Thursday, June 16, 2016

        தமிழ்நாட்டில் இனி ஊர் தோறும் நடக்க வேண்டிய

                                    பட்டி மன்றம்
திராவிட/தமிழ் கவிஞர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், தலைவர்கள் (குறிப்பு 1 கீழே  ) குடும்பப் பிள்ளைகள் எல்லாம்;
தமிழ் வேரழியும் வகையில், அடிப்படைக்கல்வியை ஆங்கிலவழியில் (தமிழ் அழிவு சுனாமியிலிருந்து தமிழை மீட்க முடியுமா?; http://tamilsdirection.blogspot.in/2016/06/blog-post.html )
படித்ததற்கும்/படிப்பதற்குமான காரணங்களில் விஞ்சி நிற்பது;
அவர்களின் வாழ்வில் வெளிப்பட்ட சுயநல போக்கா? அறிவற்ற போக்கா?
                                              -------------------

அத்தகையோரால் ''குற்ற உணர்வின்றி' மன நிறைவுடன் மரணத்தைத்  தழுவ முடியுமா?'; http://tamilsdirection.blogspot.in/2014/11/normal-0-false-false-false-en-us-x-none.html 

                                                        ------------------

      தமிழ்நாட்டில் இனி ஊர் தோறும் நடக்க வேண்டிய

                               பாராட்டு நிகழ்ச்சிகள்
ஆங்கிலவழியில் படிக்க வைக்க வசதி இருந்தும், தமது குடும்பப் பிள்ளைகளின் அடிப்படைக்கல்வியை, தமிழ்வழிப் பள்ளிகளில் படிக்க வைத்தவர்கள்/வைப்பவர்கள் எல்லாம், அந்தந்த ஊரில் விழா எடுத்து பாராட்டப்பட வேண்டிய, உண்மையான 'தமிழ் மீட்பர்கள்' ஆவர்.

குறிப்பு:

1.இன்றைய மாணவர்கள் ஒருவரின் 'சொந்த யோக்யதையை'  வைத்தே, அவரை மதிப்பதா?/இகழ்வதா? என்பதையும், அதை வைத்தே, அவரின் பேச்சுக்களையும் / எழுத்துக்களையும் மதிப்பதா?/இகழ்வதா? என்பதையும், முடிவு செய்கிறார்கள்:  'ஆதாய ஆதரவின்' துணையுடன், மீடியாவில் 'புகழுடன்'(?) வலம் வந்தாலும். 

2.தமிழ் பத்திரிக்கைகளை காசு கொடுத்து வாங்கி படிப்பவர்கள் எல்லாம் சுமார் 50 வயதுக்கும் அதிகமானவர்களே. ஆங்கில வழியில் படித்த,  சுமார் 40 வயதுக்கும் குறைவானவர்களில் எவரும் காசு கொடுத்து, வாங்கியதை நான் பார்த்ததில்லை.

'தினத்தந்தி', 'தினமலர்', 'தமிழ் இந்து', 'தினமணி' போன்ற இன்னும் பல, தமிழ் இதழ்கள்; மேலே குறிப்பிட்டுள்ள‌ நிகழ்ச்சிகளை ஊக்குவிக்கலா
ம்; இன்னும் 10 வருடங்களுக்குள், 'வாசகர் வீழ்ச்சி சுனாமி'யை தவிர்க்கும் தொலை நோக்கு பார்வையில். அந்நிகழ்ச்சிகளுக்கு என்னால் இயன்ற நிதி உதவியும் செய்ய இயலும்.

No comments:

Post a Comment