Thursday, October 13, 2016

ஈ.வெ.ரா-வின் 'பொதுத்தொண்டனுக்கான’ அளவுகோலின்படி,

நமது  'யோக்கியதை '  எப்படி?


1925-இல் காங்கிரசிலிருந்து ஈ.வெ.ரா வெளியேறி, 'குடி அரசு' இதழை தொடங்கி, காங்கிரஸ் எதிர்ப்பு போக்கில் பயணித்த காலத்தில், கீழ்வரும் கருத்தை வெளியிட்டார்.

“இந்திய தேசிய காங்கிரஸ் எனும் ஒரு தேசிய வியாபார லிமிடெட் கம்பெனியானது, அது ஏற்படுத்தப்பட்ட நாள் முதலாகவே, அந்த தேசிய வியாபாரக் கம்பெனியில் நிர்வாக ஸ்தானம் வகித்தவர்களுக்கெல்லாம் பெரும்பான்மையாய் அய்கோர்ட் ஜட்ஜ் உத்தியோகமும், நிர்வாக சபை அங்கத்தினர் பதவியும், மற்றும் அதில் சார்ந்த பங்காளிகளுக்கெல்லாம், ஜில்லா ஜட்ஜ், சப் ஜட்ஜ் முதலிய உத்தியோகப் பதவிகளும், மற்றும் பட்டம், கவுரவ உத்தியோகங்கள் தொழில் விருத்தி ஆகியவைகளும் தாராளமாக கிடைத்து வந்தது யாவரும் அறிந்ததேயாகும்.

இந்த நிலைமையானது நாளுக்கு நாள் பெருகி, அநேகர் இவ்வியாபாரத்தில் பங்கெடுக்க நேர்ந்ததன் பின், லிமிடெட் கம்பெனியாய் இருந்ததானது, அன்லிமிடெட் கம்பெனியாகி, அதாவது ஒரு வகுப்பாருக்கு மாத்திரம், ஒரு தரத்தாருக்கு மாத்திரம், என்று வரையறுக்கப்பட்டு, இருந்ததானது மாறி, எல்லா வகுப்பாருக்கும், எல்லா தரத்தாருக்கும், அதில் பங்கு எடுத்துக் கொள்ள சவுகரியம் ஏற்பட்டு, பிறகு அதற்கு அநேக கிளை ஸ்தாபனங்களும் உண்டாகி, இப்போது வரவர பெருகி, ஏறக்குறைய சிறிது கல்வியும், தந்திரமும் உள்ள எல்லா மக்களுமே,  வியாபாரத்தில் கலந்து, அளவுக்கு மீறிய, அதாவது தங்களது யோக்கியதைக்கும், தகுதிக்கும், எத்தனையோ பங்கு மீறியதான லாபத்தை, பயனை, அடையும்படி செய்து விட்டது.” ;- குடி அரசு 1 - 2 – 1931

1949- இல் தி.கவிலிருந்து பிரிந்து, தி.மு.க உருவான பின், தி.மு.க எதிர்ப்பு போக்கில்,  ஈ.வெ.ரா பயணித்த காலத்தில் வெளியிட்ட கருத்து அடுத்து வருகிறது.

"எந்த பொதுத் தொண்டனுக்காவது மனைவி இருக்கிறது; மக்கள் இருக்கிறார்கள் என்றால், அவர்களுக்கும் குடும்பத்தில் வசதி இருக்க வேண்டும். அல்லது  அவர்களும் உணவு உடை தவிர மற்றெதையும் கருதாதப் பொதுத் தொண்டர்களாக இருக்க வேண்டும்.பொதுத் தொண்டு ஊதியத்தால் வாழ்கிறவர்கள், அவர்கள் குடும்பங்கள்  சராசரி வாழ்க்கைத் தரத்துக்கு மேல் வாழக் கூடாது; வாழவே கூடாது.

வாழ வேண்டி வந்தால், வாழ்ந்து கொள். ஆனால் 'நான் பொதுத் தொண்டன், கஷ்ட நஷ்டப்பட்டவன் ' என்று சொல்லாதே. சொல்வதற்கு வெட்கப்படு; உன் மனதிலும் நீ நினைத்துக் கொள்ளாதே. அப்படி நினைப்பாயேயானால், சொல்லுவாயேயானால், நீ 'மக்களை ஏமாற்றி வெற்றி பெறுவதாகக் கருதிக் கொண்டிருப்பவன்' என்று தான் சொல்ல வேண்டும்.

மற்றும் இதை ஏன் சொல்லுகிறேன் என்றால், நீ பொதுத் தொண்டன் ஆகாமல், சுயநலத் தொண்டனாகி, உனக்கென்றே நீ பாடுபடுபவனாக ஆகி இருந்தால், இன்று உன் நிலை எப்படியாகி இருக்கும்? உன் தரம் அந்தஸ்து என்ன ஆகியிருக்கும் என்பதை உன் தரத்தைக் கொண்டு உண்மையாய் நினைத்துப் பார்த்து, உன் பொதுத் தொண்டு (வேஷம்) ஆனது உன்னைத் தியாகம் செய்ய செய்ததா?அல்லது உன் தகுதிக்கும்  மேற்பட்ட செல்வத்தையும்,வாழ்க்கை வசதியையும், அந்தஸ்தையும் தேடிக் கொள்ளச் செய்ததா? என்று எண்ணிப் பார். " -  பெரியார் ஈ.வெ.ரா அவர்கள் 17.09.1962 ( பெரியார் 84 ஆவது பிறந்த நாள் மலர் ) 

1967இல் தி.மு.க ஆட்சியைப் பிடித்து, அதை ஈ.வெ.ராவும் அங்கீகரித்து(?), பாராட்டி(?), பயணித்த போக்கில், அண்ணாவின் மறைவிற்குப்பின், தி.மு.கவானது, அவ்வப்போது, தேர்தல் கணக்குகளின் அடிப்படையில், காங்கிரசுடன் கூட்டணி அமைத்து பயணித்த போக்கில், மேற்குறிப்பிட்ட இரண்டு அபாய அறிவிப்புகளும் 'சங்கமமாகி';

மேற்குறிப்பிட்ட 'சுயநல கள்வர்களான' பொதுத் தொண்டர்கள், எவ்வாறு 'பெரியார்' முகமூடியில் அரங்கேறினார்கள்? என்பது ஆய்விற்குரியதாகும். ( http://tamilsdirection.blogspot.sg/2017/03/blog-post_5.html ) திராவிட இயக்க வரலாற்றில், சமூக ரத்த ஓட்டத்தில்,  லாப நட்டம் பார்க்கும், 'கள்வர் பண்பு' நுழைவதற்குக் காரணமான, அந்த ' திராவிடத் திறமைசாலிகளின்' வளர்ச்சியானது, திரைப்படத் துறையில், குறிப்பாக, 'வேலைக்காரி', 'பராசக்தி' போன்ற திரைப்பட வெற்றிகளின் பலப் பின்னணியில் வளர்ந்ததா?

தமிழக அரசியலில் திரை உலகச் செல்வாக்கும், குடும்ப அரசியல் செல்வாக்கும், -ஆளுங்கட்சியிலும், எதிர்க்கட்சியிலும்-, இந்தியாவிலோ, உலகிலோ, வேறு எங்கும் காண முடியாத அளவுக்கு, எவ்வாறு தோன்றி வளர்ந்தது? என்ற கேள்விகளை ஆராய வேண்டிய நேரம் வந்து விட்டது. (http://tamilsdirection.blogspot.in/2014/11/normal-0-false-false-false-en-us-x-none.html)

இன்று நாமோ அல்லது நமக்கு வேண்டியவர்களோ, எந்த கட்சியில் இருந்தாலும்;

நாம் ஒவ்வொருவரும், நமது ‘யோக்கியதையை',

சுயவிமர்சனம் செய்து, நம்மிடம் உள்ள குறைகளை அடையாளம் கண்டு நிவர்த்தி செய்து, பயணிக்கவும்;

அதை செய்யாமல், சமூகத்திற்கு கேடாக பயணிக்கும், 'பொதுத் தொண்டர்களை' அடையாளம் கண்டு ஒதுக்கவும்;

மேற்குறிப்பிட்ட மேற்கோள்கள் துணை புரியும். 

தமக்கு விளையும் இழப்புகளை ஏற்றுக்கொண்டு;

'அந்த ஊழல் கொள்ளையர்களை' ஒதுக்கி வாழ்பவர்களை, நடுத்தர, ஏழை மக்களில் கணிசமானோர், மதிக்கும் போக்கானது, தமிழ்நாட்டில் அதிகரித்து வருகிறது.

வார்டு கவுன்சிலர் முதல் மேல் மட்டம் வரை ஊழல் வழிகளில், 'அதிவேக' பணக்காரர்களாக வலம் வரும் அனைத்து கட்சி அரசியல் கொள்ளையர்களையும் விசாரணைக்குட்படுத்தி, தண்டித்து, அவர்கள் சொத்துக்களை பறிமுதல் செய்தால் தான், தமிழ்நாடு உருப்படும்; என்ற கருத்தானது, நடுத்தர, ஏழை மக்களிடையே, அவர்களின் உரையாடல்களில் வெளிப்படத் தொடங்கியுள்ளது.

அரசியல் நீக்கம் காரணமாக;

சாதாரண மக்களுக்கும், கட்சிகளுக்கும் இடையிலான 'பிணைப்பு வலைப்பின்னலானது' (Link network) மறைந்து, 'ஆதாய வலைப்பின்னலின்' பலத்தில் பயணிக்கும், திராவிட/தேசிய/தமிழ் கட்சித் தலைவர்களின் கண்களுக்கு, அது தெரிய வாய்ப்பில்லை. (திருக்குறள் 573)

உயர் நடுத்தர(upper middle class), பணக்கார (affluent)  வசதிகளுடன், தாம் வாழும் 'பாதுகாப்பு மண்டிலத்தை' (Comfort Zone) விட்டு விலகி,  பார்ப்பவர்களுக்கு மட்டுமே, அது தெரிய வாய்ப்பிருக்கிறது.

சென்னை வெள்ள நிவாரணத்தில், அரசியல் கட்சிகளை 'தாமதமான' வால்களாக்கி;

இளைஞர்களும். மாணவர்களும் 'செயல்பூர்வமாக' உதவிய‌ போக்கானது,

 சென்னை முதல் கன்னியாகுமரி வரை வெளிப்பட்டது.

அரசியல் கட்சிகளை ஓரங்கட்டி, அந்த போக்கானது, மேற்குறிப்பிட்ட விசாரணையை தூண்டுவிக்கும் காலமானது, எதிர்பார்ப்பதை விட, விரைவாகவே நடந்தால், வியப்பில்லை. அதில் சந்தேகம் உள்ளவர்களின் பார்வைக்கு;
https://www.youtube.com/watch?v=pKWvSJNN3vo&feature=youtu.be

மக்களின் தேவைகளும், அதை உணர்ந்து (sensitize),  செயல்பூர்வமாக உதவும் மனிதர்களும், இணைய வழி விரிந்த சமூக சூழலில், ஒத்திசைவான முறையில் (Social Resonance), செயல்பாடுகளுக்கான அமைப்புகளானவை(structures), திட்டமிடாமலேயே, அந்த ஒத்திசைவு போக்கிலேயே உருவாகும் என்பதை மேற்குறிப்பிட்ட உரையானது, சுட்டிக்காட்டியுள்ளது.


'பெரியார், அண்ணா, காந்தி, நேரு' போன்ற பிம்ப வழிபாடுகளை ஊக்குவித்து, பயணிக்கும் இன்றுள்ள கட்சிகள் எல்லாம் சாதாரண மக்களிடமிருந்து, எந்த அளவுக்கு அந்நியமாகியுள்ளார்கள்? என்பதை அறிய;
https://www.youtube.com/watch?v=6uzEmrKLj4k

தமிழ்நாட்டிலும், கர்நாடகத்திலும், காவிரிப் பிரச்சினையில் வன்முறையைத் தூண்டி வரும் 'பைத்தியங்களை' (?), இரண்டு அரசு ஆட்சியாளர்களும் கைது செய்ய வேண்டும்? என்ற கோரிக்கையை  RJ பாலாஜி முன் வைத்துள்ளார்.
https://www.youtube.com/watch?v=lu9Dk72xAcw

அது சாத்தியமா? என்ற கேள்விக்கு, விடை காண;
http://tamilsdirection.blogspot.in/2016/10/caution-bjps-support-to-strengthen.html

http://tamilsdirection.blogspot.in/2016/09/blog-post.html

 http://tamilsdirection.blogspot.com/2018/10/normal-0-false-false-false-en-in-x-none_13.html




Monday, October 10, 2016

தமிழ் மொழி, கலை, இலக்கியங்களை  சீரழிவிலிருந்து,  விடுவிக்கும் 'காலனிய நீக்கம்' (Decolonizing)?


காலனி ஆட்சியில் அடிமைப்பட்டு, விடுதலையான நாடுகளில் வாழும் மக்கள், குறிப்பாக படித்தவர்கள், தம்மையறியாமலேயே, காலனிய மன அடிமைகளாக எவ்வாறு வாழ்ந்து வருகின்றனர்? அந்த நோயிலிருந்து,  எவ்வாறு விடுதலை  பெற முடியும்?

அந்த விடுதலை முயற்சிகளுக்கு, அந்தந்த நாட்டு மக்களின் கடந்த காலம் பற்றி, காலனி ஆட்சியாளர்கள் உருவாக்கியிருந்த 'கருத்தாக்கங்கள்' பற்றியும், அதற்காக அவர்கள் ஆதரித்து வளர்த்து வரும் 'அருங்காட்சியகங்கள்' பற்றியும், எந்தெந்த வழிகளில் மறு ஆய்வுகளுக்கு உட்படுத்தி, ஆக்கபூர்வமான வருங்காலத்திற்கு வழிகள் காண முடியும்? என்பது பற்றிய உலக  ஆய்வுகள் பல வெளிப்பட்டு வருகின்றன.

பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்டு காலனி ஆட்சி புரிந்த நாடுகள் எல்லாம், தாம் அடிமைப்படுத்தியிருந்த நாடுகளிலிருந்தும், அகதிகளாகவும் குடியேறி, அந்தந்த நாடுகளின் குடியுரிமை பெற்று, இன்று எண்ணிக்கையிலும், செல்வம்‍ செல்வாக்கிலும்,  அவர்கள் பெற்று வரும் வலிமையில், கடும் சிக்கல்களை, காலனி ஆட்சி புரிந்த நாடுகள், எதிர்நோக்கியுள்ளன.

அந்நாடுகளில் வாழும் 'வெள்ளையர்கள்' 'பாதுகாப்பின்மை' (insecurity) மனநோயில் சிக்கி, நிறவெறி அமைப்புகள் எல்லாம் வலிமை  பெற்று வருகின்றன; மேற்கத்திய நாடுகள் முன்வைத்த 'மனித உரிமை'களை கேலிப்பொருளாக்கி.

எனவே மேற்குறிப்பிட்ட ஆய்வுகளை ஊக்குவிக்க வேண்டிய நெருக்கடியில், அந்நாட்டு அரசுகள் இருக்கின்றன.

அந்த நோக்கில், பிரிட்டன் அரசானது;

‘Arts and Humanities Research Council’ (AHRC) என்ற அமைப்பை நடத்தி வருகிறது.

அந்த அமைப்பின் நிதி உதவியில், ‘Utopian Archives: Excavating Pasts for Postcolonial Futures’ என்ற தலைப்பில், 2012 - 2014 கால இடைவெளியில், நான்கு பட்டறைகளை (Workshop) நடத்தியுள்ளனர். அதில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகளில் முக்கியமானவற்றை தேர்ந்தெடுத்து, கீழ்வரும் இணைய தளத்தில் வெளியிட்டுள்ளனர்.

காலனிய அடிமைகளாக இருந்த மக்களின் பார்வையில் படாமல், இரகசியமாக இருந்தவையும், இப்போது வெளிவரத் தொடங்கியுள்ளதும் அந்த ஆய்வுகளில் வெளிவந்துள்ளன.

(Some of these claims are for access to the historical truths hidden in those archives, evidence of torture and maltreatment. This is the case for the ‘migrated archives’ of the British Empire that have for decades been hidden from, and made inaccessible to, their postcolonial claimants (Anderson 2011Anderson, David. 2011. Mau Mau in the High Court and the ‘lost’ British Empire archives: Colonial conspiracy or bureaucratic bungle?Journal of Imperial and Commonwealth History 39: 699716. doi:10.1080/03086534.2011.629082[Taylor & Francis Online], [Web of Science ®]). Other claims are not for specific data, but for a reappropriation of the archive as a system of knowledge. Indeed, the current postcolonial claim to the archive should be situated in a wider epistemological shift that comprehends the archive as an instrument for the production of knowledge.)

காலனிய நீக்கம் (Decolonization)  தொடர்பாக, பல்கலைக்கழகங்கள் மட்டங்களில் நடைபெற்றுவரும் ஆய்வுமுறைகளுக்கு (Research Methodologies) மாற்றாக;

கள அடிமட்ட ஆய்வு முயற்சிகள் - grassroots  research  collectives-  மூலம், மாற்று ஆய்வு முறைகள் உருவாகி வருவது பற்றியும் ஆய்வுகள் வெளிப்பட்டு வருகின்றன. http://decolonization.org/index.php/des/article/view/19113/16236

காலனி ஆதிக்கத்திற்குட்பட்ட நாடுகளின் மொழி, வரலாறு, கலை, இலக்கியம் உள்ளிட்டவையெல்லாம், 'காலனியமய' (Colonizing) சூழ்ச்சியில் சிக்கி, இழிவுபடுத்தப்பட்ட போக்கினை எதிர்த்து, அவற்றை 'காலனிய நீக்கம்' (decoloizing)  மூலம் விடுவிக்கும் ஆய்வுகளும் உலகில் அரங்கேறி வருகின்றன.

கிராமங்களிலும், தமிழ்/திராவிட தலைவர்கள், ஆதரவாளர்கள் குடும்பங்களிலும், 'அம்மா, அப்பா' மறைந்து, 'மம்மி டாடி' அரங்கேறும் அளவுக்கு, 'காலனியமாக்கல்' நோயில், தமிழ்நாடு சிக்கியுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் வாழும் பிற மொழி குடும்பங்களில், அவரவர் தாய் மொழிகளிலேயே 'அம்மா, அப்பா' சொற்கள் வலம் வருகின்றன.

அமெரிக்காவில் வாழும் ராஜிவ் மல்கோத்ரா(http://rajivmalhotra.com/), தரம்பால் (https://en.wikipedia.org/wiki/Dharampal) போன்ற இன்னும் பல அறிஞர்கள் மேற்கத்திய வழிபாட்டு போக்கிலிருந்தும், காலனிய சூழ்ச்சிகளிலிருந்தும், இந்தியாவை விடுவிக்கும் முயற்சிகளில், அறிவுபூர்வமான விவாதங்களை, வியக்கும் வண்ணம் முன்னெடுத்து வருகிறர்கள். 

ஆனால் அவர்களுக்கெல்லாம் சமஸ்கிருதத்தில் இருக்கும் புலமை அளவுக்கு தமிழில் இல்லாதது பெருங்குறையாகும்.

எனவே மேற்கத்திய வழிபாட்டு போக்கிலிருந்தும், காலனிய சூழ்ச்சிகளிலிருந்தும், தமிழ் மொழி, கலை, இலக்கியங்களை விடுவிக்க, அம்முயற்சிகளில் முக்கிய இடம் இல்லை.

இசையில் செவ்விசை/நாட்டுப்புற இசை என்ற பிரிவுகளும், 'தீண்டாமையும்' காலனியத்தின் நன்கொடைகள், என்பதை எனது ஆய்வுகள் மூலம் வெளிப்படுத்தியுள்ளேன். http://tamilsdirection.blogspot.in/2013/11/normal-0-false-false-false-en-us-x-none_13.html

அதே போல, பழந்தமிழ் இலக்கியங்களில், நான் ஆய்வு மூலம் வெளிப்படுத்தியுள்ள, ‘தமிழிசையியல்’ (Tamil Musicology) பற்றியும் (http://www.musicresearch.in/categorywise.php?flag=R&authid=13), தொல்காப்பியத்தில் இசை மொழியியல் பற்றியும் (Musical Linguistics; http://musictholkappiam.blogspot.in/ ), வெளிவந்துள்ளவை எல்லாம் ;

மேற்கத்திய வழிபாட்டு போக்கிலிருந்தும், காலனிய சூழ்ச்சிகளிலிருந்தும், தமிழ் மொழி, கலை, இலக்கியங்களை விடுவிக்க துணை புரியும்.

'இனம்' (Race), 'சாதி'(Caste) போன்றவற்றில் உள்ள காலனிமயத்தைப்(Colonization) பற்றிய புரிதலின்றி,  'இன விடுதலை', 'சாதி ஒழிப்பு' போன்ற முயற்சிகளும், ‘காலனிமயமாக்கல்’ நோயில் சிக்கி, பயணிக்கின்றனவா? என்பதும் ஆய்விற்குரியதாகும். 

இந்திய வரலாற்றில் வெற்றி பெற்ற அரசர்கள், தோற்ற மன்னர்களின் குடிமக்களை, குறிப்பாக இராணுவத்தினரை, அடிமை வேலைகள் செய்யும் பிரிவினராக்கிய சான்றுகள் உள்ளன.

தமிழ்நாட்டில் காலனி அரசானது, 'சாதி'யை நுழைத்து, சாதி அடையாள பட்டியல் புதிதாக உருவாக்கிய போது, அந்த காலக்கட்டத்தில், அடிமைப் பணிகளில் ஈடுபட்டிருந்தவர்களை, தனிப்பட்ட அட்டவணைக்குள்ளாக்கி, 'தீண்டத்தாகதவர்கள்' என பிரித்தனரா? என்பது ஆய்விற்குரியதாகும்.

சோழ அரசில்(  கீழ்வரும் சான்றின்  படி);
மலைகளிலும் காடுகளிலும் வாழ்ந்து வரவழைக்கப்பட்டவர்களில்;
இராணுவத்தில் பணியாற்றிய;

'பள்ளர்' தலித் சாதியினராக வலம் வருகின்றனர்;

'கள்ளர், மறவர், அகமுடையார்', 'முக்குலத்தோர்' சாதியினராக வலம் வருகின்றனர்; 

'நத்தமான்', மலையமான், சுருதிமான்', ஆகிய பிரிவினர், இன்று   'உடையார்‍ பார்க்கவ குல'  சாதியினராக வலம் வருகின்றனர்; 

“ Pallis, Agambadiyars, Surudimans,Malaiyamans, Nattamans of the western hilly and forest area north of Kaveri, and Kallara and perhaps Maravars too of the semi-dry area south of the same river, seem to have composed the army during the Chola period “
Page130 ‘ South Indian Scoiety in Transition; Ancient to Medieval’
By Noboru Karashima- OXFORD University Press 2009

சோழ அரசின் வீழ்ச்சிக்குப் பிறகு, எந்தெந்த சிற்றரசர்களின் இராணுவத்தில் மேற்கண்ட பிரிவினர் பணியாற்றினர்? 

அவர்களில் எந்தெந்த பிரிவினர், காலனி ஆட்சி காலக்கட்டதில்;

தோற்ற சிற்றரச இராணுவத்தினராக, அடிமைப் பணிகளில் இழிவு படுத்தப்பட்ட நிலையில் இருந்தனர்? என்பவையெல்லாம் ஆய்விற்குரியவையாகும்.

சங்க காலத்தில், விவசாயம், மீன் பிடித்தல் உள்ளிட்ட அனைத்து தொழில்களிலும் ஈடுபட்டவர்களில் பலர்;

பறைவகை இசைக்கருவிகளை இசைப்பதில் வல்லுநர்களாக, ‘குடிமகன்களாக';

'பறையர்' என்ற பிரிவில், அடையாளப்படுத்தப் பட்டிருக்கின்றனர். 

இன்று 'பறையர்' தலித் சாதியாக வலம் வருகின்றனர்.

கூடுதல் சான்றுகளுக்கும், தகவல்களுக்கும் படிக்கவும்.
http://tamilsdirection.blogspot.in/2016/01/normal-0-false-false-false-en-us-x-none_31.html

தமிழ்நாட்டில் கலைக்கல்லூரிகளில், வரலாறு, தமிழ்த் துறைகளைச் சார்ந்த மாணவர்களில் பலர், 'கல்வெட்டியல்'(Epigraphy) உள்ளிட்ட தொல் பொருள் ஆய்வு பயிற்சிகளில் ஆர்வம் காட்டி வரும் செய்திகள் ஊடகங்களில் வெளிவந்துள்ளன.( http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/origin-of-tamilbrahmi-scripts-traced-at-training/article4275131.ece & http://www.pchrmadurai.com/activities.jws ) அம்மாணவர்களில் பெரும்பாலோர், தமிழ் வழி அரசுப் பள்ளிகளில் படித்தவர்களாய் இருந்தால் வியப்பில்லை.

இச்செய்திகள், கள அடிமட்ட ஆய்வு முயற்சிகள் - grassroots  research  collectives-  மூலம், மாற்று ஆய்வு முறைகள் உருவாகும் நம்பிக்கையை உருவாக்கியுள்ளன.

ஆனால் இன்று கிராமப்புறங்களில் ஆங்கில வழிக் கல்வி விளையாட்டுப் பள்ளிகள் (Play Schools) எல்லாம், 'புற்றீசல்' போல் வளர்ந்து வரும் போக்கில், தமிழ் மொழி, கலை, இலக்கியங்களை விடுவிக்கும் 'காலனிய நீக்கம்' (Decolonizing) வெற்றி பெறுமா? வெற்றி பெற, காலனிய மனநோயாளிகளும், திராவிட மனநோயாளிகளும், வழி விட்டு, ஒதுங்குவார்களா?(http://tamilsdirection.blogspot.in/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_8.html) வெற்றி பெறவில்லையென்றால், தமிழ் வேரழிந்த 'தமிங்கிலீசர்கள்' நாடாக தான், தமிழ்நாட்டின் எதிர்காலம் இருக்குமா? என்பவையெல்லாம், ஆய்விற்கும் விவாதத்திற்கும் உரியவையாகும். 

குறிப்பு:
எழுத்தில், பேச்சில், 'தமிங்கிலீசர்களாக' வாழ்ந்து கொண்டு, அல்லது அறிவுபூர்வ விவாதங்களைத் தவிர்த்து, உணர்ச்சிபூர்வமாக, 'பழந்தமிழ், தமிழர்' பெருமைகளை வெளிப்படுத்தி, தம்மை உயர்த்திக் கொள்பவர்களும், காலனிய மனநோயாளிகளா? என்பதும் ஆய்விற்குறியதாகும்.

Wednesday, October 5, 2016

தமிழர்களின் அடையாளச் சிதைவும், அரசியல் நீக்கமும் (depoliticize)(10)


காந்தி பிம்பம் உள்ளிட்ட பிம்பங்களின் சமூகத் தூண்டலை (Social Induction) எவ்வாறு ஒழிக்க முடியும்?


மாவட்ட அளவில் அரசு அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்று, தனியார் நிறுவனத்தில் உயர் பொறுப்பில், மிகுந்த செல்வாக்குடன் இருந்த ஒருவர், என்னை முதல் முறையாக சந்தித்த போது;

எனது (மறைந்த) தந்தையைப் பற்றி 'பெருமையாக' சொன்ன தகவலானது, எனது தந்தையும் காந்தியைப் போன்றே, வாய்ப்பு கிடைக்கும் போது, தமது சுய (அக) உருவத்தை வெளிப்படுத்தியவரோ? என்ற ஐயம்,  எனக்குள் எழ காரணமான‌து.

மாவட்டத்தில் தாசில்தார் பதவிகளில், 'ஹொசூர் சிரஸ்தார்' என்ற பதவியானதுமாவட்ட ஆட்சித்தலைவரின் நேரடி கட்டுப்பாட்டில், மாவட்டத்தில் உள்ள மற்ற உயர் அதிகாரிகளும் 'அனுசரித்து' போக வேண்டிய அளவுக்கு, முக்கியமான பதவியாகும்.

அந்தகாலத்தில், 'சகாயம் ..எஸ்' போன்று நேர்மையானமா..லைவரின் கீழ், எனது தந்தையானர், 'ஹொசூர்  சிரஸ்தார்' ஆக‌ ணியாற்றி, அவர் பாராட்டும் கையில் ணிபுரிந்தகாலம் அது. (குறிப்பு கீழே)

ஊழல் குற்றச்சாட்டில், சிக்கி. 'சஸ்பெண்ட்'(Suspend) ஆனஅதிகாரி, எனது தந்தையின் உதவியை நாடியிருக்கிறார்.

எனது ந்தையின் 'அறிவுரை'(?) அடிப்படையில்;

அந்தநேர்மையான‌  மா..லைவர் தவியில் இருந்தது ரை, விசாரணையை 'இழுத்தடித்து', அடுத்து ணியில் சேர்ந்தமா..லைவர்  காலத்தில், விசாரணை முடிவில், 'எந்தபாதிப்புமின்றி' ணியில் மீண்டும் சேர்ந்துள்ளார்; காந்தியின் கொள்கைக்கு எதிரான கொள்கையில் இருந்த நேரு, காந்தியை 'மிகவும் மதித்து', அவரின் உதவியோடு, சுபாஸ் சந்திர போசுக்கு பதிலாக, இந்திய அரசியலில் தலைமை செல்வாக்கு பெற்றது போல.

'மிகுந்த புத்திசாலித்தனத்துடன்'  (எனது பார்வையில், காந்தி தன்னை மதித்த‌ நேருவுக்கு  உதவியது போல) எனது தந்தை தன்னை மதித்து உதவி கோரியவருக்கு,  'உதவியதாக' ;

மேற்குறிப்பிட்ட 'பாராட்டில்' இடம் பெற்றதானது, எனது ஆய்வுக்கு உள்ளானது.

காந்தி தொடர்பாக;

"..சிக்கு உதவ, தென்னாப்பிரிக்காவில் காந்தியிடம் கொடுத்த நிதியை, இந்தியா திரும்பியபின், காந்தி மறந்தது சரியா?" என்பதையும்;

"காந்தியின் எதிர்ப்பையும் மீறி, காங்கிரஸ் தலைவராக, வாக்கெடுப்பின் மூலம், தேர்ந்தெடுக்கப்பட்ட சுபாஷ் சந்திர போசை,செயல்பட விடாமல் தடைகள் ஏற்படுத்தி, மனம் வெறுத்து, போஸ் காங்கிரசிலிருந்து வெளியேற காரணமானவர் காந்தி." என்பதையும்;

முந்தைய பதிவில் பார்த்தோம்
(http://tamilsdirection.blogspot.com/2016/09/depoliticize9.htm )

மேலே குறிப்பிட்டுள்ளது போன்ற, இன்னும் பல, காந்தியின் தனிமனித குறைபாடுகளை/பலகினங்களை வெளிப்படுத்திய நிகழ்ச்சிகள் தொடர்பான விமர்சனங்களில்,  'இன்றைய காந்தி' ரசிகர்களும்;

.வெ.ரா தொடர்பாக, நான், கடந்த 10 வருடங்களாக, முன்வைக்கும் விமர்சனங்களில், 'பெரியார்' ரசிகர்களும்;

'சப்பைக் கட்டி, விட்டுக் கொடுக்காமல்' கருத்து தெரிவித்து வருவது போல;

நானும் எனது தந்தையை விட்டுக் கொடுக்காமல் அணுகி, சமூகத்தின் சீரழிவிற்கு, பங்களிப்பு வழங்க விரும்பவில்லை;

ஒரே நேரத்தில், முதல் மனிதராகவும், சமூக நியாயத்திற்கானமூன்றாம் மனிதராகவும் எனது வாழ்வை, (ஆடம் ஸ்மித்- Adam Smith-  'The Theory of Moral Sentiments ' என்ற நூலில் சுட்டிக்காட்டியுள்ளபடி) நான் அணுகி வாழ்வதால்.

காலனிய ஆட்சியை அச்சுறுத்திய புரட்சியாளர்களிடமிருந்து, 'இந்திய விடுதலை' போராட்டத்தை மீட்டு, தமது கட்டுப்பாட்டில் உள்ள பொம்மலாட்டமாக அதை மாற்ற;

'காந்தி பிம்ப' தோற்றத்திலும், அதை 'ஊதி' பெருக்க வைத்ததிலும், அந்நிய உளவு அமைப்புகளின் பங்களிப்பு பற்றி;


இந்திய விடுதலைக்கு முந்தைய கால, பிரிட்டன், அமெரிக்க உளவு அமைப்புகளின் கோப்புகள் எல்லாம்,  'இரகசிய நீக்கம்' (Declassify) மூலம் வெளிவரும் போது, உண்மைகள் தெரியவரும். (http://tamilsdirection.blogspot.com/2015/04/normal-0-false-false-false-en-us-x-none_21.html )
 

'வெள்ளைக்காரன் காந்தியை சிறை படுத்தினால்,  சிறையிலிருந்து, வெள்ளைக்காரன் கண்களில் மண்ணைத் தூவி தப்பிக்கும் அளவுக்கு, கடவுளைப் போன்ற சக்தி மிக்கவர் காந்தி' என்று பலர் பேசியதை,தாம் மாணவராயிருந்த காலத்தில், நம்பியதாக,'காந்தி ரசிகராக' வாழ்ந்த, எனது தந்தை  என்னிடம் தெரிவித்திருக்கிறார்.

நான் 'பெரியார்' இயக்கத்தில், தீவிரமாக பங்கேற்றிருந்த காலக்கட்டத்தில், திருச்சி செல்வேந்திரனின் பொதுக்கூட்ட பேச்சை கேட்ட மறு நாளில், வீட்டுக்கு 'நாளிதழ்/வார இதழ்' போட வந்த பையனிடம், 'இனிமேல் பிராமண பத்திரிக்கைகளை போட வேண்டாம்.' என்று சொல்லி, என்னை வியப்பில் ஆழ்த்தியவரும் எனது தந்தையே.

'காந்தி பிம்பம்', 'பெரியார் பிம்பம்', 'அண்ணா பிம்பம்', 'எம்.ஜி.ஆர் பிம்பம்' போன்று, 'முற்போக்கு பிம்பம்' உள்ளிட்ட‌ இன்னும் பல பிம்பங்களுக்கு செல்வாக்கிருந்த‌, அந்தந்த காலக்கட்டங்களில், 'சுயலாப நோக்கற்ற ரசிகர்களாக' எனது தந்தையைப் போன்ற, இயல்பில் பலகீனமான‌  பலர் பயணித்து வந்தார்கள்/வருகிறார்கள். அந்த பயணத்தில் 50 வயதுக்கும் அதிகமானாவர்களின் 'அரசியல்'(?), இசை, நடனம், திரைப்படம் உள்ளிட்ட இன்னும் பல ரசனைகளுக்கும், இன்றைய மாணவர்கள்/இளைஞர்கள் ரசனைகளுக்கும், இடையே உள்ள இடைவெளி பற்றிய ஆராய்ச்சியே, தமிழ்நாட்டின் அடுத்த கட்ட அரசியல் உள்ளிட்ட போக்குகள் பற்றிய வெளிச்சத்தை தரும்.

தமிழ்நாட்டில் 'பிம்ப' அரசியலின் தோற்றம், வளர்ச்சி பற்றிய புரிதலின்றி, மேற்கத்திய குறிப்பாயத்திற்கு (Western Paradigm) அடிமையாகி, 'எம்.ஜி.ஆரின்' பிம்பம் தொடர்பாக;

மறைந்த பேரா.  M.S.S பாண்டியன் ' '‘M.G.Ramachandran in film and politics- The Image Trap’ by M.S.S pandian (1992) ' என்ற நூல் வெளியிட்டுள்ளதை ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளேன். (‘உணர்ச்சிபூர்வ இரைச்சல்களுக்கிடையே அறிவுபூர்வ ‘சிக்னல்’கள்’; http://tamilsdirection.blogspot.com/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_18.html )

காந்த பண்பற்ற இரும்பானது, காந்த புலத்தில்(Magnetic Field)  இருக்கும்போது, 'காந்தத் தூண்டல்'(Magnetic Induction)  என்ற அறிவியல் வினை (Scientific process) மூலம், காந்தப் பண்பு' (Magnetic property)  பெறுவது போல;

மேற்குறிப்பிட்ட இயல்பில் பலகீனமான,  'ரசிகர்கள்' எல்லாம், 'சுயபுத்தியையும், இயல்பையும்' காவு கொடுத்து, சமூகத்தில் 'அதீத' செல்வாக்கில் வலம் வரும் பிம்பங்கள் மூலம், சமூகத் தூண்டல்' (Social Induction)  என்ற சமூகவியல் வினை (Sociological Process)  மூலம், 'பிம்ப ரசிக' பண்பில் தம்மை சிறைபடுத்தி, தாமாகவே தம்மை பலியாக்கி, வாழ்கிறார்கள்.

ஒழுக்கக்கேடான வழிகளில் பணம் ஈட்டும் பொது வாழ்வு கொள்ளையர்களும், 'சூழ்ச்சிகர' வெளிநாட்டு நிதி உதவி பெறும் என்.ஜி.ஓக்களும், இது போன்ற பிம்பங்களை, மிகுந்த புத்திசாலித்தனத்துடன்  வளர்த்து, சமூக கிருமிகளான பொதுவாழ்வு விபச்சாரிகளாக‌ ‌ வாழ்கிறார்கள்

அந்த சமூக கேடான போக்கில், தமது குடும்பப் பிள்ளைகளை ஆங்கில ழிக் கல்வியில் படிக்க வைக்கும், ஊரான் வீட்டுப் பிள்ளைகளை, 'தமிழ்வழியில்' படிக்க அறிவுறுத்தும், தமிழ் 'புலமையாளர்களின்'(?), ஆதரவாளர்களின்,  ‘பொதுவாழ்வு வியாபாரத்தின்கருவிகளாகி', அந்த சமூகவியல் வினை (Sociological process) மூலமாக, சமூகக் கேடான‌ , 'உணர்ச்சிபூர்வ'  'பிம்பங்களில்' தமிழும், தமிழுணர்வும் சிறை பட்டுள்ளனவா? தமிழ்வழிக் கல்வியின் ( எனவே தமிழின்) மரணப்பயணமும், அதன் விளைவுகளா? என்பவையும் ஆய்விற்குறியதாகும்.

தமிழ்நாட்டில் 'பிம்ப' போதையில் மிதக்கும் 'திராவிட' தலைவர்களிடம், அவர்களை 'துதி' பாடிக் கொண்டே, 'பெரியாரையும்', அண்ணாவையும் குறை சொல்லி, அவர்களை விட, அந்த 'பிம்ப' போதையில் மிதக்கும் தலைவர் உயர்ந்தவர் என்று  சொன்னால், அந்த தலைவர்கள், அதை உச்சக்கட்ட துதியாக கருதி மகிழும் கூத்துகளும், தமிழ்நாட்டில் அரங்கேறி வருகின்றன. தாய் மொழியின், தாம் வாழும் தமிழ்நாட்டின், உரிமைகள் பற்றிய கவலையின்றி, 'பாரத மாதா' புதல்வர்களாக வாழும் கூத்துகளும், இந்தியாவில் தமிழ்நாட்டில் மட்டுமே அரங்கேறி வருகின்றன.

திராவிடக்கட்சிகளின் ஆட்சிகள் ஏற்படுத்திய சமூக பாதிப்புகளின் பின்னணியில், மேலே குறிப்பிட்ட 'சமூகத் தூண்டல்' போக்கிற்கு எதிராக நான் பயணித்ததால், எனக்கு ஏற்பட்ட கடன் சிக்கல்கள் பற்றி ஏற்கனவே பதிவு செய்துள்ளேன். ‘தத்தம் கொள்கைகளில்/கட்சிகளில், எண்ணற்றோரின் தியாகங்களை எல்லாம், 'பொதுவாழ்வு மூலதனமாக்கிய' சமூக கிருமிகளை, 'சமூக விசாரணை' மூலம், 'சமூக தண்டனைகளுக்குள்ளாக்க' வேண்டாமா? அது இயலாதெனில், அப்படிப்பட்ட கட்சிகள்/கொள்கைகள் நீடிப்பதே, சமூகத்திற்கு கேடாகாதா?   
(http://tamilsdirection.blogspot.com/2016/01/normal-0-false-false-false-en-us-x-none_25.html)

மேலே குறிப்பிட்ட சிக்கல் காரணமாக, என்னால் செல்வாக்கு பெற்றிருந்த 'பெரியார்' பிம்பமும், எனது குடும்பத்தினர்/உறவினர் பார்வையில் செல்வாக்கு இழந்தது; (தி.மு.கவில் 'அண்ணா பிம்பம்' வளர்ந்த வேகத்தில், 'பெரியார் பிம்பம்' இளைஞர்களிடையே செல்வாக்கு இழந்தது போல)

எனது ஆய்விற்கு மதிப்புமிக்க உள்ளீடானது(input);

தமிழ்நாட்டில் பிம்பங்கள் தொடர்பான சமூக இயக்கவியல் (Social Dynamics) ஆய்விற்கு பயன்படும் வகையில்.

'பெரியார்' ரசிகராக, 'பெரியார் கொள்கை' வேடமிட்டிருந்த, , இயல்பில் சிற்றினமானவர்களை, 'சமமாக' கருதி, எனது குடும்பத்தில் நான் அனுமதித்த 'பாவத்திற்காக', எனது குடும்பத்தில் ஏற்பட்ட சீர்குலைவினையும் ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்
(http://tamilsdirection.blogspot.com/2015/11/normal-0-false-false-false-en-us-x-none_16.html

மேற்குறிப்பிட்டஅனுபஅறிவில், மிழ்நாட்டில், மேலே குறிப்பிட்ட 'சமூகத் தூண்டல்' போக்கின் பின்பலத்தில், 'பெரியார் கிருமிகள்' உள்ளிட்ட 'பொதுவாழ்வு வியாபாரிகள்',  'குறுக்கு ழிகளில் ணக்காரர் ஆகும்,  வெற்றியின் இரசியங்களையும், ண்டுபிடித்து, திவு செய்துள்ளேன்.
(http://tamilsdirection.blogspot.com/2013_10_01_archive.html)

செல்வத்திற்கும் செல்வாக்கிற்கும் 'வாலாட்டி' வாழ்பவர்களிடமிருந்தும், எனது ஆய்வுகள் பற்றி அறிவதில் ஆர்வமின்றி, அந்த 'ஆய்வுகள்' மூலம் எனக்கு எவ்வளவு பணம் கிடைக்கிறது/கிடைக்கும் என்பதில் மட்டுமே ஆர்வமுள்ள, அறிவு/உள்ளார்ந்த ஈடுபாடு 'வாசனை' பற்றி அறியாதவர்களிடமிருந்தும், நான், இயன்றவரை அவர்களை புண்படுத்தாமல் ஒதுங்கி, எவ்வாறு உள்ளார்ந்த ஈடுபாடுகளோடு (Passions) வாழ்ந்து வருகிறேன்? என்பதையும், ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்
(http://tamilsdirection.blogspot.com/2016/02/style-definitions-table.htmlதனி மனித உறவுகளில் லாப நட்டம் பார்த்து, நெருங்கும்/ஒதுங்கும், 'விபச்சார' தொழில்நுட்ப புலமையாளர்களை' ஒதுக்கி; தமது தனி வாழ்வில் கோழையாக இழிவான, 'சுயலாப'  சமரசங்களுடன் வாழ்ந்து கொண்டு, மேக்ரோ உலகில் 'யோக்கியர்களாக' வலம் வருபவர்களை, என்னை மதித்தாலும், ஒதுக்கி, என் மீது தாம் காணும் குறைகளையும், என்னுடன் நேர்மையாகவும், சமூக பொறுப்புணர்வுடனும் விவாதிப்பவர்களையே,  எனது சமூக வட்டத்தில் அனுமதித்து வாழ்கிறேன். சமூக இயக்கவியலில் (Social Dynamics), சமூக பொறியியல் (Social Engineering) வினையூக்கியாக (Catalyst) வாழ்வதன் மூலமே, சமூக தள விளைவினைத் (Social Polarization)  தூண்டி, ஆக்கபூர்வமாக தமிழின், தமிழர்களின், தமிழ்நாட்டின் மீட்சிக்கு நம்மால் பங்களிப்பு வழங்க முடியும். 

மனித மதிப்பீடுகளை காவு கொடுத்து, உணர்ச்சிபூர்வ போக்குகளை ஊக்குவிக்கும் சமூக போக்கில், பொது சொத்துக்களை சேதப்படுத்தி, பொது மக்களுக்கு ஊறு விளைவிக்கும் பொது வாழ்வானது, விபச்சார தொழில்நுட்ப புலமையாளர்கள் பிடியில் சிக்குவதில் வியப்புண்டோ! சமூக தள விளைவின் மூலமாக‌, 'அந்த' புலமையாளர்கள் வீழாமல், அவர்களின்  'பிடியில்' சிக்கியுள்ள தமிழையும், தமிழுணர்வையும் மீட்க முடியுமா?

தமது இயல்பின் காரணமாக, (நடுத்தர, ஏழை மக்களில் அதிக சதவீதத்தினரும்,பணக்காரர்களில் வெகு சிலரும்) மேற்குறிப்பிட்ட 'எந்திரர்களாக' பயணிக்காதவர்களின் பார்வையில், 'மேற்குறிப்பிட்ட 'செல்வம்' மிக்க எந்திரர்கள் எல்லாம் வெறுப்புக்குள்ளான 'நிஜஜோக்கர்களாக' வலம் வருகிறார்கள்' என்பதை;

சிறிய பட்ஜெட்டில் உருவான, 'ஜோக்கர்', 'சூது கவ்வும்', 'ஜிகிர் தண்டா', 'சதுரங்க வேட்டை' 'காக்கா முட்டை' உள்ளிட்ட இன்னும் பல திரைப்படங்களின் வெற்றிகள் உணர்த்துகின்றன.

அரசியல்வாதிகள், எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் குடும்பத்தினர், திரை அரங்குகளில், தமது 'செல்வ' வழிகள் பற்றி அறிந்த பொதுமக்களுடன் அமர்ந்து, இப்படங்களை பார்க்க முடியுமா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

பிம்பங்களின் ரசிகர்களாக, தமக்கான வாழ்வை தொலைத்து, 'இழிவான சமரசங்களுடன்',

'பிறர் பொறாமை' பட, செல்வம்' ஈட்ட, எதையும் இழக்கும்,  ' மூளை செயல்பாட்டில்' (brain processing) அடிமைப்பட்டுள்ள எந்திரர்களில்;

'செல்வம்' ஈட்டுவதில் வெற்றி பெற்றவர்களும் சரி, தோல்வியானவர்களும் சரி,

எதையும் கொண்டு வராத பிறப்பிற்கும், எதையும் எடுத்து செல்ல முடியாத இறப்பிற்கும் இடையிலான வாழ்க்கைப் பயணத்தில்;

பிறருக்காக ( அவர்களை பொறமைப் பட வைப்பதற்காக‌ ), 'தமது இயல்பான பயணத்தை' விட்டில் பூச்சிகளாகதொலைத்து, நடைபிண எந்திரர்களாக, வாழ்பவர்கள் என்பதும்,  எனது கருத்தாகும்.

மேலே குறிப்பிட்ட, கேடான சமூகத் தூண்டலுக்கு, எதிரான போக்கில்,  நாம் வாழ்வதன் மூலமே, அந்த சமூகத் தூண்டலை பலகீனப்படுத்தி, விட்டில் பூச்சிகளாக வாழும் மனிதர்களின் எண்ணிக்கையை சிறுமமாக்க(minimize) முடியும்; அரசியல் நீக்கமும் முடிவுக்கு வரும். அரசியல் நீக்கம் முடிவுக்கு வரும்போது, 'ஆதாயத் தொண்டர்களின்' பலத்தில், பயணித்து வரும்,  கட்சிகள் எல்லாம், சுவடின்றி மறைந்து விடும்.

அந்த சமூக தள விளைவின் காரணமாக, உருவாகி வரும் சமுகத் தூண்டலில், அரசியல் நீக்கத்தில், சீரழியும்  தமிழையும், தமிழர்களையும், தமிழ்நாட்டையும் மீட்க முடியும். தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்கும் சுயவலிமையும் வளரும்.
(தமிழர்களின் அடையாளச் சிதைவும், அரசியல் நீக்கமும் (depoliticize)(9); த‌மிழ்நாட்டில் பொதுவாழ்வில், ‘அரசியல் நீக்க‌’, ச‌மூக‌ கேடான‌ போக்கை, அர‌ங்கேற்றிய‌வ‌ர் காந்தியா?; 
http://tamilsdirection.blogspot.com/2016/09/depoliticize9.html)

குறிப்பு :

அந்த காலக் கட்டத்தில்,  எனக்கும் பேரா..மார்க்சுக்கும் இடையில் இருந்த நெருக்கமான நட்பை, சுயலாப நோக்கில், தவறாக பயன்படுத்தி, முட்டை வியாபாரி வேலுச்சாமி, அடுத்த மாவட்டமுட்டை வியாபாரியுடன் தனக்கு இருந்த மோதலை, என்னிடம் உதவி கேட்டு வந்த‌ , ஒரு கிராம முதல் பட்டதாரியினை 'காவு கொடுத்து', 'வியாபார பலன்' பெற, எனது தந்தையின் அந்த 'செல்வாக்கு' உதவியது: அந்த கிராம முதல் பட்டதாரி, என் மீது, நியாயமாக, வருத்தப்பட காரணமாகி;

'மார்க்சிய முற்போக்காளர்களில்' பலர், தனி மனித உறவில் வாய்ப்பு கிடைக்கும் போது, தமது சுய (அக) உருவத்தை வெளிப்படுத்தும், எவ்வளவு அபாயமானவர்கள்? என்று நான் கண்டுபிடிக்க உதவி; 

சமூக அக்கறையுள்ள கதாசிரியரை சந்திக்க நேர்ந்தால், அவரின் துணையுடன், அந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில், 'ஜோக்கர்' திரைப்படம் போன்று, 'முற்போக்கு முட்டை' என்ற கதையை உருவாக்கும் திட்டமும் எனக்கிருக்கிறது.