Monday, September 3, 2018

'எனது கண்டுபிடிப்புகளின் வெற்றியின் இரகசியம் (3);


சமூகத்தில் ஆங்காங்கே வெளிப்படும் நகைச்சுவைகளையும் ரசிக்கும் இரகசியம்?


வியாபாரத்தில் கடைபிடிக்க வேண்டிய லாப நட்ட கணக்குகள் எல்லாம், குடும்பம் மற்றும் நட்பு உள்ளிட்ட மனித உறவுகளில் நுழைந்த‌தால், இயல்பான அன்புக்கும், லாபநட்ட நோக்கற்ற உதவிக்கும் 'வறட்சி' ஏற்பட்டு, தமிழ்நாடானது சமூக மூச்சுத் திணறலுக்கு(Social Suffocation)  உள்ளாகி விட்டது;

என்பதையும் ஏற்கனவே விளக்கியுள்ளேன்.

தமிழ்நாட்டில் பெரும்பாலான பெற்றோர்கள் அவர்களைச் சுற்றியுள்ளவர்களுடன் தம்மை ஒப்பிட்டுக் கொண்டே,   'செல்வம், செல்வாக்கு, பாராட்டு, புகழ்' போன்றவற்றிற்கான 'ஏக்கங்களுடன்' வாழ்கிறார்கள். அதன் விளைவாக பிறர் நம்மை 'உயர்வாக' நினைக்க வேண்டும் என்பதற்காக வாழும் அடிமைகளாக, தமது இயல்பை ஒட்டிய வாழ்வைத் தொலைத்து வாழ்கிறார்கள். நல்ல ஆரோக்கியமான மனதுடன் வாழ்வதற்கு அவசியமான சமூக வெளியில் (social space) நல்ல சமூக சுவாசத்திற்கான  (social breathing)  'திறந்த காற்றோட்டம்' பற்றிய புரிதலின்றி,சமூக மூச்சுத் திணறலுக்குக் காரணமுமாகி, அதில் பாதிக்கப்பட்ட நோயாளியாகவும் வாழ்கிறார்கள்………….சமூகத்தில் குழந்தைகள் வளரும்போதே, மேலேக் குறிப்பிட்டவாறு வாழும் தமது பெற்றோர்களையும், மற்ற பெரியவர்களையும் முன்மாதிரிகளாகக் கொண்டு, மேலேக் குறிப்பிட்ட மூன்று வகைகளிலேயே மற்ற குழந்தைகளுடன் பழகி வளர்வது சமூகத்தில் மூச்சுத் திணறல் மேலும் அதிகரிக்க வழி வகுக்காதா?’ (http://tamilsdirection.blogspot.com/2014/09/v-behaviorurldefaultvmlo.html )

தமிழ்நாட்டில் ஆரம்பப்பள்ளிகளில், குறிப்பாக மேல்த்தட்டு குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் எல்லாம், பெரும்பாலான குழந்தைகள் பெரியவர்களைப் போலவே, 'லாபநட்ட கணக்குடன்' பழகி வருகிறார்களா? இல்லையா? என்று ஆர்வமுள்ளவர்கள் ஆராய்ந்து, வியப்பும், அதிர்ச்சியும் அடையலாம்.

பணம், புகழ் சம்பாதிப்பதற்காக, அகத்தில் சீரழிந்து, தமது 'சுயலாப கணக்குகளை' புத்திசாலித்தனமாக மறைத்து, தமது முதுகுக்குப் பின்னால் தமது 'யோக்கியதையை' சிசுகிசுப்பது தெரிந்தும், தெரியாதது போல;

தமது உற்றம், சுற்றம் உள்ளிட்ட சமூக வட்டங்களில் வெளிப்படும் 'போலி' மரியாதைகளில், கள்ளுண்ட வண்டு போல;

மிதந்து வாழ்பவர்கள் எல்லாம் வடிகட்டின சமூக முட்டாள்கள் ஆவார்கள்.’ (http://tamilsdirection.blogspot.com/2017/08/under-current-decisive.html )

அத்தகையோர் எல்லாம் வாழும்போதே மரணித்தவர்கள் ஆவார்கள்;

என்பதையும் கீழ்வருமாறு விளக்கியுள்ளேன்.

ஓரு அழிவுபூர்வ அலையியற்றியான(Negative Oscillator) நபர், தமது சமுக வட்டத்தில் ஒப்பீடு நோயைப் பரப்பும், நோய்க்கிருமியாகி விடுவார். அவரது சமூக வட்டத்தில் இயல்போடு ஒட்டிய உள்ளார்ந்த ஈடுபாடுகளுடன் வாழ்பவர்கள், அவரை விட்டு விலகி விடுவார்கள். அதன் விளைவாக, அவரது சமூக வட்டமே ஒப்பீடு நோயில் சிக்கிய, 'எந்த வழியிலும்' பணம் சம்பாதிக்க முயலும்  வட்டமாகி , சமூகத்திற்கே கேடாக அமையவும் வாய்ப்புண்டு.’ (http://tamilsdirection.blogspot.com/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_22.html )

அவ்வாறு 'அழிவுபூர்வ அலையியற்றி' போல இருப்பவர்களை எல்லாம், மனிதத்தில் மரணித்து வாழும் மனிதர்களாக அடையாளம் கண்டு, அத்தகையோரின் வாடையின்றி வாழ்வதும், எனது ஆய்வுகளின் வெற்றியின் இரகசியமாகும். (‘Are you living with the 'dead bodies'?  ; http://veepandi.blogspot.com/2012/12/normal-0-false-false-false_3340.html )

தமிழ்நாட்டில் அவரவர் சமூக நிலை (Social Status) என்று கற்பனை செய்து கொண்டு) கூண்டுகளில் சிக்கி, தம்மை விட மேலானவர்களுக்கு வாலாட்டி குழைந்தும், தம்மை விட கீழானவர்கள், அவர்கள் செல்லும் சாதாரண கடைகள், டீக்கடைகள் போன்றவற்றிற்கு செல்வதைத் தவிர்த்தும்,   சமூக மனித விலங்கு காப்பகத்தில்  (Social Human Zoo) சமூகக்  கூண்டுக்குள் வாழும் மனித விலங்காகவாழாமல், டீக்கடையிலிருந்து  ஸ்டார் ஓட்டல் வரை தமது தேவை/பணிகள் நிமித்தம் செல்லும் அதிகபட்ச சமூக நெடுக்கத்தில் (maximum Social Range), ‘சுதந்திர  மனிதராக - பிறர் நம்மை முட்டாளாக நினைத்தாலும் கவலைப் படாமல் - வாழ்வதும் ஒரு வகை இன்பமே ஆகும்.  ( ‘இன்பத்தைத் திருடும் ஒப்பீடு’;  http://tamilsdirection.blogspot.com/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_22.html )

நமக்கு நாமே எஜமானாக வாழும்போது மட்டுமே, திரைப்படத்தில் மட்டுமே நகைச்சுவை காட்சிகளை ரசிக்காமல், சமூகத்தில் ஆங்காங்கே வெளிப்படும் நகைச்சுவைகளையும் ரசிக்க முடியும்.

என்னை வாழத் தெரியாத முட்டாளாகவும், தமக்கு 'லாபமற்ற'வராகவும் கருதி, என்னைக் கீழாக மதித்து, ஒதுக்கி வாழ்பவர்களில் சிலர், எனக்குள்ள சமூகத் தொடர்புகளில், 'மிகுந்த செல்வாக்குள்ளவர்கள்' இருப்பதாக அறிந்தவுடன், என்னிடம் 'குழைந்து, வாலாட்டி' நெருக்கமாக முனைந்தது பற்றிய எனது அனுபவங்களையும், ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்.’ (‘வித்தியாசமான விறுவிறுப்பான (interesting)  அனுபவங்கள்’; http://tamilsdirection.blogspot.com/2015/03/interesting.html )

'பெரியார் கொள்கையாளர்' வேடத்தில் என்னிடம் பழகிய‌ ஒருவர், சிறு உதவி கேட்ட போது, எனது நண்பரான உயர்பதவியில் இருப்பவருடன் தொலைபேசியில் பேசச்செய்தேன். அவரிடம் " நீங்க யாரு? என்ன வேலை செய்கிறீர்கள்?" என்று கேட்டு, 'தராதரம்' தெரியாத 'முற்போக்கு' முட்டாளாக, அந்த  'பெரியார் கொள்கையாளர்' வாழும் சிக்னலை, எனக்கு உணர்த்தினார். அத்தகைய 'புத்திசாலி பார்ப்பன எதிர்ப்பு முற்போக்குகள்', திராவிட ஊழல் பெரும்பணக்காரர்களுக்கு வாலாட்டி பிழைத்து, ஊழல் பிரமீடின் பாதுகாவலர்களாக வலம் வந்த 'நகைச்சுவைகளும்' தமிழ்நாட்டில் 'தனித்துவமாக'(Unique) அரங்கேறியுள்ளன.

உள்நாட்டிலும், வெளிநாடுகளுக்கும் பலமுறை விமானங்களிலும், குளிரூட்டப்பட்ட ரெயில் பெட்டிகளிலும் பலமுறை பயணித்து வரும் நான், எனது ஆய்வுத்திட்டம்(R & D Project) தொடர்பாக, ‘ஏசி’(AC) காரில் பயணித்து, ‘ஏசி’ அறையில் ஆய்வுப்பணிகளை மேற்கொள்ளும் நான்

தமிழ்நாட்டில் இருக்கும் காலங்களில் விரும்பி அரசுப் பேருந்துகளில், அவ்வப்போது பயணித்து வருகிறேன்; சிங்கப்பூரில் வாழும் எனது மகனின் எச்சரிக்கையைப் புறக்கணித்து; 'சமூக அந்தஸ்து கூண்டில்'(Social Status Prison) சிக்காதவர்களின் உலக சமூக சுவாசத்திற்காக(Social Breathing). அந்த பயணங்களிலும், மேலே குறிப்பிட்ட மகிழ்ச்சியான முகங்களையும், 'இயல்பான' கோபங்களையும் பார்த்து வருகிறேன். மேலே குறிப்பிட்ட 'புலி வாலைப்' பிடித்து பயணிப்பவர்களில், சொந்தமாக கார் வாங்கும் 'வளர்ச்சி'(?) அடையாத வரையில், அரசுப்பேருந்தில் பயணிக்க வேண்டிய நெருக்கடியில் சிக்கி, சக பயணிகளிடம் தமது 'உயர்வை' வெளிப்படுத்தி பயணிப்பவர்களையும், நான் பார்த்து, அந்த நகைச்சுவையையும் அனுபவித்திருக்கிறேன். (‘'அந்த ஓட்டப்பந்தயப் புலி'யின் வாலைப் பிடித்த 'முட்டாள்' புத்திசாலிகள்' (1)’; http://tamilsdirection.blogspot.com/2018/08/normal-0-false-false-false-en-us-x-none_5.html )

தமிழ்நாட்டில் நிகழ்காலத்தில் உண்மையான தன்மானத்துடன் வாழ்வதும், அவரவரின் சமூக நிலைக்கு ஏற்றவாறு சிரமம் ஆகி வருகிறது.

நடுமட்டத்திலும், கீழ்மட்டத்திலும் வாழ்பவர்களுக்கு ஒப்பீட்டளவில் இழப்புகளை எளிதில் சந்திக்க முடியும் என்பதால்;

தமிழ்நாட்டில் 'உண்மையான தன்மானத்துடன்' வாழ்பவர்கள் எல்லாம் ஒப்பீட்டளவில் நடுமட்டத்திலும், கீழ்மட்டத்திலும் அதிகமாகவும், மேல் மட்டத்தில் குறைவாகவும் இருக்கிறார்கள்

ஜெயலலிதாவின் மறைவானது, மேல் மட்டத்தில் தன்மானக்கேடான முறையில் வாழ்பவர்களை எல்லாம் மீடியா வெளிச்சத்தில் கொண்டு வந்து, மைக்ரோ உலகத்தில் வாழ்பவர்களிடையே கேலிக்கும், கிண்டலுக்கும் உள்ளாக்கி விட்டதால்;

மேக்ரோ உலகமானது 'தன்மான மீட்பு' நோக்கி, மாற வேண்டிய நெருக்கடியில் சிக்கியுள்ளது; மேக்ரோ உலகத்திற்கான மாற்றங்களின் 'முளைகள்' எல்லாம் மைக்ரோ உலகத்திலிருந்து தான் தொடங்கும்;

என்ற சமுகவியல் விதியை நிரூபிக்கும் வகையில்.’ (http://tamilsdirection.blogspot.com/2018/02/ )

சாமான்ய மனிதர்கள், மாணவர்கள், படித்த இளைஞர்கள் வாழும் மைக்ரோஉலகத்துடன் திருக்குறள்(140) வழியில் 'ஒட்டி' வாழ்ந்தால் மட்டுமே, மேக்ரோ உலகமானது 'தன்மான மீட்பு' நோக்கி, மாற வேண்டிய நெருக்கடியில் சிக்கி, வெளிப்படும் நகைச்சுவைகளை எல்லாம் ரசிக்கும் வாய்ப்புகள் கிட்டும். 

உமா மகேசுவரன், சிரி சபாரெத்தினம், பத்மநாபா, ஜெயலலிதா போன்றவர்களின் ஆதரவாளர்களாக பயணித்து, அவர்கள் மறைவிற்குப் பின், அந்த 'மறைவுக்கு' காரணமானவர்களுடன் 'ஒட்டி' பலன்கள் பெற்று,  செல்வம் மற்றும் செல்வாக்குடன் வலம் வருபவர்கள் எல்லாம், கடந்த காலத்தில் 'அந்த' ஆதரவாளர்களாக உணர்ச்சிபூர்வமாக அவர்கள் பேசிய வீடியோக்களை இன்று காண நேர்ந்தால், அது மிகுந்த நகைச்சுவையாக இருக்கும். (‘தமிழ்நாட்டில் தனக்கான ஆதரவு பற்றிய கணிப்பில், பிரபாகரன் ஏமாந்ததை போல, தினகரனும் ஏமாறுகிறாரா?’; http://tamilsdirection.blogspot.com/2018/01/normal-0-false-false-false-en-us-x-none_6.html )


போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சென்னை 'ரவுடி' வீரமணி, முன்பு சென்னை மாநிலக்கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் தலைமை விருந்தினராக கலந்து கொண்டிருந்த பின்னணியில், அவர் மூலம் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நகைச்சுவையை எவ்வாறு கற்பனையாக‌ ரசிப்பது? என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளேன். (http://tamilsdirection.blogspot.com/2018/02/ )

மனிதர்கள் எல்லாம் மூளைக்கான சிக்னல்கள் தொடர்புடைய 'ட்ரான்ஸ்டியூசர்'(Transducer) (https://en.wikipedia.org/wiki/Transducer ) ஆகவும், அண்டத்தில் வரும் சிக்னல் ஏற்பியாகவும்(Receiver), சிக்னல் பரப்பியாகவும்(Transmitter), ஒரே நேரத்தில் செயல்பட்டு, அந்த செயல்பாட்டின் விளைவுகளுக்கு ஏற்ற வகையில் வாழ்ந்து வருகிறார்கள்.’ என்பதை ஏற்கனவே விளக்கியுள்ளேன். (http://tamilsdirection.blogspot.com/2018/04/normal-0-false-false-false-en-us-x-none_16.html )

மேலே குறிப்பிட்ட செயல்நுட்பமானது எந்த அளவுக்கு புரிகிறதோ, அந்த அளவுக்கு நமது தேவைகளையும்(needs), ஈடுபாடுகளையும்(interests) நமக்கு அடிமைப்படுத்தி, நமக்கு நாமே எஜமானர்களாக வாழ முடியும். அப்போது தான் உண்மையான தன்மானத்துடன் வாழ முடியும்.

அவ்வாறே நான் ஆடம்பரமற்று எளிமையாகவும், சாதாரண மனிதர்கள் மட்டுமே எளிதில் சந்திக்க கூடிய வகையிலும், மற்றவர்களில் நேரில் சந்திக்கவும், போனில் பேசவும் 'வடிகட்டி' (Filter), ஈமெயில் (Email) மூலம் மட்டுமே எவரும் தொடர்பு கொள்ளும் வகையிலும், 'முக்கியத்துவ சிறையில் சிக்குவதை இயன்றவரை தவிர்த்து;

'தராதர வடிப்பானின்றி' (Abandoning human characteristics filter), மனிதர் அனைவரையும் .வெ.ரா அவர்கள் வழியில் 'சமமாக' நடத்தி, 'அனுபவித்து', பாடம் கற்று, இன்று 'சமூக கிருமிகளை', சாதி, மத பேதமின்றி, எனது 'தீண்டாமைக்கு' உட்படுத்தி;

சமூகத்துடனும் இயற்கையுடனும் தொடர்புடன், உள்ளார்ந்த ஈடுபாடுகளுடன் (Passions) நான் வாழ்ந்து வருகிறேன்; கடந்த கால இழப்புகளிலிருந்தும் 'விடுதலை' பெற்று. (http://tamilsdirection.blogspot.sg/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_22.html)

எனது ஆய்வுகள் மூலம், தமிழும், தமிழர்களும், தமிழ்நாடும் பெற வேண்டிய பலன்கள் தாமதமாவதால், எனக்கு தனிப்பட்ட முறையில் 'லாபத்தையே' அனுபவித்து வந்துள்ளேன்.

ஆனால் திருச்சி  NIT உள்ளிட்டு நான் மேற்கொண்டு வரும் ஆய்வுகளின் அடுத்த கட்ட வளர்ச்சிகள் எல்லாம், அந்த 'லாபத்தை' நான் இழக்க வேண்டிய நெருக்கடிகளை ஏற்படுத்தி வருகின்றன
(https://tamilsdirection.blogspot.com/2018/08/normal-0-false-false-false-en-us-x-none_3.html)

புதிய உத்தியுடன் பயணிக்கும் பொறியியல் பட்டதாரிகள் எல்லாம், 'இசை மொழியியல்' (Musical Linguistics) அடிப்படையிலான ‘Natural Language Processing’ (NLP)  துறையில், 'முந்திக்கொண்ட பறவைகளாக'(Early Birds) நல்ல வேலை வாய்ப்புகள் நோக்கி பயணிக்க (http://tamilsdirection.blogspot.com/2018/09/2-musical-linguistics-nlp-earlybirds.html & https://tamilsdirection.blogspot.com/2018/10/normal-0-false-false-false-en-in-x-none_17.html );

சமூகக்கடமையானது எனக்கிருப்பதையும் உணர்ந்துள்ளேன்.

ஏற்கனவே உள்ள வடிப்பான்களை (Filters) இன்னும் மேம்படுத்தி, பெரிய பாதிப்பின்றி, வாழ்வதற்கும் என்னை பண்படுத்தி வருகிறேன். உணர்ச்சிபூர்வ இரைச்சலின்றி, அறிவுபூர்வ விவாதங்கள் அரங்கேறி, பொதுவாழ்வு வியாபாரிகள் எல்லாம் ஒரங்கட்டப்பட்டு, தமிழும், தமிழர்களும், தமிழ்நாடும் மீட்சி பெற, என்னால் இயன்ற அளவுக்கு 'வினை ஊக்கியாக(Catalyst) பங்களித்து வாழ்கிறேன். (http://tamilsdirection.blogspot.com/2017/10/blog-post_10.html ) அவ்வாறு மிகுந்த எச்சரிக்கையுடன் கவனமாக வாழ்ந்தால் மட்டுமே, சமூகத்தில் ஆங்காங்கே வெளிப்படும் நகைச்சுவைகளையும் ரசித்து வாழ முடியும்

Sunday, September 2, 2018


'எனது கண்டுபிடிப்புகளின் வெற்றியின் இரகசியம் (2); 


'இசை மொழியியல்' (Musical Linguistics) அடிப்படையிலான NLP துறையில், 'முந்திக்கொண்ட பறவைகளாக'(Early Birds)?




பாராட்டுக்கள் என்பவை எல்லாம், ஏமாந்தால் நம்மை அதற்காக ஏங்கும் மனநோயாளிகளாக மாற்றி விடும்; நமக்கான ரசிகர் வட்டம் வளர்ப்பதிலேயே, நமது ஆற்றலின் பெரும்பங்கு விரயமாகும் அபாயமும் உண்டு;

என்று நம்மை எச்சரிக்கும் வகையில், பலர் தமிழ்நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டை சீரழித்தவர்கள் ஆயிற்றே? என்று கவலைப்படாமல், அத்தகையோரிடமும் நெருக்கமாகி, 'அந்த' மனநோயாளிகள் எல்லாம் பலன்கள் அனுபவித்து, அத்தோடு அடங்காமல், 'முற்போக்கு யோக்கியர்களாகவும்' தம்மிடம் ஏமாந்தவர்களிடம் பாராட்டுகளும் 'அனுபவித்து'(?), 'இழிவுக்கு இலக்கணமாக' வாழ்ந்து, நம்மை எச்சரிப்பவர்களும் அவர்களே ஆவர்.

அந்த எச்சரிக்கையுடன், நமது நிலைப்பாடுகளுக்கும், ஆய்வுமுடிவுகளுக்கும் எதிராக வெளிப்படும் கருத்துக்களில், நம்மை வசை பாடும் உணர்ச்சிபூர்வ இரைச்சல்களை ஒதுக்கி, அறிவுபூர்வமாக ஏதும் வெளிப்பட்டுள்ளதா? என்று தேடும் ர்வம் இருக்க வேண்டும். இருந்தால், அதற்கு நமது மனசாட்சிக்குட்பட்டு, அறிவுபூர்வ விளக்கத்தை நாம் தர வேண்டும். அதில் உரிய சான்றுகள் அடிப்படையில் குறைகள் வெளிப்பட்டால், பகிரங்கமாக அதை ஏற்றுக்கொண்டு, உரிய திருத்த திசையில், நமது ஆய்வுகள் பயணிக்க வேண்டும். 

அப்போது தான், நமக்கு எதிரான நிலைப்பாடுகள் உள்ளவர்களும் நம்மை மதிப்பார்கள். எதிர்பாராத திசைகளில் இருந்து, நமது ஆய்வுக்கு உள்ளீடுகளும், உதவிகளும் கிடைக்கும்; 

என்பதும் எனது அனுபவமாகும்.

தாம் மேற்கோள் காட்டும் கருத்திற்கான சான்றுகள் எல்லாம், எந்த அளவுக்கு நம்பத்தகுந்தவை? என்று ஆராயாமல், பொது அரங்கில் 'அவையும் அறியாமல்', மேற்கோள் காட்டி, 'மாட்டிக் கொள்வதும்'; 

தமது தவறால் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கோராமல், தவறினையும் ஒப்புக் கொள்ளாமல் பயணிப்பதும்; 

புலமையிலிருந்து துண்டிக்கப்பட்ட மொழித் திறமைகளுடன் பயணிப்பவர்களிடம் வெளிப்பட்டு, அத்தகையோரை அடையாளம் காட்டும் சிக்னலாகும். அத்தகையோர் எல்லாம் சமூகத்தில் செல்வாக்குடன் வலம் வருவதும், அந்த சமூகத்தின் சீரழிவின் சிக்னலாகும்.’ (‘'திராவிட' பிம்பங்களும், அதன் மூலம் தமிழின் வளர்ச்சிக்கான தடைகளும் உடைகின்றனவா?’; http://tamilsdirection.blogspot.com/2018/01/normal-0-false-false-false-en-us-x-none_28.html )

ஒரு ஆய்வில் தமது பார்வைக்கு வரும் சான்றுகளின் வலிமையானது ஒரு கருதுகோளை (Hyphothesis) மட்டுமே உருவாக்கவல்லதா? அல்லது எதிரான சான்றுகளை, வாதக்குறைபாடுகள்(logical defects) இன்றி  மறுக்கும் அளவுக்கு வலிமையானதா? என்று சான்றுகளின் வரைஎல்லைகள்(limitations) தெரியாமல், அபத்தமான முடிவுகளுடன் வெளிவருவதையும், நான் எனது பதிவுகளில் வெளிப்படுத்தியுள்ளேன். எல்லாவற்றையும் எல்லாராலும் விளங்கிக் கொள்ள முடியாது. ஏற்கனவே முறையாக கிடார், ஆர்மோனியம் வாசிக்கக் கற்றுக் கொண்டிருந்த நிலையிலும், தாளக்கருவிகள் தொடர்பான நூல்களைப் படித்து விளங்கிக் கொள்வதற்காக, ஒரு வருடம் மிருதங்க ஆசிரியரிடம் மிருதங்கம் வாசிக்கக் கற்றுக்கொண்டதையும் நான் வெளிப்படுத்தியுள்ளேன்.(http://tamilsdirection.blogspot.com/2015/06/normal-0-false-false-false-en-us-x-none_19.html). தமது புரிதல் குறைபாடுகள் பற்றிய தெளிவின்றி, புரிதலுக்கு தேவைப்படும் அறிவைத் தேடி, அக்குறைபாடுகளை சரி செய்து கொள்ளாமல், ஆய்வு விவாதத்தில் பங்கேற்று அசிங்கப்பட்டு, அவ்வாறு அசிங்கப்பட்டதை கூட புரிந்து கொள்ளும் அறிவின்றி பயணிப்பவர்களும் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள்.

'எனது கண்டுபிடிப்புகளின் வெற்றியின் இரகசியம்'(1)  என்ற தலைப்பில் வெளிவந்த பதிவில், கிழ்வரும் இரகசியத்தையும் பகிர்ந்து கொண்டேன். (http://tamilsdirection.blogspot.com/2015/11/normal-0-false-false-false-en-us-x-none.html )

'பெரியார்' கொள்கையாளராகபயணித்த காலத்தில், ‘பாரதி நூற்றாண்டு விழாக்கள் தொடங்கும் முன், 'பாரதி வளர்த்தது பார்ப்பனீயமே' என்ற நூலை வெளியிட்டேன். அந்த காலக்கட்டத்தில், எனது மிகவும் நெருங்கிய நண்பர் பேரா..மார்க்ஸ், அப்புத்தகத்தைக் கண்டித்து, புத்தகங்களும், கட்டுரைகளும் வெளியிட்டார். 

தஞ்சையில் ராமநாதன் செட்டியார் மன்றத்தில், 'கலை இலக்கிய பெருமன்றம்' கூட்டத்தில் அவர் பேச்சாளர்; நான் பார்வையாளர். 'குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டுபவராக', அந்த நூலாசிரியரை குறை கூறினார். எங்கள் நட்பில் சிறுவிரிசலை கூட, அந்த கருத்து வேறுபாடு ஏற்படுத்தவில்லை. 

எனது நிலைப்பாடுகளுக்கு எதிரான நிலைப்பாடுகளுடன், சுயநல நோக்கின்றி, உண்மையான அர்ப்பணிப்புடனும், தியாகத்துடனும், வாழ்பவர்களை நான் மிகவும் மதிக்கிறேன்; நட்பும் பாராட்டுகிறேன் வாய்ப்பு கிடைத்தால்………… எனவே எனது ஆராய்ச்சிகளின் பலன்களானபதிவுகளில், எவரையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கில்லை. மேற்குறிப்பிட்ட புத்தகத்தை .மார்க்ஸ் கண்டித்தது போல, எனது பதிவுகளையும், கண்டித்து எழுதுவதை வரவேற்கிறேன். அவை நிச்சயமாக, என்னை மேலும் நெறிப்படுத்திக் கொள்ள உதவும்; 'சமூகக் கிருமிகளின்' பிடியிலிருந்து, தமிழ், தமிழர், தமிழ்நாடு மீள்வதற்கு, பங்களிப்பு வழங்குவதற்காக.’ 

பொதுவாக எனது கண்டுபிடிப்புகளை எல்லாம், சம்பந்தப்பட்ட தமிழ், தமிழ் இசை போன்ற துறைகளில் உள்ளவர்களே புரிந்து கொள்ள சிரமப்படுவதையும் நான் அறிவேன். அத்தகையோரில் தமது அறிவு வரைஎல்லை (intellectual limitation) பற்றிய தெளிவின்றி இருப்பவர்கள் மூலமாக‌, 'இசை இழை' தொடர்பான எனது கண்டுபிடிப்பானது (http://tamilsdirection.blogspot.com/2015/08/normal-0-false-false-false-en-us-x-none.html  ),  'ஆய்வுக்குழாயடிச் சண்டை' அனுபவம் வழங்கியதையும், ஏற்கனவே பதிவு செய்துள்ளேன். (http://tamilsdirection.blogspot.com/2018/06/normal-0-false-false-false-en-us-x-none.html  ) 

அதன் காரணமாகவே, நான் நீண்ட காலமாக பொது நிகழ்ச்சிகளில் தமிழ்நாட்டில் கலந்து கொள்வதைத் தவிர்த்து வந்தேன். அந்த சூழலில், பினாங்கில் பெரும்பாலும் தமிழ் அசிரியர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில், அங்கு வாழும் பேரா.ஆர்.சிவக்குமாரின் வற்புறுத்தலின் பேரில் கலந்து கொண்டதையும், ஏற்கனவே பதிவு செய்துள்ளேன். 

அண்மையில் மலேசியாவில் பினாங்குத் தீவில் உள்ள 'இராமகிருஷ்ணா தமிழ்ப்பள்ளி' அரங்கத்தில், 'தொல்காப்பியத்தில் இசை மொழியியல்' (Musical Linguistics in Tholkappiam)  என்ற தலைப்பில், கணினி, ‘கீபோர்ட்  இசைக்கருவி (Music Keyboard) ஆகியவற்றின் துணையுடன் விளக்க உரை நிகழ்த்தினேன். ஆசிரியர் பயிற்சிக்கல்லூரி ஆசிரியர்கள், கல்லூரி மாணவர்கள், தமிழ்ப்பள்ளித்தலைமை ஆசிரியர்கள், மற்றும் ஆசிரியர்கள் சுமார் 100க்கும் அதிகமாக அரங்கை நிரப்பியிருந்தனர். 

பினாங்குத் தீவு தமிழ்ப்பள்ளி தலைமை ஆசிரியர் குழாமும், அரசு கல்வித்துறையும், பினாங்கு சுய மெய்யறிவகமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி அதுவாகும். (http://tamilsdirection.blogspot.com/2018/07/normal-0-false-false-false-en-us-x-none_29.html )

'தொல்காப்பியத்தில் இசை மொழியியல்'(Musical Linguistics) பற்றி, ‘கீ போர்ட்’(Music Keyboard), கணினி(PPT) ஆகியவை துணையிருந்தாலும், இசையியல்(Musicology), இசை இயற்பியல்(Physics of Music)  பரிச்சயம் இல்லாத தமிழ் ஆசிரியர்கள் விளங்கிக் கொள்ளும் அளவுக்கு,  விளக்குவதில் உள்ள சிரமங்களை அன்று உணர்ந்தேன். 

ஏற்கனவே அது பற்றி நான் வெளியிட்ட பதிவானது, எவ்வளவு பேருக்கு விளங்கியிருக்கும்? என்ற ஐயமும் எனக்கு உண்டு. (‘'தொல்காப்பியத்தில் இசை மொழியியல்'’; http://tamilsdirection.blogspot.com/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_16.html ) 

உலக அளவில் புலமை மிக்க நூல்களையும், கட்டுரைகளையும் தேடி, லண்டனில் வாழும் நண்பர் தொல்காப்பியன், அவற்றில் எனது பார்வைக்கு உரியவற்றை அவ்வப்போது அனுப்பி வைப்பதை, ஏற்கனவே நன்றியுடன் எனது பதிவுகளில் நினைவுகூர்ந்துள்ளேன். அவ்வாறு அவர் அனுப்பிய ஆய்வு தகவலின் துணையுடன், கீழ்வரும் பதிவினையும் வெளியிட்டேன்.

படைப்புக்கான(Creative) கருக்களும், திறவுகோல்களும், நல்ல மற்ற தீய எண்ணங்களும் தொடர்புடைய தோற்றுவாய்கள் பற்றிய ஆய்வுகள்?

மூளைக்கான சிக்னல்கள் தொடர்புடைய 'ட்ரான்ஸ்டியூசர்'(Transducer) ஆகவும், அண்டத்தில் வரும் சிக்னல் ஏற்பியாகவும்(Receiver), சிக்னல் பரப்பியாகவும்(Transmitter) மனிதர்கள்?

http://tamilsdirection.blogspot.com/2018/04/normal-0-false-false-false-en-us-x-none_16.html 

'தொல்காப்பியத்தில் இசை மொழியியல்' தொடர்பான, மேலே குறிப்பிட்ட பதிவினை விளங்கிக் கொள்ள முடியாதவர்களும், முயன்றால் விளங்கிக்கொள்ள துணைபுரியும் ஒரு கட்டுரையினை எனது நண்பர் தொல்காப்பியன் அனுப்பியுள்ளார்.

‘The music in you; You might not be a virtuoso, but you have remarkable music abilities. You just don’t know about them yet’; https://aeon.co/essays/you-are-a-remarkable-musical-expert-you-just-don-t-know-it 

'மொழியின் வளர்ச்சியும், இசையின் வளர்ச்சியும் இணையானவையாகும்' (‘musicality emerges in ways that parallel the development of language’) என்ற உண்மையை, உரிய சான்றுகளுடன் அக்கட்டுரையானது விளக்கியுள்ளது. 

இசைக்கும் மொழிக்கும் இடையிலான இணைத் தொடர்பு பற்றிய 'லாஜிக்' (logic) தொல்காப்பியத்தில் இருப்பதையே, நான் கண்டுபிடித்துள்ளேன். அதனை உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவன ஆய்வு இதழிலும் வெளியிட்டுள்ளேன்.

The logic behind the above  ‘parallel’ -applicable to all world languages,  was discovered in Tholkappiam, and published with the title ‘Musical Phonetics in tholkAppiam’ in December 2013, in The journal from the International Institute of Tamil Studies, (Taramani, Chennai; http://www.ulakaththamizh.in/journal ) 

அது மட்டுமல்ல, ' சி வா ' என்ற ஐந்தெழுத்து மந்திரமும், மோகன ராகத்தில் வரும் ' , ரி, க,  ப, ' என்ற ஐந்து சுரங்களுடன், மேலே குறிப்பிட்ட 'லாஜிக்' அடிப்படையில் தொடர்புள்ளவையாகும். அதனை பெரிய புராணத்தில் உள்ள ஆனாயநாயனார் புராணம் தெளிவுபடுத்தியுள்ளதையும், ஆய்வுக்கட்டுரையாக வெளியிட்டுள்ளேன். பின் ஆஸ்திரேலியாவில் சிட்னியில் நடந்த 'உலக சைவ மாநாடு' ஆய்வரங்கிலும் இடம் பெற செய்தேன்.

The five letters of ‘ந-   - சி -வா - ‌’  in ‘parallel’ linked with the five musical notes ‘ரி -  க -   - த’  in    மோகன ராகம்; was discovered in ஆனாயநாயனார் புராணம் ( பெரியபுராணம்) , and was published in http://musicresearchlibrary.net/omeka/items/show/2447 ; Also submitted in the seminar of ‘ World Saiva Conference’ , Sydney, Australia.

துவக்கத்தில் குறிப்பிட்ட மனநோயாளிகளின் 'ரசிகர் வட்டத்தில்' பெரும்பாலான கல்லூரி மாணவர்களும், நன்கு படித்த இளைஞர்களும் இல்லை. அரைகுறை படிப்போடு உணர்ச்சிபூர்வ வெறுப்பு அரசியலில் பயணிக்கும் ரசிகர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருவதோடு, அவர்களில், நேர்மையான சம்பாத்தியத்திற்கான திறமைகளும், உழைக்க மனமும் இல்லாதவர்களின் சதவீதம் அதிகரித்து வருவதாகவும் தெரிகிறது. அந்த போக்கிலும், நேர்மையாக பயணிப்பவர்கள் எவரேனும் இருந்தால், அவர்களை நோக்கியே, 'தேரா தமிழா?' என்ற கேள்வியையும் எழுப்பினேன். (http://tamilsdirection.blogspot.com/2015/08/normal-0-false-false-false-en-us-x-none_13.html )

தமிழைத் திராவிட அரசியலில் சிறைப்படுத்தி, அதன் விளைவாக அரசியல் நீக்கத்தில் ஆதாய அரசியல் வலிமையில் பயணித்து வரும் கட்சிகள் எல்லாம், ஜெயலலிதா, கருணாநிதி மறைவிற்குப் பின் சருகாகி, 'அந்த' சிறையிலிருந்து தமிழ் மொழியானது விடுதலையாகும் வாய்ப்புகள் இருப்பதை ஏற்கனவே பதிவு செய்துள்ளேன். (http://tamilsdirection.blogspot.com/2018/08/normal-0-false-false-false-en-us-x-none_29.html )

அவ்வாறு தமிழானது 'சுயலாப அரசியல் சிறையிலிருந்து' விடுதலையாகும் போக்கில், தொல்காப்பியம் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்கள் மூலம் புதிய தொழில், வியாபார, வேலை வாய்ப்புகளை உருவாக்கும் எனது முயற்சிகளும், கடந்த சுமார் 20 வருட இருளில் இருந்து, வெளிச்சத்திற்கு வரும் போக்கும் தொடங்கியுள்ளது. 

அந்த 20 வருட இருளின் முக்கிய குற்றவாளிகளாக, ஆட்சியில் முதல்வர்களாக இருந்த ஜெயலலிதாவும் கருணாநிதியும் ஆக மாட்டார்கள். அவர்களுக்கு நெருக்கமாக இருந்தவர்கள் எல்லாம், திருக்குறள்(448) வழியில் தடம் புரண்டு, திருக்குறள் (915) வழியில், 'மனித இழிவுக்கு இலக்கணமாக பயணித்ததே, 'அந்த' இருளுக்கு முக்கிய காரணமாகும்.‍‍

மேற்குறிப்பிட்ட பதிவில், கீழ்வரும் தகவலையும் வெளியிட்டுள்ளேன்.

‘உலகில் பல்கலைக்கழகங்களில் கற்பிக்கப்படும் 'மொழியியல'(Linguistics) சமஸ்கிருத இலக்கண நூலான 'அஷ்ட‌தாயி'(Aṣṭādhyāyī of Pāṇini) அடிப்படையில் உருவானது தெரியாமல் (‘By teaching phonetics and grammar to the West, Sanskrit gave rise to modern linguistics’; http://www.indiapost.com/flipbook/epaper31-08-2018/31_AUG_2018/index.html#book/25 );

‘சமஸ்கிருதத்தினை 'செத்த மொழி' என்று அறிவித்து, தமிழை 'சாகும் மொழியாக 'வரலாற்றின் சுயநினைவற்ற கருவியாக' பங்களித்தும்(?);

வருபவர்களின் கண்களைத் திறக்கும் வகையிலும்;

சமஸ்கிருதத்தின் துணையுடன் உலக 'மொழியியல்' (Linguistics) துறையில், தொல்காப்பியத்தில் எனது கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் 'இசை மொழியியல்' (Musical Linguistics) என்ற புதிய துறை உருவாகும் நோக்கில், அதற்கான ஆய்வுத்திட்டத்தினையும் தொடங்கியுள்ளேன்.’

குறுக்கு வழிகளில் மதிப்பெண்கள் பெறாமல், நேர்மையான உழைப்பும், ஆர்வமும் உள்ள தமிழ்  மாணவர்களுக்கு, புதிய வேலை வாய்ப்புகளும், தொழில் வியாபார வாய்ப்புகளும் உருவாக்கும் திசையில், தமிழின் அடுத்தக்கட்ட புலமையானது பயணிக்கத் தொடங்கியுள்ளது. ( ‘தமிழின்  அடுத்த கட்ட (Next Phase) புலமை? (2); புதிய வியாபார, வேலை வாய்ப்புகளை உருவாக்கும்   http://tamilsdirection.blogspot.com/2016/11/normal-0-false-false-false-en-in-x-none.html  ) 

தமிழில் முதுநிலைப்பட்டம் பெற்ற மாணவர்கள் எல்லாம் யாப்பிலக்கணத்தை விளங்கிக்கொள்ள 'இசையியல்'(Musicology), 'இசையின் இயற்பியல்'(Physics of Music), அகியவற்றில் அடிப்படை அறிவு பெற்றால், தொல்காப்பியத்தில் உள்ள 'இசை மொழியியல்' தொடர்பான புரிதலை வளர்த்துக் கொள்ள முடியும். அத்தகையோருக்கு இசை மொழியியல் அடிப்படையிலான   Natural Language Processing(NLP)  ஆய்வுத்திட்டங்களிலும், மென்பொருள் உருவாக்க (Software development)தொழில்களிலும், Resource Persons வேலை வாய்ப்புகள் விரைவில் உருவாக உள்ளன. 

அது போல பொறியியலில் ECE ,  Computer Science , உள்ளிட்ட இன்னும் அது போன்ற துறைகளில் பயிலும் மாணவர்கள் எல்லாம்  இசை மொழியியல்’ அடிப்படையில் NLP ஆய்வுகளும், பயன்பாட்டு மென்பொருள் உருவாக்கம் (application software development) ஆகிய துறைகளில் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் காலமும் கனிந்து வருகிறது. அவர்களில் ஆர்வமும், உழைப்பும் உள்ளவர்கள், தமக்கு உள்ள தமிழறிவு போதுமா? என்று தயங்காமல், எவ்வாறு தமிழ்ப்புலமையை வளர்ப்பது? என்பதற்கான புதிய உத்தியையும், நான் விளக்கியுள்ளேன். (http://musicresearchlibrary.net/omeka/items/show/2444 ) அவ்வாறு புதிய உத்தியுடன் பயணிக்கும் பொறியியல் பட்டதாரிகள் எல்லாம், 'இசை மொழியியல்' (Musical Linguistics) அடிப்படையிலான ‘Natural Language Processing’ (NLP)  துறையில், 'முந்திக்கொண்ட பறவைகளாக'(Early Birds) நல்ல வேலை வாய்ப்புகள் நோக்கி பயணிப்பார்கள். 

கல்லூரி மாணவர்களும், படித்த இளைஞர்களும் தமிழ்நாட்டின் வேலைவாய்ப்புகளை கெடுக்கும் முயற்சிகளை எல்லாம், இனி அனுமதிக்க மாட்டார்கள். உலகில் எவ்வாறு பாதுகாப்பானகழிவு நீக்கல்தொழில்நுட்பங்களுடன் தொழிற்சாலைகள் செயல்படுகிறதோ, அவை போலவே தமிழ்நாட்டில் உள்ள தொழிற்சாலைகள் செயல்படுவதை கண்காணித்து, புதிய முதலீடுகளை வரவேற்க வேண்டும். 

அந்த போக்கு வலுப்பெறுமானால், தமிழ்ப் பாரம்பரிய தொழில்நுட்பங்களை மீட்டு, வளர்த்து, புதிய தொழில், வியாபார, வேலை வாய்ப்புகளை உருவாக்குவது எளிதாகும். பழந்தமிழ் இலக்கியங்களில் இருந்து, நான் கண்டுபிடித்த தொழில்நுட்பங்கள் மூலம் பிற நாடுகள் பலன்கள் பெறுவதற்கு முன்பு, தமிழ்நாடு பலன் பெறும் வாய்ப்புக்கும் தற்போது வெளிச்சம் கிடைத்துள்ளது. 

குறுக்கு வழி பேர்வழிகளை எல்லாம் 'சமூக காங்கிரின் நோயாளிகளாக'(http://tamilsdirection.blogspot.com/2018/08/normal-0-false-false-false-en-us-x-none_27.html) கருதி ஒதுக்கி, சரியான முறையில் கல்வி, வேலைவாய்ப்புகளை பெருக்கி தமிழ்நாடு வளரும் போக்கானது தொடங்கி விட்டது, என்பதும் எனது கணிப்பாகும்.