Monday, March 9, 2020


தமிழ்நாடு தன்மான மீட்சிக்காகக் காத்திருக்கிறது





இன்டர்நெட்டில் தகவல் சேகரித்து கோவில் விழாவில் நகை திருடும் பெண்கள்’ என்ற தலைப்பில் வெளிவந்த கீழ்வரும் செய்தியானது எனது கவனத்தை ஈர்த்தது. 

https://www.dinamalar.com/news_detail.asp?id=2497077






தோற்றத்தில் மேற்குறிப்பிட்ட திருடிகள் நல்ல கெளரவமான குடும்பப் பெண்கள் போன்றே காட்சி தருகின்றனர். இன்று நம்மிடையே கெளரவமாக மட்டுமின்றி, மிகுந்த செல்வம் மற்றும் செல்வாக்குடன் சட்டத்தின் பிடியில் இதுவரை சிக்காத வகையில், மேலுள்ள புகைப்படத்தில் இடம் பெறும் குதியுடன் பல திருடர்களும், திருடிகளும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்; நம்மில் தன்மானம் இழந்தவர்கள் எல்லாம், அத்தகையோருக்கு வாலாட்டி நெருக்கமாகி வரும் சமூக சூழலில்


1967க்கு முன் சட்டவிரோத சீட்டாட்ட கிளப் நடத்தி, கைதாகி விலங்குடன் தெருவில் காவல்துறையால் அழைத்துச் செல்லப்பட்டார் ஒருவர். அதே நபர் பின்னர் எம்.எல்., அமைச்சர், மூத்த தலைவர் என்று தமிழ்நாட்டில் வலம் வந்தார். அது போன்ற பின்னணியில் அல்லது அதைவிட மோசமான பின்னணியில், இன்று உள்ள அதிவேகப் பணக்காரர்களுக்கு, அவர்கள் சார்ந்த சாதி மற்றும் மதங்களில் வி..பி மரியாதை கிடைத்து வருவது பொய்யா? இந்த திருடிகளும் முட்டாள்த்தனமாக மாட்டிக்கொள்ளாமல், அதிவேகப் பணக்காரர் ஆகி, அரசியலிலும் நுழைந்து பிரமிக்கும் வகையில் பணத்திலும் செல்வாக்கிலும் வளர்ந்தால், கட்சித் தலைவர்களும் பிரபல பத்திரிக்கையாளர்களும் போட்டி போட்டு தரிசித்து நெருக்கமாக முயற்சித்திருப்பார்கள். 

'திராவிட ஆட்சிகளின்' விளைவாக உருவான புதுப்பணக்காரர்களில், 'நக்சலைட், தனித்தமிழ்நாடு, தனி ஈழம், தமிழ் மானம், தலித், பெரியாரியல், இந்துத்வா, முஸ்லீம், ஆன்மீகம்' என்று பல முகமூடிகளுடன் 'வலம்' வரும் பொதுவாழ்வு வியாபாரிகளுக்கு, அவரவர் 'தகுதி, திறமைகளுக்கு' ஏற்ப, 'நன்கொடை' வழங்கி, தமது 'சமூக பாதுகாப்பு கவசத்தை' உருவாக்கி, 'செல்வாக்குடன்' 'வாழ்வியல் புத்திசாலிகளாக' வளர்ந்து வருபவர்கள் யார்? யார்? என்பதும் ஆய்விற்குரியதாகும்
(http://tamilsdirection.blogspot.com/2013/10/normal-0-false-false-false-en-us-x-none_27.html) 

.வெ.ரா, திரு.வி., .வெ.சா என்று சொந்த ஊர் மற்றும் சாதிப்பெயர்கள் இருந்த நிலையானது மாறி, 'முற்போக்காக' தமது சொந்த ஊர்ப்பின்னணியை மறைத்து, வெறும் பெயரோடு வலம் வருவது, அது போன்ற திருடர்களுக்கும் திருடிகளுக்கும் சாதகமாகி விட்டது.

தமிழ்நாட்டில் .வெ.ரா, .வெ.சா போன்று எல்லோரின் பெயர்களிலும் முதல் எழுத்தானது, அவர்களின் சொந்த ஊரின் முதல் எழுத்தாக இருந்தது. அத்தகையோர் மேக்ரோ உலகில் பிரபலமான பின்னர், ஆர்வமுள்ளவர்கள் அவர்களின் சொந்த ஊரில், மைக்ரோ உலகத்தில், அவர்களின் யோக்கியதையை விசாரித்து தெரிந்து கொள்ளும் வாய்ப்புகள் இருந்தன.  அதாவது மேக்ரோ உலகில் வாழ்ந்த பிரபலங்களின், சொந்த ஊர், மைக்ரோ உலகநல்ல/கெட்ட யோக்கியதையை விசாரித்து தெரிந்து கொள்ளும் வாய்ப்புகள் அப்போது இருந்தன.

இன்று தமிழ்நாட்டில் உள்ளவர்களின் பெயர்களில், அவர்களின் சொந்த ஊரின் முதல் எழுத்து இல்லை. தமது சொந்த ஊரை விட்டு, நகரங்களிலும், பெருநகரங்களிலும் வாழ்பவர்களின் சொந்த ஊரின் யோக்கியதையை விசாரித்து அறிவதற்கு அது தடையாகும். அது போலவே, பணிமாற்றத்திற்கு உள்ளானவர்களின், கடந்த கால பணி யோக்கியதையையும் எளிதில் அறிய முடியாது. சொந்த ஊரில், வாழும் இடத்தில், பணியாற்றும் இடத்தில், 'சுயலாப கள்வராக' வாழ்ந்து கொண்டு, நல்ல பேர் எடுக்க முடியாது. அதுவே மைக்ரோ உலகத்தின் தனித்தன்மையாகும்; இன்றும் கூட. (‘நாட்டின் ஊழல் பற்றி சோகமடைவதற்கும், கோபப்படுவதற்கும் நமக்குள்ளயோக்கியதை?’;
http://tamilsdirection.blogspot.com/2018/08/normal-0-false-false-false-en-us-x-none_12.html)

'சர்க்காரியா கமிசன்' பரிந்துரைத்த ஊழல் குற்றவாளிகள் எல்லாம், உரிய நீதிமன்ற விசாரணை மூலம், கடுமையாக தண்டிக்கப்பட்டிருந்தால், தமிழ்நாட்டின் மலைகள், ஏரிகள், ஆறுகள் உள்ளிட்ட கனிவளங்கள் எல்லாம் ஊழலுக்கு இரையாகியிருக்காது. ஊழல் அதிகாரிகள் கட்சித்தலைவர்கள் வலைப்பின்னலின் பின்பலத்தில் செம்மரக்கடத்தல் தமிழர்கள் உருவாகியிருக்க மாட்டார்கள். அதற்கு மாறாக, அன்றைய பிரதமர் இந்திராகாந்தி உதவியுடன் ஊழல் குற்றவாளிகள் தப்பித்துள்ள பின்னணியில்; தேசியக் கட்சிகளின் சுயநல அரசியலில், தமிழ்நாட்டின் ஊழல் ஒழிப்பானது பலிகடா ஆகும் போக்கே தொடர்கிறது..

மோடி ஆட்சியில் தமிழ்நாட்டில் தொடங்கியுள்ள சோதனைகள் மூலம், உண்மையில் பாரபட்சமின்றி ஊழல் திமிங்கிலங்கள் சிக்கி, ஊழல் சொத்துக்கள் எல்லாம் பறிமுதல் செய்யப்பட்டு, குற்றவாளிகள் எல்லாம் தண்டிக்கப்பட்டால், நெருக்கடி கால 'திராவிட' ஊழல் ஒழிப்புக்கு தமிழ்நாட்டு மக்களிடையில் கிடைத்த வரவேற்பை விட, அதிக வரவேற்பானது, அதன்பின் நடக்கும் பாராளுமன்ற/சட்டமன்ற தேர்தல் முடிவுகளில் வெளிப்படும்,; அதுவரை தமிழ்நாட்டில் கூட்டணிக்கட்சிகளின் வெற்றி வாய்ப்புகளைக் கெடுக்கும் நோட்டாக் கட்சியாகவே தமிழக பா.. நீடிக்கும்; என்பதும் எனது ஆய்வு முடிவாகும்.(‘ அரசியல் கொள்ளையர்களுக்கு  எதிரான மத்திய அரசின் சோதனைகள்; தமிழ்நாட்டு மக்களிடையே, மோடி அரசுக்கு ஒரு நம்பிக்கை நெருக்கடி ?’; 
 http://tamilsdirection.blogspot.com/2017/11/panamapapers-2015.html) 

தமிழ்நாடானது தன்மானமிழந்து பயணிக்கும் வரையில், மத்தியில் யார் ஆட்சி செய்தாலும் தப்பிக்கும் வலிமையானது அரசியல் கொள்ளையர்களுக்கு நீடிக்கும். இல்லையென்றால் சர்க்காரியா கமிசன் வழக்கை வாபஸ் பெறும் துணிச்சலானது, அன்றையப் பிரதமர் இந்திராவுக்கு வந்திருக்குமா?

மேற்குறிப்பிட்ட செய்தியில் உள்ள திருடிகளும் முட்டாள்த்தனமாக மாட்டிக்கொள்ளாமல், அதிவேகப் பணக்காரர் ஆகியிருந்தால், அவர்கள் சம்பந்தப்பட்ட கிரிமினல் வழக்குகளில் இருந்து அவர்களைக் காப்பாற்ற, 'கறுப்பு ஆடுகளாக' உள்ள அரசு வழக்கறிஞர்களும், அவர்களின் எடுபிடிகளாக அலையும் (குற்றவாளிகளுக்கான) இளம் வழக்கறிஞர்களும், காவல்துறையினரும், தப்பித்தவறி சிறைவாசம் நேர்ந்தால், சொகுசாக வாழ உதவும் சிறை அதிகாரிகளும் போட்டி போட்டு உதவ மாட்டார்களா? அவ்வாறு உதவி அதிவேகப் பணக்காரர் ஆனவர்களை, அவர்களின் சொந்த பந்தங்கள் மட்டுமின்றி, வாழும் ஊரில் உள்ள 'முற்போக்கு, பிற்போக்கு' கட்சிகளின் தலைவர்களும் கூட பாராட்டி பலன்கள் பெற மாட்டார்களா?

ஏற்கனவே அடித்த கொள்ளையோடு அடங்காமல், மீண்டும் மீண்டும் ஆட்சியைப் பிடித்து கொள்ளை அடிக்கும் துணிச்சலுக்கு யார்க் காரணம்?

அந்த திருடர்கள் மற்றும் திருடிகளிடம் கை ஏந்தி பிழைக்கும் திராவிட, தமிழ்த்தேசிய, பகுத்தறிவு, ஆன்மீகம் போன்ற முகமூடிகளுடன் நம்மிடையே உலவும் பிரபல பேச்சாளர்களும், எழுத்தாளர்களும், கவிஞர்களும்; 

அவர்களை நம்மைப் போன்றவர்கள் காறித் துப்பாமல் மதிப்பதுமே முக்கிய சமூகக் காரணமாகும்.

எனது உற்றத்திலும் சுற்றத்திலும் எவரேனும்;

சட்டத்தின் பிடியில் சிக்காத 'புத்திசாலி'(?) திருடர்களாகவும் திருடிகளாகவும் அவர்களைப் பாராட்டி நெருக்கமாக பயணிப்பவர்களாகவும் வெளிப்பட்டால்;

அவர்களை 'வாழும்போதே செத்தவர்களாகக் கருதி', எனது சமூக வட்டத்தில் இருந்து அகற்றியே பயணிக்கிறேன்; அதனால் வரும் இழப்புகளை எல்லாம் விரும்பி ஏற்று.

அவ்வாறு வாழ்ந்து வரும் போக்கில் தான், உலக அளவில் பிரமிப்பூட்டும் கண்டுபிடிப்புகள் என்னிடமிருந்து வெளிப்பட்டு வருகின்றன‌; அவற்றின் மூலம் வெளிப்படும் 'புகழ், சொகுசு வாழ்வு' வாய்ப்புகளில் தடுமாறி, 'தடம் புரண்டு', பொது ஒழுக்க நெறியை 'நுகரும்' திறன் இழந்து, சமூக மூச்சுத்திணறல் (Social Suffocation) மிகுந்த சமூக வெளியில்(Social Space) சிக்கிவிடக்கூடாது, என்பதிலும் மிகுந்த கவனத்துடன் வாழ்கிறேன். 
(https://tamilsdirection.blogspot.com/2018/10/normal-0-false-false-false-en-in-x-none_31.html)

சமூகத்தில் நேர்மையாக வாழ விரும்புபவர்கள் மேற்குறிப்பிட்ட அணுகுமுறையில் எந்த அளவுக்கு வலிமையுடன் பயணிக்கிறார்களோ, அந்த அளவுக்கு சமூகத்தின் நேர்மையானது மீட்சி பெறும். அதன்பின் தான் சட்டத்தின் ஆட்சியும் வலிமை பெறும்.   

1944க்கு முன் தமிழ்நாட்டில் தலைவர்களின், சிலைகளின், பிம்ப வழிபாடு இருந்ததில்லை. எந்த கொள்கையாளராக இருந்தாலும், தலைவராக இருந்தாலும், தொண்டராக இருந்தாலும், அவரிடம் வெளிப்பட்ட உண்மை, நேர்மை, புலமை போன்றவற்றின் அடிப்படையிலேயே மதிக்கப்பட்டார்கள்; சுயமரியாதை இயக்கத்தில் இருந்த பெரும்பாலோர் அவ்வாறே ஆத்திகர்களாலும் மதிக்கப்பட்டார்கள்.

'பெரியார்' கட்சிகளாக இருந்தாலும், இந்துத்வா கட்சிகளாக இருந்தாலும், உண்மையாகவும், நேர்மையாகவும், சுயலாப கணக்கின்றி வாழ்ந்தவர்களும் வாழ்பவர்களும் திக்கத்தக்கவர்களே ஆவர்

ஒரு சமுகத்தில் புறத்தில் எதை இழந்தாலும், மீண்டு எழுவது சாத்தியமாகும்; 'அந்த' சமூகத்தின் 'அகம்' வலிமையுடன் நீடிக்கும் பட்சத்தில். ஆனால் 'அந்த சமூகத்தின் 'அகம்' சீரழிவினைச் சந்தித்தால், மீள்வது சிக்கலாகி விடும். அதை விட மோசமாக, 'அந்த' சமூகமானது, உண்மையாகவும் நேர்மையாகவும் வாழ்வதற்கான தகுதியை இழந்த சமூகமாக 'திரிந்து' விடும்
(http://tamilsdirection.blogspot.com/2019/07/blog-post_21.html) 

மக்கள் தன்மானமிழந்தால், ஊழல்வாதிகளிடம் அரசு சிக்கி, அந்த நாடு அழியும்; மக்களுக்கு தன்மானம் வந்தால், அந்த ஊழல்வாதிகள் ஒழிவார்கள்; ஊழல் சொத்துக்கள் பறிமுதல் மூலம் அந்த நாடும் வளரும்.

தமிழ்நாடு தன்மான மீட்சிக்காகக் காத்திருக்கிறது. தன்மானத்திற்காக விரும்பி இழப்புகளை ஏற்று தமிழ்நாட்டில் வாழ்பவர்களும், அந்த மீட்சியைத் தூண்டும் சமூகப் பொறியியல் வினையூக்கிகளாக (Social Engineering Catalysts) எண்ணிக்கையில் வளர்ந்து கொண்டிருக்கிறார்கள்.



குறிப்பு:  

தமிழ்நாட்டில் 'சாதி' என்ற சொல்லின் பொருளைத் திரித்து, சமூக உயர்வு - தாழ்வு நோயும், 'தீண்டாமை'யும் எவ்வாறு காலனி சூழ்ச்சியில் அறிமுகமானது? (http://tamilsdirection.blogspot.com/2016/01/normal-0-false-false-false-en-us-x-none_31.html) 

என்பதை அறிந்தால், அதன் தொடர் விளைவே தன்மான வீழ்ச்சி என்பது புரியும். தலித் முதல் பிராமணர்கள் வரை தத்தம் சாதிகளில் 'பெரிய' மனிதர்களாக வலம் வந்தவர்கள் எல்லாம், கருணாநிதி, ஜெயலலிதா, சசிகலா கால்களில் விழுந்த பின்னரும், 'அதே' செல்வாக்குடன் தத்தம் சாதிகளில் உலா வந்ததே, அந்த தன்மான வீழ்ச்சியின் வெளிப்பாடாகும். அதுவும் 1967க்குப்பின் அறிமுகமான 'திராவிட மனநோயாளிகளின்' தனித்துவ வீழ்ச்சி ஆகும். 
(http://tamilsdirection.blogspot.com/2019/12/normal-0-false-false-false-en-us-x-none.html) 
  

No comments:

Post a Comment