Wednesday, November 21, 2018


சொந்த காசில் சூன்யம்வைத்துக் கொள்பவர்களின் நாடாகி வருகிறதா, தமிழ்நாடு? (2)


'குரங்காட்டி' பெற்றோர்களின் துயர அனுபவங்கள் மூலமாக, இளம் பெற்றோர்களை மீட்க முடியுமா?


கர்ப்பமாக இருக்கும் போதே, எம்.பி.பி.எஸ், பி. போன்ற படிப்புகளைக் கனவு காணும் தாய், குழந்தை பிறந்து இரண்டு ஆண்டுகள் முடியும் போதே விளையாட்டுப் பள்ளியில் சேர்த்து, தமது பிள்ளைகள் 'அப்பா, அம்மா' வைத் தெரிந்து கொள்ளாமல் 'டாடி, மம்மி' என்று அழைப்பதைக் கேட்டு மகிழ்ச்சி அடைகிறார்கள். பின் ஆங்கில நர்சரி பாடல்களை (அதன் பொருள், பண்பாட்டுப் பின்னணி தெளிவின்றி) பாடுவதைக் கேட்டு மகிழ்கிறார்கள். தாய்மொழி, நமது பண்பாடு உள்ளிட்ட ஆணிவேர்களின் தொடர்பற்று, தமது இயல்புக்கும், வாழும் மண்ணிற்கும், சம்பந்தமற்ற திரிந்த மேற்கத்திய பண்பாடு ஒழுக்க வாழ்வியல் திணிக்கப்பட்டு, அக்குழந்தைகள் குரங்காட்டியிடம் அகப்பட்டுக் கொண்ட குரங்கைப் போல வளர்கிறார்கள். தமது கனவுகளைக் குழந்தைகள் மீது திணித்து தாய்மார்கள் தம்மையுமறியாமல் குரங்காட்டிகளாக மாறும் போக்கும் கூடவே வளர்கிறது………………….         ஆங்கிலவழிக்கல்வி பயிலும் குழந்தைகள் மேல்நிலைக் கல்வியைத் தாண்டும் போது, வீட்டுக்குப் பழக்கப்பட்ட செல்லப் பிராணிகளாகவோ (domesticated animals) அல்லது யாருக்கும் அடங்காத முரடர்களாகவோ (unruly disobedient thugs) வெளிப்படுகிறார்கள்' (http://tamilsdirection.blogspot.sg/2013/10/normal-0-false-false-false-en-us-x-none_24.html  );

தமது இயல்போடு ஒட்டிய வளர்ச்சியைத் தொலைத்து, உள்ளார்ந்தஈடுபாடுகள் (Passions) வாசமற்ற எந்திரர்களாக வெளிப்பட்டுஅவ்வாறு தமது கனவுகளைத் தாய்மார்கள் தத்தம் குழந்தைகள் மீது திணித்ததன் விளைவாக, அவ்வாறு வளர்ந்த மாணவர்கள் கல்லூரியில் படிக்கும் போது, மனநோய் மருத்துவரிடம் சிகிச்சை பெறும் அளவுக்கு பாதிக்கப்படுவதும், தமிழ்நாட்டில் அரங்கேறி வருகிறது. ஒரே பிள்ளையின் (உயர்ந்த பதவிகளில் இருந்த‌) பெற்றோர்கள், அவ்வாறு கனவுகள் சிதைந்து கதறியதையும் நான் அறிவேன்

அந்த காலத்தில் கல்லூரி மாணவர்கள் அனுபவித்திராத வசவுகளையும், தண்டனைகளையும் முதலாம் வகுப்பு சேரும் முன்னரே இக்குழந்தைகள் அனுபவித்து விடுகின்றனர். அந்தக் கால கல்லூரி மாணவர்களை விட, தப்பிப்பதற்காக பொய் சொல்லுதல், புறங்கூறுதல், ஏமாற்றுதல் உள்ளிட்ட 'கலைகளில்' முதலாம் வகுப்பிலேயே அக்குழந்தைகள் நிபுணராகி விடுகிறார்கள். அடிப்படைக் கல்வி(primary education)  பயிலும்போதே, குழந்தைப் பருவ இயல்பைத் தொலைத்து 'முதியவராகி' விடுகிறார்கள்.(http://tamilsdirection.blogspot.com/2015/01/normal-0-false-false-false-en-us-x-none_31.html )

அவ்வாறு 'செல்லப்பிராணிகள்' போல வளர்ந்த மகன்களில் யார்யார்? திருமணத்திற்குப்பின், மனைவியின் 'செல்லப்பிராணி'யாகி, அம்மாவைத் தண்டிக்கிறார்கள்? அந்த போட்டியில் அம்மா வெற்றி பெற, மணமுறிவுக்குள்ளானவர்கள் யார்யார்? என்று ஆர்வமுள்ளவர்கள், தத்தம் மைக்ரோஉலகத்தினைக் கூர்ந்து கவனித்து வியப்பும், சோகமும் பெறலாம்.

அதைவிட மோசமாகதமிழில் எழுதவும் டிக்கவும் தெரியாத‌, தமிழ் வேரழிந்த தமிழ்க்குடும்பங்களாக வாழும் பிள்ளைகளின் பெற்றோர்கள் எல்லாம் தமிழின், தமிழ்நாட்டின் சாபக்கேடானவர்கள் ஆவார்கள். அத்தகையோர் எல்லாம் தமிழ் ஆர்வலர்களாக வலம் வர அனுமதிப்பதானது, தமிழ்வழிக்கல்வியின் (எனவே தமிழின்) மரணப்பயணத்தைத் துரிதப்படுத்தும்.


தமிழ்நாட்டில் 1967-இல் முளை விட்டு, 1970களில் இருந்து வீரியம் பெற்ற 'இயல்முறி' நோயின் விளைவாக, ஆங்கிலவழிக்கல்வி வளர்ந்து வந்தது. அந்த‌ சூழலில், .வெ.ரா மறைந்த பின், உருவான 'பெரியார்' ஆதரவாளர்களில், அரைகுறை ஆங்கில அறிவுடன், தம்மை அறிவுஜீவியாக கற்பனை செய்து கொண்டு, பிறர் வெளிப்படுத்திய தகவல்களையும் அரைகுறையாக புரிந்து கொண்டு, 'நாகரீகமாக' எவ்வாறு விவாதிப்பது? என்று அறியாத, 'அறிவு மஞ்சள் காமாலை நோயாளிகள்' வளர்ந்தார்கள்
(http://tamilsdirection.blogspot.com/2015/10/normal-0-false-false-false-en-us-x-none_26.html  & https://tamilsdirection.blogspot.com/2015/10/normal-0-false-false-false-en-us-x-none_11.html & https://tamilsdirection.blogspot.com/2015/10/normal-0-false-false-false-en-us-x-none_16.html)

அந்த 'அறிவு மஞ்சள் காமாலை நோயும்', ரசனையில் ஏற்பட்ட வீழ்ச்சியும், ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்து வளர்ந்து, எந்த அளவுக்கு தமிழ்நாட்டைச் சீரழித்துள்ளது? என்று அடுத்து பார்ப்போம்.

இன்று பள்ளிகளில் படிக்கும் சிறுவர் சிறுமிகள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் போட்டி இசை/நடனங்களில் பங்கேற்பதில் கிடைக்கும் மீடியா வெளிச்சமும், வெற்றி பெற்றவர்களுக்கு கிடைக்கும் பரிசுகளும் தமிழ்நாடெங்கும் வாழும் பெற்றோர்களிடையேயும் ஒரு போட்டியை ஏற்படுத்தியுள்ளது. அதன் விளைவாக, இசை/நடன போட்டி பயிற்சியாளர்களுக்கு வேலை வாய்ப்புகளும் பெருகி வருகின்றன.

ஆனால் தமிழ்நாட்டில் ரசனையில் ஏற்பட்டுள்ள சீரழிவின் விளைவாக;

பாலியல் விரசத்தை உள்ளடக்கமாகக் கொண்ட பாடல்களுக்கும், ஆடல்களுக்கும் அந்த சிறுவர், சிறுமியர் பயிற்சி பெற்று(?), அந்த விரசத்தை பெரியவர்கள் போலவே வெளிப்படுத்தி, அதை தொலைக்காட்சி நடுவர்களும் பாராட்டுவது, மிகவும் ஆபத்தான திசையில் தமிழ்நாடு பயணிப்பதன் வெளிப்பாடாகும்.

தமிழ் பாரம்பரியம் பண்பாடு, பொது ஒழுக்க நெறிகள் போன்றவற்றை எல்லாம் 'வேஸ்ட்' (Waste) என ஓரங்கட்டி, 'எந்த வழியிலாவது பணம், புகழ் ஈட்டுவதே வாழ்வியல் புத்திசாலித்தனம்' என்ற போக்கில், சுயநல மனித மிருகங்களை உருவாக்கும் போட்டியில் ஈடுபட்டுள்ள பெற்றோர்கள் வளர்ந்து வரும் நாடாக தமிழ்நாடு இருக்கிறதா? என்ற விவாதம் அரங்கேற வேண்டிய நேரம் வந்து விட்டது.

மேற்கத்திய வழிபாட்டு போக்கானது, கிறித்துவர்களிடமும், விளையாட்டுப்பள்ளி முதலே ஆங்கிலவழிக்கல்வி பயிலும் இந்துக்கள், முஸ்லீம்கள் உள்ளிட்ட அனைத்து மதத்தினரிடமும், மேற்கத்திய பாணி முற்போக்காளர்களிடமும், வளர்ந்து, தமிழ் மொழி, பண்பாடு உள்ளிட்ட ஆணிவேர்களிடமிருந்து, அவர்களை எல்லாம் அந்நியமயமாக்கி வருகின்றனவா? என்று அறிவுபூர்வமாக, திறந்த மனதுடன், விவாதிக்க வேண்டிய நேரம் வந்து விட்டதாக கருதுகிறேன்.’ ( ‘‘சொந்த காசில் சூன்யம்வைத்துக் கொள்பவர்களின் நாடாகி வருகிறதா, தமிழ்நாடு?(1);   http://tamilsdirection.blogspot.com/2017/07/blog-post_16.html )

மேற்கத்திய வழிபாட்டுப் போக்கில், இழப்புகளுக்கு அஞ்சி, 'சொகுசு பாதுகாப்பு பாதையில்' பயணிக்கும் 'யோக்கியர்கள்'(?) எல்லாம், அதன் காரணமாகவே, சமூக முதுகெலும்பு முறிந்து, சமூகக் கிருமிகளை எதிர்க்க அஞ்சி, சமூகத்திற்கு கேடாகவே பயணிப்பதைத் தவிர்க்க முடியாது.

படித்த காலத்தில் தேர்வுகளில் முதலிடம் பிடித்து, உயர்வேலைவாய்ப்புகளை நோக்கி, கண்ணும் கருத்துமாக வாழ்ந்து, அதில் வெற்றியும் பெற்றவர்களையும் நான் அறிவேன். அத்தகையோரில் நான் அறிந்தவர்கள் எல்லாம், 'தமிழ்நாட்டில் பொது ஒழுக்க நெறியை 'நுகரும் திறன்' இழந்து, 'பிணமாக' வாழும் தமிழர்களின், 'சமூக கிருமியாக' வாழும் தமிழர்களின், 'சமூக முதுகெலும்பு' முறிந்த 'யோக்கிய' தமிழர்களின் -முக்கூட்டணியில்' பங்கு பெற்றுள்ளதை (https://tamilsdirection.blogspot.com/2018/11/blog-post.html );

அதனை நான் எவ்வாறு கண்டுபிடித்தேன்?

கட்சியிலும் சரி, ஆட்சியிலும் சரி, தமக்கான பணியை உண்மையாகவும்,நேர்மையாகவும் செய்பவர்களின் வளர்ச்சி/வீழ்ச்சி எப்படி இருக்கிறது? மேலிடத்தில் உள்ள தனிமனித பலகீனங்களுக்கு (பலவகை தரகு) உதவுபவர்களின் வளர்ச்சி/வீழ்ச்சி எப்படி இருக்கிறது? என்ற ஆராய்ச்சியுடன்;

மேலே குறிப்பிட்ட போக்கில் உண்மையாகவும்,நேர்மையாகவும் பணியாற்றும் கீழதிகாரியானவர், கீழே குறிப்பிட்ட போக்கில் உள்ளமேலதிகாரி இட்ட பணியை,  செய்ய வேண்டியது அரசு நடத்தை விதிகளின் படி மறுக்க முடியுமா?

நன்கு படித்து, தேர்வுகளில் வெற்றி பெற்று, புதிதாக பணியில் சேர்ந்தஇளம் அதிகாரி ஒருவர், அத்தகைய தன்மானக்கேடு தமது பணியில் நிகழ்வதை உணர்ந்து, வெட்கப்பட்டு, தமது உறவினரான பணி ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியரிடம் கீழ்வரும் வகையில் பேசி இருக்கிறார்.

"ஒழுங்காக படித்து, தேறி, இந்த வேலையில் சேர்ந்ததற்குப் பதிலாக, படிக்காமல் இருந்து, ஊரில் மாடு மேய்க்கும் வேலையை செய்திருந்தால் கூட, கெளரவமாக இருந்திருக்கும்"

அந்தபணி ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியரை சந்திக்க நேர்ந்த போது, அவர் அதனை என்னிடம் தெரிவித்தார்.

இது போன்ற தகவல்கள் எல்லாம் சமூகத்தின் வெவ்வேறு மட்டங்களில் இருந்து, இயற்கையின் போக்கில் நம்மை நோக்கி வருவதற்கு, நாம் வாழும் வாழ்க்கையின் போக்கே முக்கிய காரணமாகும்.

தமிழ்நாட்டில் அவரவர் சமூக நிலை ( Social Status என்று கற்பனை செய்து கொண்டு) கூண்டுகளில் சிக்கி, தம்மை விட மேலானவர்களுக்கு வாலாட்டி குழைந்தும், தம்மை விட கீழானவர்கள், அவர்கள் செல்லும் சாதாரண கடைகள், டீக்கடைகள் போன்றவற்றிற்கு செல்வதைத் தவிர்த்தும்,   சமூக மனித விலங்கு காப்பகத்தில்  (Social Human Zoo) சமூகக்  கூண்டுக்குள் வாழும் மனித விலங்காகவாழாமல், டீக்கடையிலிருந்து  ஸ்டார் ஓட்டல் வரை தமது தேவை/பணிகள் நிமித்தம் செல்லும் அதிகபட்ச சமூக நெடுக்கத்தில் (maximum Social Range), ‘சுதந்திர  மனிதராக - பிறர் நம்மை முட்டாளாக நினைத்தாலும் கவலைப் படாமல் - வாழ்வதும் ஒரு வகை இன்பமே ஆகும். (http://tamilsdirection.blogspot.com/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_22.html )

அந்த சமூக நெடுக்கத்தில் நாம் சந்திக்கும் மனிதர்களின் சமூக நிலைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், உண்மையாகவும், நேர்மையாகவும், சுயலாப நோக்கற்ற சமூக அக்கறையுள்ளவர்களை மட்டுமே நமது சமூக வட்டத்தில் அனுமதிக்கும்போது, கீழ்வரும் மேற்கோளின்படி, அண்டமே நமது வாழ்வின் கூட்டாளியாகப் பயணிப்பத்தை, சொற்களால் விவரிக்கமுடியாத வகையில் உணர முடியும்.

“And, when you want something, all the universe conspires in helping you to achieve it.” 
― Paulo Coelho, The Alchemist

எனது பதிவுகளில் ஏற்கனவே குறிப்பிட்ட‌ காரணங்களால், நான் பண நெருக்கடியில் வாழ்ந்த காலத்தில், என்னை 'வாழ்வியல் முட்டாள்' என ஒதுக்கியதைப் பற்றிய கவலையின்றி, எனது உள்ளார்ந்த ஆய்வு ஈடுபாடுகளோடு, வெளிப்பட்ட‌  இன்பங்களை அனுபவித்து, நான் பயணித்து வந்தேன். "நமது வாழ்க்கை என்ற சிற்பத்தை செதுக்க, நமது துயரங்களையும் அனுமதிப்பானது, கற்றல் மனப்பான்மையின் சிறந்த பகுதியாகும்" என்று மலேசியாவில் வாழும் சைவப் புலமையாளர் பேரா.சிவக்குமார் தெரிவித்த கருத்தானது, எனது வாழ்வில் அனுபவமானது. ("Allowing the pain to sculpt the life is part and parcel of best LEARNING aptitude",  as Malaysia based Saivite scholar Dr.Sivakumar explained)  (http://tamilsdirection.blogspot.com/2016/11/normal-0-false-false-false-en-in-x-none_17.html )

ஆங்கிலவழிக்கல்வியில், 'சொகுசு பாதுகாப்புப் பாதையில்' பயணிப்பவர்களின், துன்பங்களைக் கண்டு அஞ்சி, இழிவான சமரச போக்கில் வாழ்பவர்களின், வாழ்க்கை எல்லாம் வெறும் கல்லாகவே இருப்பதில் வியப்பில்லை.

நான் பள்ளியிலும், கல்லூரியிலும் படித்த காலத்தில், அதிக மதிப்பெண்கள் எடுப்பதை முக்கிய நோக்கமாகக் கொண்டு படித்ததில்லை. அதற்கு அடுத்த நிலையில் கிடைக்கும் மதிப்பெண்களோடேயே  எனது படிப்பு காலம் கழிந்தது.

தமிழ்வழியில் படித்து (எனவே மூளையின் புலன் அறி திறன்கள் -cognitive skills development- நன்கு வளர்ந்து) பின் கல்லூரியில் ஆங்கிலவழியில் படித்தேன். தனித்தமிழ்/திராவிட செல்வாக்கில் அறிவியல் பாடங்கள் சிக்கி சீரழியாத 1967க்கு முன் படித்ததால், எழுத்தோசைப் பொருத்த (Phonetic) போக்கில் (உதாரணமாக; oxygen - ஆக்சிஜன்) படித்திருந்ததால், கல்லூரியில் ஆங்கிலவழியில் படிப்பதில் சிரமப்பட்டு, அப்போது தற்கொலைகள் நிகழ்ந்ததில்லை; அறிவியல் சொற்களை தனித்தமிழ் பொருளில் மாற்றுச்சொற்களைத் (semantic) திணிப்பதானது, பள்ளிக்கல்வியில் நுழையாத காலம் அது. (http://tamilsdirection.blogspot.com/2015/08/normal-0-false-false-false-en-us-x-none_31.html & http://tamilsdirection.blogspot.com/2016/07/fetna.html )

இன்றுள்ள 'குரங்காட்டி' பெற்றோர்களைப் போல இல்லாத, 1967க்கு முன் வாழ்ந்த பெற்றோர்கள் நிறைந்த நாடாக  தமிழ்நாடு இருந்தது.

எனது பெற்றோர்களை திருப்தி செய்யும் அளவுக்கு, அதிக மதிப்பெண்களுக்கு அடுத்த நிலையில் கிடைக்கும் மதிப்பெண்களோடேயே படித்ததால், அவர்களின் தடைகளின்றி சமூகத்தோடும் இயற்கையோடும் ஒட்டியே வளர்ந்து வர சாத்தியமானது; நண்பர்களோடு குளத்தில் நீச்சல் பழகி, பின் வயற்கேணிகளில் குதித்து நீஞ்சுவது, இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் பங்கேற்றது போன்ற இன்னும் பல அனுபவங்களோடுமுதல் மதிப்பெண் எடுக்கும் இலக்கில், இது போன்ற அனுபவங்களை இழந்து, வாழ்க்கையில் 'வெற்றி'(?) பெற்ற முட்டாள்களையே, மேலே நான் குறிப்பிட்டிருந்தேன்.

அத்தகைய அனுபவங்களோடு, வாழ்ந்ததன் பலன்களே;

இன்று எனதளவில் திட்டமிடாமலேயே வெளிப்பட்டவை தான், இசைத்தகவல் தொழில் நுட்பத் துறையில் (Music Information Technology-MIT) உலக அளவில் பிரமிப்பூட்டும் கண்டுபிடிப்புகளும், அதைவிட முக்கியமான தமிழின், தமிழர்களின், தமிழ்நாட்டின் சீரழிவுக்கான சமூக செயல்நுட்பம் பற்றிய கண்டுபிடிப்புகளும் ஆகும். இவையும் நான் திட்டமிடாமலேயே நான் வாழ்ந்து வரும் போக்கில் வெளிப்பட்டு வருபவை ஆகும்எனது MIT கண்டுபிடிப்புகள் மூலமாக, தனிப்பட்ட முறையில் உடனே எனக்கு பணமும் புகழும் பெறும் 'வெறியில்' சிக்காமல், எனது போக்கிலேயே நான் தொடர்ந்து பயணிக்கிறேன். 'புகழ் வெளிச்சத்தில்' சிக்கியவர்கள் சந்தித்து வரும் இழப்புகள் எல்லாம் என்னைத் தீண்ட முடியாதவாறு. (http://drvee.in/ )

அடிப்படைக்கல்வியை தாய்மொழியில் கற்று, மூளையின் புலனறி திறன்கள் வளர்ந்து(cognitive skills development), பின் உயர்க்கல்விக்கு ஏற்றவாறு வளர்ந்திருந்த ஆங்கிலவழிக்கல்வியில் பயின்றதும், எப்படி முதல் மதிப்பெண் எடுத்து, சொகுசான உயர்பணியில் அமர்வதுஇழிவுக்கு இலக்கணமானவர்களுக்கு 'வாலாட்டி', எவ்வாறு பணமும் புகழும் ஈட்டுவது? என்ற குவியப் போக்கில், இயற்கையிலிருந்தும், சமூகத்திலிருந்தும் வெளிப்படும் அரிய உள்ளீடு(inputs) அனுபவங்களை இழந்து நான் என்றுமே பயணித்தது கிடையாது. இன்றும் எனது ஆய்வுத்திட்டங்கள் பெற்று வரும் வெற்றியிலும் தடம் புரளாமல், மிகுந்த கவனத்துடன் பயணிக்கிறேன்.

எந்த மொழியாக இருந்தாலும், மொழி என்பதானது, வெறும் பேசுவது, படிப்பது, எழுதுவது என்பதை தாண்டி;

ஒரு மொழியின் மூலமாக நமது சிந்தனை முறையும், கண்ணோட்டமும் மாற்றங்களுக்கு உள்ளாவதை (‘the language we speak affects the way we think, it also affects the way we view the world around us. We habitually formulate our perceptions of the world in language, according to the particular biases and prejudices inherent in whatever language we know. ‘) கீழே குறிப்பில் உள்ள ஆய்வு தெரிவிக்கிறது.

ஆங்கிலவழிக்கல்வியின் விளைவாக உருவான சமூக சூழலில், அகத்தில் சீரழிந்து, புறத்தில் 'யோக்கியராக' காட்சி தருபவர்களின் எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறதா?

மேற்குறிப்பிட்ட பின்னணியில், கீழ்வரும் கருத்தானது எந்த அளவுக்கு ஆபத்தானது என்பது தெளிவாகும்.

"உங்கள் வீட்டில் மனைவியுடனும் குழந்தைகளுடனும் மட்டுமின்றி வேலைக்காரிகளுடனும் ஆங்கிலத்திலேயே பேசுங்கள்; பேச பழகுங்கள்; பேச முயலுங்கள்;! தமிழ்ப் பைத்தியத்தை விட்டு ஒழியுங்கள்" -- பெரியார் .வே.ரா சிந்தனைகள் ,இரண்டாம் தொகுதி , பப 988-89

அந்த ஆபத்திலிருந்து மீள, அறிவுபூர்வ விவாதங்கள் அரங்கேற வேண்டாமா? (http://tamilsdirection.blogspot.sg/2017/03/blog-post.html  )

குக்கிராமங்களில் கூட ஆங்கிலவழி விளையாட்டுப் பள்ளிகள் ஊடுருவி வரும் தமிழ்நாட்டில்;

அதிகம் படித்த பெற்றோர்களின் அந்த ஆபத்தான திசையில், பாமரர்களும் பயணிக்கத் தொடங்கி விட்டார்கள்.

அந்த குழந்தைகள் எல்லாம், தமிழ் மொழி, பண்பாடு, வேர்கள் அற்று, வளர்ந்து, தற்கொலை, கொலை, போதை மாத்திரை, திருட்டு போன்ற சமூக நோய்களில், அதன் காரணமாவே சிக்கி
(http://news.bbc.co.uk/today/hi/today/newsid_8311000/8311069.stm  )

அதிலும் தப்பித்து உயர்ந்த படிப்பில், உயர்ந்த வேலையில் சேர்ந்த பின்;

பெற்றோர்கள் உள்ளிட்ட சுற்றத்தை 'நியூசென்ஸ்' என்று ஒதுக்கி வாழ;

அதையும் வெளியில் சொல்ல வெட்கப்பட்டு, செத்துக் கொண்டே வாழும் பெற்றோர்கள் எல்லாம் வளர்ந்து வரும் நாடாக தமிழ்நாடு இருக்கிறது.

ஆங்கில வழிக்கல்வியில்,  'சொந்த காசில் சூன்யம்' வைத்துக் கொள்ளும் போக்கில்;

தமிழ்நாடும், தமிழும், தமிழர்களும் வீழ்ந்து வருகிறார்கள்; தமிழ்நாட்டை சீரழித்த 'சாபத்தில்' (Curse) பங்கும், தண்டனையும் அனுபவித்துக் கொண்டு. (http://tamilsdirection.blogspot.com/2017/07/blog-post_16.html )

பொதுவாக தாம் அன்பவித்த கொடுமைகளை, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வெளிப்படுத்தி வருபவர்கள் எல்லாம் பெரும்பாலும் நடுமட்டத்திற்கு கீழே வாழ்பவர்களாக மட்டுமே இருக்கிறார்களா? வசதியில் மேம்பட்ட குடும்பங்களில் நடந்து வரும் கொடுமைகள் எல்லாம் அந்த தொலைக்காட்சி வெளிச்சத்திற்கு வருவதில்லையா?

குறிப்பாக, வாழ்க்கையில் இயல்பாக அனுபவிக்க வேண்டிய இன்ப துன்பங்களை விட்டு, கவனமாக விலகி, தமக்கான வாழ்க்கையையும், தமது குழந்தைகளுக்கான வாழ்க்கையையும் தொலைத்து விட்டு, சமூக ஒப்பீடு நோயில், பிறர் பொறாமைப்பட வாழும் வெறியில்;

துவக்கத்தில் குறிப்பிட்ட‌ 'குரங்காட்டி' பெற்றோர்களில் யார்? யார்? சுயநல மிருகமாக வளர்ந்து பெரியவர்களான தமது பிள்ளைகளிடம் எந்தெந்த வழிகளில் துன்பங்களையும், அவமானங்களையும் சந்தித்து வருகிறார்கள்?

வெளியில் சொல்ல வெட்கப்பட்டு, செத்துக் கொண்டே வாழும் 'அந்த' பெற்றோர்களின் துயரங்கள் எல்லாம் பொது அரங்கில் வெளிப்பட்டு விவாதிப்பதன் மூலமே;

இன்றுள்ள இளம் பெற்றோர்களை 'அந்த' படுகுழியிலிருந்து காப்பாற்ற முடியும்.

அந்தப் படுகுழியை முன்கூட்டியே உணர்ந்து, தமது குழந்தைகளை எல்லாம் ஆங்கிலவழி விளையாட்டுப் பள்ளிகளில் சேர்க்காமல், அடிப்படைக்கல்வியை தமிழ்வழியில் கற்பித்த/கற்பிக்கும் உயர் அதிகாரிகளும், கல்லூரி விரிவுரையாளர்களும், வசதியுள்ள தமிழர்களும் தான், இன்று நம்பிக்கை தரும் உண்மையான புரட்சியாளர்கள் ஆவார்கள்.

குறிப்பு:

“If you have ever tried to learn a new language, you might have noticed that it is not only about learning the alphabet, vocabulary and grammar. It also involves learning a new way of thinking and expressing yourself.

Language carries references to the culture to which it belongs and, by interacting with a language, we gain an insight into a particular culture……..Whorf said, “because the language we speak affects the way we think, it also affects the way we view the world around us. We habitually formulate our perceptions of the world in language, according to the particular biases and prejudices inherent in whatever language we know. Thus, language limits the way we perceive reality, the way we think about it, and the way we talk about it. But it need not do so. If we are aware of those limitations, we can compensate for them and view the world freshly and newly.”……….. From the above, we can see that if language affects the way we speak and is intimately related with culture, there will be a close relationship between the mind and culture through language. Looking at some ancient languages, we find that the more sophisticated the language is, the more developed the civilization, and perhaps the opposite is also true. George Orwell, who made a life-long study of language, held that “the decay of a civilization can be seen in the declining levels of sincerity in the words and minds of its citizens.”-  ‘Language and Culture’ -Article By Pinar Akhan; http://library.acropolis.org/language-and-culture/

No comments:

Post a Comment