Saturday, May 4, 2019

'பெரியார்' சிறையிலிருந்து மீளும் ஈ.வெ.ரா? (3)



.வெ.ரா அவசர சிகிச்சைப் பிரிவில்;

காப்பாற்றப் போவது எச்.ராஜாவா? திராவிடர் தளமா?



தமிழ்நாட்டில் பொது அரங்கில் நான் சந்தித்து வரும் அனுபவத்தினை கீழ்வரும் உதாரணம் மூலமாக விளங்கிக் கொள்ளலாம்.

மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் ஆக்சிஜன் உதவியுடன் ஒரு நோயாளி உயிருடன் நீடிக்கிறார். அந்த நோயாளி 'இருப்பதை விட இறப்பதே மேல்' என்று கருதும் ஒருவர், தமது அறியாமையில், 'அந்த' நோயாளிக்கு அவ்வப்போது ஆக்சிஜன் 'வற்றாமல்' வழங்குவதில் 'குவியமாக' இருக்கிறார். அந்த நோயாளிக்கு அருகே, அவரின் மெய்க்காப்பாளர் போல, 'அந்த' நோயாளிக்கு மிகவும் வேண்டியவர், தமது அறியாமையில் 'அந்த நோயாளி' ஆரோக்கியமாக இருப்பதாகக் கருதிக் கொண்டு இருக்கிறார். நானும் அங்கு அருகில் இருந்து, 'அந்த' நோயாளியின் உயிரைக் காப்பாற்ற விரும்பி, அதற்கான மருந்தினைக் கண்டுபிடித்து கொடுக்க முயல்கிறேன். 'ஆரோக்கியமாக இருப்பவரை நோயாளியாக' நான் கருதுவதாக, 'அந்த' மெய்க்காப்பாளர் என் மீதும், ஆக்ஸிஜன் வழங்கும் நபர் மீதும், கோபமும், வெறுப்பும் கொண்டு, 'அந்த' மருந்தையே 'அவமானமாக' கருதுகிறார். முன் சொன்ன நபரோ, சாக வேண்டிய நச்சுக்கிருமி மீது, அறியாமையில் அல்லது கடந்து வந்த பாதை காரணமான பற்றில், முட்டாள்த்தனமாக எனது ஆற்றலையும், நேரத்தையும் வீணடிப்பதாகக் கருதுகிறார். அதற்கிடையில், 'அந்த' நோயாளி மூலமாக, 'அதீத' பலன்கள் பெற்ற நபர்கள் எல்லாம், 'சுருட்டியதை' பாதுகாத்துக் கொண்டு, மேலும் சுருட்டும் நோக்கில் குவியமாக இருக்கிறார்கள்

சமூக மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் 'சமூக ஆக்சிஜன்' உதவியுடன், 'பெரியார்' நோயாளியாகஉயிருடன் இருப்பவர் .வெ.ரா.  'அந்த' நோயாளி மூலமாக, 'அதீத' பலன்கள் பெற்ற நபர்கள் எல்லாம், 'சுருட்டியதை' பாதுகாத்துக் கொண்டு, மேலும் சுருட்டும் நோக்கில் குவியமாக இருப்பவர்கள் யார்? என்று அடையாளம் காட்டும் திறவுகோலையும் ஈ.வெ.ராவே வழங்கியுள்ளார். 'அந்த' திறவு கோல், தமிழ்நாட்டில் அனைத்து கட்சிகளிலும் உள்ள பொதுவாழ்வு வியாபாரிகளை எல்லாம் அடையாளம் காட்டும் வலிமையுடையது ஆகும். 
(http://tamilsdirection.blogspot.com/2016/10/blog-post.html)

'அந்த நோயாளியான .வெ.ரா' எந்த அளவுக்கு சுயலாப நோக்கின்றி, தமது அறிவுக்கு 'சரி' என்று பட்ட வழிகளில், இன்று சுமார் 50 வயதுக்கும் அதிகமானவர்களில் பெரும்பாலோர் ( ஆத்திகர்களாக இருந்தாலும், .வெ.ரா-வின் கடவுள் அவமதிப்பையும், தமிழ் அவமதிப்பையும் பொறுத்துக் கொண்டு), அவரை மதிக்கிறார்கள்;

என்பது புரியாதஅறியாமையில், 'அந்த' நோயாளிக்கு அவ்வப்போது ஆக்சிஜன் 'வற்றாமல்' வழங்கி 'குவியமாக' இருக்கிறார்கள்;

எச்.ராஜா போன்றவர்கள் உணர்ச்சிபூர்வமாகவும், அவருக்கு ஆதரவாக, அறிவு பூர்வமாகவும்; 'காலதேசவர்த்தமான மாற்றங்களுக்கு உட்படாமல் கேலியாகி வரும் 'பகுத்தறிவின்' பங்களிப்பில். (‘ஆர்.எஸ்.எஸ் இந்துத்வா ஆதரவு அறிவுஜீவிகளின் பங்களிப்பால்; 'பெரியார்' சிறையிலிருந்து மீளும் .வெ.ரா? (1) ; http://tamilsdirection.blogspot.com/2018/04/normal-0-false-false-false-en-us-x-none_21.html   )

எச்.ராஜாவும் இந்துத்வா முகாமில் அவரை ஆதரிப்பவர்களும், தமிழ்நாட்டில் 'பிராமண எதிர்ப்பை' குறைக்கும் நோக்கிலாவது, சென்னை ..டியில் விஞ்ஞானி வசந்தா கந்தசாமிக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து குரல் கொடுத்திருந்தால், நீண்ட கால போராட்டத்திற்குப் பின், உயர்நீதிமன்றம் மூலமே அவருக்கு நீதி கிடைக்க வேண்டிய அளவுக்கு (Madras HC slams IIT-M’s gross irregularities in selection of professors; https://www.deccanchronicle.com/nation/in-other-news/230816/madras-hc-slams-iit-ms-gross-irregularities-in-selection-of-professors.html  ) தாமதமாகியிருக்காது. இன்று பூணூலை அறுத்தவர்கள் சார்ந்துள்ளதாக சொல்லப்படும் 'பெரியார்' கட்சிகள் அவரின் போராட்டத்திற்கு ஆதரவளித்து 'நல்ல பேர்' வாங்கியிருக்க முடியாதுசமுக நீதிக்கு எதிராக பாரபட்ச போக்கு இருக்கும் வரை, பிராமண எதிர்ப்பு சூழல் தொடரும். பிராமண எதிர்ப்பும் சரி, பூணூல் அறுப்பு சம்பவங்களும் சரி, 1944இல் திராவிடர் கழகம் தொடங்குவதற்கு முன்பே இருந்திருக்கின்றன. திராவிடர் கழகம் தொடங்கிய பின் பூணூல் அறுப்பு சம்பவங்கள் எண்ணிக்கையில் குறைந்து விட்டதாக, 'பெரியார்' .வெ.ராவின் 'பட்டுக்கோட்டை சொற்பொழிவு' ஒலிப்பதிவில் நான் கேட்டிருக்கிறேன்.

.வெ.ரா அவர்கள் வலியுறுத்திய 'காலதேச வர்த்தமான மாற்றங்களுக்கு' அவரின் கொள்கையை அறிவுபூர்வமாக உட்படுத்தி வளர்த்தெடுக்காமல், உணர்ச்சிபூர்வமாக பயணித்து 'சருகாகி' வரும் ' பெரியார்' கட்சிகளுக்கு எச்.ராஜா போன்றவர்கள்ஆக்ஸிஜன்வழங்கி 'உயிருடன் நீடிக்க உதவி வருவதையும் ஏற்கனவே விளக்கியுள்ளேன் (‘'உணர்ச்சிபூர்வ வெறுப்பு'  அரசியலும், பூணூல் அறுப்பும்’; http://tamilsdirection.blogspot.com/2018/03/normal-0-false-false-false-en-us-x-none_9.html )

பாரதியார், ஈ.வெ.ராவுக்கு வயது 10 ஆக இருந்த காலத்தில் தனது மகளுக்கு விதவை திருமணம் செய்த ஜி.சுப்பிரமணிய ஐயர் (https://en.wikipedia.org/wiki/G._Subramania_Iyer), மதுரை வைத்தியநாத ஐயர் (https://en.wikipedia.org/wiki/A._Vaidyanatha_Iyer) போல தமிழ் நாடெங்கும் சமூக சீர்திருத்த நோக்கில் வாழ்ந்த பிராமணர்களை எல்லாம் ஊக்குவிப்பதற்கு பதிலாக, கண்டித்து ஒதுக்கி வைத்த பிராமணர்களே 'திராவிடர் கழகம்' தோன்றுவதற்கு காரணமானார்கள். அது தொடர்பாக, 'தமிழில் 'பிராமணரும்', 'திராவிடரும்', காலனிய சூழ்ச்சியா? 'திராவிடர் கழகமும்', 'பிராமணர் சங்கமும்'; ஒரே காலனிய சூழ்ச்சியில் சிக்கிய, நாணயத்தின் இரு பக்கங்களா?' என்ற விளக்கத்தினையும் வெளிப்படுத்தியுள்ளேன். 
(http://tamilsdirection.blogspot.com/2016/06/normal-0-false-false-false-en-in-x-none_8.html &
http://tamilsdirection.blogspot.com/2017/10/2.html)  

ஆங்கிலவழிக்கல்வி வியாபாரத்தில் தாய்மொழி தமிழைக் காவு கொடுத்தும்; ஏரிகள், கால்வாய்கள், கிரானைட், தாது மணல், உள்ளிட்ட இன்னும் பல கனி வளங்களை கொள்ளையடித்தும்; ஊழல் துணிச்சலில், சட்டத்தின் மீது பயமின்றி, கொலை, கொள்ளை, மோசடி குற்றங்கள் 'அதி வேகமாக' அதிகரித்து வரும் போக்கிற்கும், காரணமான அரசியல் கொள்ளையர்களை எதிர்க்காமல் பயணிப்பதில், 'திராவிடர் கழகமும்'(மற்ற 'பெரியார்' கட்சிகளும்), 'பிராமணர் சங்கமும்' ஒன்றுபட்டுள்ளார்களா? என்பதும் ஆய்விற்குரியதாகும். (http://tamilsdirection.blogspot.com/2016/11/normal-0-false-false-false-en-in-x-none_11.html) 'பெரியார் தந்த புத்தி'யில் திராவிடர் கழகம் ஆதரித்த (சசிகலா) நடராஜனை 90% பிராமணர்கள் 'உயிருக்கு உயிராக' நேசிப்பதையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.(https://www.youtube.com/watch?v=oeoYzJELPjk&feature=youtu.be & http://tamilsdirection.blogspot.com/2017/01/blog-post_18.html)

இன்றும் தமிழ்நாட்டில்  'செல்வாக்கான' இடங்களில் உள்ள பிராமணர்கள் ஆங்காங்கே; 

சென்னை ஐ.ஐ.டியில் விஞ்ஞானி வசந்தா கந்தசாமி சந்தித்தது போன்ற கொடுமைகளை இழைத்து வருவதைத் தேடி அடையாளம் கண்டு, செயல்பூர்வமாக எதிர்த்து எச்.ராஜாவும், அவரின் ஆதரவாளர்களும் செயல்படாத வரையில்;

'முட்டாள்த்தனமாக' பேசிக்கொண்டு, எழுதிக்கொண்டு, ஆனால் விஞ்ஞானி வசந்தா கந்தசாமி போன்றவர்களுக்கு, 'பெரியார்' ஆதரவாளர்கள் நம்பமுடியாத உதவிகள் புரியும் வரையில்;

தமிழ்நாட்டில் பா..கவின் வளர்ச்சிக்கான தடைகளாகவே எச்.ராஜாவும், அவரின் அறிவுபூர்வ ஆதரவாளர்களும் வெளிப்பட்டு வருவார்கள்

எச்.ராஜா .வெ.ரா-வையும், அண்ணாவையும் இழிவுபடுத்திய ஒலி, ஒளிப்பதிவுகளை அவர் போட்டியிட்ட தொகுதியில் கிராமந்தோறும் பரப்பியிருந்தால், எச்.ராஜாவின் தோல்வி உறுதியாகியிருக்கும் என்பது எனது கணிப்பாகும். எனது கணிப்பானது தவறு என்று நிரூபணமானால், .வெ.ராவும், அண்ணாவும் தமிழ்நாட்டில் செல்லாக்காசாகி விட்டார்கள்;

என்பதன் சிக்னலாகவே அதை நான் கருதுவேன். (http://tamilsdirection.blogspot.com/2018/03/normal-0-false-false-false-en-us-x-none_9.html ) 

தாம் எதிர்ப்பவரிடம் உள்ள நல்ல கூறுகளையும், பாராட்டுபவரிடம் உள்ள கெட்ட கூறுகளையும், 'குடிஅரசு' இதழில் 1944க்கு முன்பு, 'அந்த' எதிர்ப்பிலும் பாராட்டிலும் குறிப்பிட்டு, .வெ.ரா எழுதியவைகளை நான் படித்திருக்கிறேன்.

தனி மனித உறவில், பிரமிக்கும் அளவுக்கு எச்.ராஜா நேர்மையானவர் என்பதையும், கிராமத்தில், வசதியில் மிகவும் குறைந்தஒரு பா.. தோழரின் குடும்ப திருமணத்தில் கலந்து கொண்ட அவர், விருந்தில் சைவ உணவு இல்லாததை பெரிது படுத்தாமல், அந்த தோழரின் மனம் புண்படக்கூடாது என்பதற்காக, அசைவ குழம்பை மட்டும் இலையில் இருந்த சோற்றில் கலந்து சாப்பிட்டார் என்பதையும், பா..-வில் உள்ள எனது நண்பர் ஒருவர் தெரிவித்தார்.’ என்பதையும் ஏற்கனவே பதிவுசெய்துள்ளேன்
(http://tamilsdirection.blogspot.com/2017/10/ )

‘'தமிழ் எங்கள் இழிவுக்கு நேர்' என்ற போக்கில், 'தாய்ப்பால் பைத்தியம்' நூலின் நிலைப்பாடு மூலம் .வெ.ரா மேற்கொண்ட சீர்திருத்தமானது, 'தமிழ்வேர்க்கொல்லி'யாகி வருவதை சுட்டிக் காட்ட வேண்டியசமூகப் பொறுப்பு இருப்பதாக நான் கருதுகிறேன். அதனைத் தட்டிக்கழிப்பவர்கள் எல்லாம், வரலாற்றில் குற்றவாளிகளாக இடம் பெறுவதையும் தவிர்க்க முடியாது.’ 

அதாவது தமிழ்நாட்டில் தமிழ்வழிக்கல்வியையும் (எனவே தமிழையும்) மீட்க வேண்டுமானால், அதற்கு 'பெரியார்' மரணிக்க வேண்டியதானது, திருப்ப முடியாத (irreversible) முன்நிபந்தனையாகி விட்டதா? என்ற கேள்வியை, பின் வரும் தகவல் எழுப்பியுள்ளது. 'திராவிடர் தளம்' என்ற பெயரில், அது வெளிவந்துள்ளது.

நமது குழந்தைகளுக்குக் கிடைத்த தரமான ஆங்கிலவழிக்கல்வி அனைத்துக் குழந்தைகளுக்கும் கிடைக்க நாம் போராட வேண்டும். ஆங்கில வழிக் கல்வி என்பது, பார்ப்பனர்களுக்கும், உயர்ஜாதியினருக்கும், பணக்காரர்களுக்கும் மட்டுமே கிடைக்கும் என்ற ஏற்றத்தாழ்வு நிலையைத் தகர்க்க வேண்டும்.

1. தமிழ்நாட்டின் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் தொடக்கக் கல்வியிலிருந்தே ஆங்கில வழிக் கல்வியையும் நடைமுறைப்படுத்து!

2. அரசுப்பள்ளிகளில் ஆங்கில வழியைப் பயிற்றுவிக்க இன்னும் கூடுதலாக, ஆசிரியர்களை நியமனம் செய்!

3. ஏற்கனவே ஆங்கில வழி பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்குத் தேவையான, கூடுதலான பணியிடைப் பயிற்சிகளை வழங்கு! 

 *- திராவிடர் தளம்*

தமிழ்நாட்டில் குக்கிராமங்கள் வரை ஆங்கிலவழி விளையாட்டுப் பள்ளிகள் ஊடுருவும் போக்கு தொடங்கி, தமிழில் எழுதவும், படிக்கவும் தெரியாத கல்லூரி மாணவர்கள் அதிகரித்து வரும் சூழலில், இது போன்ற பிரச்சாரம் 'தமிழ்வேர்க்கொல்லி' ஆகும். தமிழ்நாட்டில் தரமான/தரமற்ற ஆங்கிலவழிப் பள்ளிகளில் இடம் கிடைக்காமல் பெற்றோர்கள் அல்லல்பட்டு வருகிறார்கள். தரமான தமிழ்வழிக்கல்வி பள்ளிகள் மாணவர் சேர்க்கையின்றி மூடப்பட்டு வருகின்றன. (http://tamilsdirection.blogspot.com/2016/06/blog-post.html

பழைய பாணியிலேயே .வெ.ரா அவர்கள் தமிழ் தொடர்பாகவும், இலக்கியங்கள் தொடர்பாகவும் வெளிப்படுத்தியவைகளை, .வெ.ரா பாணி அநாகரீகத்துடன் வெளிப்படுத்துவதை ரசித்த காலம் முடியும் தருவாயில் உள்ளது.’
(‘'பெரியார்' சிறையிலிருந்து மீளும் .வெ.ரா? (2): திராவிடர் கழக அரங்கில் இந்துத்வா நிபுணர் உரையாற்றும் வாய்ப்பு?’;
https://tamilsdirection.blogspot.com/2019/04/normal-0-false-false-false-en-us-x-none.html)

1944இல் திராவிடர் கழகம் தொடங்குவதற்கு முன்பேயே, .வெ.ரா அவர்கள் தமது 'குடி அரசு' இதழில் காந்தியின் இரட்டை வேடப் போக்குகளை அம்பலப்படுத்தி நிறையகட்டுரைகள் வெளியிட்டிருக்கிறார். அதே .வெ.ரா அவர்கள், காந்தியின் மறைவின் போது, அவரை வானளாவ புகழ்ந்து வானொலியில் பேசினார். பின் காந்தி பிம்பமானது, பொதுவாழ்வு வியாபாரிகளின் முதலில்லாத மூலதனம் ஆனதை எதிர்த்து, 'காந்தி பொம்மைகளை உடைத்தல், படங்களை எரித்தல்' தொடர்பான பிரச்சாரங்களை மேற்கொண்டார்.

அறிவுபூர்வ விவாதத்தினை எதிர்நோக்கி முன் வைக்கப்பட்ட மேற்குறிப்பிட்ட பிரச்சாரங்களுக்கு, அந்த காலக்கட்டத்தில் தமிழ்நாட்டில் காந்தி பிரியர்கள் அறிவுபூர்வ எதிர்வாதம் முன்வைத்ததாக தெரியவில்லை. அவ்வாறு அவ்வாதம் முன்னெடுக்கப்பட்டிருந்தால், அது தமிழ்நாட்டில் தேசக்கட்டுமானத்தை (Nation Building) உருவாக்கியிருக்கும், என்பது எனது கருத்தாகும்.

அதே .வெ.ரா வழியில், 'பெரியார் பொம்மைகளை உடைத்தல், பெரியார் படங்களை எரித்தல்' பிரச்சாரம் மேற்கொள்வதை நான் பரிசீலித்தேன்
(http://tamilsdirection.blogspot.com/2017/03/blog-post_5.html )

கீழ்வரும் இரண்டு காரணங்களால், அதனை முன்னெடுக்கவில்லை.

1. .வெ.ரா தொடர்பாக நான் முன்வைத்த வாதங்களை, 'பெரியார்' கட்சிகளின் தலைமைகள் அறிவுபூர்வமாக மறுப்பதில் ஆர்வம் வெளிப்பட்டதாக தெரியவில்லை. எனவே மேற்குறிப்பிட்ட 'காந்தி பிரியர்களைப்' போலவே, 'பெரியார் பிரியர்களும்' ஒதுங்கி, சமூகத்தில் எந்த விளைவையும் ஏற்படுத்தாத வீண் முயற்சியாக வாய்ப்பிருக்கிறது.

2. எச்.ராஜாவும், அவரின் ஆதரவாளர்களும் 'பெரியார் அண்ணா'வை இழிவுபடுத்தும் திசையில் பயணிப்பதானது, தமிழ்நாட்டின் தேசக்கட்டுமான வாய்ப்பினையும், அதன் மூலமாக தமிழ்வழிக்கல்வியின் (எனவே தமிழின்) மீட்சிக்கான வாய்ப்பினையும் சீர் குலைத்து வருகிறது. எனவே அந்த போக்கு தொடரும் வரை, நான் அந்த முயற்சியில் ஈடுபடுவது தவறாகும்.

என்னைப் போல யோசிக்காமல், தமிழ்வழிக்கல்வியின் (எனவே தமிழின்) மீட்சிக்காக, 'பெரியார் பொம்மைகளை உடைத்தல், பெரியார் படங்களை எரித்தல்' பிரச்சாரம் போராட்டம் நடத்துவதற்கான சமூக சூழலானது,

மேற்குறிப்பிட்ட 'திராவிடர் தளம்' போன்ற, 'பெரியாரின் தமிழ் விரோத' ரசிகர்களின் செயல்பாடுகள் மூலமாக கனிந்து வருகிறது. 'அந்த' போராட்டமானது அரங்கேறத் தொடங்கினால், 'பெரியார்' நோயில், ஈ.வெ.ராவின் வரலாற்று மரணமானது நிச்சயமாகி விடும். 'தமிழ் வேர்க்கொல்லியாக' வரலாற்றில் அவர் இடம் பெறுவதும் நிச்சயமாகி விடும்.

'திராவிடர் தளம்' அல்லது எச்.ராஜா மற்றும் அவரின் ஆதரவாளர்கள் ஆகிய இரு பிரிவினரில் எந்த ஒரு பிரிவினராவது விழித்துக் கொண்டால், 'பெரியார்' என்ற நோயில் (அல்லது சிறையில்)  அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ள .வெ.ரா குணமடைந்து, தமிழின், தமிழ்நாட்டின் மீட்சிக்கு பங்களிக்கவும் வாய்ப்பிருக்கிறது:  

அம்பேத்காரைப் போலவே, .வெ.ரா-வையும், தாய்மொழிவழிக்கல்வி மீட்சியை முன்னெடுத்து வரும் ஆர்.எஸ்.எஸ் அங்கீகரிக்கத் தொடங்கியுள்ள சூழலில்.

‘Why RSS, the only option, to rescue the TN Tamil Medium Education & hence Tamil?
Let us say 'Goodbye to hate-politics' & embrace genuine pro-Tamil politics’; http://tamilsdirection.blogspot.com/2015/11/normal-0-false-false-false-en-us-x-none_10.html 

‘RSS joint general secretary Dr Manmohan Vaidya on 17-05-2018, Thursday expressed confidence that the Sangh would able to strengthen its base in Tamil Nadu, explaining that there is much in common between Periyar’s Dravidian principles and the RSS ideology, as both advocate equality in society without caste and communal differences and class distinctions.’ ; https://indiainteracts.wordpress.com/2018/05/19/evrs-hindutwa-or-hindutwa-of-periyar-rsss-comparison-of-ideologies-of-periyar-and-hindutwa/


குறிப்பு: ‘It is definitely incorrect to compare or equate Periarist ideology with that of RSS ideology, as both would not match with each other on many accounts.’ என்ற நோக்கில், மேற்குறிப்பிட்ட பதிவில் ஈ.வெ.ராவிற்கு எதிராக முன்வைக்கப்பட்ட வாதங்கள் எவ்வாறு தவறானவை? என்று கீழ்வரும் பதிவில் விளக்கியுள்ளேன்.

‘பிராமண எதிர்ப்பு செனோபோபியாவும், ஈ.வெ.ரா எதிர்ப்பு செனோபோபியாவும்’; 

http://tamilsdirection.blogspot.com/2018/11/5.html  

Note: My book ‘Ancient Music Treasures – Exploring for New Music Composing’ in Amazon (both KDP & Paperback)

No comments:

Post a Comment