Monday, March 12, 2018


‘ 'பெரியார்' புழுதி ஒழிப்பு’ ஏன் உடனே தொடங்கப்படல் வேண்டும்? (2)

'பார்ப்பன எதிர்ப்பு' பொதுவாழ்வு வியாபாரத்தில் 'ருசி கண்ட பூனைகள்'?




இன்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பானது தாய்மொழிவழிக்கல்வியை ஆதரிப்பதோடு, சாதி அடிப்படையில் வெளிப்படும் பாரபட்சங்களை எதிர்த்தும் தமது நிலைப்பாடுகளை அறிவித்துள்ளது. (http://tamilsdirection.blogspot.in/2016/04/normal-0-false-false-false-en-in-x-none.html) 

கடந்த காலத்தில் தி.கவும் ஆர்.எஸ்.எஸும் ஒருவர் மீது ஒருவர் சுமத்திய குற்றங்களை எல்லாம் உணர்ச்சிபூர்வமாக நினைவு கூர்ந்து, கடந்த கால அடிமைகளாக வாழாமல், ‘அறிந்ததினின்றும் விடுதலை’ பெற்றவர்களாக‌ ( ‘Freedom from the Known’ by J.Krishmamoorthy), இன்று 'தாய்மொழி வழிக்கல்வி மீட்பு' மற்றும் 'சாதி அடிப்படையில் உள்ள பாரபட்ச எதிர்ப்பு' கோரிக்கைகளில் ஒன்று சேர்ந்து, செயல்ரீதியில் ஒருவரையொருவர் விஞ்ச போட்டி போட்டால், அது தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் நல்லதாகவே முடியும்  (http://tamilsdirection.blogspot.in/2018/03/normal-0-false-false-false-en-us-x-none_9.html)

'பார்ப்பன எதிர்ப்பையும்', 'இந்துத்வாவையும்' பொதுவாழ்வு வியாபார மூலதனங்களாக பயன்படுத்தி வருபவர்கள் எல்லாம், மேலே குறிப்பிட்ட ஒற்றுமையானது உருவாகுவதை கெடுக்கவே முனைவார்கள். 

நேர்மையான முறையில் சம்பாதிக்க மனமும், திறமையும் இல்லாதவர்களுக்கு, குறுக்கு வழிகளில் 'அதிவேக பணக்காரர்' ஆக உதவும் பொதுவாழ்வு வியாபார மூலதனமாக, 'பார்ப்பன எதிர்ப்பு என்பதானது பயன்பட்டு வருவதை;

'திருச்சி பெரியார் மையம்' .வெ.ரா வழியில் பயணித்ததால் உருவான 'பெரியார் சமூக கிருமிகள்' மூலம், எனது ஆய்வுகள் வெளிப்படுத்திய கண்டுபிடிப்பை ஏற்கனவே பதிவு செய்துள்ளேன். 

.வெ.ரா தமது அறிவு வரை எல்லைகள் (intellectual limitations)  பற்றிய புரிதலின்றி பயணித்து, தாய்மொழிவழிக்கல்வி, தமிழ், தமிழ் இலக்கியங்கள் ஆகியவற்றை கண்டித்து இழிவுபடுத்தி, ஆங்கிலவழிக்கல்வியை ஆதரித்ததோடு, ஆங்கிலத்தையே வீட்டு மொழியாக்கும் வகையில் பிரச்சாரம் செய்து  பயணித்ததாலேயே; 

உலகில் வெளிவந்துள்ள ஆய்வுகளின் படி, அந்த போக்கில் சிக்கியவர்கள் எல்லாம் பல வகை போதைகளுக்கு உள்ளாகி, சமூகத்தை சீரழிக்கும் பாதையில் பயணிப்பார்கள் என்பதையும் ஏற்கனவே விளக்கியுள்ளேன்.

(‘‘தமிழ் அழிவு சுனாமியிலிருந்து தமிழை மீட்க முடியுமா?’; http://tamilsdirection.blogspot.in/2016/06/blog-post.html ) 

‘'பெரியார்' இயக்கத்தில் புலமையாளனாக நான் பயணித்த கட்டத்தில், தமிழ் மொழி, இலக்கியங்கள் தொடர்பான .வெ.ராவின் தவறானநிலைப்பாடுகளை ஆய்வுக்கு உட்படுத்தாமல், கண்மூடித்தனமாக ஏற்றுக் கொண்டு, எனது ஆய்வு குவியத்தில் 'மார்க்சியம் - லெனினியம்' உள்ளானதன் காரணமாகவும்;

'திருச்சி பெரியார் மையம்' மூலமும், என்னையும் முட்டாளாக்கி, 'பெரியார் சமூக கிருமிகள்' உருவானார்கள், என்பதானது, ;( http://tamilsdirection.blogspot.in/2017/03/blog-post_5.html & http://tamilsdirection.blogspot.in/2016/01/normal-0-false-false-false-en-us-x-none_25.html & http://tamilsdirection.blogspot.in/2015/11/normal-0-false-false-false-en-us-x-none_16.html   ) எனது ஆய்வு முடிவாகும். 

பின்னர் நான் இசையின் இயற்பியல் (Physics of Music) ஆய்வுக்கு, தமிழ் இலக்கியங்களை உட்படுத்தி பெற்ற ஆய்வு முடிவுகள் எல்லாம், என் கண்களை திறக்க (திருக்குறள் 573 ); 

அது போன்றசமூக கிருமிகளால், திராவிட இயக்க வரலாற்றில் சீர் குலைந்த எண்ணற்ற குடும்பங்களில், எனது குடும்பமானது 'தனித்துவமாக' (Unique) சீர்குலைந்துள்ள நிலையில்;

'தீதும் நன்றும் பிறர் தர வாரா' (புறநானூறு 192) வழியில், அந்த சமூக கிருமிகள் மீது தனிப்பட்ட முறையில் கோபமின்றி; 

அவ்வாறு சமூக கிருமிகளாக அவர்களை செயல்படத் தூண்டிய; 

அவர்கள் மனங்களில் இருந்த நலன்கள் (interests) யாவை? அந்த நலன்கள் உருவாகும் அளவுக்கு அவர்களின் மனங்களில் இருந்த தேவைகள் (Needs) யாவை? 

என்பதை எனது ஆய்வு குவியத்திற்கு உட்படுத்தி பெற்ற முடிவே;

'காலனிய’  மனநோயாளிகளும், ‘திராவிட’  மனநோயாளிகளும்'  (http://tamilsdirection.blogspot.in/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_8.html ) என்பதையும்;

கட்சி என்பதானது மனிதர்களை உள்ளடக்கியது. மனிதன் தனது தேவைகளை (Needs) உணர்ந்து, மனதில் அந்த தேவைகள் எல்லாம் ஈடுபாடுகளாக (Interests) மாறிய பின், அந்த ஈடுபாடுகள் மனிதனின் செயலைத் தூண்டுகின்றன‌.

எனவே மேலே குறிப்பிட்ட 'பெரியார்' சமூக கிருமிகளின் செயல்பாடுகளை எல்லாம் ஆய்வுக்கு உட்படுத்தியதால் பெற்ற கண்டுபிடிப்பே:

தமிழ்நாடு வீழ்ச்சியும் மீட்சியும்- வெற்றிக்கான எலும்புத் துண்டு இரகசியம் ' (http://tamilsdirection.blogspot.in/2013/10/normal-0-false-false-false-en-us-x-none_27.html  )

தமது இயல்பான தகுதிக்கும், திறமைக்கும் உள்ள நேர்மையான வருமானம் ஈட்டும் மனமின்றி;

'எந்த இழிவான வழியிலாவது' பணம், செல்வாக்கு சம்பாதிக்க வேண்டும்’, என்ற 'வெறியில்', 'திராவிட' கட்சிகளின் ஆட்சிக‌ளில்,


'அதிவேக' பணக்காரர்கள் வளர்ந்த இரகசியங்கள் தான் அவையாகும்.’ என்பதையும் ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்.

‘'இசை இயற்பியல்' (Physics of Music) அணுகுமுறையில், பழந்தமிழ் இலக்கியங்களில் நான் மேற்கொண்ட ஆய்வுகள் மூலம் வெளிவந்துள்ள கண்டுபிடிப்புகளின் அடிப்படையில், இன்று .வெ.ரா அவர்கள் உயிரோடு இருந்திருந்தால் என்னை பாராட்டி, தமிழ் இலக்கியங்கள் பற்றிய தமது நிலைப்பாடு தவறு என்று துணிச்சலுடன் அறிவித்து, திருத்திய நிலைப்பாடு எடுத்து, தமிழ்வழிக்கல்வி மீட்சியை முன்னெடுத்திருப்பார்; 

என்று உண்மையில் நான் நம்புவதாலும்; (http://tamilsdirection.blogspot.in/2013/12/normal-0-false-false-false-en-us-x-none_4.html) 

காலம் தாழ்த்தாமல், இன்று திராவிடர் கழக தலைவராக இருக்கும் கி.வீரமணி அவர்களை, .வெ.ரா வழியில் துணிச்சலுடன், என்னை பாராட்ட மனமில்லையானாலும், தமிழ் இலக்கியங்கள் பற்றிய நிலைப்பாட்டினை .வெ.ரா வழியிலேயே மாற்றிக் கொண்டு, தமிழ்வழிக்கல்வி மீட்சியை முன்னெடுக்குமாறு நான் கோருகிறேன்.’ என்று ஏற்கனவே பதிவு செய்துள்ளேன். (http://tamilsdirection.blogspot.in/2018/03/normal-0-false-false-false-en-us-x-none.html). 

தமிழ் மொழி, இலக்கியங்கள் தொடர்பான .வெ.ராவின் தவறானநிலைப்பாடுகளை ஆய்வுக்கு உட்படுத்தாமல், கண்மூடித்தனமாக ஏற்றுக் கொண்டு, எனது ஆய்வு குவியத்தில் 'மார்க்சியம் - லெனினியம்' உள்ளானதன் காரணமாக;

'இங்குள்ள சுரண்டல் முறையான பார்ப்பன உற்பத்தி முறை' என்றும், 'எந்த உற்பத்தி முறையிலும் இல்லாத அம்சமான உபரி உற்பத்தி நாசம், உபரி உற்பத்தி முடக்கம்,சமூகத்தில் பகை முரண் என்பதே பார்ப்பனர்பார்ப்பனரல்லாதோர் முரண்தான்' என்றும் நான் வெளிப்படுத்திய கண்டுபிடிப்புகளை எல்லாம்; 

இன்று அந்த கண்டுபிடிப்புகள் எவ்வாறு தவறானவை? என்று நான் எனது பதிவுகளில் வெளியிட்டு வரும் வேளையில்; 

அவற்றை மறுக்காமலேயே, 'தமிழர் மையம்' என்ற பேரில் முகநூலில் வெளிவந்ததானது (கீழே குறிப்பில்) எனது கவனத்தை ஈர்த்தது. 

தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் இரட்டை வேடப் போக்கினை அம்பலப்படுத்த வேண்டுமானால்; 

இன்று கர்நாடகத்தில் காங்கிரஸ் முதல்வர் தமிழ்நாட்டிற்கு உச்சநீதிமன்ற ஆணைப்படி நீர் வழங்க மறுத்து, காவிரி மேலாண்மை வாரிய அமைக்க எதிர்ப்பதை கண்டித்து, டெல்லியில் சோனியா வீட்டு முன்பும், சென்னையில் சத்தியமூர்த்தி பவன் முன்பும் போராட்டம் நடத்துவதை தவிர்த்து, அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயி சங்க தலைவர்கள் எல்லாம், மோடி எதிர்ப்புக்காக விவசாயிகள் பேரில் போராட்டமும், பிரச்சாரமும் செய்வது போல; 

முள்ளிவாய்க்கால் போரின் போது, .நாவில் ராஜபட்சேயின் பாதுகாவலர்களாக செயல்பட்ட ரஷ்யாவையும், சீனாவையும் கண்டிக்காமல், தமிழ்நாட்டில் ராஜபட்சேக்கு எதிராக நடந்த பிரச்சாரங்களில், போராட்டங்களில் கம்யூனிஸ்ட் கட்சி கட்சிகள் எல்லாம் பங்கேற்றது நேர்மையாகுமா? 

சிவகாசி பட்டாசுகள் உள்ளிட்டு தமிழ்நாட்டின் உற்பத்திகளை கெடுத்து, லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரங்களை ஒழித்து வரும் சீன இற‌க்குமதிகளை ஆர்.எஸ்.எஸ் கண்டித்து வருவது போல‌,  இதுவரை கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டித்ததுண்டா? இனிமேலாவது கண்டிப்பார்களா?

என்பது போன்ற கேள்விகளை எல்லாம் 'தமிழர் மையம்' தவிர்த்தது ஏன்? 

அதே நேரத்தில் மார்க்சியம் தொடர்பான மேலே குறிப்பிட்டஎனது கண்டுபிடிப்புகள் எல்லாம் எனது ஆய்வுகளின்படி எவ்வாறு தவறானவை? என்று நான் வெளியிட்டு வரும் இந்த காலக்கட்டத்தில்; 

அந்த கண்டுபிடிப்புகளை பயன்படுத்துவதானது அறிவுநேர்மையாகுமா?

தமிழ்வழிக்கல்வி மீட்சிக்கு ஆர்.எஸ்.எஸ் அரிய பங்களிப்பு வழங்க உள்ள சூழலில்; ( Why RSS, the only option, to rescue the TN Tamil Medium Education & hence Tamil? Let us say 'Goodbye to hate-politics' & embrace  genuine pro-Tamil politics ‘; http://tamilsdirection.blogspot.in/2015/11/normal-0-false-false-false-en-us-x-none_10.html )

ஆக்கபூர்வமாக இந்துத்வா ஆதரவு மற்றும் எதிர்ப்பு முகாம்களில், சுயலாப நோக்கற்ற தமிழ் ஆர்வலர்கள் எல்லாம் 'தமிழ்வழிக் கல்வி மீட்சி' என்ற நோக்கில் ஒன்றுபட்டு, 'சினர்ஜி' (Synergy) முறையில் செயல்பட; (http://tamilsdirection.blogspot.in/2015/03/12_7.html)

'பெரியார்' கழிவுகள் எல்லாம் தடையாக இருக்கின்றன; என்பதும் எனது ஆய்வு முடிவாகும்.

தமிழ்நாட்டில் கழிவுகளாக உள்ள 'பெரியார்' புழுதிகள் எல்லாம்,  அகற்றப்பட வேண்டிய நேரமும் வந்துவிட்டதாக கருதுகிறேன்; பொதுஅரங்கில் உணர்ச்சிபூர்வ இரைச்சல்கள் மூலம், அறிவுபூர்வ விவாதங்களை கெடுத்து வருவதால். 

எனவே தமிழ்நாட்டில் வாய்ப்புள்ள இடங்களில் " 'பெரியார்' புழுதி ஒழிப்பு’ ஏன் உடனே தொடங்கப்படல் வேண்டும்?' என்ற விவாத உரை நிகழ்த்தலாம், என திட்டமிட்டு வருகிறேன்; உணர்ச்சிபூர்வ இரைச்சலற்ற அறிவுபூர்வ மறுப்புகளை வரவேற்று; வாய்ப்பு கிடைத்தால் தொலைக்காட்சி 'லைவ்' (Live) நிகழ்ச்சியாகவும். 

அதன் மூலம் 'பெரியார்' சிறையிலிருந்து, .வெ.ரா அவர்கள் மீளவும் வாய்ப்பிருக்கிறது; 

தமிழின், தமிழ்நாட்டின் சீரழிவிற்கு காரணமான 'முதன்மை குற்றவாளி' என்று வரலாற்றில் இடம் பெறுவதைத் தவிர்த்து.

'காந்தி பொம்மையை உடைத்தல், காந்தி படங்களை எரித்தல்' பிரச்சாரங்கள் மேற்கொண்ட .வெ.ரா அவர்கள், எதிர் நிலைப்பாட்டில் உள்ளவர்களிடம் அறிவுபூர்வ மறுப்புகளை வரவேற்றது போலவே; 

நானும் வரவேற்கிறேன். உரிய சான்றுகள் அடிப்படையிலும், வாத குறைபாடின்றியும் (Logical Defects: http://tamilsdirection.blogspot.in/2015/10/ ) வரும் மறுப்புகளை பரிசீலித்து, 'சரி' என்றால், மேற்குறிப்பிட்ட திட்டத்தை கை விடுவேன்; 'தமிழ்வழிக் கல்வி மீட்சி'க்காக‌, 'சினர்ஜி' (Synergy) முறையில் செயல்படுவதற்கு இருந்த தடைகள் எல்லாம் நீங்கியதாக கருதி.’ 
( http://tamilsdirection.blogspot.in/2018/02/normal-0-false-false-false-en-us-x-none_12.html) 

மனசாட்சியை அடகு வைத்து, மேலே குறிப்பிட்ட 'தமிழ் அடையாள இழப்பின்' காரணமான 'முற்போக்கு' போதைகளில் சிக்கி, திராவிட அரசியல் கொள்ளையர்களுக்கு வாலாட்டி, வாய்க்கும் ஊழல் வழிகளில் எல்லாம் பணம் ஈட்டி, ஆங்கிலவழியில் தமது குடும்ப பிள்ளைகளை படிக்க வைத்து; 

கிரானைட், தாதுமணல், ஆறுகள் ஏரிகள் உள்ளிட்ட கனிவளங்கள் ஊழல் சுனாமியில் சிக்கியது பற்றி மூச்சு விடாமல், சீன இறக்குமதி உள்ளிட்ட வாழ்வாதாரங்களை ஒழிக்கும் போக்குகள் பற்றிய கவலையின்றி; 

வறட்டுத்தனமாக 'பார்ப்பன எதிர்ப்பு, பகுத்தறிவு' என்று புறத்தில் வெளிச்சம் போடும் பொதுவாழ்வு வியாபாரிகள் எல்லாம், 'பார்ப்பன எதிர்ப்பு' பொதுவாழ்வு வியாபாரத்தில் 'ருசி கண்ட பூனைகள் ஆவர்.

'பார்ப்பன எதிர்ப்பு' பொதுவாழ்வு வியாபாரத்தில் 'ருசி கண்ட பூனைகளை' போல செயல்படுபவர்களாக ‘தமிழர் மையம் இல்லை என்று கருதி; 

"'பெரியார்' புழுதி ஒழிப்புஏன் உடனே தொடங்கப்படல் வேண்டும்?' என்ற எனது நிலைப்பாட்டினை எதிர்த்து, அறிவுபூர்வ மறுப்புகளை வெளியிடுவார்கள்; என்று எதிர்பார்க்கிறேன். 

'பெரியாரின் பொன்மொழிகள்' என்ற தலைப்பில், அவரின் கருத்துக்களை வெளியிட்டு, "பெரியாரின் மேற்படி கருத்துகளை, அவரது வழி வந்தவர்கள் என்று பெருமையுடன் கூறிக் கொள்வோர் ஏற்கிறார்களா என்பதை தெளிவுபடுத்த வேண்டும். அவர்கள் கூறுவது போல தமிழகம் பெரியார் மண்தானா என்று மக்கள் முடிவு செய்யட்டும்." என்று துக்ளக் (13.03.2018) இதழில், அறிவுபூர்வ விவாதத்திற்கான நெருக்கடியை கூட்டிவிட்டது.  எனது அபாய எச்சரிக்கைகளை புறக்கணித்து, 'பெரியார் புழுதிகள்' மூலம் ஈ.வெ.ராவிற்கு சமாதி கட்டும் போக்கானது தொடங்கி விட்டதா? என்ற வினாவிற்கு விடை தெரியும் காலமும் அதிக தொலைவில் இல்லை.

அந்த அறிவுபூர்வ விவாத்ததினை தவிர்த்து, தமிழ்நாட்டின் கனிவளங்களையும் தனியார் சொத்துக்களையும் ஊழல்பேராசையில் அச்சுறுத்தியும் கொலை செய்தும் அபகரித்தபோது மெளனமாக இருந்து விட்டு, 'பெரியார்'சிலை உடைப்பை உணர்ச்சிபூர்வமாக‌ கண்டித்து விட்டு, ஆனால் பூணூல் அறுப்புகளை கண்டிக்காமல் இருக்கும் போக்கெல்லாம், அந்த சமாதி கட்டும் போக்கின் வெளிப்பாடே ஆகும். 

1944க்கு முன் தமிழ்நாட்டில் தலைவர்களின், சிலைகளின், பிம்ப வழிபாடு இருந்ததில்லை. எந்த கொள்கையாளராக இருந்தாலும், அவரிடம் வெளிப்பட்ட உண்மை, நேர்மை, புலமை போன்றவற்றின் அடிப்படையிலேயே மதிக்கப்பட்டார்கள்; சுயமரியாதை இயக்கத்தில் இருந்த பெரும்பாலோர் அவ்வாறே ஆத்திகர்களாலும் மதிக்கப்பட்டார்கள். இன்று அவ்வாறு மதிக்கப்படும் தகுதியுடையவர்களாக, 'பெரியார்' சிலை உடைப்பை கண்டித்தவர்களில் எவராவது இருக்கிறார்களா? என்ற கேள்வி எழுப்ப வேண்டிய நிலையில் தமிழ்நாடு உள்ளது. ஒரே சாதியில் கோவில்/சர்ச் திருமணம் சுற்றத்திற்கு; சுயமரியாதை திருமணம் 'பெரியார்' கட்சிக்காக; என்ற இரண்டு இரட்டைவேட திருமணங்கள் எல்லாம், 1944க்கு முன் நடந்திருந்தால், தமிழ்நாடே காறி துப்பியிருக்கும். அது போலவே, ஊழலில் சிக்கிய நீதிபதிகள், காவல் துறை, உள்ளிட்ட இன்னும் தொடர்புடைய துறைகளுக்கு 'தரகராக' செயல்பட்டு, கொலை, கொள்ளை உள்ளிட்ட 'பணமுள்ள' குற்றவாளிகளுக்கெல்லாம் 'மீட்பராக' செயல்பட்டு, 'அதிவேக பணக்காரர்' ஆகி, தமது எடுபிடிகளுடன் சேர்ந்து, 'பெரியார்' ஆதரவாளர்களாக 'வெளிச்சம்' போடுபவர்களையும் சேர்த்து. 

அந்த 'இரட்டை வேட' போக்கானது, துக்ளக் (13.03.2018) இதழின் அட்டைப்பட கார்டூனானது; 1944க்கு முன் வெளிவந்த 'குடி அரசு' இதழின் 'இரட்டை வேட எதிர்ப்பு' போக்கினை, அந்த கார்டூன் எனக்கு நினைவூட்டியது. 

1944க்கு முன் காந்தியின் இரட்டை வேடப்போக்கினை 'குடி அரசு' அம்பலப்படுத்தியது. ஈ.வெ.ரா பாதையில் இருந்து, 'பெரியார்' வழிபாட்டில் தடம் புரண்டு, ஈ.வெ.ராவால் 'சண்டித்தனம், காலித்தனம்' என்று கண்டிக்கப்பட்ட, 'காந்தி பாணி' போராட்டங்களில், 'பெரியார்' கட்சிகள் ஈடுபட்டும், ஆதரித்தும் வரும் நிகழ்காலத்தில், அத்தகையோரின் இரட்டை வேடப் போக்குகளை எல்லாம் துக்ளக் அம்பலப்படுத்தி வருகிறது. 

அறிவியலின் அடுத்த கட்டம் தொடர்பாக வெளிவரும் ஹாலிவுட் திரைப்படங்களைப் போல, உயிரணு ஆராய்ச்சிகள் மூலமாக‌, .வெ.ரா அவர்கள் இன்று உயிருடன் வந்து, 'பெரியார் புழுதிகளைக்' கண்டு கோபமுற்று ஒழிக்க முற்படும்போது, என்னென்ன சவால்களை சந்திப்பார்? அதன் உச்சக்கட்டத்தில் ராஜாஜியின் துணையுடன் அதனை எவ்வாறு வெற்றி கொள்வார்? என்ற நகைச்சுவை மிகுந்த திரைக்கதை உருவாக்கும் எண்ணத்தினை,‘தமிழர் மையம்முகநூல் பதிவானது, என்னுள் தூண்டியுள்ளது. 


குறிப்பு:   தமிழர் மையம்’   4 மார்ச், 11:02 AM ·முகநூலில்;

திரிபுரா தேர்தல் முடிவுகள்மார்ஸிய அமைப்புகளில் உள்ள பார்ப்பனரல்லாதோர் பார்வைக்கு!! 

1.       1925 களில் தொடங்கப்பட்ட கமியூனிஸ்ட் கட்சி இதுவரை

2.        நம் நாட்டில் உள்ள உற்பத்தி முறை பர்ப்பன உற்பத்தி முறை என்பதை புரிந்து கொள்ளவில்லை (ஒத்துக் கொள்ளவில்லை).

2. உபரி உற்பத்தி நாசம் விளைவிக்கும் பண்டிகையான தீபாவளியை அதாவது அவர்களது வார்த்தையில் பாட்டாளி வர்க்கத்தின் உழைப்பை, உழைப்பின் சேமிப்பை எரித்து, வெடித்து நாசமாக்கும் தீபாவளியை இதுவரை எதிர்ததில்லை!

3. மேற்கு வங்கத்தில் ஆட்சியில் இருந்தவரை இதே போன்ற துர்கா பூஜைக்கு என்ற விழாவிற்கு எதிரான பிரச்சாரம் நடத்தியது இல்லை!

4. நாட்டின் உள்கட்டமைப்பிற்கான, தொழில் வளர்ச்சிக்கான பெருந்தொகைகள் கோவில்களில் நகைகளாக முடங்கி உள்ளதை அதாவது உபரி உற்பத்தி முடக்கத்தை எதிர்த்து இதுவரை ஒரு பிரச்சாரம் கூட நடத்தியது இல்லை!

5. கேரளத்தில் கோவிலில் தாழ்த்தப்பட்ட அர்ச்சகர் நியமிக்கப்பட்டாலும், அவரையும் அர்ச்சகர் என்று மக்கள் ஏற்றுக் கொள்ள அவரிடமும் விபூதி வாங்க மக்களிடத்தில் ஏதும் பிரச்சாரம் இல்லை!

6. சபரிமலை அய்யப்பன் கோவிலில் 10 வயது முதல் 50 வயது வரையான பெண்களும் அனுமதிக்கப் படுவதற்கான சட்டம் இயற்றப்படவில்லை!

7. மோடியின்இன்சூரன்ஸ்திட்டம் அறிவிக்கப்பட்ட உடனேயே தனியார் கார்ப்பரேட் மருத்துவமனையான அப்போலோ மருத்துவமனை பிரதாப்(ரெட்டி) அவர்கள் வரவேற்று அறிக்கை கொடுத்தார்!

8. அப்படிப்பட்ட அப்போலோவுக்கு கேரள முதல்வர் பினராய் விஜயன் அவர்கள் ஏன் மருத்துவ பரிசோதனைக்கு வர வேண்டும்?

9. கார்ப்பரேட் நிறுவனங்களையும், இது போன்ற கார்ப்பரேட் மருத்துவமனைகளையும் புள்ளி விபரங்களோடு எதிர்க்கும் மார்ஸிஸ்ட் முதல்வர் ஆட்சியில் ஏன் கேரளாவில் அரசு மருத்துவனைகள் தரம் உயர்த்தப்படவில்லையா?

10. கார்ப்பரேட் மருத்துவமனையில் காம்ரேட் பினராய் விஜயனை பூணூல் போடாத பார்ப்பனர் கமல்ஹாசன் சந்தித்துள்ளார்!!

11. கமியூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர் சீத்தாராம் யெச்சூரி பார்ப்பனர்!!!

12. கடந்த 70 ஆண்டுகளாக தேசியக் கட்சியாக இருந்து இதுவரை காவிரி நீர் பிரச்சனை, கச்சத்தீவு பிரச்சனை, காஷ்மீர் பிரச்சனை,……….போன்ற எந்த தேசியப் பிரச்சனைகளையும் தீர்க்க முடியவில்லை, முறையாக முயலவில்லை!!!

13. இதற்கு மாறாக மாநிலக் கட்சியாகவாவது மாறித் தொலையலாமே?

14. இங்குள்ள சுரண்டல் முறையான பார்ப்பன உற்பத்தி முறை எனபதைப் புரிந்து, எந்த உற்பத்தி முறையிலும் இல்லாத அம்சமான உபரி உற்பத்தி நாசம், உபரி உற்பத்தி முடக்கம்,சமூகத்தில் பகை முரண் என்பதே பார்ப்பனர்பார்ப்பனரல்லாதோர் முரண்தான் என்பது போன்றவற்றை அறிந்திருந்திருந்தால் அரசியல் கட்சி என்பது தேவையற்றது சமூக இயக்கமே தேவை என்பது புரிந்திருக்கும்!!!!

15. சமுக அடிப்படையில் வேலை செய்திருந்தால் அதனடிப்படையில் அரசியல் கட்சி தோன்றி இருந்திருந்தால் இத்தோல்வி நிகழ்ந்திருக்காது!!!

:-தமிழர் மையம்    முகநூலில் இருந்து.

No comments:

Post a Comment