Thursday, March 12, 2020

தமிழ்ப் பகைவர்கள் யார்? (2)

 

தமக்கும், தமது குடும்பத்திற்கும், சமூகத்திற்கும் கேடாகவே வாழ்பவர்கள் யார்?        



'மஸ்கிருத வெறுப்பு' அரசியலில் சிக்கி, உணர்ச்சிபூர்வமாக 'தமிழ் வாழ்க' என்று பயணித்த போக்கானது, எவ்வாறு தமிழ்ப் பகைவர்களை வளர்த்தது? என்று முன்னர் பார்த்தோம். (http://tamilsdirection.blogspot.com/2020/03/normal-0-false-false-false-en-us-x-none_4.html

'பார்ப்பன எதிர்ப்பு, இந்துத்வா எதிர்ப்பு, பெரியார் எதிர்ப்பு, முஸ்லீம் எதிர்ப்பு, வடவர் எதிர்ப்பு, சிங்களர் எதிர்ப்பு' போன்ற இன்னும் பல வெறுப்பு அரசியலில் சிக்கி பயணிப்பவர்கள் எல்லாம் தமக்கும், தமது குடும்பத்திற்கும், சமூகத்திற்கும் கேடாகவே வாழ்ந்து வருகிறார்களா? என்ற விவாதத்திற்கான தேவையும் எழுந்துள்ளது.

‘‘திறந்த மனதின்றி, கோபத்துடன் வாழ்பவர்களின் மூளையில், சமூகத்தில் வெளிப்படும் 'சிக்னல்களை' தவறாக புரிந்து கொண்டு, தவறான முடிவுகளுக்கு இட்டுச் செல்லும் வாய்ப்புகள் இருப்பதை, ஆய்வுகள் உணர்த்தியுள்ளன.; 

People with anger disorder wired to misunderstand social cues: New study; 

சமஸ்கிருத மொழியில் உள்ள படைப்புகள் எல்லாம் இந்தியாவில் தமிழர்கள் உள்ளிட்ட பல மொழிகளை தாய்மொழியாகக் கொண்ட புலமையாளர்கள் மட்டுமின்றி கம்போடியா, வியட்நாம் உள்ளிட்டு பல நாடுகளில் வாழ்ந்த புலமையாளர்களால் படைக்கப்பட்டவை ஆகும். அவற்றில் வேதங்களுக்கு ஆதரவான மற்றும் எதிரான படைப்புகளும் உள்ளன. அவை மட்டுமின்றி அறிவியல், மருத்துவம் உள்ளிட்ட பலதுறைகளிலும் சமஸ்கிருதத்தில் படைப்புகள் உள்ளன. காலனி ஆட்சிக்கு முன் பழந்தமிழ் இலக்கியங்களில் சமஸ்கிருத எதிர்ப்பு தொடர்பான சான்றுகள் எதுவும் என் கண்ணில் படவில்லை. மாறாக தமிழ் இசைக் கற்றலில் சமஸ்கிருதம் துணை புரிந்து வருவதையும் நான் எனது ஆய்வுகள் மூலமாக வெளிப்படுத்தி உள்ளேன்.

மேற்குறிப்பிட்ட பின்னணியில், தமது அறிவு வரை எல்லைகள் (intellectual limitations) பற்றிய புரிதலின்றி, .வெ.ரா அவர்கள் முன்னெடுத்து, பின் திராவிட பொதுவாழ்வு வியாபாரிகளால் வளர்க்கப்பட்ட சமஸ்கிருத வெறுப்பு அரசியலானது, எவ்வாறு தமிழுக்குக் கேடானது? என்பதை முந்தையப் பதிவில் பார்த்தோம்.

திராவிட பொதுவாழ்வு வியாபார நலன்களுக்கு உதவுபவர்களுக்கே, எளிதில் மீடியா வெளிச்சம் கிடைக்கும்;

என்ற திசையில் தமிழ்நாடு பயணிக்கிறது.

மீடியா வெளிச்சத்தில் வெளிப்படையாக 'பாராட்டு, புகழ்' போதையில் வலம் வருபவர்களை விட, மீடியா வெளிச்சத்திற்கு வராமல், பாராட்டு, புகழ் உள்ளிட்ட போதைகளில் சிக்காமல்;

அடி ஓட்டத்தில் (under current) பயணிப்பவர்களின் முயற்சிகளே, சமூக அரசியல் மாற்றங்களில் தீர்மானகரமான (Decisive) செல்வாக்கு செலுத்துகின்றன.’ என்பதையும்;

அவ்வாறு கடந்த சுமார் 30 வருடங்களுக்கும் மேலாக, தமிழ்நாடு பயணித்த வந்த போக்கில், தமிழக சட்ட மன்றத்தில் நிறைவேறிய ' கச்சத் தீவு' தொடர்பான தீர்மானம் உள்ளிட்டு, நான் மீடியா வெளிச்சத்திற்குள் வராமல் பங்களித்த பலவற்றில் சிலவற்றை குறிப்பிட்டும்;

ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்

புலமையாளர்களாக இருந்தாலும் வெறுப்பு அரசியலில் சிக்கிய பின், அவர்கள் பதர்களாக மாறுவதைத் தவிர்க்க முடியாது;

என்பதற்கு சான்றாகவும் பலர் நம்மிடையே வாழத் தொடங்கியுள்ளார்கள்.

நமது மூளை ஆனது,  கணினி செயலாற்றி (processor)  போன்றுள்ள ஒரு மனித செயலாற்றி ஆகும். நமது மூளை என்னும் செயலாற்றியானது,  உள்ளார்ந்த ஈடுபாடுகள்(passions), அன்பு, லாபநட்ட நோக்கில்லாத சேவை போன்ற ஆக்கபூர்வ உணர்வுகளில் (Positive feelings)  செயல்படும்போது, நாம் ஒரு ஆக்கபூர்வ அலையியற்றி  (Positive Oscillator) போல் வாழ்வோம். மாறாக சமூக ஒப்பீடு நோயில் சிக்கி, ஏமாற்றம், கோபம், வெறுப்பு, வஞ்சம், பழி வாங்கல், சுய அனுதாபம், போன்ற எதிர் உணர்வுகளில் செயல்படும்போது, நாம் ஒரு அழிவுபூர்வ அலையியற்றி  (Negative Oscillator) போல் வாழ்வோம். நேர் உணர்வுகள் (Positive Feelings)  செயல்பாட்டில் மூளை இருக்கும்போது,  நோய்கள் நம்மை அண்டாது. எதிர் உணர்வுகள் (Negative Feelings) செயல்பாட்டில் மூளை இருக்கும்போது, நோய்கள் நம்மை தாக்கும்.
 
ஓரு அழிவுபூர்வ அலையியற்றியான நபர், தமது சமுக வட்டத்தில் ஒப்பீடு நோயைப் பரப்பும், நோய்க்கிருமியாகி விடுவார். அவரது சமூக வட்டத்தில் இயல்போடு ஒட்டிய உள்ளார்ந்த ஈடுபாடுகளுடன் வாழ்பவர்கள், அவரை விட்டு விலகி விடுவார்கள். அதன் விளைவாக, அவரது சமூக வட்டமே ஒப்பீடு நோயில் சிக்கிய, 'எந்த வழியிலும்' பணம் சம்பாதிக்க முயலும்  வட்டமாகி , சமூகத்திற்கே கேடாக அமையவும் வாய்ப்புண்டு

இசை ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கு முன், எனது ஆற்றலையும் நேரத்தையும் ஈர்த்த ஒரு ஆய்வுப்புலமாக கிர்லியன் ஒளிர்ப்பு' (Kirlian glow: https://en.wikipedia.org/wiki/Kirlian_photography) இருந்தது. இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் அதன் பெயரில் ஏமாற்றுப் பேர்வழிகள் இருந்ததையும் அனுபவபூர்வமாக அறிவேன். ஆனால் ஒவ்வொரு மனிதரைச் சுற்றியும் மில்லி வோல்ட் அளவுக்கு மின் இயக்கப்புலம்(electro-dynamic field) இருக்கிறது. அதனை பரிசோதனை மூலமாக அறிய விரும்புபவர்களின் பார்வைக்கு:

மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இயற்பியல் (Physics) சோதனைக்கூடங்களில் நுண்நுட்ப அலைவுச்சுருள் பாலிஸ்டிக் கால்வனோமீட்டர் (Moving Coil Ballistic Galvanometer)  இருக்கும்.

நான் பேராசிரியராக பணியாற்றிய காலங்களில், அக்கருவியைப் பயன்படுத்தும் பரிசோதனைகளைத் துவங்கும் முன், பேட்டரி இணைப்பு தராமல், அக்கருவியின் இரு மின்முனைகளையும் எனது இரு கை விரல்கள் மூலமாக தொடுவேன். அப்போது அக்கருவியின் அளவுகோலில் உள்ள ஒளிக்காட்டி ஓரிரு செ.மீ தூரம் நகர்ந்து திரும்பும். பின் எனது மாணவர்கள் ஒவ்வொருவரையும் அவ்வாறு செய்யச் சொல்லுவேன். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அளவில் நகரும். அதன் மூலமாக நமது உடலில் மில்லி வோல்ட் அளவில் மின்புலம் இருப்பது தெளிவானது.

அண்டத்தில் உயிருள்ள, உயிரற்ற பொருட்களில் உள்ள அணுக்களும் (atoms) மூலக்கூறுகளும் (molecules), பலவகை அதிர்வுகளுக்கு உள்ளாகி இருப்பதையும், எனவே ஒவ்வொரு பொருளைச் சுற்றியும் அதிர்வுப்புலம் (vibration field)  இருக்க வாய்ப்புள்ளதையும் ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்.

எதிர்பாராத இன்ப அதிர்ச்சி காரணமாக, சில நேரங்களில் நம்மைச் சுற்றியுள்ள முன்பின் தெரியாதவர்கள் கூட பலன் பெறும் அளவுக்கு நம் நம்மைச் சுற்றி மகிழ்ச்சியைப் பரப்பும் மனித அலையியற்றிகளாக எவ்வாறு செயல்படுவோம்? என்பதை ஏற்கனவே விளக்கியுள்ளேன்

When you are extremely happy due to unforeseen positive development like winning a gold medal or birth of a child in normal delivery, etc, your face and body language will radiate so much happiness that even strangers (even if they were in dull mood) around you (who may not know you or the reason) can sensitize your happiness and feels energized partly reflecting in their face and body language.; 
 
சில நேரங்களில் முன்பின் தெரியாத மனிதர்கள் அருகில் இருக்கும் போது, நாம் சொற்களால் விளக்கமுடியாத அசெளகரியத்திற்கு உள்ளாவோம்.

ஒரு மனிதரின் மூளையானது அன்பு மகிழ்ச்சி போன்ற நேர் (Positive) உணர்வுகளின் சரணாலயமாக இருக்கும்பொழுது, அவர் தம்மைச்சுற்றியுள்ளவர்களுக்கும் அவற்றைப் பரப்பும் நேர் மனித அலையியற்றியாக (Positive Human Oscillator) இருப்பார்.

ஒரு மனிதரின் மூளையானது வெறுப்பு கோபம் போன்ற எதிர் (Negative) உணர்வுகளின் 'சரணாலயமாக'(?) இருக்கும் பொழுது, அவர் தம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கும் அந்த எதிர் உணர்வுகளைப் பரப்பும் எதிர் மனித அலையியற்றியாக (Negative Human Oscillator) இருப்பார்.

‘'பார்ப்பன எதிர்ப்பு, இந்துத்வா எதிர்ப்பு, பெரியார் எதிர்ப்பு, முஸ்லீம் எதிர்ப்பு, வடவர் எதிர்ப்பு, சிங்களர் எதிர்ப்பு' போன்ற பலவித, எதிர் (Negative) உணர்வுபூர்வ(emotions) போக்குகளுக்கு அடிமைப்பட்ட மனிதர்களும், அவர்களின் ஆதரவாளர்களும் பலவித உடல்/மன நோய்களுக்கு உட்பட்டு வாழ்ந்து, சமூக உறவுகளையும் கெடுத்து, தமிழர்களின் உயிரணுக்களிலும் (genes) அதைப் பதிவு செய்து, இனி வரும் பரம்பரையையும் கெடுப்பவர்கள் என்பதையும், திறந்த மனதுடன், அறிவுபூர்வமாக நேர் (Positive) உணர்வுகளுடன் வாழ்பவர்கள் அதற்கு எதிரான ஆக்கபூர்வமீட்பு உணர்வுகளை தமிழர்களின் உயிரணுக்களில் பதிவு செயவதையும், உலக ஆய்வுகள் உணர்த்தியுள்ளன

'சமஸ்கிருத எதிர்ப்பு' என்ற பெயரில் அறிவுபூர்வ அணுகுமுறையில் இருந்து தடம் புரண்டு, உணர்ச்சிபூர்வ முட்டாள்த்தனமாக தமிழையும், தமிழ் இசையையும் உயர்த்திப் பேசிய போக்கானது, எவ்வாறு தமிழின், தமிழ் இசையின் வளர்ச்சிக்குக் கேடானது? என்பதை ஏற்கனவே விளக்கியுள்ளேன்

இதில் இன்னொரு வியப்பூட்டும் அதிசயத்தையும் நான் அனுபவித்து வருகிறேன்

'சமஸ்கிருத எதிர்ப்பு' என்ற பெயரில் அறிவுபூர்வ அணுகுமுறையில் இருந்து தடம் புரண்டு, உணர்ச்சிபூர்வமாக பயணிப்பவர்களையும் அவர்களை ஊக்குவிக்கும் அமைப்புகளையும் என்னால் இயன்ற அளவுக்கு தீண்டாமைக்கு உட்படுத்தியே நான் பல வருடங்களாக பயணித்து வருகிறேன்.

வெறுப்பு அரசியல் பேர்வழிகளை எல்லாம் ஒதுக்கி, நேர் மனித அலையியற்றியான மனிதர்களையே, இயன்றவரை நமது சமூக வட்டத்தில் அனுமதித்து வாழும் போது;

கீழ்வரும் மேற்கோளின்படி, அண்டமே நமது வாழ்வின் கூட்டாளியாகப் பயணிப்பதை, சொற்களால் விவரிக்கமுடியாத வகையில் உணர முடியும்.

“And, when you want something, all the universe conspires in helping you to achieve it.”
― Paulo Coelho, The Alchemist

இன்று எனதளவில் திட்டமிடாமலேயே வெளிப்பட்டவை தான், இசைத்தகவல் தொழில் நுட்பத் துறையில் (Music Information Technology-MIT) உலக அளவில் பிரமிப்பூட்டும் கண்டுபிடிப்புகள் ஆகும். (http://drvee.in/) அவை மூலமாக, மேற்குறிப்பிட்டதை நான் அனுபவித்து வருகிறேன்.

தமிழ் இலக்கியங்களை எல்லாம் 'மலமாக' இன்றும் பார்க்கும் 'பெரியார்' ஆதரவாளர்களுக்கு, நான் 'அறிவுபூர்வ இடிப்பாராக' பயணித்து, எனது ஆய்வுகளுக்கு 'அறிவுபூர்வ இடிப்பாராக' உள்ளவர்களையே மதித்து, என்னை வளர்த்துக் கொண்டு வருவதும், எனது ஆய்வுகளின் வெற்றிக்கான இரகசியங்களில் அடங்கும்.   

தமது குடும்பப் பிள்ளைகளை குறைந்த பட்சம் அடிப்படைக் கல்வி வரையிலாவது தமிழ்வழிக்கல்வியில் படிக்க வைக்காமல், ஆங்கில வழிக் கல்வியில், படிக்க வைத்தவர்களில், 'தமிழ்ப்பற்றாளர்களாக' பொது அரங்கில் வலம் வருவபவர்களை அடையாளம் கண்ட பின்னர், எனது சமூக வட்டத்திலிருந்து அவர்களை ஒதுக்கி வாழ்ந்து வருகிறேன்; அவர்கள் தனிப்பட்ட முறையில் என்னை மிகவும் மதித்து பாராட்டினாலும்.

தமிழ்நாட்டில் 'இந்துத்வா எதிர்ப்பு' 'சமூக சோளக்கொல்லை பொம்மை'களாக நான் அடையாளம் காண்கிறேன்;

அவர்களால் தமிழத்துவாவின் வளர்ச்சிக்கானமுயற்சிகள் பாதிக்கப்படுவதால்.

தமிழின் உண்மையான வளர்ச்சியை விரும்புபவர்கள் எல்லாம்;
'இந்துத்வா ஆதரவு' மற்றும் 'இந்துத்வா எதிர்ப்பு முகாம்களில்' பயணித்தாலும்;

அவர்களில் அகச்சீரழிவின்றி, சுயலாப கணக்கின்றி, பயணிப்பவர்கள் எல்லாம் குறைந்த பட்சம் தாய்மொழிவழிக்கல்வி கோரிக்கையிலாவது ஒன்று சேர்ந்து செயல்படவேண்டும்;

என்ற நோக்கில் நான் முயன்று வருகிறேன்: அறிவுபூர்வ விவாதங்களை ஊக்குவித்தும், உணர்ச்சிபூர்வ 'வெறுப்பு அரசியலை' எதிர்த்தும்

No comments:

Post a Comment