Thursday, February 11, 2016

இப்படியெல்லாம் கூட;

'பெரியார்' கொள்கையாளர்கள் யோசிப்பார்களா? (2)


"இன்றைய இட ஒதுக்கீட்டில், 'பலன்' பெறுபவர்களில் பெரும்பாலோர் படித்த, வசதியான, ஊழல், செல்வாக்கு வழிமுறைகளில் திறமைசாலிகளின் குழந்தைகளா? அல்லது ஏழை, தற்குறி பெற்றோர்களின் குழந்தைகளா? என்ற ஆய்வே, திராவிடக்கட்சி ஆட்சிகளில் 'சமூக நீதி' வளந்துள்ளதா? அல்லது சமூகத்திற்கு கேடான, 'தமிழ்வேரழிந்த தமிங்கிலீசர்களை' வளர்க்கும், 'வீக்க' நோயாக, 'சமூக நீதி' திரிந்து விட்டதா? என்பதும் தெளிவாகும். அந்த திரிதலிலிருந்து, 'சமூக நீதியை' மீட்க, தமிழ்வழிக் கல்வி பயின்றவர்கள் மட்டுமே, 'இட ஒதுக்கீட்டில் பலன் பெற வேண்டும்' என்ற சட்டத்திருத்தம் வேண்டி, தமிழ் ஆர்வலர்களும்/அமைப்புகளும்  கோரிக்கையாவது முன்வைப்பார்களா, போராடாவிட்டாலும்?"

('தமிழர்களில் 'தற்குறிகளை' வளர்த்தது; 'பார்ப்பன சூழ்ச்சியா'? காலனி சூழ்ச்சியா? 'காலதேச வர்த்தமான' மாற்றங்களுக்கு உட்படாமல்; பெரியார் கட்சிகள் மரணமடைந்து வருகின்றனவா?'; http://tamilsdirection.blogspot.in/2016/01/normal-0-false-false-false-en-us-x-none_31.html )

என்று வெளிவந்த பகுதிக்கு, 'பெரியார்' கொள்கையாளர் பின்வரும் கருத்தை தெரிவித்துள்ளார்.

"இடஒதுக்கீடு  சமூகத்தில்   எல்லாபிரிவினருக்கும்  பகிர்ந்து  கிடைக்க  வாய்ப்பளிக்கிறது  அவ்வளவே. சமூகத்தில் மதவெறி, சாதிவெறி, ஆங்கிலமோகம், நுகர்வு வெறி, சுயநல உணர்வு  ஆகியன  உள்ளன. இடஒதுக்கீடு  பெறும்  எல்லா  பிரிவினரிடமும்   இந்த  தன்மை  இருக்கத்தானே  செய்யும். சமூகநீதியை  இதை வைத்து விமர்சிப்பது  சரியான  பார்வையா?"

"எனது பதிவில் எந்த பகுதி, இது போன்ற புரிதலை தங்களுக்கு தந்தது ? என்று குறிப்பிடவும்." என்று நான் கேட்டதற்கு, கீழ்வரும் பதில் கிடைத்துள்ளது.

"கீழே உள்ள  பகுதி:
இன்றைய இட ஒதுக்கீட்டில், 'பலன்' பெறுபவர்களில் பெரும்பாலோர் படித்த, வசதியான, ஊழல், செல்வாக்கு வழிமுறைகளில் திறமைசாலிகளின் குழந்தைகளா? அல்லது ஏழை, தற்குறி பெற்றோர்களின் குழந்தைகளா? என்ற ஆய்வே, திராவிடக்கட்சி ஆட்சிகளில் 'சமூக நீதி' வளந்துள்ளதா? அல்லது சமூகத்திற்கு கேடான,' தமிழ்வேரழிந்த தமிங்கிலீசர்களை' வளர்க்கும், 'வீக்க' நோயாக, 'சமூக நீதி' திரிந்து விட்டதா? "

அந்த பதிலின் அடிப்படையில், எனது கருத்து வருமாறு:

இன்றைய இட ஒதுக்கீட்டில், 'பலன்' பெறுபவர்களில் பெரும்பாலோர் படித்த, வசதியான, (ஊழலுடன் பின்னிபிணைந்து ஆங்கில வழி கல்வி வியாபாரமானது, 1970களிலிருந்து வளர்ந்து வரும் சூழலில்) ஊழல், செல்வாக்கு வழிமுறைகளில் திறமைசாலிகளின் குழந்தைகளா? அல்லது ஏழை, தற்குறி பெற்றோர்களின் குழந்தைகளா? என்ற ஆய்வின் முடிவானது;

அந்தந்த பிரிவுகளில் பெரும்பாலும் படித்த, வசதியான குடும்பப்பிள்ளைகளுக்கு கிடைத்து, ஏழை, தற்குறி பெற்றோர்களின் குழந்தைகளுக்கு மறுக்கப்படுகிறது என்று வெளிப்பட்டால்;
 
அது "இடஒதுக்கீடு  சமூகத்தில்   எல்லாபிரிவினருக்கும்  பகிர்ந்து  கிடைக்க  வாய்ப்பளிக்கிறது" என்றாகுமா? அது தான் சமூக நீதியா?

இன்றும் பெரும்பாலான ஏழை குடும்பங்களின் பிள்ளைகள்  எல்லாம் மேல்நிலைப்பள்ளி வரை,  தமிழ்வழி அரசு பள்ளிகளில் படித்து வருவதால் தான்,  தமிழ்வேர் மர்ணமடையாமல் உள்ளது,  என்ற உண்மையை,  சகாயம் அய்.ஏ.எஸ் அவர்களும், விஞ்ஞானி மயில்சாமி அண்ணதுரை போன்றவர்களும் வெளிப்படுத்தி வருகிறார்கள். விளையாட்டுப் பள்ளி முதல் ஆங்கில வழியில் படிக்கும் வசதியான குடும்பப்பி
ள்ளைகளின் பெரும்பாலோரின் தமிழ்வேர் சீரழிந்து, அவர்களால், தமிழ்நாட்டில் தமிழ் இதழ்களை கூட படிக்க முடியாத நிலை வளர்ந்து வருகிறது. அந்த சூழலில், தமிழ்வழியில் பயிலும் மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டில், அந்தந்த பிரிவுகளில், முன்னுரிமை கொடுத்தால், அது தமிழ்வழிக்கல்வியின் மரணப்பயணத்தை தடுக்காதா? இடஒதுக்கீட்டின் பலன்கள், தமிழ் வேரழிந்த மாணவர்களுக்கு கிடைப்பதானது, தமிழ்ச் சமூகத்திற்கு வளர்ச்சியா? அல்லது தமிழ் வேரழிவு நோய் வீக்கமா?

அந்த வேறுபாடு தெரியாமல்;

"சமூகத்தில் மதவெறி, சாதிவெறி, ஆங்கிலமோகம், நுகர்வு வெறி, சுயநல உணர்வு  ஆகியன  உள்ளன. இடஒதுக்கீடு  பெறும்  எல்லா  பிரிவினரிடமும்   இந்த  தன்மை  இருக்கத்தானே  செய்யும்." என்று;

எனது பதிவுகளை படித்து வரும் ''பெரியார்' கொள்கையாளர்' கருத்து வெளிப்படுத்தியுள்ளார்.

இப்படியெல்லாம் கூட; 'பெரியார்' கொள்கையாளர்கள் யோசிப்பார்களா? என்று எனக்கு தோன்றுவது, எப்படி தவறாகும்? 

பொதுவாக வாதத்தில் வெளிப்படும் குறைபாடுகள் பற்றிய விளக்கத்திற்கு; fallacy ; https://en.wikipedia.org/wiki/List_of_fallacies 
('எனது புரிதலில், விவாதத்தின் நோக்கங்கள்' ; http://tamilsdirection.blogspot.in/2015/10/normal-0-false-false-false-en-us-x-none_26.html )

'பெரியார்' கொள்கையாளர்களின் வெளியீடுகள் அடிப்படையில், மேற்குறிப்பிட்ட குறைபாடுகளுக்கான உதாரணங்களை அடையாளம் கண்டு, வெளிப்படுத்தும் நோக்கிலான,  முனைவர் பட்ட ஆய்வில் எவரும் ஈடுபட்டால், அவருக்கு உதவ முடியும்.


No comments:

Post a Comment