Wednesday, May 8, 2019

வித்தியாசமான விறுவிறுப்பான (interesting) அனுபவங்கள் (2) 



முதுகுக்குப் பின்னால் குறை சொல்லும் 'வாழ்வியல்(?) புத்திசாலி முட்டாள்கள்'



'தி. தலைவர் கி.வீரமணியின் ஒற்றர் நீங்கள்என்று என்னைப் பற்றி கருதியிருந்ததாக;

நான் திரு.கி.வீரமணியை விட்டு விலகிய பின், திருச்சி காஜாமலை காலனியில் வசித்த போது, எனது வீட்டில் என்னை சந்தித்த, தற்போது தி.மு.கவில் இருக்கும் திருச்சி செல்வேந்திரன் தெரிவித்தார். அந்த தகவலே, கீழ்வரும் எனது ஐயத்திற்கு விளக்கம் தந்தது.

1990களில், பெரியார் இயக்க முக்கிய நபர்களான, தஞ்சை இரத்தினகிரி, கோவை.இராமகிருட்டிணன் உள்ளிட்ட இன்னும் பலர், எனக்கு தெரிவிக்காமல், ஒரு ஆலோசனை கூட்டம் நடத்தியபின், திரு.கி.வீரமணியின் ஒழுங்கு நடவடிக்கை மூலம் இயக்கத்தை  விட்டு வெளியேற்றப்பட்டார்கள். அதன்பின், அந்த பிரச்சினைக்கு சம்பந்தமேயில்லாத‌,  நான் தான் அவர்களின் வெளியேற்றத்திற்கு காரணம் என்று, தமிழ்நாட்டிலுள்ள 'பெரியார்' ஆதரவாளர்கள் மத்தியில், என்ன அடிப்படையில், பரப்புரைத்தார்கள்? என்ற கேள்விக்கு, மேற்குறிப்பிட்டது விளக்கமாக அமைந்தது.' என்பதனை ஏற்கனவே வெளிப்படுத்தியுள்ளேன்.

'அந்த' பரப்புரையானது, எவ்வாறு நிகழ்ந்தது? என்பதை கீழ்வரும் சிறிய விளக்கமானது தெளிவு படுத்தும்.

நமது குடும்பம், பணியாற்றும் இடம், விரும்பி இணைந்துள்ள கட்சி போன்று நமது வாழ்வில் தொடர்புள்ள அமைப்புகள் எல்லாம், எந்த அளவுக்கு உயர்ந்த மதிப்பீடுகளில் (Values) அமைந்துள்ளனவோ, 'அந்த' அளவுக்கு நமது வாழ்வு உயரும்.

அதற்கு எதிராக மிகவும் தாழ்ந்த மதிப்பீடுகளில் உள்ள அமைப்புகளில் நாம் இருந்தால், 'நமது யோக்கியதை'க்கு ஏற்ப, அந்தந்த அமைப்புகளின் 'சீரழிவு வளர்ச்சி' திசையில், நாமும் வளர முடியும்; அல்லது வெளியேற்றப்பட முடியும்; அல்லது வெளியேற முடியும்.

நானும் சரி, எனது நண்பர்களும் சரி, மேற்குறிப்பிட்ட முதல் வகையிலேயே இன்று வரை வாழ்ந்து வருகிறோம். அதன் காரணமாக, நான் பணியாற்றிய இடங்களில், பணியாற்றும் இடங்களில் எந்த அளவுக்கு எனக்கு மதிப்பு இருந்தது? என்பதை ஆர்வமுள்ளவர்கள் ஆராய்ந்து அறியலாம்.

அது போலவே, நான் விரும்பி இணைந்திருந்த 'தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம்', கி.வீரமணியைப் புரவலராகக் கொண்டிருந்த 'பகுத்தறிவாளர் கழகம்' போன்ற அமைப்புகளில் பணியாற்றிய இடங்களில், எந்த அளவுக்கு எனக்கு மதிப்பு இருந்தது? என்பதை ஆர்வமுள்ளவர்கள் ஆராய்ந்து அறியலாம்.

கட்சி என்பதானது மனிதர்களை உள்ளடக்கியது. மனிதன் தனது தேவைகளை (Needs) உணர்ந்து, மனதில் அந்த தேவைகள் எல்லாம் ஈடுபாடுகளாக (Interests) மாறிய பின், அந்த ஈடுபாடுகள் மனிதனின் செயலைத் தூண்டுகின்றன‌. தமது நலனை விட கட்சி நலனே முக்கியம் என்று கருதுபவர்கள் மிகப் பெரும்பான்மையாக இருந்து, ஒரு கட்சி உருவாகி வளரும்போதே, எளிதில் சுயநலத்திற்கு வளைக்க முடியாத சட்ட திட்டங்களுடனும், உரிய தகுதி, திறமை அடிப்படைகளிலேயே பொறுப்புகளுடனும், கட்சி கட்டமைத்தலானது, உரிய வலுவான அடித்தளத்துடன் வலிமையாக வளரும். அதற்கு மாறாக, தலைவரின் விருப்பு, வெறுப்புகளுக்கு ஏற்ற வகையில் பயணிக்கும் கட்சிகள் எல்லாம், அடித்தளமின்றி, தலைவரின் வீழ்ச்சி காரணமாகவோ, எதிர்பாராத சமூக மாற்றங்கள் காரணமாகவோ, எந்த நேரத்திலும் மரணிக்கும் ஆபத்தில் உள்ள கட்சிகள் ஆகும்.(‘நிறுவன கட்டமைத்தல்(System Building) பலகீனமாதலும், தேச கட்டுமான(Nation Building) சீர்குலைவும் (2); http://tamilsdirection.blogspot.com/2018/02/normal-0-false-false-false-en-us-x-none_8.html)

தமிழ்நாட்டில் கட்சித் தலைவர்களுக்கு மிக நெருக்கமாக இருந்து 'பலன்கள்'(?) அனுபவித்துக் கொண்டு, தமது நம்பிக்கைக்குரிய நெருக்கமான வட்டத்தில், 'அந்த' தலைவர்களை கேலி கிண்டல் செய்து வருவதையும் ஏற்கனவே விளக்கியுள்ளேன். 'ஆதாய அரசியல்' பலத்தில் பயணிக்கும் கட்சிகளில், அந்த போக்கு இல்லாமல் இருந்தால் தான் வியப்பாகும். அமாவாசைகள் படை சூழ வாழும் தலைவர்கள் எல்லாம், அந்த அமாவாசைகளில் யார், யார், எப்போது, எப்படி முதுகில் குத்துவார்? என்ற அச்சத்துடனே, சாகும் வரை வாழும் வாழ்க்கை எல்லாம் ஒரு வாழ்க்கையா, எத்தனை ஆயிரம் கோடி கொள்ளையடித்த சொத்து இருந்தாலும் ? 
(http://tamilsdirection.blogspot.com/2018/08/normal-0-false-false-false-en-us-x-none_5.html )

'அந்த' அளவுக்கு மதிப்பீடுகளில் (values) சீரழிந்த அத்தகையோர் செல்வாக்குடன் வலம் வரும் சமூகத்தில், கீழ்வரும் முறையில் இறுதிச் சடங்கு நிகழும் வகையில் மரணிப்பதே புண்ணியம் ஆகும்.

புதுக்கோட்டையில் இறுதி சடங்கு நிறைவேற்ற வசதி வாய்ப்புகள் இல்லாத ஏழை/அனாதை மரணம் குறித்த தகவல் கிடைத்தவுடன், 'அந்த' சடங்கை இலவசமாக நிறைவேற்றி வருவதை, சுமார் 10 வருடங்களுக்கு முன்பே நான் அறிவேன். சுயலாபக் கள்வர்களான உற்றமும் சுற்றமும் சூழ, சுயலாபக்கணக்குகளில் ஒரு பகுதியாக மிகுந்த ஆடம்பரத்துடன் நிறைவேறும் இறுதிச் சடங்குகளை விட, முதல்வராக இருந்த ஜெயலலிதாவிற்கு நடந்த இறுதிச் சடங்கை விட, மேற்குறுப்பிட்ட வகையில் 'பலன்' பெறுவதே புண்ணியம், என்பதும் எனது கருத்தாகும். (http://tamilsdirection.blogspot.com/2019/05/normal-0-false-false-false-en-us-x-none.html) ராஜாஜி, .வெ.ரா, அண்ணா ஆகிய  'மூன்று முக்கிய குற்றவாளிகளின் தொண்டுகளின்' விளைவே, 'அந்த' நிலையாகும்.
(https://tamilsdirection.blogspot.com/2019/04/normal-0-false-false-false-en-us-x-none_3.html) 

எம்.ஜி.ஆர் ஆட்சியில், 'பெரியார்' .வெ.ராவின் நூற்றாண்டு விழா கொண்டாடிய  காலக்கட்டத்தில் தான், என்னைப் போன்றவர்கள் 'பெரியார்' இயக்கத்தில் நுழையும் போக்கு அரங்கேறியது. பெரியார் இயக்கத்தில் நுழைந்து, மொழிபெயர்ப்பாளராகவும், கட்டுரையாளராகவும், பேச்சாளராகவும் நான் வளர்ந்து, திரு.கி.வீரமணிக்கு நெருக்கமான பின், அந்த நெருக்கத்தை எனது சுயநலத்திற்கு பயன்படுத்திக் கொள்ளக்கூடாது என்பதில் எச்சரிக்கையுடன் இருந்து, அவர் மீதும், இயக்கத்தின் மீதும் என் பார்வைக்கு வரும் குறைகளை, ஒளிவு மறைவின்றி, அவ்வப்போது மடல்கள் எழுதி, நேரில் கொடுத்து வந்தேன். அம்மடல்கள் சிலவற்றை தஞ்சை இரத்தினகிரியிடமும், பிற்காலத்தில் திருச்சி பெரியார் மையத்தில் இருந்தவர்களிடமும் காண்பித்து நெறிப்படுத்தியதுண்டு; திரு.கி.வீரமணியிடம் கொடுக்கும் முன்.

இவையெல்லாம் அவர் என் மீது மிகுந்த மதிப்பும்,அன்பும் கொள்ள காரணங்களாகின.’ என்பதையும் மேற்குறிப்பிட்ட பதிவில் சுட்டிக்காட்டியிருந்தேன்.

ஆனைமுத்துவின் 3 தொகுப்புகளையும் தஞ்சை இரத்தினகிரியிடம் பெற்று, முழுவதும் ஆழ்ந்து படித்தேன். அந்த காலக் கட்டத்தில் எனக்கு மிகவும் நெருக்கமான நண்பராகவும், தீவிரமான 'பெரியார்' எதிர்ப்பாளராகவும், 'மார்க்சிய', 'இந்திய தேசிய' ஆதரவாளராகவும் பயணித்த பேரா..மார்க்ஸ் எழுப்பிய எதிர்க் கேள்விகளுக்கான விடைகளை, காரல் மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின், மாவோ உள்ளிட்ட இன்னும் பலரின் நூல்களில் மூழ்கி தேடியதானது, என்னை மார்க்சிய‍ - லெனினிய புலமையாளனாக்கியது.

.வெ.ரா அவர்களின் நிலையை, நான் 'சமரசமற்ற பார்ப்பன எதிர்ப்போடு பிணைந்த தனித்தமிழ்நாடு' நிலைப்பாடாக விளங்கி, அந்த திசையில் பயணிக்க தொடங்கினேன்.’ 
(‘நல்லவேளை, பிரியும் ஆபத்திலிருந்து தமிழ்நாடு தப்பித்தது’; http://tamilsdirection.blogspot.com/2017/12/2.html)

1990களில், பெரியார் இயக்க முக்கிய நபர்களான, தஞ்சை இரத்தினகிரி உள்ளிட்டோர், தலைமைக்கு தெரிவிக்காமல் நடத்திய இரகசிய கூட்டத்தில் நான் கலந்து கொள்ளவில்லை என்பது பின்னர் கி.வீரமணிக்கு தெரிந்தது. 'அந்த' முக்கிய நபர்களை இயக்கத்தை விட்டு வெளியேற்றிய பின், அவர் தமிழ்நாடெங்கும் மேற்கொண்டிருந்த சுற்றுப்பயணங்களில், 'அந்த' வெளியேற்றம் தொடர்பாக தமது கட்சியினர் மத்தியில் விளக்கம் கொடுத்த போது, எனது பெயரைக் குறிப்பிட்டு, நான் 'அந்த இரகசிய கூட்டத்தில்' கலந்து கொள்ளவில்லை என்பதைத் தெரிவித்து, என்னையும் பாராட்டியிருக்கிறார். இவையெல்லாம் .வெ.ரா அவர்களின் மிகுந்த நம்பிக்கைக்கு உரிய உதவியாளராக இருந்த புலவர் இமயவரம்பன் என்னிடம் தெரிவித்த தகவல்களாகும்.

அதன்பின் இரத்தினகிரி என்னைச் சந்திக்க விரும்பிய போது, நான் அவர் முகத்தில் முழிக்க விரும்பவில்லை, என்று கடுமையாகவே அஞ்சல் வழியாகவே மடல் அனுப்பினேன். அடுத்த வாரத்தில், எனது வீட்டுக்கதவினைத் தட்டினார், நான் கதவைத் திறந்தவுடன், மலர்ந்த முகத்துடன் 'நண்பரே' உரக்கச் சொல்லியவாறே நுழைந்தார். வேறு வழியின்றி, நான் அவரை வரவேற்றேன்.

பின் நீண்ட இடைவெளிக்குப் பின் 2005-இல் அவரைச் சந்தித்தேன். (குறிப்பு கீழே) முரசொலியில் நெருக்கடிகால கொடுமைகளாக கருணாநிதி எழுதிய 'இன்னா நாற்பது' பட்டியலில் இடம் பெற்ற‌ ப.தண்டபாணியின் 'கட்டாயப்பணி ஓய்வு' அநீதிக்கு எதிராக உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் மூலமாக, தமிழக அரசு அவருக்கு வழங்க வேண்டிய பலன்களை தாமதப்படுத்தியதாலேயே, அவர் வறுமையில் உழன்று மறைந்தார். முதல்வர் கருணாநிதிக்கு நெருக்கமாக இருந்த இரத்தினகிரி மூலமாக, அதற்காக நான் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்ததிலிருந்து, இன்று வரை அவரை நான் சந்திக்கவில்லை. மேற்குறிப்பிட்ட முறையிலும், அவர் இனி என்னை விரும்பினாலும் சந்திக்க முடியாது.    
(http://tamilsdirection.blogspot.com/2019/03/normal-0-false-false-false-en-us-x-none_22.html)

ஈ.வெ.ரா அவர்கள் அறிவுபூர்வ விமர்சனத்தை வரவேற்றிருந்தாலும், அவருக்கு நெருக்கமாக இருந்த தமிழ் அறிஞர்களும், புலமையாளர்களும், திருக்குறள் (448) வழியில் இடிப்பாராக இன்றி, 'இளிப்பாராக' பயணித்தார்கள். (‘'இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்' 'பெரியார்' ஈ.வெ.ராவா?’; http://tamilsdirection.blogspot.com/2017/10/blog-post_10.html) அதன் விளைவாகவே, அவர் தமிழ் வேர்க்கொல்லியானார்.

அது போல, தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு நெருக்கமான இரத்தினகிரி போன்றவர்கள் பயணித்ததாலேயே, தி.மு.க-வானது குடும்ப ‘அறிவியல் ஊழல்’ கட்சியாகி, அதன் தொடர்விளைவாக, இன்னும் மோசமாக, கருணாநிதிக்கு நெருக்கமான நடராஜன் சசிகலா குடும்ப ஊழலில் அ.இ.அ.தி.மு.க கட்சியும் சிக்கியது. அதுவே தமிழ்வழிக்கல்வியின் (எனவே தமிழின்) மரண அபாயத்திற்கு காரணமானது; ஏரிகள், ஆறுகள், மலைகள் உள்ளிட்ட இயற்கை வளங்களும் ஊழல் சுனாமியில் சிக்கும் விளைவில் முடிந்தது.


நேர்மையான மனித உறவில் இருப்பவர்கள் எல்லாம், தமக்கு வேண்டியவருக்கு இடிப்பாராகவே பயணிப்பார்கள்


மேற்குறிப்பிட்டவாறு நான் கி.வீரமணியை தலைவராக ஏற்றுக்கொண்டு பயணித்த காலத்தில் செயல்பட்டது போலவே.

மனித
உறவுகளில் சுயலாப நோக்கிலான உள்நோக்கமின்றி நாம் பழகும் போது, நம்மிடம் பலன்கள் அனுபவித்துக் கொண்டே, நமது முதுகுக்குப் பின்னால், மனசாட்சியின்றி அப்பட்டமான பொய்களை, தமது பக்கம் உள்ள தவறுகளை மறைக்கும் நோக்கில், கட்டவிழ்த்து விடுவார்கள்; பின் கொஞ்சமும் வெட்கமின்றி, அதே சுயலாப நோக்கில், நம்மிடம் உறவையும் தொடர விரும்பும் மனிதர்கள் தமிழ்நாட்டில் இருப்பதை, மேற்குறிப்பிட்டது போன்ற இன்னும் சில அனுபவங்கள் எனக்கு உணர்த்தியுள்ளன. கூடுதலாக, தமிழ்நாட்டில் கீழ்வரும் மனிதர்கள் இருப்பதும், 'அந்த' போக்கிற்கு அடித்தளமானது;

என்ற ஆய்வு முடிவும் எனக்குக் கிட்டியது

எனக்கு வேண்டிய நபரைப் பற்றி இன்னொரு நபர் என்னிடம் குறை சொன்னால், குறை சொல்பவர் மீது எனக்கு நம்பிக்கை இல்லை என்றால், அதை குப்பையாகக் கருதி ஒதுக்குவேன்

அதில் 1 % எனக்கு சந்தேகம் இருந்தாலும், சம்பந்தப்பட்ட நபரிடம் நேரடியாக விளக்கம் கேட்டு, அக்குறையானது 'பொய்' என்று நிரூபணமானால், குறை சொன்ன நபரையும் சம்பந்தப்பட்ட நபர் முன்னிலையில் அழைத்து, தெளிவுபடுத்தி, முதுக்குக்குப் பின்னால், பொய்களை பரப்புவதைத் தவிர்க்குமாறு கண்டிப்பேன்

எனது முதுகுக்குப் பின்னால், என் மீது பரப்பப்படும் பொய்களை நம்பும் 'முட்டாள்கள்' பற்றி கவலைப்பட்டு, அவர்களிடன் சென்று, 'நான் யோக்கியன்' என்று நிரூபிப்பதில் எனது நேரத்தினை என்றும் விரயப்படுத்தியதில்லை: 'பிம்ப' சிறையில் நான் சிக்க விரும்பாததால்.

தனிமனித அளவில் பிம்பத்தைப் பற்றி கவலைப்படாமல், நேர்மையாக கடும் எதிர்ப்புகளை சந்தித்து, மேலை நாடுகளில், பெட்ரண்ட் ரஸ்ஸல், ஸ்பினோசா போன்ற பலர் வாழ்ந்துள்ளனர். இந்தியாவில் நானறிந்தது வரையில், அவ்வாறு பிரமிக்கும் வாழ்ந்தவர் .வெ.ரா என்பதை ஏற்கனவே நான் விளக்கியுள்ளேன்
(‘ஆர்.எஸ்.எஸ் இந்துத்வா ஆதரவு அறிவுஜீவிகளின் பங்களிப்பால்; 'பெரியார்' சிறையிலிருந்து மீளும் .வெ.ரா? (1)’; http://tamilsdirection.blogspot.com/2018/04/normal-0-false-false-false-en-us-x-none_21.html)

அவ்வாறு என் முதுகுக்குப் பின்னால் குறை சொல்பவர்களை அடையாளம் கண்ட பின்னர், அத்தகையோரையும், அவர்களின் பொய்களை நம்பும் முட்டாள்களையும், ஒதுக்கி வாழ்வதில் மிகவும் கவனமாயிருக்கிறேன். அவ்வாறு மிகுந்த கவனத்துடன் வாழத் தொடங்கிய பின்னர், நேர விரயங்களைத் தவிர்த்து, பிரமிக்கும் வகையிலான ஆய்வு முடிவுகளோடு எனக்கும், சமூகத்திற்கும், இயற்கையுடனும், எனது இயல்புடனும் 'ஒத்திசைவான' (Resonance) வாழ்க்கையில் முன்னேறி வருகிறேன்

ஒருவரிடம் நேரடியாக தெரிவிக்கும் துணிச்சலின்றி, முதுகுக்குப் பின்னால் குறை சொல்பவர்களும், அவர்களின் பொய்களை நம்பும் முட்டாள்களும், எனது ஆய்வில், சமூக முதுகெலும்பு முறிந்த கோழை யோக்கியர்களாகவும், தாழ்வு மனப்பான்மையில், 'பணமே தெய்வம்' என்று வாழும் 'வாழ்வியல் புத்திசாலி'(?) முட்டாள்களாகவுமே வெளிப்பட்டுள்ளார்கள்.

தமது பட்டம் பதவியின் அருமை தெரியாமல் தம்மிடம் வெளிப்படும் தவறுகளை பகிரங்கமாக ஒத்துக் கொள்கிறாரே; என்று என்னைச் சுற்றியுள்ள சிலர் நினைத்தாலும், அதைப் பற்றி கவலைப்படாமல்;

தம்மை விட பட்டத்திலும், பதவியிலும் கீழானவர்களிடம் இருந்து வெளிப்படும் புதிய தகவல்களையும் பகிரங்மாக பாராட்டி ஏற்றுக் கொள்வதிலும் குவியமாக நான் இருப்பதால்;

எனது ஆய்வுகள் எல்லாம் நானே வியக்கும் அளவுக்கு வெளிப்பட்டு வளர்ந்து வருகின்றன. அதே நேரத்தில், 'பிறர் நம்மை பெரிதாக நினைக்க வேண்டும்' என்ற சமூக ஒப்பீடு நோயில் சிக்காமல், நான் பயணித்து வருவதால், திட்டமிடாமலேயே என்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு நான் ஒரு சமூக பொறியியல் வினை ஊக்கியாக (Social Engineering Catalyst) செய்ல்படுவதையும் உணர்ந்து வருகிறேன். உதாரணத்திற்கு ஒரு அனுபவம்.

நான்  சில வருடங்களுக்கு முன் தங்கியிருந்த வீடு, பேருந்து நிறுத்தத்தில் இருந்து சுமார் 30 நிமிடங்கள் நடக்கும் தூரத்தில் இருந்தது. புதிதாக ஒருவர் என்னைப் பார்க்க ஆட்டோவில் வந்த போது, அந்த ஆட்டோவின் கட்டணத்தை நானே கொடுத்தேன். அதன்பின் நடந்த உரையாடலில், அந்த நபர் தான் எங்கு சென்றாலும் ஆட்டோவில் தான் செல்வதாகவும், நடந்து செல்வதில்லை என்றும் சற்று பெருமையுடன் தெரிவித்தார்.  ஆனால் நான் தினமும் அந்த பேருந்து நிறுத்தம் வரை நடைப்பயிற்சி மேற்கொள்வதையும்,  வெளியூர் சென்று வரும்போது, வெயில், மழை தவிர்த்த நேரங்களில், ஆட்டோவை நாடாமல் நடந்தே வீட்டுக்கு வருவதையும் பின்னர் அவர் அறிந்தார்.

அதன்பின் என்னைப் பார்க்க வரும் சமயங்களில், வெயிலில் கூட அந்த பேருந்து நிலையத்தில் இருந்தே நடந்து, என்னைப் பார்க்க வரத் தொடங்கினார். அவர் முன்பு என்னிடம் சொல்லியதை, நான் எந்த சமயத்திலும் நினைவூட்டவில்லை

அது மட்டுமல்ல, என்னிடம் இல்லாத திறமைகள் என்னைச் சுற்றியுள்ளவர்களிடம் இருந்து வெளிப்படுவதை நான் அடையாளம் கண்டவுடன், அதையும் பகிரங்கமாகப் பாராட்டி, என்னால் இயன்ற அளவுக்கு அகவயப்படுத்தியும் வாழ்கிறேன். என்னைச் சுற்றியுள்ளவர்கள் தாழ்வு மனப்பான்மையில் அழுக்காறு நோயில் சிக்கும் வாய்ப்புகளும், அதன் மூலம் அகற்றப்படுகின்றன. அந்த வகையில், அவர்களும் ஒரு சமூக பொறியியல் வினை ஊக்கியாக (Social Engineering Catalyst) எனக்கு வெளிப்பட்டு வருகிறார்கள்.

தினமும் காலையில் விழித்தது முதல், இரவு தூங்கத் தொடங்கும் வரை, தமது குடும்பம், நட்பு உள்ளிட்டு அனைத்து மனித உறவுகளிலும், யார் யார் வசதியில் செல்வாக்கில் வளர்கிறார்கள் என்பதைக் கண்காணித்து, ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் வசதியானவர்களுக்கு 'எப்படி வாலாட்டி' நெருக்கமாகி 'தாமும் வளர்வது' என்பதையே வாழ்வின் 'இலட்சியமாக' கருதி வாழ்பவர்களில்,- பெரியார் கொள்கைப் பற்றில் நான் 'ஏமாந்து' எனது சமூக வட்டத்தில் அனுமதித்ததால் -  எனது சமூக வட்டத்தில் இருந்தவர்களும், இருப்பவர்களில் சிலரும் என்னை 'வாழத் தெரியாத முட்டாளாக'க் கருதி, தமக்குள் எள்ளி நகையாடியதை நான் அறிவேன்.என்னிடம் அதை நேரில் வெளிப்படுத்தியவர்களும் அதில் அடக்கம். கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிய எனக்கு, விவாதத்தின் பொருள் (Subject) வரை எல்லைகள் (limitations) தெரியாமல், விவாதிப்பவர்களை நோக்கியும் விவாதத்தினைத் திருப்பும் அனுபவமும், அத்தகையோரிடமிருந்து 'புதிதாக' கிடைத்ததானது, அரிய சமூகவியல் 'சிக்னல்' ஆனது. (பெரியார் இயக்க தொடர்புக்கு முன்னும், விலகிய பின்னும் அத்தகையோர் எனது சமூக வட்டத்தில் இடம் பெற்றதில்லை. அதே நேரத்தில், பெரியார் இயக்க தொடர்பு காலத்தில் மிகவும் மதித்துப் போற்றத்தக்கவர்களும் எனக்கு நண்பர்களாகக் கிடைத்து, இன்றுவரை தொடர்வதையும் குறிப்பிட்டாக வேண்டும்.)

அப்படி என்னை முட்டாளாகக் கருதி வாழ்ந்தவர்களில் ஒருவரான நபருக்கு, இந்திய அளவில் 'மிக முக்கியமானவர் என் நண்பர்' என்று தெரிந்ததும், என்னுடன் இருந்து, தொடர்பற்ற நட்பைப் புதுப்பித்துக் கொள்ளும் 'வெறி'யுடன் என்னைச் சந்திக்க முனைந்தது, தொடர்பான அனுபவத்தினை ஏற்கனவே விளக்கியுள்ளேன்

அதன் பின், சாமான்யர்கள் என்னை எளிதில் சந்திக்க முடியும் அளவுக்கு, முன்பின் தெரியாத அல்லது நான் ஒதுக்கி வைத்துள்ள‌ 'பிரபலங்கள்' எல்லாம், என்னுடன் தொலைபேசியில் கூட தொடர்பு கொள்ள முடியாத அளவுக்கு, 'சமூகக் கிருமி வ‌டிப்பான்கள்' உடன் வாழ்ந்து வருகிறேன்; ‘ஈமெயில்’ தொடர்புகளில் மட்டும் அவர்களையும் அனுமதித்து

ஆதாய அரசியலில் பயணிக்கும் கட்சிகள் எல்லாம்;

ஏற்கனவே 'ஆதாய தூண்டிலில்' சிக்காத சாமான்யர்களை நெருங்க முடியாத அளவுக்கு, மைக்ரோ உலகில் 'சமூகக் கிருமி வடிப்பான்கள்' வெளிப்பட்டு வருகின்றன; இன்று மேக்ரோஉலகில் 'பெரிதாக' தோன்றும் கட்சிகளின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கி. (http://tamilsdirection.blogspot.com/2018/08/normal-0-false-false-false-en-us-x-none_28.html )

முதுகுக்குப் பின்னால் குறை சொல்லும் 'வாழ்வியல்(?) புத்திசாலி முட்டாள்கள்' உள்ளிட்டு, சுயலாபக் கள்வர்களாக இருந்தவர்கள்/இருப்பவர்கள் எல்லாம், 'நாம் எப்படி வாழக்கூடாது?' என்று நமக்கு எச்சரித்து வாழ்கிறார்கள். அவர்களின் வாடையே இல்லாமல் வாழும்போது  தான், நமது வாழ்வானது பிரமிக்கும் வகையில் முன்னேறும் என்பதும் எனது அனுபவமாகும். (http://drvee.in/ )


குறிப்பு:

‘‘மார்க்சிய லெனினிய புலமையுடன், 'பெரியார்' கொள்கையாளராக பயணித்து வந்த நான், பின் 'இசையின் இயற்பியல்' (Physics of Music) நோக்கில், பழந்தமிழ் இலக்கியங்களில் மேற்கொண்ட ஆய்வுகளின் மூலம்;

'இனம்', 'சாதி' தொடர்பான மேற்கத்திய சூழ்ச்சியில், .வெ.ரா அவர்கள் சிக்கி;

1944வரை அவரின் இணையற்ற தியாகத்தால் சேமித்திருந்த சமூக ஆற்றல்கள் எல்லாம்;

'திராவிடர், திராவிட' சிறை உருவாக்கத்திற்கு பயன்பட்டு, தமிழையும், தமிழர்களையும், தமிழ்நாட்டையும் சீரழித்து வருவதை கண்டு பிடித்தேன். 2005-இல் நான் தஞ்சை இரத்தினகிரியை சந்தித்த வேளையில், அதை தெரிவித்தேன். இன்றுவரை அதை மறுத்தோ அல்லது ஏற்றுக் கொண்டோ, அவர் எந்த விளக்கமும் தரவில்லை.’ 

No comments:

Post a Comment