Tuesday, August 22, 2017

ஏழைகள் இந்தி படிக்கும் வாய்ப்பு ஒழிய காரணமான, 1965 இந்தி எதிர்ப்பு போராட்டம்;


சமூக சாபத்திலிருந்து (Social Curse), நான் விடுதலை பெறும் ‘பரிகார  வாய்ப்பு’


என்னால் இயன்றவரை, அவர்களின் வியக்கத்தக்க கூறுகளை அகவயப்படுத்தி (internalize) வாழ, நான் வாழ்வில் எனக்கு முன்மாதிரியாக (Role Model) கருதியுள்ளவர்களில் ஒருவர்,  திருச்சி அன்னை ஆசிரமத்தின் தலைவராக இருந்து மறைந்த காமாட்சி ஆவார். 

அன்னை ஆசிரமத்தை நிறுவிய வீரம்மாளையும், காமாட்சி அம்மாளையும், புகழ் போதையில் சிக்காமல், 60, 70, 80 வயதுகள் நிறைவடைந்த காலங்களிலும் பிறந்த நாட்களை கூட கொண்டாடாமல், சாதி, மத வேறுபாடுகள் அற்ற, பிரமிக்க வைக்கும் சாதனைகள் புரிந்தவர்களாக, நான் வியந்து பாராட்டுகிறேன்; அன்னை தெரசா பற்றிய கீழ்வரும் 'சர்ச்சைகளுக்கு' இடமின்றி, அவர்கள் பயணித்துள்ளதையும் கருத்தில் கொண்டு.

‘அன்னை தெரசாவுக்கு மத மாற்றம் நோக்கம் இருந்தது; என்பது மட்டுமல்ல, அந்த நோக்கத்திற்காக அவர் செய்தது உண்மையில் 'சேவையா'? அந்த 'சேவைக்காக' அவர் பெற்ற நிதிகளில் என்னென்ன முறைகேடுகள் நடந்தன? 'அவ்வாறு' நிதி சேகரிக்க, இந்திராகாந்தியின் 'நெருக்கடி கால' ஆட்சியை ஆதரித்தது  மட்டுமன்றி, உலக அளவில் 'சர்வாதிகாரிகளுடன்' அன்னை தெரசா எந்த அளவுக்கு நெருக்கமாக இருந்தார்?’
(‘திருக்குறள் 'அறிவில்' 'அன்னை தெரசா' ; ஆர்.எஸ்.எஸ் தலைவர் கருத்து  சரியா?  தவறா?; http://tamilsdirection.blogspot.in/2015/02/blog-post.html ) 

குழந்தைகளுடன் கணவனால் கைவிடப்பட்டு, திருச்சி அகில இந்திய வானொலி நிலையத்தில் பணியாற்றிய வீரம்மாள், தொலை தொடர்பு துறையில் பணியாற்றி வந்த காமாட்சி, ஆகிய இரண்டு 'தலித்' பெண்கள் சேர்ந்து, சாதி, மத பேதமின்றி பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அடைக்கலம் கொடுக்க ஆரம்பிக்கப்பட்டதே அன்னை ஆசிரமம் ஆகும்.

அவர்களின் பிரமிக்க வைக்கும் அர்ப்பணிப்பைப் பார்த்து, நம்ப முடியாத அளவுக்கு உதவிகள் செய்த அந்த வானொலி நிலைய இயக்குநர், திருமணமாகாமல் கல்லூரி பேராசிரியையாகவும், மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியயையாகவும், அவை போன்ற பணிகளிலும் பணியாற்றி, பணி ஒய்வு பலன்களான பல லட்சம் ரூபாய்களையும், ஓய்வு ஊதியத்தையும் அன்னை ஆசிரமத்திற்கே வழங்கி, அங்கேயே தங்கி ஆசிரமப் பணிகளில் ஈடுபட்டுள்ள பிராமண, பிராமணரல்லாத மூத்த பெண்டிரும், எனக்கு வணங்கத் தகும் தெய்வங்களாகவே தெரிகிறார்கள். 

அதே திருச்சியில் அன்னை ஆசிரமத்திற்கு முன் ஈ.வெ.ரா அவர்கள் தொடங்கிய அது போன்ற அமைப்பானது, எவ்வாறு செயல்பட்டது? என்பதை 'பெரியார்' இயக்கத்தில் பயணித்த காலத்தில் அறிவேன். இன்று எப்படி இருக்கிறது? என்று தெரியாது. 


எனது அறிவு அனுபவ அடிப்படைகளில், ஈ.வெ.ரா அவர்கள் தோற்ற இடத்தில், வீரம்மாளும், காமாட்சி அம்மாளும் பிரமிக்கும் வகையில் வெற்றி பெற்றுள்ளார்கள்;


என்பது  ‘semi empirical hyphothesis  அரை 'எம்பிரிகல்' கருதுகோள்’   ஆகும்.

 
வெறுப்பு அரசியலில் இருந்து தமிழையும், தமிழர்களையும், தமிழ்நாட்டையும் 'விடுதலை' செய்து, சாதி மத பேதமின்றி அனைத்து தரப்பிலும் சுயலாப நோக்கின்றி வெளிப்படும் ஆதரவு சமூக ஆற்றல்களை ஒருங்கிணைத்து மீட்கும் திறவுகோல்களை;


நான் தேடுவதற்கான மிக முக்கிய மூலமாக (most significant source) திருச்சி அன்னை ஆசிரமம் உள்ளது. 


காமாட்சி அம்மாள் 
வாழ்ந்த போது, என்னிடம் முன் வைத்த கோரிக்கையை ஏற்று, ஒவ்வொரு ஞாயிறும், தஞ்சையிலிருந்து திருச்சி வந்து, அன்னை ஆசிரமம் அரசு உதவியின்றி நடத்தும், மேல் நிலைப் பள்ளியில், +2 தமிழ்வழி மாணவிகளுக்கு, இயற்பியல் (Physics) பாடங்கள் நடத்தினேன்.

காமாட்சி அம்மாளின் மறைவுக்குப் பின், அந்த ஆசிரம தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளவர்;

காமாட்சி அம்மாளைப் போலவே, திருமணம் செய்து கொள்ளாமல்;

சமூக தொண்டுகளில் ஈடுபட்டு, வங்கியில் பணி புரிந்து பணி ஓய்வு பெற்ற பூங்குழலி ஆவார்.

அவர் என்னிடம் முன் வைத்த கோரிக்கையை ஏற்று;

கடந்த வருடம் முதல், ஆசிரம காப்பகத்தில் உள்ள ஏழை/கைவிடப்பட்ட பெண் மாணவிகள், இந்தி பயில, உதவும் ஆசிரியர் ஊதிய செலவுக்காக, மாதம் ரூ 2000 கொடுத்து வருகிறேன். 

இன்று திராவிடர்/திராவிட கட்சிகளைச் சேர்ந்த குடும்பங்களில் உள்ள பிள்ளைகளில் பலர், ஆங்கிலவழிப் பள்ளிகளில் இந்தி பயில்வதோடு, இந்தியில் தனிப்பயிற்சியும் பெற்று, 'முன்னேறுகிறார்கள்'.

அரசுப் பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் தனியார் தமிழ்வழிப் பள்ளிகளிலும் படிக்கும், ஏழை மாணவர்களுக்கு மட்டுமே, தமிழ்நாட்டில் இந்தி படிக்க வாய்ப்பில்லை. 

1967 வரை, விருப்பமுள்ளவர்கள் (தேர்வில் ‘பாஸ்’ (pass) ஆக வேண்டும் என்ற கட்டாயமில்லை) இந்தி பயிலும் வாய்ப்பானது, அப்பள்ளிகளில் இருந்ததை;

ஒழிக்கும் வினை ஊக்கியாக (catalyst) அமைந்து, தமிழ்நாட்டின் சீரழிவுக்கு வித்திட்டது. 1965 இந்தி எதிர்ப்பு போராட்டமாகும்.

அந்த போராட்டத்தின் போது, திருச்சி செயிண்ட் ஜோசப் உயர்நிலைப்பள்ளி மாணவனாக இருந்த நான், சுமார் 20  மாணவர்களை சேர்த்துக் கொண்டு, வகுப்புகளைப் புறக்கணித்து, 1965 இந்தி எதிர்ப்பு போராட்டத்தில், தடியடி, கண்ணிர் புகைக்குண்டு, துப்பாக்கி சூடு நடைபெற்ற போராட்டங்களில், மறைந்திருந்து அந்த காவலர்களை நோக்கி, கற்களை வீசும் போராட்டத்தில், ' உற்சாகமாக' பங்கேற்றேன்; பின் தலைமை ஆசிரியர் என்னை வரவழைத்து, இரண்டு கைகளையும் நீட்டச் சொல்லி, பிரம்பால் அடிகள் கொடுத்தும், நான் திருந்தவில்லை.

அதைவி, இன்று நான் அவ்வப் போது நினைத்து வெட்கப்படும் வகையில்;

அர்ப்பணிப்போடு வகுப்பில் இந்தி சொல்லிக் கொடுத்த ஆசிரியர், பாடம் நடத்துகையில் மாணவர்களிடையே நடக்கும் போது, அவர் சட்டையின் முதுகு புறத்தில், மற்ற சில மாணவர்களைப் போல, நானும் பேனா இங்கினை தெளித்து, கறையாக்கி, மகிழ்ந்தேன், 

இந்தியை எதிர்த்ததாக நினைத்துக் கொண்டு.

இன்று அரசுப் பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் தனியார் தமிழ்வழிப் பள்ளிகளிலும் படிக்கும், ஏழை மாணவர்களுக்கு மட்டுமே தமிழ்நாட்டில், இந்தி படிக்கும் வாய்ப்பை, 1967இல் தி.மு.க ஆட்சியைப் பிடித்து, ஒழிப்பதற்கு காரணமான, எண்ணற்ற 'சமூக பாவிகளில்' நானும் ஒருவனாக 'அறியாமையில்' இருந்திருந்தேன்;

என்பதை இப்போது உணர்ந்து, மிகவும் வருத்தப் படுகிறேன்;

ஒரு மொழியின் ஆதிக்கத்தை எதிர்க்கும் போக்கில்;

இந்தி, சமஸ்கிருதம், ஆங்கிலம் போன்ற மொழிகளை உணர்ச்சிபூர்வமாக வெறுப்பதானது, 'செனோபோபியா' (Xenophobia) என்ற மனநோயாகும் என்பதை இப்போது உணர்கிறேன்.

இன்று அன்னை ஆசிரமமானது, அரசு உதவியின்றி நடத்தும் மேல் நிலைப் பள்ளியில், தமிழ்வழியில் படிக்கும், காப்பகத்தில் உள்ள மாணவிகள், இந்தி தனிப்பயிற்சி பெற, நான் புரிந்து வரும் மேற்குறிப்பிட்ட உதவியை;

மேலே குறிப்பிட்ட, எனது வெட்கப்படும் செயல்கள் மூலம் நான் பெற்றுள்ள, சமூக சாபத்திலிருந்து (Social Curse) விடுதலை பெறும்;

இயற்கையின் போக்கில் ,எனக்கு கிடைத்த,  'பரிகார வாய்ப்பாக' கருதுகிறேன்.  

அரைகுறை ஆங்கில அறிவுடனும், தமிழிலும் ஆழ்ந்த புலமையின்றி, 'பாவம், புண்ணியம்' எல்லாம், ' மூட நம்பிக்கை' என்று ஆணவமாக அறிவித்து, 'குருட்டு பகுத்தறிவு' போக்கினை ஊக்குவித்து பயணித்ததன் பலன்களைத் தான், இன்று தமிழும், தமிழர்களும், தமிழ்நாடும் அனுபவித்துக் கொண்டிருக்கிறது; 

என்பது எனது ஆய்வு முடிவாகும். அந்த பாவத்தில் பங்கு பெற்ற நான், இனி வாழும் வாழ்க்கையை 'பரிகார வாய்ப்பாக' கருதி வாழ்கிறேன்;

உணர்ச்சிபூர்வ போக்கில் உள்ள நபர்களையும், பொதுவாழ்வு வியாபாரிகளையும் விட்டு விலகி, அறிவுபூர்வ விவாதங்களை ஊக்குவித்து.


குறிப்பு:

1944க்கு முன் எப்படி இருந்த தமிழ்நாடு, இன்று  எப்படி இருக்கிறது?                       

இந்தி எதிர்ப்புப் போராட்டம்:1938‍க்கும்  1965க்கும்   என்ன வேறுபாடு?
http://tamilsdirection.blogspot.in/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_13.html


Also: ‘Is the Language Policy derailing the nation building process in India?’; http://tamilsdirection.blogspot.in/2017/06/is-language-policy-derailing-nation.html

‘Only with a hard headed population , a leader can be held accountable continuously and he/she cannot hold unhealthy psychological hold over people.’ – comment ; http://tamilsdirection.blogspot.com/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_10.html 

' செயல் சாத்திய எதார்த்தவாதிகளாக
மக்கள் இருக்கும் போது தான், ஒரு தலைவரை தொடர்ந்து பொறுப்பேற்புக்கு உட்படுத்த முடியும். அந்த தலைவர் மக்கள் மீது கேடான மனரீதியிலான செல்வாக்கு செலுத்துவதும் நடக்காது' - வன்பாக்கம் விஜயராகவன்

வாழும்போதே 'பெரியார்' பட்டம் ஏற்று, தமக்கு சிலையையும் அனுமதித்த போதே, மேலே குறிப்பிட்ட இலக்கணத்தில் ஈ.வெ.ரா அவர்கள் தோற்றார்.
 

Saturday, August 12, 2017

'தமிழன்: பறைய னொழிந்த தமிழ்ச்சாதியான்';


Tamil Lexicon, University of Madras மீது வருத்தப்படுவதானது, அறிவுபூர்வமாகுமா?


‘பெரியார்', 'பிரபாகரன்', 'மார்க்சியம்', 'தமிழ்த்தேசியம்' ஆகிய பிம்பங்களின் வழிபாட்டில் சிக்கியவர்களில் (‘வழிபாட்டுப் புழுதிப் புயலில் சிக்கிய தமிழ்நாடு’; http://tamilsdirection.blogspot.in/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_5.html );

தாம் 'நேசிக்கும்' நிலைப்பாட்டிற்கு எதிராக, விவாதத்தில் நாம் முன்வைக்கும், வெளிவந்த ஆய்வு கட்டுரைகளை படிக்கும் ஆர்வமின்றி, தமது 'நிலைப்பாடு போதையில்' பயணிப்பவர்களை, நான் 'அனுபவித்திருக்கிறேன்'. எனவே அத்தகையோரை சந்திப்பதையும், தற்செயலாக சந்திக்க நேர்ந்தால், அவர்களுடன் விவாதிப்பதையும், இயன்ற அளவு தவிர்த்து வருகிறேன்; 'கர்நாடக இசை உயர்வு போதை', ' தமிழ் இசை உயர்வு போதை'யாளர்களை தவிர்த்து வருவது போலவே. ‘ (http://tamilsdirection.blogspot.in/2017/07/its-mad-madmad-tamilnadu.html )

அது போலவே, தமிழ்நாட்டில் தமது குடும்பப் பிள்ளைகளை ஆங்கிலவழிப் பள்ளிகளில் படிக்க வைத்து, அதற்கு வருத்தம் கூட தெரிவிக்காமல்,  'தமிழ்வழிக் கல்வி ஆதரவாளர்களாக' வலம் வருபவர்களையெல்லாம், 'தமிழ் வேர்க் கொல்லிகளாக' கருதி, ஒதுக்கி வாழ்ந்து வரும் நான்;

அந்த போக்கில் விதி விலக்காக வாழ்ந்து வரும் எழுத்தாளர் நலங்கிள்ளியை, நானே தேடி, வரவழைத்து, விருந்தோம்பி, தமிழ்வழிக்கல்வி மீட்சிக்கான ஆக்கபூர்வமான வழிமுறைகளை விவாதிக்க கிடைத்த வாய்ப்பினை;

 எனது வாழ்வின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக கருதுகிறேன்.

அவர் எனக்கு வழங்கிய புத்தகங்களில் ஒன்றாகிய 'ஆங்கில மாயை' என்ற நூலைப் படித்து வியந்தேன். தமிழில் இந்த அளவுக்கு அறிவுபூர்வமாக உழைத்து நூல் எழுதி, வெளிவருவதானது, அபூர்வம் என்றும் கருதுகிறேன். அந்த நூலில் தாய்மொழிவழிக்கல்வியின் பலன்கள் தொடர்பான ஆய்வுகள் (http://tamilsdirection.blogspot.in/2013/10/normal-0-false-false-false-en-us-x-none_24.html), அதன் அடுத்த பதிப்பில் இடம் பெற வேண்டும், என்பதும் எனது விருப்பமாகும். இந்துத்வா எதிர்ப்பில் பயணித்துவரும், அவரின் 'ஆங்கில மாயை' மற்றும் 'ஏ! கல்வியில் தாழ்ந்த தமிழகமே' ஆகிய இரண்டு நூல்களுமே, தாய்மொழிவழிக்கல்வியின் முக்கியத்துவத்தை, 'உள்மறை' (Latent) நோக்கமாக கொண்டவை என்று நான் கருதுகிறேன். எனவே ஆரம்பப்பள்ளி படிப்பானது, தாய்மொழிவழியில் இருந்தால் தான், குழந்தைகளின் புலன் உணர் மூளை வளர்ச்சி விருத்தியாகி (Cognitive skills development), அதன்பின் ஆங்கிலவழி உள்ளிட்ட பிறமொழி வழியும், அவர்கள் சிறப்பாக கற்பார்கள், என்பது பற்றிய உலகலாவிய ஆய்வு முடிவுகள் (மேலுள்ள பதிவில்), அந்நூல்களில் இடம் பெறுதல், கூடுதல் பலன் தரும் என்பதும், எனது கணிப்பாகும். அப்பதிவு இந்துத்வா சார்பு 'சுதேசி செய்தி' இதழிலும் வெளிவந்துள்ளதால், இந்துத்வா ஆதரவு, எதிர்ப்பு வேறுபாடுகளைத் தாண்டி, தமிழ்வழிக்கல்வி மீட்சி முயற்சிக்கு ஆதரவு கிட்டும் வாய்ப்பும் கூடியுள்ளது. (‘தமிழின் மரணப் பயணம் துவங்கிவிட்டதா?(8) - தமிழ்நாட்டுப் பிராமணர்கள் தமிழைக் காப்பாற்றுவார்கள்’; http://tamilsdirection.blogspot.in/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_19.html )

அந்நூலில் (பக்கம் 27- 28),வெளிப்பட்ட கீழ்வரும் பகுதியானது, எனது ' சமூகவியல்' தொடர்பான கவனத்தை ஈர்த்தது.

விஜய் தொலைக்காட்சியில், 'நீயா? நானா? (18.08.2011) நிகழ்ச்சியில், 'ஆங்கிலம் கலந்து தமிழ் பேசுவது சரியே' என்று வாதிட்ட மீனா,' சென்னைப் பல்கலைக்கழக தமிழ்ப் பேரகராதி மாமன் என்னும் சொல்லுக்கு, ' பறைப் பெண்கள் தங்கள் கணவரை அழைக்கும் பெயர்' (Tamil Lexicon, University of Madras , தொகுதி 5, பக்கம்: 3162) என்று ஓர் அர்த்தத்தைக் கொடுத்திருப்பதாக மிகவும் வருத்தத்துடன் குறிப்பிட்டார்.'

Lexicon  என்பதானது, அது உருவாகும் காலம் வரை, அந்த மொழியில் உள்ள வேர்ச்சொற்கள் உள்ளிட்டு, கால ஓட்டத்தில் அச்சொற்களின் பொருளில் வெளிப்பட்டு வரும் மாற்றங்களை எல்லாம், உரிய சான்றுகளுடன் வெளிப்படுத்தும் மொழியியல்  (Linguistics) தொடர்பான‌   எக்ஸ் –ரே(X-Ray) கருவியாகும்.  நமது உடலில் உள்ள நிறைகளை காட்டும் எக்ஸ் ரே கருவி மீது மகிழ்ச்சி கொள்வதும், நமது நோய்களை காட்டும்போது வருத்தப்படுவதும், எந்த அளவுக்கு சரியோ, அது போலவே, எந்த மொழி தொடர்பாகவும் வெளிவரும் Lexicon  மீது, நாம் வருத்தப்படுவதானது சரியாகும்.

அதை உருவாக்கியவர்கள், தமது நிலைப்பாட்டினை வலிந்து திணிக்கும் சார்பு அணுகுமுறையை வெளிப்படுத்தியிருந்தால், அதை உரிய சான்றுகளுடன் விமர்சிப்பது வரவேற்கத்தக்கதாகும். மேலே குறிப்பிட்ட Tamil Lexicon தொகுப்பை, அந்த நோக்கில் அறிவுபூர்வமாக விமர்சித்து ஏதும் வெளிவந்ததாக தெரியவில்லை. ஆனால், மறைந்த வீ.ப.கா சுந்தரம் தனி ஆளாக தொகுத்து, பாரதிதாசன் பல்கலைக்கழகம் வெளியிட்ட, 'தமிழிசைக் கலைக் களஞ்சியம்' தொகுதிகளில் (எனது தமிழிசை ஆய்வுகள் பற்றி குறிப்பிட்டிருந்தாலும்), அவரின் சார்பு அணுகுமுறை வெளிப்பட்டிருக்கிறது, என்பது எனது கருத்தாகும்.  அந்த விமர்சனம் வெளிவராமல், அந்நூலை உணர்ச்சிபூர்வ போக்கில் இருட்டடிப்புக்குள்ளாக்கிய தமிழ்ப் பேராசிரியர்கள் எல்லாம், தமிழின் வளர்ச்சிக்கு கேடானவர்கள், என்பதும் எனது கருத்தாகும்.

தமிழ்நாட்டில் 'சாதி', 'இனம்' போன்ற சொற்களின் பொருள் காலனிய ஆட்சியில், திரிதலுக்கு உள்ளாகி, 'சமூக ஒப்பீடு (Social Comparison) உயர்வு தாழ்வு தீண்டாமை' நோய்கள் எல்லாம், காலனிய சூழ்ச்சியில் அரங்கேறியது எவ்வாறு? என்பது தொடர்பான ஆய்வுகளை, ஏற்கனவே பதிவு செய்துள்ளேன். (http://tamilsdirection.blogspot.in/2016/01/normal-0-false-false-false-en-us-x-none_31.html  ) அதே காலனிய சூழ்ச்சியில், 'பறை', 'பறையர்' தொடர்பான, எனது ஆய்வுகளையும் பதிவு செய்துள்ளேன்.( http://tamilsdirection.blogspot.in/2013/11/normal-0-false-false-false-en-us-x-none_13.html  )

எனவே சங்ககால தமிழரின் எச்ச சொச்சங்கள் பற்றிய ஆய்விற்குரிய சிறப்புள்ள மக்கள் பிரிவினராக, இன்று 'பறையர்' என்ற சமூக அடையாளத்தில் உள்ள மக்கள் இருக்கக்கூடும், என்பதற்கான கூடுதல் சான்றாக, மேலே குறிப்பிட்ட ' மாமன்' என்ற சொல்லின் பொருளை, நான் கருதுகிறேன். பிற்படுத்தப்பட்ட சாதிகளிலும், கணவனை, 'மாமன்' என்று அழைத்து வருவதை நான் அறிவேன். இன்று 'தீண்டாமைக்கு' எதிரான சரியான கோபத்தில்,  உணர்ச்சிபூர்வ அணுகுமுறையில் அச்சொல் சிக்கி, Tamil Lexicon, University of Madras  மீது குறை காண்பதானது, அறிவுபூர்வமாகாது.

'பறையன்' தொடர்பாக Tamil Lexicon-இல் வெளிவந்துள்ள கீழ்வரும் பொருளானது என்னை வருத்தமடையச் செய்தது.

“தமிழன் tamiḻaṉ : 3. Caste man, as dist. fr. paṟaiyaṉ; பறைய னொழிந்த தமிழ்ச்சாதியான். “

ஆனால் Tamil Lexicon மீது வருத்தப்படாமல், அதில் அச்சொல்லுக்கான சான்றாக குறிப்பிட்டுள்ள வட்டார வழக்கின் மீது தான் நான் வருத்தப்பட்டேன். வாய்ப்பு கிடைக்கும் போது, அந்த வட்டார வழக்கானது, காலனியத்திற்கு முன்னா? பின்னா? உருவான சமூகவியல் காரணங்கள் யாவை? என்ற ஆய்வினை மேற்கொள்ள, அந்த வருத்தமானது, என்னைத் தூண்டியுள்ளது.

என்னிடம் உள்ள பதிப்பில் (1982), மேலே குறிப்பிட்டுள்ள பகுதியானது, வெள்ளை பூச்சால் மறைக்கப்பட்டிருக்கிறது. வன்பாக்கம் விஜயராகவன் சுட்டிக்காட்டியபின், அந்த பகுதியைக் கீறி, ஒளிபாய்ச்சி படித்தேன். அவ்வாறு ஏன் பூசி மறைக்கப்பட்டது? என்பதும் மேலே குறிப்பிட்ட ஆய்வில் இடம் பெற வேண்டும். நமது உடலில் கோளாறு இருப்பதை காட்டிய எக்ஸ்ரே-யில், அந்த பகுதியை, எக்ஸ் ரே தொழிலாளர் (X-Ray Technician) மறைத்து விட்டால், மருத்துவர் அந்த எக்ஸ்ரே அடிப்படையில், சிகிச்சையை முடிவு செய்ய முடியுமா? அது போன்ற கோளாறில், சென்னைப் பல்கலைக்கழகமானது சிக்கியுள்ளதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

மேற்கத்திய எழுத்தாளர்களும், கணிதத்திலும், 'பறையர்' என்ற சொல்லை தவறாக பயன்படுத்துவதை, உரிய சான்றுகளுடன் கண்டித்தும் பதிவு செய்துள்ளேன். (‘Can the ancient Tamil word ‘pariah’ be rescued from the misuse in the western world?’; http://tamilsdirection.blogspot.in/2016/09/can-ancient-tamil-word-pariah-be.html & http://tamilsdirection.blogspot.in/2016/11/normal-0-false-false-false-en-us-x-none_58.html  )

மேலே குறிப்பிட்ட பதிவில் விளக்கியவாறு,டேவிட் சுலோன் விலசன் (David Sloan Wilson) என்ற மேற்கத்திய எழுத்தாளர், ‘RICHARD DAWKINS IS WRONG ABOUT RELIGION’ என்ற நூலில், 'பறையா' (pariah) என்ற சொல்லை இழிவுபடுத்தியுள்ளதையும், கணிதத்தில் (‘Group Theory’ in Modern Algebra of Mathematics), பேய்க்குழுவாக (monster group) வகைப்படுத்தப்பட்ட குழுக்களில் ஒன்றிற்கு 'பறையா'(pariah) என்று பெயர் இட்டு இழிவுபடுத்தியுள்ளதையும் (the term pariah was introduced by Griess (1982) to refer to the six sporadic simple groups that are not subquotients of the monster group), கண்டித்து, அந்த இழிவை நீக்க, மீனா போன்றவர்களும், சமூக நீதி ஆர்வலர்களும், மேலே குறிப்பிட்ட பதிவின் முடிவில் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள், அல்லது அதைவிட இன்னும் அதிக செயல் சாத்தியமுள்ள கோரிக்கைகள் நிறைவேற, தம்மால் இயன்ற முயற்சிகளை இதுவரை மேற்கொண்டார்களா? இல்லையென்றால், இனியாவது மேற்கொள்வார்களா?

ஒரு மக்கள் சமூகத்தின் அடையாளங்கள் ஆனவை,  சமூக வரலாற்றில், அச்சமூகம் சந்திக்கும், சமூக தேவைகளின் அடிப்படைகளிலேயே உருவாகும். 'தமிழர்' என்ற அடையாளம் தமிழ்நாட்டில் எப்போது, எந்த தேவைகளின் அடிப்படையில் தோன்றியது? என்பது ஆய்விற்குரியதாகும்.

சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள 'லெக்சிகனில்' 'தமிழர்' என்ற சொல்லுக்கு, 'விளிம்பில்லாத  தீர்த்த பாத்திரம்' என்ற பொருள் உள்ளது. சங்க இலக்கியங்கள் உள்ளிட்ட, பழந்தமிழ் இலக்கியங்களில் 'தமிழர், தமிழன்' போன்ற சொற்கள் இருப்பதாக தெரியவில்லை. தேவாரத்தில் ( 744,5) தான் 'ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்' என்று உள்ளது. 'ஆரியன் கண்டாய் திராவிடன் கண்டாய்' என்று அதில் இல்லை.

எனவே மொழி அடிப்படையிலான‌ 'தமிழன்' என்ற சொல்லை, புவியியல் (geographic) அடிப்படையிலான 'திராவிட' அடிப்படையில், 'திராவிடன்' என்று சொல்வது, தேவாரத்தில் இல்லை.

ஆரிய எதிர்ப்பு நோக்கில், இனம் தொடர்பான சொல்லாக‌, 'திராவிடர்' என்ற சொல், காலனி ஆட்சிக்கு முன், தமிழ்நாட்டில் இருந்ததற்கு சான்றுகள் இல்லை. உலகில் வெளிப்பட்டுவரும் ஆய்வுமுடிவுகளின் அடிப்படையில், 'இனம்' என்ற பொருளில், 'திராவிடர்' என்ற சொல்லை பயன்படுத்துவது என்பது, அறிவுபூர்வமாக சரியா?.... 'தமிழர்' என்ற அடையாளம் இன்று வரை குழப்பமாகவே சிதைந்துள்ளது. தமிழ்நாட்டில் வடமொழி தெரியாத, தமிழையேத் தாய்மொழியாகக் கொண்ட பிராமணர்களை 'தமிழர்' ‍ஆக ஏற்க மறுக்கின்ற போக்கும் உள்ளது. கன்னடத்தைத் தாய் மொழியாகக் கொண்ட பெரியாரையும், தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட வை.கோ போன்றோரையும் 'தமிழர்' ‍ஆக ஏற்க மறுக்கின்ற போக்கும் உள்ளது. இக்குழப்பம் தீராமலேயே  இரு போக்கினருமே தனித் தமிழ்நாடு என்ற உணர்ச்சிபூர்வமான‌ போக்கில், அடையாளச் சிதைவை வளர்த்து வருகிறார்கள். .. 'தமிழர்' என்ற அடையாளத்தை, குழப்பங்களுக்கு இடமில்லாமல், எவ்வாறு வரையறுப்பது? என்பது போன்ற கேள்விகளுக்கு,  லண்டனில் வாழும் எனது நண்பர் வே.தொல்காப்பியன் எழுதியுள்ள,  'யார் தமிழர்' என்ற கட்டுரை மிகவும் பயனுள்ள விடைகளை தரவல்லதாகும். (‘யார் தமிழர்?’; http://siragu.com/?p=3527) …….'இந்தியர்' என்ற அடையாளமும் மத்தியில் பொறுப்பில் உள்ள அமைச்சர்களின் தத்தம் வட்டார, சாதி, மதப் பற்றுகள் காரணமாக சிதைக்கப்பட்டு வருகிறது. மாநிலங்களுக்கு இடையிலான சிக்கல்களில்,  அகில இந்திய அரசியல் கட்சிகளின் குறுகிய நோக்கிலான சுயநல அரசியல் நிலைப்பாடுகள்,  இந்த சிதைவின் வேகத்தை அதிகப்படுத்தியுள்ளன.”… 'தமிழ் இலக்கியங்கள்', 'பாரம்பரியம்', 'பண்பாடு' தமிழர்க்கு கேடானவை என்ற அடிப்படையில், பெரியார் இயக்கங்கள் 'திராவிடர்' என்ற அடையாளத்தை முன்னிறுத்தி,  மேற்கொண்ட 'சாதி எதிர்ப்பு' ஆனது, 'தமிழர்' என்ற அடையாளத்தை பலகீனப்படுத்தும் அளவுக்கும், சாதிப்பற்று வலிமை பெறும் அளவுக்கும்,  எதிர்வினையாக (reaction)  அமைந்ததா? என்பதும் ஆய்விற்குரியதேயாகும். அந்த போக்கில் 'திராவிடர்' என்பதும், தமிழரின் அடையாளச் சிதைவை அதிகப்படுத்தி, அரசியல் நீக்கம் மற்றும் அதன் தொடர்விளைவான ஊழல் அரசியலுக்கும், சுயநலக் கள்வர்கள் அதிகரிப்பிற்கும் வழி வகுத்ததா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.
(‘தமிழர்களின் அடையாளச் சிதைவும், அரசியல் நீக்கமும் (depoliticize)  (3)-                   'திராவிடர்'  'இன‌' அடையாளம்   'அழிவுபூர்வ' சமூக தளவிளைவினை (Destructive Social Polarization)  அடித்தளமாகக் கொண்டதா?’; http://tamilsdirection.blogspot.in/2015/06/normal-0-false-false-false-en-us-x-none_11.html )

தனித்தமிழ் ஆர்வலர்களால் தமிழின் வளர்ச்சிக்கு ஏற்பட்டுள்ள தடைகளை ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளேன். (http://tamilsdirection.blogspot.in/2016/07/fetna.html) அது போலவே, 'தீண்டாமைக்கு' எதிரான சரியான  கோபத்தில், அறிவுபூர்வ அணுகுமுறையில் இருந்து விலகி, உணர்ச்சிபூர்வ அணுகுமுறையில் பயணிப்பதும், சுயநினைவின்றி சமூகநீதிக்கு தடைகளாகிவிடும் அபாயமும் இருக்கிறது.

மேலே குறிப்பிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சியை நான் பார்க்கவில்லை. கீழே குறிப்பில் உள்ளது போன்ற பல ஆய்வுகளின்படி, 'ஆங்கிலம் கலந்து தமிழ் பேசுவது' என்ற போக்கானது, இன்றைய ஆங்கிலோ- இந்தியர்களைப் போல, தமிழ்வேரற்ற தமிழர்களாக்கும் அபாயம் பற்றி, எவரும் விவாதிக்கவில்லையென்றால்,  அது வருத்தத்திற்குரியதே ஆகும். அந்த தமிழ் வேரழிக்கும் போக்கில் சிக்காமல், சிங்கப்பூரிலும், மலேசியாவிலும், தமிழானது, வானொலியிலும், தொலைக்காட்சியிலும், பயணித்து வருவதானது, பாராட்டத்தக்கதாகும்.

குறிப்பு:

எந்த மொழியாக இருந்தாலும், மொழி என்பதானது, வெறும் பேசுவது, படிப்பது, எழுதுவது என்பதை தாண்டி;

ஒரு மொழியின் மூலமாக நமது சிந்தனை முறையும், கண்ணோட்டமும் மாற்றங்களுக்கு உள்ளாவதை, கீழே உள்ள ஆய்வு தெரிவிக்கிறது.

“If you have ever tried to learn a new language, you might have noticed that it is not only about learning the alphabet, vocabulary and grammar. It also involves learning a new way of thinking and expressing yourself.


Language carries references to the culture to which it belongs and, by interacting with a language, we gain an insight into a particular culture……..Whorf said, “because the language we speak affects the way we think, it also affects the way we view the world around us. We habitually formulate our perceptions of the world in language, according to the particular biases and prejudices inherent in whatever language we know. Thus, language limits the way we perceive reality, the way we think about it, and the way we talk about it. But it need not do so. If we are aware of those limitations, we can compensate for them and view the world freshly and newly.”……….. From the above, we can see that if language affects the way we speak and is intimately related with culture, there will be a close relationship between the mind and culture through language. Looking at some ancient languages, we find that the more sophisticated the language is, the more developed the civilization, and perhaps the opposite is also true. George Orwell, who made a life-long study of language, held that “the decay of a civilization can be seen in the declining levels of sincerity in the words and minds of its citizens.” ” -  ‘Language and Culture’ -Article By Pinar Akhan; http://library.acropolis.org/language-and-culture/  ( ‘பொது அரங்கில் நகைச்சுவைகளை ரசிக்க முடியாமல்; சொந்த காசில் சூன்யம்வைத்துக் கொள்பவர்களின் நாடாகி வருகிறதா, தமிழ்நாடு?’; http://tamilsdirection.blogspot.in/2017/07/blog-post_16.html )

Sunday, August 6, 2017

தமிழ்நாட்டில் இயல்பான அன்பும், மரியாதையும் துளிரத் தொடங்கி விட்டது;


ஜெயலலிதாவின் மரணம் விளைவித்த 'மெளனப் புரட்சி'


‘மீடியா வெளிச்சத்தில் வெளிப்படையாக 'பாராட்டு, புகழ்' போதையில் வலம் வருபவர்களை விட, மீடியா வெளிச்சத்திற்கு வராமல், பாராட்டு, புகழ் உள்ளிட்ட போதைகளில் சிக்காமல்;

அடி ஓட்டத்தில் (under current) பயணிப்பவர்களின் முயற்சிகளே, சமூக அரசியல் மாற்றங்களில் தீர்மானகரமான (Decisive)  செல்வாக்கு செலுத்துகின்றன.’ என்பதை ஏற்கனவே பார்த்தோம். (http://tamilsdirection.blogspot.in/2016/07/blog-post.html )

சமூகமானது நல்ல/தீய திசையில் பயணிப்பதற்கான முனைப்பான சமூக வினைகள் (Socially pro-active), எல்லாம், அடிமட்டத்தில் உருவாகி, வளர்ச்சிப் போக்கில் தொகுவிசைகளாக வளர்வதானது;

சுயலாப நோக்கில் உள்ள மீடியாக்களின் பார்வைகளில் படுவது அபூர்வமே. அந்த சமூக செயல்நுட்பத்திற்கு உதாரணமாக, தமிழ்நாட்டின் போக்கில், மீடியா பார்வைக்கு வராமல், நான் வழங்கிய பங்களிப்பை ஏற்கனவே பதிவு செய்துள்ளேன். (http://tamilsdirection.blogspot.in/2016/07/blog-post.html )

மீடியா வெளிச்சத்தில் முக்கியத்துவம் பெறுபவைகளும், பெறுபவர்களும், சமூக விளைவு வினையாக (Socially Reactive), அடிமட்ட வளர்ச்சிப் போக்குகளை மறைத்து, காலப்போக்கில் உதிரும் சருகுகளா? என்ற ஆய்வின்றி பயணிப்பவர்கள் எல்லாம், 'எதிர்பாரா' நல்ல/தீய விளைவுகளை சந்திக்க நேரிடும்.

எனவே தான், அடிமட்டத்திலுள்ள சாமானியர்களுடன் இயல்பாக பழகி வரும் நான், இப்பதிவின் முடிவில் தெரிவித்துள்ள காரணங்கள் அடிப்படையில், மேல்தட்டு மனிதர்களுடன் மிகுந்த எச்சரிக்கையுடன் பயணிக்கிறேன்.

ஜெயலலிதாவின் மர்மமான மருத்துவம்/மரணம் நிகழ்ந்திருக்காவிடில்;

‘தமிழ்நாட்டில் அ.இ.அ.தி.மு.கவின் அடிமட்ட பெண் தொண்டர் ஒருவர், நம் எல்லோரின் மனசாட்சியை உலுக்கும் வகையில் கீழ்வரும் கேள்வியை எழுப்பும் சமூக தேவையும் உருவாகி இருக்காது; என்பதும் எனது ஆய்வு முடிவாகும்.

அதிமுக பொதுச் செயலாளராக சசிகலாவை நியமித்ததை எதிர்த்து சென்னை வானகரம் பகுதியில் நடந்த அதிமுகவினரின் போராட்டத்தின்போது,  பெண் ஒருவர் படு ஆவேசமாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

வீட்டில் அம்மா செத்தா, 90 நாள் துக்கம் அனுசரிக்க வேண்டாம். பொட்டச்சிங்க நாங்க தலையில் பூ வைக்காம இருக்கோம். அந்த உணர்வு கூட உங்களுக்கு இல்லை. உப்பு போட்டுச் சாப்பிடலை நீங்க. உரைக்கலை உங்களுக்கு. ரத்தம் துடிக்குது எங்களுக்கு ( http://tamil.oneindia.com/news/tamilnadu/admk-women-agitate-against-sasikala/slider-pf217679-270746.html )

"உப்பு போட்டுச் சாப்பிடலை நீங்க. உரைக்கலை உங்களுக்கு. ரத்தம் துடிக்குது எங்களுக்கு?" என்று ஒரு அடிமட்ட அ.இ.அ.தி.மு.க பெண் தொண்டர் எழுப்பியுள்ள கேள்வியானது;

சசிகலாவை அ.இ.அ.தி.மு.கவின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்த, அந்த கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்களை நோக்கி, கேட்கப்பட்ட கேள்வியாக மட்டுமே நான் கருதவில்லை. நான் உள்ளிட்டு, தமிழ்நாட்டின் மீது அக்கறையுள்ளவர்கள் ஒவ்வொருவரும், தமது மனசாட்சிக்குட்பட்டு பதில் தேட வேண்டிய, சமூக முக்கியத்துவம் வாய்ந்த கேள்வியாக கருதுகிறேன்; 'நமக்கேன் வம்பு?' என்று சமூகக்கேடான 'பாதுகாப்பு சிறையில்' வாழ்பவர்கள் மட்டுமே, இக்கேள்வியை புறக்கணிக்க முடியும்.’ (http://tamilsdirection.blogspot.in/2016/12/normal-0-false-false-false-en-us-x-none_30.html )

கிராமப்புறங்களில் ஜெயலலிதாவின் விசுவாசிகளாக இருந்தவர்கள் எல்லாம், நானறிந்தவரையில், மேலே குறிப்பிட்ட அ.இ.அ.தி.மு.கவின் அடிமட்ட பெண் தொண்டரைப் போலவே, சசிகலா குடும்பத்தின் மீது, சரியான கோபத்தில் உள்ளார்கள்.

ஜெயலலிதாவின் மர்மமான மருத்துவம்/மரணம் தொடர்பாக,வலம் வரும் வதந்திகள் எல்லாம்;

சசிகலா ஆதரவாளர்களாக கிராமங்களில் எவரும் வலம் வர வெட்கப்படும் அளவுக்கு, அதிர்ச்சி தருபவையாக உள்ளன.

எந்த கட்சிப்பதவியிலும் இல்லாத அ.தி.மு.க அடிமட்ட தொண்டர்கள் எல்லாம், கீழ்வரும் போக்கில், மற்ற கட்சித் தொண்டர்களிடமிருந்து வேறுபட்டுள்ளார்கள், என்பதும் எனது அனுபவமாகும்.

‘எந்த கட்சியும் கொள்கையும் சாராத, சாதாரண மக்களிடம் வெளிப்படும் 'சுயலாப நோக்கற்ற'  இயல்பான அன்பு, நேர்மை போன்றவை, ஒப்பீட்டளவில், கட்சி/கொள்கை ஆதரவாளர்களிடம் குறைவு என்பதும் எனது அனுபவமாகும். அது எந்த அளவுக்கு ‘அரசியல் நீக்கம்'(Depoliticize)  போக்குடன் தொடர்புடையது?  என்பதும் ஆய்விற்குரியதாகும். 'கொள்கைக்காக' மனிதர்களை மதித்த காலம் மாறி,  ‘அரசியல் நீக்கம்'  போக்கில், அவர்களை எல்லாம், 'பொதுவாழ்வு வியாபாரிகளாக', சாதாரண மக்களில் பெரும்பாலோர் கருதுகிறார்களா? என்பதும் ஆய்விற்குரியதாகும். கீழ்வரும் அடிமை கலாச்சாரமானது, ‘அரசியல் நீக்கம்' போக்குடன் தொடர்புடையதா?  என்பதும் ஆய்விற்குரியதாகும்.’ என்பதையும்:

‘1967க்குப்பின் அந்த (ஊழல் ) வலைப்பின்னலில், எந்த அளவுக்கு, சுயலாப கள்வர் நோய் வளர்ந்துள்ளதோ, அந்த அளவுக்கு, குடிநீர் பிரச்சினை, சாலை பிரச்சினை,போன்ற இன்னும் பல தெரு/கிராம/உள்ளூர் பிரச்சினைகளும் வளர்ந்துள்ளன. அந்த வலைப்பின்னலை நம்பாமல், பாதிக்கப்பட்ட மக்கள், குறிப்பாக பெண்கள் வீதியில் இறங்கி போராடுவதும், அந்த அளவுக்கு அதிகரித்துள்ளது; அந்த வலைப்பின்னலை 'அரசியல் நீக்கம்'(Depoliticize)  நோய்க்குள்ளாக்கி.

அத்தகைய போராட்டங்கள் ‘மீடியாகவனத்தை ஈர்த்தவுடன், அதில் நுழைந்து ‘வெளிச்சம்போடுவதும், ‘மீடியாகவனம் குறைந்தவுடன், அதிலிருந்து விலகி, அடுத்த ‘வெளிச்சத்தைநோக்கி ஓடுவதுமான, 'அரசியல் நாடகங்களின்' காலமும், முடிந்து வருகிறது. அந்த வலைப்பின்னல் மூலம் 'உருவான', 'ஊழல் பணக்காரர்' குடும்ப‌ ஆடம்பர திருமணங்களில் கலந்து கொள்பவர்களிடையே, அந்த நபரின் 'கடந்த காலம்' பற்றியும்,  'என்னென்ன வழிகளில் சம்பாதித்தார்?' என்பது பற்றியும்,  'கிசு கிசு' பேச்சுகள் அதிகரித்து வருவதும்,  'புதிதாக' அரங்கேறிவரும் 'சொந்த காசில் சூன்யம் வைத்துக் கொள்ளும் சமுக நகைச்சுவை' ஆகும். அதன் தொடர்ச்சியாக, அந்த 'ஊழல் பணக்காரர்கள்' எல்லாம், 'விலை உயர்ந்த  காரில்,  தெருவில் செல்லும் போது, தெரு ஓர தேநீர் கடைகளில், அந்த 'கிசுகிசு' பேச்சுக்கள்,  'உரக்க' பேசி, விவாதிக்கப்படுகின்றன. ‘ என்பதையும்;
ஏற்கனவே பார்த்தோம். (http://tamilsdirection.blogspot.in/2016/05/normal-0-false-false-false-en-in-x-none.html )

‘சத்யராஜ் - மணிவண்ணன் ஜோடியின் புகழ்பெற்ற 'அமாவாசை காமெடி'யானது (கீழே) 1967க்கு முன் வெளிவந்திருந்தால், ரசிக்கப்பட்டிருக்க வாய்ப்பில்லைhttps://www.youtube.com/watch?v=J-Efb347l5E

1967க்குப்பின் 'அமாவாசை சமூக செயல்நுட்பம்' வெளிப்பட்டு (விதைத்தது 1944?), இன்று உச்சத்தில் உள்ள சமூக சூழலில், இன்றைய 'அமாவாசைகளின்குடும்பங்களில் உள்ள மாணவர்களில் பலர், தமது சமூக வட்டத்தில் சந்தித்து வரும் 'அவமானங்களும்', 'நெருக்கடிகளும்', தொடர்பான காமெடி திரைப்படங்கள் வந்ததாக தெரியவில்லை; இனி வரலாம்.’ (http://tamilsdirection.blogspot.in/2017/04/1967.html )

இன்றைய இளைய தலைமுறைக்கும், பெரியவர்களுக்கும் இடையிலான கேலி கிண்டல் மிகுந்த இடைவெளியில் சிக்கிய:

ஊழல் அரசியல்வாதி/அதிகாரி/தரகர் குடும்பங்களில் உள்ள கல்லூரி மாணவர்களின் நிலைமைகள் எல்லாம், மேலே குறிப்பிட்ட திரைப்படங்களுக்கான, திரைக்கதை மூலங்களாகி (Sources) வருகின்றன. அதில் 'குறுக்குவழி அதிவேக பணக்கார பெரியார் சமூக கிருமிகள்’ மற்றும் எடுபிடிகளின் ‘குடும்பங்கள் – நண்பர்கள்’ வாழ்வில் வெளிப்பட்டுவரும் 'மூலங்களில்' எல்லாம், 'பகுத்தறிவு, பார்ப்பன எதிர்ப்பு, தமிழ் இன உணர்வு' தொடர்பான 'பொதுவாழ்வு வியாபார/விபச்சார' நகைச்சுவைகளுக்கு வாய்ப்புகள் அதிகமாகும். அத்தகையோர் தமக்கு 'சுயலாப' நோக்கில;


எவரைப் புகழ்ந்தாலும், 'வாலாட்டும் சமூக நாய்களாகவும்';
எவரைக் கண்டித்தாலும், 'வேண்டிய எலும்புத்துண்டு கிடைக்காத கோபத்தில் குலைக்கும் நாய்களாகவும்';

வலம் வருகையில், அத்தகையோரை, இயல்பான அன்பு, மரியாதை சுவாசிக்கும் நபர்கள் எல்லாம், இயன்றவரை தவிர்த்து வாழ்வது தானே, புத்திசாலித்தனமாகும்.

பணம், புகழ் சம்பாதிப்பதற்காக, அகத்தில் சீரழிந்து, தமது 'சுயலாப கணக்குகளை' புத்திசாலித்தனமாக மறைத்து, தமது முதுகுக்குப் பின்னால் தமது 'யோக்கியதையை' சிசுகிசுப்பது தெரிந்தும், தெரியாதது போல;

தமது உற்றம், சுற்றம் உள்ளிட்ட சமூக வட்டங்களில் வெளிப்படும் 'போலி' மரியாதைகளில், கள்ளுண்ட வண்டு போல;

மிதந்து வாழ்பவர்கள் எல்லாம் வடிகட்டின சமூக முட்டாள்கள் ஆவார்கள். அந்த சமூக முட்டாள்த்தன போக்கில், தமிழ்நாட்டில் அரங்கேறியுள்ள 'ஆளுயரமாலை, மலர்க்கிரீடம்' போதைகளில் சிக்கி, சாதாரண மக்கள் அருவறுக்கும் கோமாளிகளாக வரும் தலைவர்களும், அந்த போதையில் பயணிப்பவர்களே ஆவர்; பா.ஜ.க உள்ளிட்டு எந்த கட்சியில் இருந்தாலும். ‌

கார் வைத்துக் கொள்ளும் அளவுக்கு வசதியுள்ள எனது நண்பர், அந்த 'போலி மரியாதையில்' சிக்க விரும்பாமலும், இயல்பான அன்பும், மரியாதையும் வெளிப்படும் சமூக சுவாசத்தை இழக்க விரும்பாமலும்;

நடந்து செல்வது, சைக்கிளில் செல்வது, அவசியமென்றால் மட்டும் மொபெட்டில் (Moped) செல்வது, வெளியூருக்கு பேருந்தில் செல்வது, என்று, நானே பிரமிக்கும் வகையில், எனக்கு முன்னுதாரணமாக வாழ்ந்து வருகிறார். பல முறை வெளிநாடுகளுக்கு சென்று வந்துள்ள, மாதம் லட்ச ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கும், எனக்கு நண்பரான பிராமண பேராசிரியரும் அதே போல வாழ்ந்ததையும், சாஸ்திரா பல்கலைக்கழகத்தில், நான் பார்த்திருக்கிறேன். திருச்சி ஜங்சன் பிளாட்பாரத்தில் தொலைவில்,  தனது லால்குடி பள்ளி பருவ நண்பரை, சாமான்யரின் தோற்றத்தில் பார்த்தவுடன், தனக்கு 'வாலையாட்டிக் கொண்டிருந்த பரிவாரங்களை' எல்லாம் தூரத்திற்கு போகச் சொல்லி;


அந்த நண்பரை நோக்கி சென்று, ‘சாமான்யராகவே’ அவருடன் உரையாடி ('சுவாசித்து'), அவரிடம் விடைபெற்று, திரும்பி;

பின் தன் பரிவாரங்களை அருகில் வர உத்திரவிட்டு, ரயிலில் ஏறி சென்றார்; பணி நிமித்தமாக திருச்சி வந்திருந்த, டெல்லியில், மத்திய அரசில் உயர்நிலை அதிகாரியாக பணியாற்றி வந்த ஒருவர்.

ஆனால் கடந்த காலத்தில் தரகராக, அடியாளாக, கள்ளச்சாராயம் காய்ச்சி விற்றவராக, 1965 இந்தி எதிர்ப்பு மாணவர் போராட்டத்தின் ‘நன்கொடையாக' (http://tamilsdirection.blogspot.in/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_13.html ), அரசு கல்லூரிகளில், பெரும்பாலும் முதல் தலைமுறையாக படிக்கும் மாணவர்களின் வகுப்புகளை சீர்குலைக்கும், 'மாணவ ரவுடி'களாக, எடுபிடிகளாக (http://tamilsdirection.blogspot.in/2016/08/blog-post.html );

வாழ்வைத் தொடங்கி, 'ஊழல் சாதி'யில் இடம் பெற்று, இன்று 'மிகுந்த வசதியுடன்' வாழ்பவர்கள் எல்லாம் சைக்கிளில் செல்வதையும், அரசு பேருந்தில் பயணிப்பதையும் கேவலமாக கருதி, தவிர்த்து, மேலே குறிப்பிட்ட கள்ளுண்ட வண்டு போல வாழ்ந்து வருகிறார்கள்

தமிழ்நாட்டில் இயல்பான அன்பும், மரியாதையும், அந்த சமூக முட்டாள்களின் வாடையில்லாத, சமூக வட்டங்களில் தான் வசந்தமாக அரங்கேறி வருகின்றன.

நான் மட்டுமல்ல, என்னைப் போன்று, இயல்பான அன்பு, மரியாதை சுவாசிக்கும், எனக்கு தெரிந்தவர்களின் சமூக வட்டங்களிலும், மேலே குறிப்பிட்ட 'ஊழல்' சாதியினர் அனுமதிக்கப்படுவதில்லை; எதிர்பாராத சந்திப்புகள் மூலம் அத்தகையோருடன் அரங்கேறும் உரையாடல்களில், அவர்கள் எல்லாம் தங்களையும் 'யோக்கியராக', நாம் கருத வேண்டும் என்ற நோக்கில், சிரமப்படுவதெல்லாம்;

முதலில் குறிப்பிட்ட திரைப்படங்களுக்கான, நகைச்சுவை வசனங்களாக, இடம் பெற தக்கவையாகும்.

அத்தகைய 'ஊழல்' சாதியின் துணையின்றி, அவர்களால் கிடைக்கும் லாபங்களை எல்லாம் வெறுத்து, ஒதுக்கி;

மேலே குறிப்பிட்டவாறு, இயல்பான அன்பு, மரியாதை சுவாசிக்கும் வாய்ப்புள்ளவர்கள் எல்லாம்;

நடுத்தர, ஏழை மட்டங்களில் அதிகமாகவும்;

'சமூக ஒப்பீடு நோயில்' (Social Comparison Infection) சிக்கி ( “இன்பத்தைத் திருடும் ஒப்பீடு" -தியோடர் ரூஸ்வெல்ட் "Comparison is the thief of joy" Theodore Roosevelt ; http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_22.html );

'ஊழல்' சாதி வாடையுடன் பயணிப்பதற்கான‌ அதிக வாய்ப்புள்ள நடுத்தர, பணக்கார மட்டங்களில் குறைவாகவும் வெளிப்படுகின்றன;

என்பதும் எனது அனுபவமாகும். அதாவது 'ஊழல் சாதி சமூக வட்டத்திலிருந்து', நேர்மையானவர்கள் எல்லாம் வெளியேறும் சமூக தள விளைவானது (Social Polarization), தமிழ்நாட்டில் தொடங்கி விட்டது. அதன் மூலமாக‌ தமிழ்நாட்டில் இயல்பான அன்பும், மரியாதையும் துளிர தொடங்கி விட்டது. 


'ஊழல் சாதியின்' சமூக வட்டத்தில் இடம் பெற்று;

'தமிழ்நாட்டின் தாய்மொழிவழிக்கல்வியும், கனிவளங்களும் 'ஊழல் சுனாமி'யில் சூறையாடப்பட்டு, அந்த சமூக குற்றவாளிகளை, 'புரவலராக' கொண்டு, கடந்த சுமார் 30 வருடங்களில் நடைபெற்ற 'தமிழ் உணர்வு' நிகழ்ச்சிகளையும், 'பாராட்டப்பட்ட' அறிவுஜீவிகளையும்;

அடையாளம் கண்டு அம்பலப்படுத்தும் பணியை, கமல் ரசிகர்கள் செய்தால், தமிழ்நாட்டின் மீட்சி வரலாற்றில் கமல்ஹாசன் நிச்சயம் இடம் பெறுவார்.' (http://tamilsdirection.blogspot.in/2017/07/its-mad-madmad-tamilnadu.htmlஅம்முயற்சியில் வெளிப்படும் தகவல்களின் அடிப்படையில், கீழ்வரும் பொருளில், முனைவர் பட்ட (Ph.D) ஆய்வினை, ஆர்வமும், உழைக்கும் திறனும் உள்ளவர்கள் மேற்கொள்ளலாம்.


உலகிலேயே தனித்துவமாக (Unique), பொதுவாழ்வு வியாபாரத்தில், தமிழ் உணர்வு என்பது, முதலில்லாத மூலதனமாக பயன்பட;

தமிழ் புலமையாளர்களும், தமிழ் உணர்வு ஆதரவாளர்களும், சுயநல நோக்கில் அதற்கு துணை போக;

'தொல்காப்பிய பூங்காவில் களைகள்' கண்டுபிடித்த, மறைந்த நக்கீரன் போன்று விதிவிலக்காக செயல்பட்டவர்களையும், பகிரங்கமாக ஆதரிக்கும் 'சமூக முதுகெலும்பு' இல்லாதவர்கள் நிறைந்திருந்ததே;

தமிழின், தமிழர்களின், தமிழ்நாட்டின் சீரழிவிற்கான சமூக செயல்நுட்பத்திற்கு வழி வகுத்தது. அந்த சமூக செயல்நுட்பத்தினை முடிவுக்கு கொண்டு வந்து, மீட்சிக்கு வழி வகுக்கும், சமூகத் தூண்டலானது (Social Induction) தமிழ்நாட்டில் தொடங்கி விட்டது.

உண்மையாகவும், நேர்மையாகவும், நல்ல சமூக ஒழுக்க நெறிகளுடனும் வாழும் பணக்காரர்களில் பெரும்பாலோர், தமக்கு தொந்திரவு வேண்டாம் என்று அஞ்சி, 'ஊழல்' பெருச்சாளிகளுடன் ' நல்லுறவில்' (?) வாழ்ந்து வருகிறார்கள். அந்த 'நல்லுறவு' என்பதும் சமூக குற்றமாகும் என்பதை அவர்கள் உணர்ந்து, திருந்தும் விளைவினை ஏற்படுத்தும் சமூகத் தூண்டலானது (Social Induction);


தமிழ்நாட்டில் கிராமங்களில் அடிமட்டத்தில் முளை விட்டு, மேல் நோக்கி, வலிமையுடன் வேகமாக வளர்ந்து வருகிறது. அந்த தமிழ்நாட்டை மீட்கும் சமூகத் தூண்டலுக்கு, நம்மைப் போன்றவர்கள் எல்லாம், சமூக வினை ஊக்கியாக' (Social Catalyst) வாழ்வதன் மூலம், அந்த மீட்சிக்கு நாம் ஆக்கபூர்வமாக பங்களிக்க முடியும்.( http://tamilsdirection.blogspot.in/2014/11/normal-0-false-false-false-en-us-x-none.html )