normal-0-false-false-false-en-us-x-none_4.html )  

In my view, had EVR been alive, he would have openly supported Modi ( like he supported Kamaraj) & the present RSS stand against caste & religion based discrimination. EVR had supported Telugu Brahmin atheist Gora & joined with him in some programme in Coimbatore. Note that EVR had supported uniform civil code till his death. 

Note: In the previous post, I had included Jayamohan in the list of the role models, who had educated their children in the Tamil medium Govt schools.


Thursday, June 2, 2016


தமிழ் அழிவு சுனாமியிலிருந்து தமிழை மீட்க முடியுமா?


‘சுயலாப பொதுவாழ்வு வியாபார’ நோக்கின்றி, தமிழ்வழிக்கல்வி மீட்பு முயற்சிகளில் ஈடுபட்டுளோர் பார்வைக்கு, கீழ்வரும் தகவல்கள்.

அத்தகையோரின் அனுபவங்களையும் தெரிந்து கொண்டு, என‌து முயற்சிகளை வளர்த்துக் கொள்வதிலும், ஆர்வமுடன் உள்ளேன்.

ஆங்கில வழி 'கான்வெண்ட்' பள்ளிகளுக்கு இணையாக,  கழிவறை, குடிநீர், வகுப்பறை, ‘வகுப்புக்கு ஒரு ஆசிரியர்’  என்ற சிறப்புடன், திருச்சி விமான நிலையத்திலிருந்து கே.கே.நகர் செல்லும் வழியில் உள்ள, ‘அன்னை ஆசிரமம்'  நடத்தும் தமிழ்வழி, அரசு உதவி பெறும் (Aided)  ஆரம்பப் பள்ளி உள்ளது. எனது தூண்டுதல் மற்றும் ஆதரவின் அடிப்படையில், அந்த பள்ளி நிர்வாகம்,  ஒரு துண்டறிக்கையை அச்சிட்டு அப்பகுதி பெற்றோர்களிடம் விநியோகித்துள்ளார்கள்.  குழந்தைகளின் புலன் அறிவு மூளை வளர்ச்சிக்கு (Cognitive skills related brain growth),  10 வயது வரை, தாய்மொழி வழியில் படிப்பதே சிறந்தது, என்பது தொடர்பான உலக அளவிலான‌ ஆய்வு முடிவுகள்,  அதில் உள்ளன. வரும் சூன் மாணவர் சேர்க்கையில்,  அதன் பலன் தெரியும். அதன்பின் அம்முயற்சியை விரிவுபடுத்த எண்ணியுள்ளேன். 

'கான்வெண்ட்' பள்ளிகளுக்கு இணையாக தமிழ்வழி பள்ளிகள் இருந்து, இலவச கல்வி வழங்கினாலும், அதில் தமது பிள்ளைகளை சேர்க்க, பெற்றோர்களுக்கு விருப்பமில்லை.  ('ஒரு பள்ளி, ஒரு மாணவன், இரு ஆசிரியர்கள் சேர்க்கைக்கு பெற்றோர்களிடம் கெஞ்சும் அவலம்'; http://www.dinamalar.com/news_detail.asp?id=1533588 ) ஏழைகள் கூட , கடன் வாங்கி நர்சரி பள்ளிகளில் படிக்க வைத்து, 3ஆம் வகுப்புக்கு மேல் பணம் கட்ட முடியாமல், தமிழ்வழிப் பள்ளிகளில் சேர்ப்பதும் நடக்கிறது. அதன் தொடர்விளைவாக, அந்த பெற்றோர்களும், அவ்வாறு தமிழ்வழியில் படிக்கும் பிள்ளைகளும், தாழ்வு மனப்பான்மைக்கு உள்ளாகிறார்கள். 

எனவே இளம் மருத்துவர்கள், பொறியாளர்கள், விரிவுரையாளர்கள் என்று படித்தவர்கள் பார்வைக்கு, மேலே குறிப்பிட்ட ஆய்வு முடிவுகளை கொண்டு சென்று, அவர்கள் தமது பிள்ளைகளை தமிழ் வழியில் சேர்க்க தூண்டும் நோக்கிலும் செயல்பட்டு வருகிறேன். அதன்பின் அவர்கள் வழியில், மற்றவர்களும், கிராமங்கள் வரை, தங்கள் பிள்ளைகளை, தமிழ்வழியில் படிக்க வைக்க வாய்ப்பிருக்கிறது. ஏற்கனவே சில அய்.ஏ.எஸ் அதிகாரிகளும், ஜெயமோகன் உள்ளிட்ட எழுத்தாளர்களும், தமது பிள்ளைகளை தமிழ் வழி அரசு பள்ளிகளில் படிக்க வைத்த செய்திகளும்,  ஊடகத்தில் வெளிவந்துள்ளன. 

அந்த நோக்கில், அண்மையில் சந்தித்த விரிவுரையாளார் ஒருவர் , தமது 3 வயது குழந்தையை, ஆங்கில வழி நர்சரி பள்ளியில் சேர்ப்பதில்லை என்றும், 5 வயதில் தமிழ்வழி பள்ளியில் சேர்ப்பதாகவும் தெரிவித்துள்ளார். அவருக்கு அனுப்பிய, உலக அளவிலான ஆய்வுகள் கீழே.  அவருடனும், அதே போல் இன்னும் பலரிடமும்,  நடத்திய உரையாடலில் கீழ்வரும் தகவல்களும் வெளிப்பட்டன‌.

1970களின் பிற்பகுதியில் தான், ஆங்கிலவழி மெட்ரிகுலேசன் பள்ளிகள் புற்றீசல் போல் வளரத் தொடங்கின. எனவே இன்று சுமார் 50 வயதுக்கும் மேல் வாழ்பவர்கள் (தமிழ் பத்திரிக்கைகளை காசு கொடுத்து வாங்கி படிப்பவர்கள்) பெரும்பாலும் உயர்நிலைக் கல்வி வரை,  தமிழ்மொழி வழியில் படித்தவர்கள் ஆவர். சுமார் 40 வயதுக்கும் குறைவானவர்களில் பெரும்பாலோர் ஆங்கிலவழிக் கல்வியில் பயின்றவர்கள் ஆவர். (தமிழ் பத்திரிக்கைகளை பெரும்பாலும் படிக்காதவர்கள்; அரசு பள்ளிகளில் படித்தவர்கள் விதி விலக்கு ) ஒப்பீட்டளவில், ஆங்கிலவழிக் கல்வியில் பயின்ற அவர்களில் பெரும்பாலோர், சுயநலவாதிகளாகவும், சமூக ஒழுக்க நெறிகளை சுயநலத்திற்கு எளிதில் காவு கொடுப்பவர்களாகவும்,  உள்ளனர்.  அந்த சுயநல போக்கில் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் எல்லாம், பெரும்பாலும் அவர்களின்,  அடிப்படைக் கல்வியை (Primary Education)  ஆங்கிலவழிப் பள்ளிகளில் படிக்க வைத்த, அவர்களின் பெற்றோர்களாக இருக்கிறார்கள். அது கீழே உள்ள ஆய்வுகளோடும்  ஒத்து  போகிறது. அந்த பெற்றோர்களில் பலர் வெளியில் சொல்ல முடியாமல் அனுபவிக்கும் துயரங்களில், +2, கல்லூரி மாணவ/மாணவிகளாக இருக்கும் தமது பிள்ளைகள் எல்லாம், மனத்தளர்ச்சி (depression), தற்கொலை (suicide), போதைப்பொருட்களைப் பயன்படுத்துதல்(drug use) போன்றவற்றில் சிக்கி, குடும்பத்திலும் உறவுகளை சீர்குலைக்கும் வகையில் செயல்படுவதும், இடம் பெறுகின்றன.

தாய்மொழியில்லாத ஆங்கிலவழிக் கல்வியின்,  'சமூக நன்கொடைகளே'(?) இவை என்பதையும், ஏற்கனவே பார்த்தோம். (‘தமிழின் மரணப் பயணம் துவங்கிவிட்டதா? (3): சமூகத்தின் சீரழிவும், இலக்கணத்தின் வீழ்ச்சியும்’; http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_27.html )

‘மக்களின் மொழியும் அவர்களின் அடையாளமும் நெருக்கமான தொடர்புள்ளவையாகும். தமது மொழி பயனற்றது என்று கருதும் மக்கள், தமது அடையாளமும் பயனற்றது என்றே கருதுவார்கள். அதன் விளைவாக அச்சமூகத்தில் சமூக சீர்குலைவு (social disruption), மனத்தளர்ச்சி (depression), தற்கொலை (suicide) , போதைப்பொருட்களைப் பயன்படுத்துதல்(drug use)  போன்றவை அதிகரிக்கும். ‘ (http://news.bbc.co.uk/today/hi/today/newsid_8311000/8311069.stm)


கணித மேதை ராமானுஜம், நோபெல் பரிசு பெற்ற சர்.சி.வி.ராமன் மற்றும் சந்திரசேகர், அப்துல் கலாம், மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்ட விஞ்ஞானிகளும், புதுமைப்பித்தன், கல்கி உள்ளிட்ட எழுத்தாளர்களும், அது போல, உலக அளவிலான சாதனையாளர்கள் அனைவருமே, அடிப்படைக் கல்வியை தாய்மொழிவழியில்  படித்தவர்கள் ஆவர். அடிப்படைக் கல்வியை தாய்மொழியில்லாத ஆங்கில வழியில் படித்து, சாதனை புரிந்தவர்கள் எவராவது இருக்கிறார்களா? தமிழ்நாட்டில் அடிப்படைக் கல்வியை ஆங்கிலவழியில் படித்தவர்கள் எல்லாம், சாதனையாளர்களாக வெளிவர வாய்ப்பில்லையா?  இல்லை என்பதையே, உலக அளவிலான ஆய்வுகள் தெளிவுபடுத்தியுள்ளன.

இன்றுள்ள சூழலில் 5ஆவது வரை, தமிழ் வழியிலும், அதன்பின் ஆங்கில வழியிலும் குழந்தைகளை படிக்க வைப்பதே புத்திசாலித்தனம் ஆகும். தமிழ்வழியில் அடிப்படைக் கல்வியை முடித்து,  10 வயதுக்கு மேல், ஆங்கில‌வழி பயிலும் மாணவர்கள் எல்லாம், 10 வயது வரை, தாய்மொழியில்லாத ஆங்கிலவழியில் படித்த மாணவர்களை விட,  நன்கு படிப்பார்கள் என்பதையும், கீழேயுள்ள‌ ஆய்வுகள் குறிப்பிட்டுள்ளன. 

குறுக்கு வழிகளில் மதிப்பெண்கள் பெற்று, 'அரசியல் தொடர்புகள்' மூலம் பேராசிரியர்கள், துணைவேந்தர்கள் என்று வளர்ந்த போக்கும், குழந்தைகளின் புலன் அறிவு மூளை வளர்ச்சிக்கு பாதகமான,‌ ஆங்கிலவழிப் பள்ளிகள் வளர்ந்த போக்கும், ஒன்றுடன் ஒன்று தொடர்புடையனவா? என்பது ஆய்விற்குரியதாகும். 'ஒழுக்கக்கேடான' குறுக்கு வழிகளில், 'அரசியல் தொடர்புகள்' மூலம்,  'செல்வர் ஆகி', 'மதிக்கத்தக்க வாழ்வியல் புத்திசாலி' (?) 'முன்மாதிரியானவர்கள்' (Role model), எவ்வாறு 'தமிழ் வேர்க்கொல்லி'களாகவும், சமூக நோய்க்கிருமிகளாகவும், பங்காற்றுகிறார்கள்? என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். (http://tamilsdirection.blogspot.in/2015/11/normal-0-false-false-false-en-us-x-none_16.html )

ஒழுங்காக படித்து, இன்று மருத்துவர்களாகவும், பொறியாளர்களாகவும், விரிவுரையாளர்களாகவும் இருப்பவர்களால், அல்லது அவ்வாறு படித்து பிறதுறைகளில் இருப்பவர்களால்   மட்டுமே,  இந்த ஆய்வுகளை படித்து விளங்கிக் கொள்ள முடியும்.  எனவே அத்தகையோர் பார்வைக்கு,  இந்த ஆய்வுகளை கொண்டு சென்றால் மட்டுமே, தமிழ்வழிக்கல்வி புத்துயிர் பெற முடியும்.

தமது குழந்தையை தமிழ்வழியில் சேர்க்க முடிவு செய்துள்ள விரிவுரையாளருக்கு,  நான் அனுப்பிய ‘Research references ;

1.     தமிழ்வழி வீழ்ச்சியும் மீட்சியும்’

From : http://tamilsdirection.blogspot.in/2013/10/normal-0-false-false-false-en-us-x-none_24.html 

2. ‘Children Learn Better in Their Mother Tongue; Advancing research on mother tongue-based multilingual education’; http://www.globalpartnership.org/blog/children-learn-better-their-mother-tongue 

3.  All the international forums like UNESCO, the World Bank, World Declaration on ‘Education for All’ (EFA), the UNO General Assembly’s Convention on the Child’s Rights etc has stressed to educate children at least at primary level using mother tongue as medium of instruction. Because researches have shown that mother tongue-based schooling significantly improves learning.’;  http://www.isaet.org/images/extraimages/P1214011.pdf 

4.‘when learners start school in a language that is still new to them, it leads to a   teacher-centred approach and reinforces passiveness and silence in classrooms. This in turn suppresses young learners’ potential and liberty to express themselves freely. It dulls the enthusiasm of young minds, inhibits their creativity, and makes the learning experience unpleasant. All of which is bound to have a negative effect on learning outcomes.’

Angelina Kioko is a professor of English and Linguistics at United States International University, Nairobi, Kenya. 

https://www.britishcouncil.org/voices-magazine/why-schools-should-teach-young-learners-home-language 
(1950-களிலிருந்தே, யுனெஸ்கோ(UNESCO) உள்ளிட்டு, மேற்குறிப்பிட்ட ஆய்வுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. ஈ.வெ.ராவின் பார்வைக்கு, அந்த ஆய்வுகள் போயிருந்தால், அவர் 'தாய்ப்பால் பைத்தியம்' என்று, தாய்மொழி வழிக் கல்வியை இழிவுபடுத்திய தனது தவறுக்கு, பகிரங்கமாக வருத்தம் தெரிவித்து, தாய்மொழிவழிக் கல்வியை ஆதரித்து அறிக்கை விட்டிருப்பார். இன்றுள்ள 'பெரியார்' கட்சிகளாவது, அதைச் செய்வார்களா?)

சென்னையில் ஏரிகள், ஆறுகள் உள்ளிட்ட நீர்பிடிப்பு பகுதிகள் எல்லாம் , ஊழலின் கோரப்பசிக்கு இரையானதை எதிர்க்காத 'சமூக குற்றம்' காரணமாக, சென்னை மக்கள் வெள்ள பாதிப்புகளில் சிக்கினார்கள்.

அதே போல் தமிழ் அழிவு சுனாமி அறிகுறிகள் பற்றிய  கவலையின்றி, ‘நாமும்,  நமது குடும்பமும் பிழைத்தால் போதும்’ என்று நாம் வாழ்கிறோமா? அதன் விளைவாக, இன்னும் 2 தலைமுறைகளில், நமது வாரிசுகள் எல்லாம், தமிழில் படிக்கவும், எழுதவும், பேசவும் தெரியாத, தமிழ் வேரழிந்த, உலக அகதிகளாக வாழ்வதை, தவிர்க்க முடியுமா?

தமிழ்நாட்டில் விளையாட்டுப் பள்ளி(Play School)  முதல் ஆங்கில வழியில் படித்து, இன்று +2 மற்றும் கல்லூரி மாணவர்களாயிருக்கும் பலருக்கு,  தமிழில் சரளமாக எழுதவும், படிக்கவும் தெரியாது, என்பது தமிழ் அழிவு சுனாமி அறிகுறியாகும். தமிழ்வழிக்கல்வியின் (எனவே தமிழின்) மரணத்துடன், கூடவே பாரம்பரியம், பண்பாடு உள்ளிட்டவற்றையும் இழந்து, சமூக கிருமிகளின் ஆதிக்கத்தில், தமிழ் வேரற்ற 'தமிங்கீலிசர்களின்' நாடாக, தமிழ்நாடு மாறிவரும் போக்கை கண்டு கொள்ளாமல்; ('தமக்கென வாழா மன நோயாளிகள்'; http://tamilsdirection.blogspot.in/2015/02/12_17.html ) அப்போக்கு வெற்றி பெறுமானால், 'பெரியார்' மூலம் உருவான‌ 'சமூக கிருமி'களின் பங்களிப்பால், வரலாற்றில் ஈ.வெ.ரா குற்றவாளியாகவே, அவரின் (அவர் வழியில் என் போன்ற எண்ணற்றவர்களின்) சுயநலம் பாரா உழைப்பும் தியாகமும் பயன்பட்டதாக, கருதப்படாதா? என்ற கவலையும் இருக்கிறது. ( http://tamilsdirection.blogspot.in/2015/11/normal-0-false-false-false-en-us-x-none_16.html


குறிப்பு:
படிக்கும் போதே கண்களில் நீரை வரவழைத்த, நம்பிக்கையூட்டிய செய்தி:
‘புதுக்கோட்டை - வல்லம்பக்காட்டில் முன்மாதிரி அரசுப் பள்ளியாக மாற்றியமைத்த கிராம மக்கள்’;
http://tamil.thehindu.com/tamilnadu/