Tuesday, June 25, 2019


துக்ளக்ஹிந்தி எதிர்ப்பு - மேலும் சில உண்மைகள்கட்டுரை தொடர்பான விமர்சனம் (2)


'இந்தி எதிர்ப்பு, பிரிவினை, .வெ.ரா, அண்ணா'


'அரை இருட்டில்' உள்ளதகவல்கள் வெளிச்சத்திற்கு வருமா?



"பெரியார் 1965 போராட்டத்தில் எடுத்த நிலை விமர்சனத்துக்குரியதாகவே இருந்து வருகிறது. இது தொடர்பான செய்திகள் படிக்க கிடைப்பது அரிதாகவே உள்ளது." என்பதை பொ.முருகானந்தம் வெளிப்படுத்தியுள்ளார். ( https://tamilsdirection.blogspot.com/2019/06/blog-post_23.html)

'நேருவின் வாக்குறுதி மோசடி என்றும், பிரிவினையே இந்தி திணிப்பிற்கு தீர்வாகும் என்றும், .வெ.ரா அவர்கள் வெளிப்படுத்திய கருத்துக்கள், 'விடுதலை' இதழ்களில் வெளிவந்திருப்பதை நான் படித்திருக்கிறேன். ஆர்வமுள்ளவர்கள், சென்னை பெரியார் திடலில் உள்ள நூலகத்திற்கு சென்று, அதனை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.' என்பதையும், எனது பதிவில் நான் தெரிவித்துள்ளேன்.

1965 இந்தி எதிர்ப்புப் போராட்டம் முதல் சாகும் வரை .வெ.ரா அவர்கள் வெளியிட்ட கருத்துக்களை எல்லாம் தொகுத்து வெளியிட வேண்டிய சமூகக் கடமையானது, 'பெரியார்' கட்சிகளுக்கு இருக்கிறது. அதில் 'ஆனந்த விகடன்' போன்ற இதழ்களில் வெளிவந்த அவரின் பேட்டிகளும் இடம் பெற வேண்டும். அதில் தவறினால், அவர்கள் எல்லாம் 'பெரியார்' .வெ.ரா-வின் நிலைப்பாடுகளை எல்லாம் 'அரை இருட்டில் தள்ளி' பிழைத்த,  'பெரியார்' பொதுவாழ்வு வியாபாரிகளாகவே’, வரலாற்றில் இடம் பெறுவது நிச்சயமாகி விடும்.

காந்தி, பாரதி தொடர்பாக எதுவும் 'அரை இருட்டில்' இல்லை. .வெ.ரா-வின் எழுத்துக்களைத் தொகுக்கும் பணி சுறு சுறுப்பாக துவங்கி மந்தமாகி விட்டதா? அந்த பணி முடிந்திருக்குமானால், .வெ.ரா இன்றும் 'அரை இருட்டில்' சிக்கியுள்ள அவலம் வந்திருக்குமா?

தற்போது இசைத்தகவல் தொழில்நுட்பம் (Music Information Technology) தொடர்புடைய ஆய்வுகளில் ஈடுபட்டு வரும் நான், 'பெரியார்' சிறையிலிருந்து .வெ.ரா அவர்களை மீட்கும் நோக்கில்;

இசை ஆய்வுக்கு முன், சுமார் 30 வருடங்களுக்கு முன் நான் படித்தவைகளை நினைவு கூர்ந்து இது போன்ற கட்டுரைகளை எழுதி வருவதை ஏற்கனவே விளக்கியுள்ளேன்.

பெரியார் 1965 போராட்டத்தில் எடுத்த நிலை விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. எனவே எனது நினைவுக்குறிப்புகளில் இருந்து, .வெ.ராவின் நிலையை நான் கீழ்வருமாறு வெளியிடுகிறேன்; உரிய சான்றுகளின் அடிப்படையில் அறிவுபூர்வமாக மறுப்பதை வரவேற்று.

1.   நேருவின் வாக்குறுதி மோசடி என்பதால், பிரிவினையே இந்தி திணிப்பிற்கு தீர்வாகும்

2.    ஆயுதப் போராட்டம் இன்றி, வன்முறை இன்றி, பிரிவினைக் கோரிக்கை நிறைவேறும் வரையில், தமிழ்நாட்டில் ஆட்சியில் இருப்பவர்கள் 'சமூக நீதி' நோக்கில் ஆட்சி செய்யும் வகையில் அழுத்தம் தர வேண்டும். காலனி ஆட்சியில் ஆங்கிலம் படித்தது எப்படி புத்திசாலித்தனமோ, அது போலவே இந்தியாவில் இந்தியைப் படிப்பதும் தவிர்க்க முடியாதது ஆகும். பிரிவினைக் கோரிக்கையில் இருந்து துண்டித்து இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடத்தியதும், நடத்துவதும் முட்டாள்த்தனமாகும்.

நெருக்கடி கால ஆட்சியில், அன்றைய பிரதமர் இந்திரா காந்தி, திராவிடர் கழகத்தை தடை செய்வது பற்றி பரீசீலித்ததாகவும், 'அந்த' நடவடிக்கையிலிருந்து தப்பிக்க, .வெ.ரா அவர்கள் 'விடுதலை' நாளிதழில் ஓர் அறிக்கை வெளியிட்டதாகவும், 'அந்த' அறிக்கையில் பிரிவினை கோரிக்கை தொடர்பான பிரச்சினைகளைக் குறிப்பிட்டு, அந்த பிரச்சினைகள் தீர்ந்து விட்டால், 'பிரிவினை தேவையில்லை' என்று கருத்து வெளியிட்டதாகவும், தஞ்சை இரத்தினகிரி என்னிடம் தெரிவித்தார். அந்த அறிக்கையை நான் படிக்கவில்லை. அதில் இந்திப் பிரச்சினை இடம் பெற்றதா என்பதும் எனக்கு தெரியாது. ஆர்வமுள்ளவர்கள் சென்னை பெரியார் திடலில் உள்ள நூலகத்திற்குச் சென்று அதனைப் படிக்கலாம்.

எனவே, இந்தி தொடர்பாகவும், பிரிவினைக் கோரிக்கை தொடர்பாகவும், .வெ.ரா அவர்கள் கடைசி வரையில் வெளியிட்ட, 'அரை இருட்டில்உள்ள தகவல்கள் எல்லாம் வெளிச்சத்திற்கு வந்து, அறிவுபூர்வமாக விவாதிக்க வேண்டிய நேரமும் வந்து விட்டதாக கருதுகிறேன்.

அது போல, 1967 முதல் அண்ணா தொடர்பாக 'அரை இருட்டில்' உள்ளதகவல்கள் எல்லாம் வெளிச்சத்திற்கு வந்து, அறிவுபூர்வமாக விவாதிக்க வேண்டிய நேரமும் வந்து விட்டதாக கருதுகிறேன்.

கோவா விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றதற்காக, ஆர்.எஸ்.எஸ் நபரான மோகன் ரானடே, கோவா விடுதலைக்குப் பின் 14 வருடங்கள் போர்ச்சுகீசிய நாட்டின் சிறையில் இருந்தார். வாஜ்பாய் போன்ற தலைவர்களும், இந்திய அரசும் அவருடைய விடுதலைக்கு மேற்கொண்ட முயற்சிகள் வெற்றி பெறாத நிலையில், தமிழக முதல்வராக இருந்த அண்ணா போப்பைச் சந்தித்த போது, முன்வைத்த கோரிக்கையின் மூலமாக அந்த விடுதலை சாத்தியமாகி, விடுதலையாகி வாழ்ந்து, 90 வயதில் மோகன் ரானடே அண்மையில் மறைந்தார்.

மேற்குறிப்பிட்ட விடுதலை தொடர்பாக, 1967-இல் தமிழக முதல்வராக அண்ணா ஆன பின், அவருக்கும், ஆர்.எஸ்.எஸ் நபரான ஏக்நாத் ரானடேக்கும் இடையில் நடந்த சந்திப்புகள் எல்லாம், கன்னியாகுமரியில் விவேகானந்தர் நினைவகம் தொடர்பானதடைகளைக் கடந்து, ஏக்நாத் ரானடே தமது முயற்சியில் வெற்றி பெற, எந்த அளவுக்கு உதவியது?  அது தொடர்பாக தி.மு.க-வில் அண்ணாவின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இடம் பெற்றவர்களில், ஏன் அன்றைய அமைச்சர் கலைஞர் கருணாநிதி இடம் பெறவில்லை? முதல்வரான அண்ணா வாடிகன் சென்று போப்பை சந்தித்த போது; கோவா விடுதலை போராட்டத்தின் போது, போர்ச்சிகீசிய அரசால் சிறைபிடிக்கப்பட்டு சிறையில் இருந்த ஆர்.எஸ்.எஸ் காரரான மோகன் ரானடேயை சிறையிலிருந்து விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்தது ஏன்?

உடல்நலக்குறைவில் சிக்காமல் அண்ணா நல்ல ஆரோக்கியத்துடன் முதல்வராக தொடர்ந்திருந்தால்;

அண்ணாவுக்கும் ஏக்நாத் ரானடேக்கும் இடையில் மலர்ந்திருந்த நல்லுறவானது;

மோகன் ரானடேயின் விடுதலையின் தொடர்ச்சியாக;

சுயலாப நோக்கின்றி 'காலதேச வர்த்தமான மாற்றங்களுக்கு', திராவிட அரசியலை வளர்க்க விரும்பிய போக்கில்;

திராவிட அரசியலுக்கும் ஆர்.எஸ்.எஸ்ஸிக்கும் இடையில் தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும் பலன்கள் விளைந்திருக்க கூடிய நல்லுறவாக வளர்ந்திருக்கும்;

என்பது எனது ஆய்வு முடிவாகும்.

முதல்வராக இருந்த அண்ணா‌ எந்த அடிப்படையில் ஆர்.எஸ்.எஸ் நபரான ஏக் நாத் ரானடேயின் கோரிக்கையை ஏற்று, கன்னியாகுமரியில் விவேகானந்தர் நினைவகம் தொடர்பான தடைகள் நீங்க உதவினார்? போர்ச்சுகீய நாட்டின் சிறையில் இருந்த ஆர்.எஸ்.எஸ் நபர் மோகன் ரானடே விடுதலையாக உதவினார்? எனவே, கொள்கை வேறுபாடுகளுக்கு அப்பால், சரியான பிரச்சினைகளில் ஒன்று சேர்ந்து செயல்படுவதற்கு அண்ணா முன்னுதாரணமானார். அதற்கு முன்னர், இந்திய விடுதலைக்கு முன், .வெ.ராவின் திராவிட நாடு பிரிவினைக் கோரிக்கையை  ராஜாஜி பகிரங்கமாக ஆதரித்ததும் அந்த வகையில் தான். இந்திய விடுதலைக்குப் பின், அது சாத்தியமில்லை என்பதை உணர்ந்து, அதே ஒற்றுமையில் ராஜாஜியும், .வெ.ராவும் பயணித்திருந்தால், தமிழும், தமிழ்நாடும் சீரழிந்திருக்காது.

.வெ.ராவிற்கும் ராஜாஜிக்கும் இடையில் இருந்த தனிப்பட்ட நட்பானது சாகும் வரை நீடித்ததைப் போலவே, பொதுவாழ்விலும் நீடித்திருந்தால், பரிமாற்ற முறையில் இருவரிடமும் வெளிப்பட்டிருந்த குறைபாடுகள் நீங்கி, திராவிடக்கட்சிகளின் ஆட்சிகளில் தமிழ்நாடு சிக்கியிருக்காது; தமிழ்வழிக்கல்வியானது மரணப்பயணத்தில் சிக்கும் அவலமும் நிகழ்ந்திருக்காது; இந்தியா மட்டுமின்றி, உலகே வியக்கும் அளவுக்கு முன்னணி மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்திருக்கும்;

என்பதும் எனது ஆய்வு முடிவாகும்
(http://tamilsdirection.blogspot.com/2018/03/normal-0-false-false-false-en-us-x-none_5.html )

பொது அரங்கில் வெளிப்படும் முரண்பாடுகள் பற்றிய புரிதல் இல்லாதவர்களுக்கு எல்லாம், ராஜாஜி, .வெ.ரா, அண்ணா ஆகியோரின் மேற்குறிப்பிட்ட நிலைப்பாடுகளை குறைகளாகக் கருதவும் வாய்ப்புள்ளது.

முரண்பாடுகள்(Contradictions) பற்றிய புரிதலின்றி, 'இந்து, முஸ்லீம், தலித், பெரியாரிஸ்ட், மார்க்சிஸ்ட்' போன்ற இன்னும் பல,‌  புற 'லேபிள்களை' வைத்து, அந்த 'லேபிள்'களுக்குள் உள்ள ஆக்கபூர்வ/அழிவுபூர்வ முரண்பாடுகள் (இயக்கத் தன்மையிலான சமூக தள விளைவு - dynamic social polarization) பற்றிய புரிதலின்றி, எந்த ஒரு மனிதரையும், கட்சியையும் விரும்பி/வெறுத்து வாழ்பவர்கள் எல்லாம்மனித எந்திரர்கள்ஆவர். நான் சந்தித்த சாமான்யர்களிடம், அந்த 'மனித எந்திரர்' போக்கு வெளிப்பட்டதில்லை. (‘கருப்பு, சிவப்பு, காவி அணிகளிடையே, அறிவுபூர்வ விவாதத்திற்கு; ‘துக்ளக்மூலமாக கனியும் சமூக சூழல்’; 

இந்துத்வா ஆதரவு மற்றும் எதிர்ப்பு முகாம்களில் சுயலாப நோக்கற்ற சமூக அக்கறையுள்ள நேர்மையாளர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கிடையே அறிவுபூர்வ விவாதம் நடைபெறுவதைக் கெடுத்து வந்த உணர்ச்சிபூர்வ பொதுவாழ்வு வியாபாரிகள் எல்லாம், மக்கள் மன்றத்தில் பலகீனமாகி வருகிறார்கள். எனவே தமிழையும், தமிழ்நாட்டையும் மீட்க, 'அந்த' அறிவுபூர்வ விவாதத்தினைத் தூண்டும் நோக்கில், கீழ்வரும் பதிவினை வெளியிட்டுள்ளேன்.

'தமிழ்நாடு எந்த அளவுக்கு, 'வரைவில் மகளிர் நாடாக' மாறி வருகிறது? என்பதற்கு சான்றாக;

தேர்தல் பிரச்சாரத்தில், 'அடுத்த கொள்ளைக்கான முதலீடாக' வாக்குகளை விலைக்கு வாங்க வேட்பாளர்கள் செய்து வரும் முயற்சிகளும், தேர்தல் கமிசன் கெடுபிடிகளை மீறி எப்போது பணம் கைக்கு வரும்? என்று ஏங்கும் வாக்காளர்களும், கடந்த தேர்தல்களில் கைப்பற்றப்பட்ட பணத்தை ஊழல் வழிகளில் வெற்றிகரமாக மீட்ட 'செல்வாக்கான'(?) நபர்களும், விடையளித்து வருகிறார்கள். தமிழ்நாடு அவ்வாறு 'வரைவில் மகளிர் நாடாக' மாறி வருவது உண்மையானால், அதற்கு காரணமானமூன்று முக்கிய குற்றவாளிகள் ராஜாஜி, .வெ.ரா, அண்ணா என்பதும்;

'பிணமாக' வாழும் தமிழர்களின், 'சமூக கிருமியாக' வாழும் தமிழர்களின், 'சமூக முதுகெலும்பு' முறிந்த 'யோக்கிய' தமிழர்களின் முக்கூட்டணியினர் எல்லாம் 'பங்காளிக் குற்றவாளிகள்' என்பதும்;

 எனது ஆய்வு முடிவாகும்.
(‘நாம் வாழும் வாழ்க்கையானது, தன்மானமுள்ள மனித வாழ்க்கையா? (3); ராஜாஜி, .வெ.ரா, அண்ணா மூன்று முக்கிய குற்றவாளிகள்;  

தமிழ்நாட்டில் சிறிய கட்சிகள் முதல், பெரிய கட்சிகள் வரை, சுயலாப ஆதாய அடிப்படையில் பயணிக்கும் தொண்டர்கள், தலைவர்கள் பெரும்பான்மையாக இருக்கிறார்களா? அரசியல் கட்சிகள் மீது நம்பிக்கையற்ற மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறதா? தமது கொள்கைகளையும், நிலைப்பாடுகளையும் அறிவுபூர்வமாக விமர்சிக்கும் போக்கு ஊக்குவிக்கப்படுகிறதா? அல்லது உணர்ச்சிபூர்வ எதிர்ப்புகளும், வன்முறைகளும் ஊக்குவிக்கப்படுகின்றனவா? தமக்கு பிடிக்காத கட்சிகளையும், அமைப்புகளையும் ஒட்டு மொத்தமாக, வெறுத்து ஒதுக்கும் உணர்ச்சிபூர்வ அடிமைகள் அல்லது 'பிழைப்புக்கு வழி'யாக கொண்டவர்கள் அழிவுபூர்வ போக்கிற்கு பங்களிப்பு வழங்குகிறார்களா? ஆக்கபூர்வ அறிவுபூர்வ போக்கிற்கு பங்களிப்பு வழங்குகிறார்களா?

மேற்குறிப்பிட்ட கேள்விகளின் அடிப்படையில், தமிழ்நாட்டில் இன்று செயல்பாட்டில் உள்ள சமூக இயக்க ஆற்றல்களையும் (Social Kinetic Energy), சமூக நிலை ஆற்றல்களையும் (social Potential Energy) எவை, எவை, அழிவுபூர்வ போக்கிற்கு பங்களிப்பு வழங்குபவை? எவையெவை ஆக்கபூர்வ போக்கிற்கு பங்களிப்பு வழங்குபவை?

என்று பிரித்து பார்க்க, நமக்கு தெரியவில்லையென்றால்;

நாம் எவ்வளவு உண்மையாக, நேர்மையாக, தியாகத்துடன் வாழ்ந்தாலும், நமது சமூக ஆற்றலை தத்தம் சுயலாப நோக்கிற்கு 'களவாடும்', சமூக கிருமிகளின் 'வெற்றி பயணத்தை' தடுக்க முடியுமா

1944க்கு முன் தமிழ்நாட்டில் தலைவர்களின், சிலைகளின், பிம்ப வழிபாடு இருந்ததில்லை. எந்த கொள்கையாளராக இருந்தாலும், தலைவராக இருந்தாலும், தொண்டராக இருந்தாலும், அவரிடம் வெளிப்பட்ட உண்மை, நேர்மை, புலமை போன்றவற்றின் அடிப்படையிலேயே மதிக்கப்பட்டார்கள்; சுயமரியாதை இயக்கத்தில் இருந்த பெரும்பாலோர் அவ்வாறே ஆத்திகர்களாலும் மதிக்கப்பட்டார்கள்.

'பெரியார்' கட்சிகளாக இருந்தாலும், இந்துத்வா கட்சிகளாக இருந்தாலும், உண்மையாகவும், நேர்மையாகவும், சுயலாப கணக்கின்றி வாழ்ந்தவர்களும் வாழ்பவர்களும் திக்கத்தக்கவர்களே ஆவர்.

மேலே குறிப்பிட்ட 'இரட்டை அளவுகோல்' சமூக நோயிலும், அதன் தொடர்ச்சியான 'கருத்து கறுப்பு வெள்ளை நோயிலும்', நாம் சிக்காமல் பயணிக்கும் போது, அத்தகையோரை நாம் மதிப்பதும், நம்மையும் அத்தகையோர் மதிப்பதும், ஆக்கபூர்வமான சமூக தளவிளைவினை (Social Polarization) தமிழ்நாட்டில் ஏற்படுத்தும்.

தமது நிலைப்பாட்டிற்கு எதிரான கட்சிகளை, கட்சிகளில் உள்ள நபர்களை, நடத்தும் இதழ்களை 'எதிரியாக' அணுகுவது 'வெறுப்பு சமூக நோயின்' அறிகுறியாகும். 1944க்குப் பின், அது சமூக நோயாக வளர்ந்து, இன்று அனைத்து கட்சிகளிலும் அத்தகைய நோயாளிகள் இடம் பெறும் அளவுக்கு உச்சத்தில் உள்ளது: அடுத்த கட்டமாக வீழ்ச்சியையே இயற்கையின் போக்கில் எதிர்நோக்கி.

எனவே 'இந்தி எதிர்ப்பு, பிரிவினை, .வெ.ரா, அண்ணா' தொடர்பாக, 'அரை இருட்டில்' உள்ளதகவல்கள் எல்லாம் வெளிச்சத்திற்கு வந்து, அறிவுபூர்வ விவாதங்கள் தொடங்கும் காலம் நெருங்கி விட்டது; தமிழின், தமிழ்நாட்டின் மீட்சியை நோக்கி.


Note:

Tamil scholarship, in the digital age, is becoming inter-disciplinary, with the scope for developing new marketable products. With the introduction of spell check, grammar check, and search options of Lexicon and the commentaries, Tamil literate scholars in science and technology, bypassing the duration to acquire the traditional Tamil scholarship, could subject the ancient Tamil texts to inter-disciplinary research.

'DECODING ANCIENT TAMIL TEXTS – THE PITFALLS IN THE STUDY & TRANSLATION'

https://www.amazon.com/dp/B07T8QV6RT/ref=sr_1_1?keywords=DECODING+ANCIENT+TAMIL+TEXTS+%E2%80%93+THE+PITFALLS+IN+THE+STUDY+%26+TRANSLATION&qid=1561275540&s=digital-text&sr=1-1

No comments:

Post a Comment