Monday, March 23, 2015

தேவநேய பாவாணர், 'பெரியார்' ஈ.வெ.ரா போன்றவர்களை 'கேலிக்குள்ளாக்கும்' செயல்நுட்பம்?


தேவநேய பாவாணர், பெரியார் ஈ.வெ.ரா போன்றவர்கள் தத்தம் அறிவு, அனுபவம், கிடைத்த சான்றுகள், அடிப்படையில் தமது கருத்துக்களை வெளிப்படுத்தி உள்ளார்கள். வசதி, வாய்ப்பு, சுகங்களுக்காக,  சுயநலமாக வாழ்ந்தவர்கள் அவர்கள் என்று, அவர்களின் நிலைப்பாடுகளுக்கு எதிரானவர்கள் கூட குற்றம் சொல்ல முடியாத வகையில்,  வாழ்ந்தவர்கள் அவர்கள்.

அவர்கள் வெளிப்படுத்திய கருத்துக்கள் தொடர்பாக,  உலக அளவில் 'புதிதாக' என்னென்ன ஆய்வுமுடிவுகள் வெளிவந்துள்ளன என்பதை உன்னிப்பாகக் கவனித்து, அவர்களின் பற்றாளர்கள், அந்தந்த கருத்துக்களில் உரிய மாற்றங்கள் செய்வது என்பது, அவர்களின் சமூக நோக்கங்களை வளர்த்தெடுப்பதாக அமையும். அந்த அறிவுபூர்வ பாதையை விடுத்து, உணர்ச்சி பூர்வமாக,  அவர்களை வழிபடும் போக்கை ஊக்குவிப்பது என்பது, அவர்களை 'கேலிக்கும், கிண்டலுக்கும்' உள்ளாக்குவதாக அமையும்.

உதாரணமாக லெமூரியா கண்டம் என்பது அறிவியல் உலகில் அபத்தமான கற்பனை என்று முடிவானபின், தேவநேய பாவாணர் முன்வைத்த சான்றுகள் ஆனவை அவரின் காலத்திற்குப் பின், வெளிவந்துள்ள அறிவியல் ஆய்வுகளின்படி தவறான பின்;

“The Lemuria theory disappeared completely from conventional scientific consideration after the theories of plate tectonics and continental drift were accepted by the larger scientific community.”


அதை ஏற்றுக்கொண்டு, செயல்படுவதற்குப் பதிலாக, பாவாணரின் கருத்துக்களை வேதவாக்காகக் கருதி செயல்பட்டால் என்ன விளைவு ஏற்படும்? அறிவியல் பூர்வமான முடிவுகளை அறிந்தவர்கள் பார்வையில், தேவநேயப் பாவாணர் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாகும் விளைவையே அது ஏற்படுத்தும்.

அதற்காக கேலி கிண்டல் செய்பவர்கள் மீது கோபப்படுவது என்பது, இன்னும் மோசமான விளைவையே ஏற்படுத்தும். (http://vijvanbakkam.blogspot.in/2012/08/blog-post.html )

அதாவது அறிவியல் ஆராய்ச்சி முடிவுகளைத் தெரிந்து கொள்ளாமல், பயணிக்கும் 'அறிவியல் தற்குறிக் கூட்டம்' தமிழ்நாட்டில் வளர்ந்து வருவதாக, உலக அளவில் அறிவியல் பூர்வமான முடிவுகளை அறிந்தவர்கள் கருதும் விளைவில் அது முடியும். ( ’உணர்வுபூர்வ இரைச்சல்களுக்கிடையே அறிவுபூர்வ ‘சிக்னல்கள்’; http://tamilsdirection.blogspot.in/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_18.html ) தேவநேய பாவாணர் மட்டுமின்றி, பேரா.ந.சஞ்சீவி உள்ளிட்டு தமிழ். தமிழ் இசை ஆராய்ச்சிகளில், தாம் பயன்படுத்தும் சான்றுகளின் வரை எல்லைகள்(limitations) பற்றிய புரிதல் இன்றியும், உலக அரங்கில் அது தொடர்பாக வெளிப்பட்டுள்ள ஆய்வு முடிவுகள் பற்றிய புரிதல் இன்றியும், ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவது பற்றி ஏற்கனவே பார்த்தோம். (refer post dt. June 5, 2013;’ தமிழாராய்ச்சியில் நடைபெறும் தவறுகளும், தமிழுக்கான விடுதலையும் (1)’ in font TM TTVALLUVAR; http://tamilsdirection.blogspot.sg/2013/06/normal-0-false-false-false-en-us-x-none_3429.html) சுமார் 5 வருடங்களுக்கு முன் இதனை வெளியிட்டபோது, தமிழ் உலகில் இதுவரை நடந்த ஆராய்ச்சிகள் தொடர்பாக அறிவுபூர்வ மறுபரீசிலனைத் துணிச்சலான திசையில் தொடங்கும், என்று நான் எதிர்பார்த்தேன். எப்பொருள் எவர் வாய் என்று ஆய்ந்து, சுயலாப நோக்கில், அப்பொருளைப் பாராட்டும், கண்டிக்கும், இருளில் தள்ளும் தமிழ்ப்புலமையாளர்களின் செல்வாக்கு ஒழியாமல், அது சாத்தியமில்லை, என்பதை உணர்ந்தேன். 

'சிவில்'(civil) பொறியியல் பேராசிரியரும், ஆங்கிலப் பேராசிரிய‌ர்களும் 'செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில், தாம் வகித்த பொறுப்புகளின் வரை எல்லைகள் (limitations) தெரியாமல், நான் மேற்கொண்ட‌ 'திருக்குறளில் தமிழ் இசையியல்' ஆய்வுத்திட்ட நேர்க்காணலில், முட்டாள்த்தனமாகவும், அபத்தமாகவும் கேள்விகள் கேட்கும் 'துணிச்சல்' வந்ததற்கும், தமிழ்நாடு அவ்வாறு பயணித்ததே காரணமாகும். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும், உலகில் எந்த நாட்டிலும் உள்ள மொழி தொடர்பான ஆராய்ச்சிக்கும், இது போன்ற அவலம் நிகழ்ந்தது கிடையாது.(http://tamilsdirection.blogspot.com/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_27.html) 'செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில், இது போன்ற, சம்மந்தப்பட்ட துறையின் புலமையாளர் இன்றி நேர்க்காணல் நடத்திய அபத்தமான‌ முறையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆய்வுத்திட்டங்களில், தமது சான்றுகளின் வரை எல்லைகள் தெரியாமல், 'உணர்ச்சிபூர்வ பார்ப்பன எதிர்ப்பு' ஆய்வுகள் உள்ளனவா? என்று எவரும் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டால், அதற்கு என்னால் இயன்ற பங்களிப்பும் வழங்க இயலும். 

இது போன்று, தமிழ், தமிழ் இசை போன்றவற்றை 'உயர்த்தி'க் காண்பிக்கும் 'உணர்ச்சிபூர்வ' ஆராய்ச்சிகள் காரணமாக, தமிழும், தமிழ் இசையும் உலக அரங்கில், 'கேலிக்குள்ளாகும்' ஆபத்தும் இருக்கிறது.

நான் திருச்சி பெரியார் மையத்தில் பங்களிப்பு வழங்கிய காலத்தில், வே.ஆனைமுத்து உள்ளிட்டு பெரியார் கொள்கையாளர்கள் வெளிப்படுத்திய கருத்துக்களில் தவறுகள் வெளிப்பட்டால், அதை சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவித்து, அச்சிட்டு, விவாதத்திற்கு உட்படுத்தினோம். ( நான் விலகிய பின், திருச்சி பெரியார் மையம் மரணமடைந்து, அந்த மரணத்தில் 'பிணம் தின்னும் கழுகுகள்' போல், அதை வைத்து, திராவிட அரசியல் கொள்ளைக் குடும்பங்களுக்கு 'வாலாகி' சுயநலக் கள்வர்கள் பலன் பெற்ற 'பாவத்திற்கு, ' திருச்சி பெரியார் மையத்திற்கும், அதில் பங்களிப்பு வழங்கிய எனக்கும் பங்குண்டு; திராவிட அரசியல் கொள்ளைக் குடும்பங்கள் உருவாக பெரியார் ஈ.வெ.ராவின் தொண்டுக்கு உள்ள பங்கைப் போல; பெரியார் ஈ.வெ.ராவை அவமதித்து நடந்த 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்கு, 1938 இந்தி எதிர்ப்புப் போராட்டம் பங்களித்தது போல. (” 1944க்கு முன் எப்படி இருந்த தமிழ்நாடு,இன்று  எப்படி இருக்கிறது?இந்தி எதிர்ப்புப் போராட்டம்: 1938‍க்கும்  1965க்கும்   என்ன வேறுபாடு?”;




நான் இசை ஆராய்ச்சியில் எனது முழு கவனத்தைத் திருப்பியதால், திருச்சி பெரியார் மையம், மரணமடைந்த பின்,



'இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
 கெடுப்பார் இலானும் கெடும்’;  திருக்குறள் 448

'இடிப்பார்' இன்றி, பெரியார் கொள்கையாளர்கள்,  'பெரியார் ஈ.வெ.ராவையும், தேவநேயப் பாவாணர் போல' கேலிக்குள்ளாக்கும் வகையில் தமது கருத்தை வெளியிட்டு வருகிறார்களா? இல்லையா? என்ற கேள்விகளை அடுத்து வரும் தகவல் வெளிப்படுத்தியுள்ளது.

“ஆரியர்கள் என்பவர்கள் யார், எங்கிருத்து வந்தவர்கள் என்பதனைப் பார்க்து விடலாம். பெரும்பாண்மை பார்ப்பனர்கள் என்பவர்கள் வௌ்ளை வெளேர் என்ற வெண் தோற்றத்தை உடையவர்கள். பார்ப்பனர்களின் உண்மையான வண்ணம் அது.”http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/297-2009-08-26-21-37-53

திரு. வன்பாக்கம் விஜயராகவன் (http://vijvanbakkam.blogspot.in/)     அவர்கள் பதிவு செய்த கருத்து மூலம்,


“கீற்று தளத்தில் வே.பாண்டியன் என்ற பெயரில் எழுதியது நீங்களா? உதாரணம்


ஆரியரும் அக்னியும்”


மேலேக்குறிப்பிட்ட கட்டுரை எனது பார்வைக்கு வந்தது.

லெமூரியா கண்டம் போல, ஆரியர் பற்றி அறிவியல் உலகில் என்ன ஆராய்ச்சி முடிவுகள் வெளிப்பட்டு வருகின்றன என்பது பற்றிய கவலையின்றி, மேலேக்குறிப்பிட்ட கட்டுரை எழுதப்பட்டுள்ளதா? என்ற கேள்வியை எழுப்பும் வகையில், அது தொடர்பாக வெளிவந்துள்ள அறிவியல் தகவல் கீழே உள்ளது.

“The theory of Indo-Aryan migration was proposed in mid-19th century by German linguist and Sanskrit scholar Max Muller………. "It is high time we re-write India's prehistory based on scientific evidence," said Dr Lalji Singh, former director of CCMB.”




அதே போல மனிதரின் தோலின் நிறம் பற்றி, அறிவியல் உலகில் என்ன ஆய்வு முடிவுகள் வெளிவந்துள்ளன என்பது பற்றிய கவலையின்றியும் மேலேக் குறிப்பிட்ட கட்டுரை எழுதப்பட்டதா? என்ற கேள்வியை எழுப்பும் வகையில், அது தொடர்பாக வெளிவந்துள்ள அறிவியல் தகவல் கீழே உள்ளது.

“The understanding of the genetic mechanisms underlying human skin color variation is still incomplete, however genetic studies have discovered a number of genes that affect human skin color in specific populations, and have shown that this happens independently of other physical features such as eye and hair color “

“Migrations over the last 4000 years, and especially the last 400 years, have been the fastest in human history and have led to many people settling in places far away from their ancestral homelands. This means that skin colors today are not as confined to geographical location as they were previously.”

http://en.wikipedia.org/wiki/Human_skin_color 




அது மட்டுமல்ல, ஆரியர் திராவிடர் பற்றி பெரியார் ஈ.வெ.ரா சந்தித்த கேள்விகளும், அவர் வெளிப்படுத்திய பதிலும், மேலேக் குறிப்பிட்ட கட்டுரையாளர் பார்வைக்கு வந்ததா? என்ற கேள்வியை எழுப்பும் சான்று வருமாறு;

"இரத்தக் கலப்பு ஏற்பட்டு விட்டதே; ஏன் இன்னும் ஆரியர் திராவிடர் பிரச்சினை நாட்டில் நடமாட வேண்டும்? என்று நம்மை நையாண்டி செய்யும் தோழர்கள் பார்ப்பனர்களின் உயர்தன்மை கைவிடவும்,அவற்றுக்கு ஆதாரமான  சாஸ்திர புராணக் குப்பைகளைக் கொளுத்தி விடவும், அதற்குச் சின்னமான கடவுளைத் தகர்க்கவும் கேட்டுக் கொள்ளவும்;பிறகு வரட்டும் நம்மிடம்." 29.09.1948 சிதம்பரம் சொற்பொழிவு; விடுதலை 05.10.1948

காலனியத்திற்கு முன் தமிழ்நாட்டில் கல்வியில் முன்னேறியவர்கள் யார்? என்பது பற்றியும், 'சாஸ்திர புராணக் குப்பைகளைக் கொளுத்துவது' பற்றிய பெரியார் ஈ.வெ.ராவின் கருத்து எவ்வாறு தவறு? என்பது பற்றியும் ஏற்கனவே பார்த்தோம். ( ’பெரியார் ஈ.வெ.ரா வின்  'ஆன்மீக'ப் பெருந்தவறு; http://tamilsdirection.blogspot.in/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_28.html ’ )

நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் யுகமானது,  சில நொடிகளில் 'உரிய முறையில்' தேடி, எளிதில் தகவல்களைப் பெறும் தகவல் யுகம் ஆகும். தொல் தமிழ் இலக்கியங்கள்(ancient Tamil texts), இசை அறிவியல், இசைத் தகவல் தொழில்நுட்பம்(Music Information technology)  உள்ளிட்ட பலதுறை ஆய்வில் உலகில் விரல் விட்டு எண்ணக்கூடிய வெகு சிலரில் நான் ஒருவராக இருந்தாலும், எனது பொறியியல் மாணவர்களிடமும், எனது ஆலோசனையில் செயல்படும் ஆய்வாளர்களிடமும்(Research Scholars) , புதிதாக தகவல் ஏதும் அவர்கள் பார்வைக்கு சந்தால், 'கூச்சமின்றி' என்னிடம் தெரிவித்து, நான் 'வளர' உதவுமாறு அறிவுறுத்தி வருகிறேன்.

தமிழ்/திராவிட இயக்க வர‌லற்றில்  உரிய பதிவின்றி, விலை மதிக்க முடியாத தியாகங்கள் இடம் பெற்றிருப்பதை நான் அறிவேன்.  'குற்ற உணர்வே' இல்லாமல், ( 'குற்ற உணர்வின்றி' மன நிறைவுடன் மரணத்தைத்  தழுவ முடியுமா?’; http://tamilsdirection.blogspot.in/2014/11/normal-0-false-false-false-en-us-x-none.html) அந்த பின்னணியைப் பயன்படுத்தி, 'சுயநலக் கள்வர் கூட்டம்' உருவாகி, வளர்ந்து வருவதையும் நான் அறிவேன்.


தமிழக வாக்காளர்கள் அந்த 'கள்வர்' பாடத்தைக் கையாண்டு, தமிழக அரசியல் கட்சிகளைக் குழப்பி வருவதாகவும் கருதுகிறேன். 'திருமங்கலம் சூத்திர'த் துணிச்சலில், அடுத்து வந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் மிகுந்த நம்பிக்கையுடன் தேர்தலைச் சந்தித்த ஆளுங்கட்சியான தி.மு.கவையும், கருத்துக் கணிப்பையும் ஏமாற்றி, 'யார் பணம் கொடுத்தாலும், கொள்ளையடித்த பணத்தில் கிடைத்த பங்காகக் கருதி, வாங்கிக் கொண்டு, தாம் விரும்பியவருக்கு ஓட்டு போட்டு, அதையும் வெளியில் சொல்லி, விவாதப்படுத்தாமல், ஆளுங்கட்சிக்கு 'மரண அடி' கொடுத்த, 'கமுக்கமான' வாக்காளர்கள் 'அதிவேகமாக' அதிகரித்து வரும் நாடு தமிழ்நாடு. பணத்தை மட்டும் நம்பாமல்,'ஊருக்குள் ஓட்டு கேட்டு வரக் கூடாது' என்று தடை செய்யும் கிராம மக்களின் மீது கோபப்படாமல், அம்மக்களின் 'பிரச்சினைகளை'த் தீர்த்து,  'அதீத வெற்றி' ஈட்டும் திறமையை மீண்டும், மீண்டும் நிரூபித்து வரும் கட்சியாக அ.இ.அ.தி.மு.க உள்ளது. தமிழக அரசியலில் 1991 முதல் நடந்த ஆட்சி மாற்றங்கள் குடும்ப அரசியல் ஊழல் மீது மக்கள் கொண்ட வெறுப்பின் அடிப்படையில் நடந்து வந்துள்ளது. ஆளுங்கட்சிக்கு உள்ள, அந்த புரிதலும் அந்த வெற்றிக்கு காரணமாக இருக்கலாம்.  அடிப்படை வசதிகள் பாதிப்பு, நிதி நிறுவன மோசடி, டாஸ்மாக் எதிர்ப்பு  உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக, தினமும் தமிழ்நாட்டில் ஆங்காங்கே கட்சிகள் தொடர்பில்லாமல், தெருவில் இறங்கி, மக்கள், குறிப்பாக பெண்கள், போராடி வருவ‌தும்,அந்த போக்கின் ஊடேயே, ஆளுங்கட்சி மீண்டும் மீண்டும் அத்தகைய வெற்றிகள் பெற்று வருவதும் ஆய்வுக்கு உரியவையாகும். அத்தகைய போராட்டங்களில், தமது பிள்ளைகளான படிக்கும் மாணவர்களை ஈடுபடுத்தாமல், பெரியவர்களும் பெண்களும் தாமே போராடி வரும் போக்கு, 1944 க்கு முந்தைய போக்குடன் ஒப்பிடக் கூடியவையாகும். 1938 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் மாணவர்களை ஈடுபடுத்தாமல் பெரியவர்களும், பெண்களும் முன்னின்று போராடினார்கள்.

அத்தகைய போக்கில், 1944இல் பிராமணர்களும் இருந்த, நீதிக்கட்சியில் 'ஊழல்' இன்றி, சொந்த பணத்தை செலவு செய்து, பொது வாழ்வில் இருந்த புலமையாளர்களை விட்டு விலகி, பெரியார் ஈ.வெ.ரா திராவிடர் கழகம் தொடங்கி பயணித்த காலத்தில், ஆங்கிலம் தெரிந்தவர்களாக அண்ணாதுரை, டார்பிடோ ஜனார்த்தனம், குத்தூசி குருசாமி போன்ற வெகு சிலர் இருக்க, தமக்கிருந்த தமிழறிவிலும், பொது அறிவிலும் பேச்சாளர்களும், எழுத்தாளர்களும் வளர்ந்தார்கள். அந்த போக்கில் உணர்ச்சிபூர்வ, பாலியல் விரச உள்ளடக்கம் செல்வாக்கில், அறிவுபூர்வ கூறுகள் பலகீனமானது. தலைவர்களின் அறிவுக்கு தீனி போட்டவர்களை விட, தமது சொத்தையும், சொந்த வாழ்வையும் கட்சிக்காக தியாகம் செய்த தொண்டர்களை விட, தனிமனித பலகீனங்களுக்கு தீனி போட்ட ‘பலவகைத் தரகர்கள்’ எல்லாம், 'அதிவேக' செல்வாக்கில் வளர்ந்தார்கள். ஆனால் 1967இல் முதல்வரான அண்ணாதுரை,நம்ப முடியாத அளவுக்கு, அந்த போக்கிலிருந்து விடுபட்டு, நேர்மையாக, அறிவுபூர்வமாக முதல்வராக செயல்பட முனைந்து, அது முடியாமல் மனம் நொந்து மறைந்ததை ஏற்கனவே பார்த்தோம். இன்று திராவிட/தேசிய உள்ளிட்டு எந்த பெரிய/சிறிய கட்சிகளாக இருந்தாலும், ஆதாயத்தொண்டர்கள் மற்றும் தரகர்கள் பலத்தையே பெரும் அளவு நம்ப, பொது வாழ்வு என்பதே வியாபாரமாகி விட்டதா? என்ற கேள்வி எழும் வகையில் தமிழ்நாடு பயணித்து, மேலேக் குறிப்பிட்ட திருப்பு முனைக் கட்டத்தில் தமிழ்நாடு இருக்கிறது.

'கால தேச வர்த்தமான' மாற்றத்திற்கு தம்மை 'சமூகப் பொறுப்புடன்' உட்படுத்தி, அறிவுபூர்வமாக பயணிக்காமல், உணர்ச்சிபூர்வமாக பயணிப்பவர்கள் எல்லாம் கால ஓட்டத்தில் உதிர்ந்து போவார்கள் என்று 'தோழர் ஈ.வெ.ரா'  குறிப்பிட்டிருக்கிறார். 'தோழர் ஈ.வெ.ரா' என்பது, அவரை அவமதிக்கும் சொல் என்று அவரை 'பெரியாராக'ச் சிறைப்படுத்தி வருபவர்கள் யார்? அந்த உணர்ச்சிபூர்வ போக்கில் 'அறிவியல் தற்குறிக் கூட்டமாக'ப் பயணிப்பவர்கள் யார்? என்ற கேள்விகளைத் தொடர்ந்து தவிர்ப்பது என்பது, அத்தகைய தலைவர்களை 'கேலிப் பொருள்' ஆக்காதா? என்பது சமூகப் பொறுப்புடன் அணுக வேண்டிய கேள்வியாகும்.

பிறர் மீது பழி சுமத்தி தப்பிக்காமல்,  தமிழ் வழியின் மரணப்பயணத்தைத் தடுத்து, சீரழிவிலிருந்து, தமிழையும், தமிழ்நாட்டையும் மீட்க,  நாம் ஒவ்வொருவரும் எப்படி வாழ வேண்டும் என்பதற்கான வாழ்வியல் சூத்திரம் வருமாறு;

“It is a known saying that people get the leaders they deserve. Rather than blaming others (including leaders) we need to help each other change and stick to it. We are social animals. We need self-control as well as system-control; we need to trust as well as be vigilant. We have to earn our leaders. To demand better leaders we have to be better people. Both go together. The 'we' here means the educated middle to upper-middle to upper class. To get good friends I have to be one (a good friend). To improve/change society I have to improve/change myself.” V.Tholkappian : http://tholthamiz.blogspot.in/   ( யார் தமிழர்? என்ற கேள்விக்கு எனக்குக் கிடைத்த சிறப்பான விடை; http://siragu.com/?p=3527 )

குறிப்பு: தமிழ் நாட்டில் தமிழ், தமிழ் உணர்வு, பகுத்தறிவு, தலித், இந்துத்வா, இஸ்லாம் உள்ளிட்ட இன்னும் பல‌வற்றை முன்வைத்து, ஒவ்வொன்றிலும், ஒன்றுக்கும் மேற்பட்ட அமைப்புகள்  செயல்படுவது கொள்கையின் வெற்றிக்காகவா? அல்லது அந்த கொள்கையை வைத்து, தத்தம் வசதி, வாய்ப்புகளை அதிகரித்துக் கொள்ளவா?

அந்தந்த தலைவர்களின் பேச்சில், எழுத்தில் அதிக செல்வாக்குடன் வெளிப்படுவது அறிவுபூர்வமா? உணர்ச்சிபூர்வமா? தத்தம் கொள்கை, நிலைப்பாடுகளுக்கு எதிராக, உலக ஆராய்ச்சிகளில் வெளிப்படும் தகவல்களைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் அவர்களுக்கு இருக்கிறதா? 

அதைப் பரிசீலித்து, உரிய மாற்றங்களை வெளிப்படுத்தி, செயல்படாவிட்டால், தமது அமைப்புகள் கால ஓட்டத்தில் உதிரும் என்பதை அவர்கள் அறிவார்களா?

1 comment:

  1. நீங்கள் சுட்டிக்காட்டிய வே.பாண்டியன் மட்டுமல்ல, மற்ற திராவிட இயக்க எழுத்தாளர்களுக்கும் தோல்நிற தொடர்பான அப்செஷன் அதிகமாகவே உள்ளது. இந்தியர்கள், தமிழர்கள், பிராமணர்கள் எல்லோரும் பல நிறத்தின் இருக்கின்றனர்; ஆனால் திராவிட எழுத்தாளர்களுக்கு இது ஒரு அப்செஷனாக போய்விட்டது; அதை வாழ்க்கயின் ஒரு உண்மையாக எடுத்துக் கொள்ளாமல், அதை “விஞ்ஞான” ரீதியாக அலசத்தொடங்குகின்றனர்; அது போலி விஞ்ஞானம் தான். ஞானமுத்து தேவநேயன் எழுத்திலும் இந்த அப்செஷன் உண்டு . அதனால் ஜாதி, மொழி வகை தீய சாய்வுகள் - ப்ரெஜுடிஸ் - போதாது என்று , தோல்நிற ப்ரெஜுடிஸ்களும் திராவிட இயக்கத்தினால் வளர்க்கப்பட்டன.

    விஜயராகவன்

    ReplyDelete