Tuesday, July 7, 2020


சமூகக் கொரோனா நோய்க்கிருமிகளிடமிருந்து தப்பிப்பதன் மூலமாக,


எவ்வாறு நமது நோய் எதிர்ப்புத் திறனை (immunity) வளர்க்க முடியும்?



தமிழையும் தமிழ்நாட்டையும் சீரழித்து வரும், சமூகக் கொரோனா நோய்க்கான மருந்தையும், நான் கண்டுபிடிக்க முயற்சித்து வருவதை ஏற்கனவே பதிவு செய்துள்ளேன். 

அந்த முயற்சியின் வளர்ச்சியானது, கொரோனா நோயில் இருந்து தப்பிக்க உதவும் வழிமுறையுடன் சங்கமமாகியுள்ளது. இது நான் எதிர்பாராத இன்ப அதிர்ச்சியாகும்.

கொரோனா காரணமாக உருவாகியுள்ள சமூக சூழலில், 'பணமே தெய்வம்' என்று வாழ்ந்து வருபவர்கள் எல்லாம் எவ்வாறு முட்டாள்களாக வெளிப்பட்டு வருகிறார்கள்? என்பதை ஏற்கனவே விளக்கியுள்ளேன்.

தன்மானமிழந்து அதிவேகப்பணக்காரராகி காசுக்குத் துதிபாடும் பரிவாரங்களுடன் முக்கியத்துவப் போதையில் மிதந்தே வாழ்ந்த  மேற்குறிப்பிட்ட வாழ்வியல் புத்திசாலிகள்  எல்லாம், கொரோனா தனிப்படுத்தலில்;

பணத்திற்காக தமக்கு மேல் உள்ளவர்களுக்கு வாலாட்ட முடியாமலும், அந்த தன்மானக்கேட்டினை ஈடு செய்து கொள்ள, தம்மிடம் ஆதாயத்திற்காக பலர் தம்மிடம் வாலாட்ட வைத்து மகிழ முடியாமலும்;

தமக்கு தெரியாமல் வேறு யாரும் தலைமைக்கு வாலாட்டி, கட்சியில் நமக்குள்ள முக்கியத்துவம் கீழிறங்குமா? என்று தெரிந்து கொள்ள முடியாத குழப்பத்திலும்;

கொரோனா தொடர்பான ஊரடங்கு உத்திரவினை பின்பற்றுவதில் என்னென்ன சிக்கல்களைச் சந்தித்து, எத்தகைய மனநோய்களுக்கு உள்ளாகிறார்கள்? என்பதெல்லாம் இனி தான் வெளிப்படும். தம்மைப் பற்றிய அதீத போதையில் வாழும் பலர், பொதுஅரங்கில் சாமான்யர்களைப் போல வாழ்வதானது கேவலம் என்று கருதி, அதற்காகவே அரசியல் கொள்ளையர்களை  எதிர்க்காமல், நெருக்கமாகும் வாய்ப்புக்கு ஏங்கி வாழ்பவர்களும் இருக்கிறார்கள்.

அத்தகையோர் எல்லாம் வாழ்க்கையைக் காதலிக்க தெரியாத முட்டாள்த் தமிழர்கள் ஆவார்கள். 

கொரோனா நோயில் இருந்து தப்பிக்க உதவும் வழிமுறைகளில் ஒன்றாக, ஏர்கண்டிசன் வாழ்க்கையை தவிர்ப்பது உள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளான நபர்கள் எல்லாம் விமானம் மூலம் வந்தவர்கள், தொற்றுள்ள நபர்கள் இருந்த கருத்தரங்குகளில், கடைகளில், சர்ச்சுகளில், மசூதிகளில் அது போன்ற மக்கள் கூடும் இடங்களில் கலந்து கொண்டவர்களாக இருந்தார்கள். அவ்வாறு தொற்று நடைபெற்ற இடங்கள் எல்லாம் ஏர்கண்டிசன் செய்யப்பட்டிருந்த இடங்கள் ஆகும்.

ஏர்கண்டிசன் அறைகளிலும் அரங்குகளிலும் நோய்த் தொற்றுக்கான வாய்ப்புகள் இருக்கின்றன

‘Being in open spaces, research has proved, strengthens your immunity since white blood cells that fight bacteria need oxygen to function effectively. A free supply of oxygen means your blood pressure and heart rate is in check since the body isn’t overworking itself to acquire it.

Blood oxygen levels are also linked to serotonin, the ‘happiness hormone’, which is why you are more likely to slip into a refreshed, relaxed state when in green outdoors.

The hitch, of course, is that most urban residents end up spending close to nine hours a day in air-conditioned offices, often following it up with a whole night’s sleep in closed, cool bedrooms.

Your lungs are the first hit, which is why respiratory infections including common cold, frequent headaches, itchy throat and symptoms of flu, are most common among young, urban professionals. Fresh air that helps the lung’s airways to dilate, releasing airborne toxins from your system, is scant in swanky AC offices.’ ;

எனவே கொரோனா நோய்த்தொற்றுக்கு உள்ளாவதைத் தடுக்க, இயற்கையான காற்றோட்டத்தில் வாழ்வது உதவும். அவ்வாறு வாழ்பவர்களுக்கு வியர்வையின் மூலமாக கழிவுகள் வெளியேறும் வாய்ப்புகளும் அதிகமாகும்

அது நோயின்றி வாழ உதவும்.

தமது இளமை காலம் வரை வசதியின்மை காரணமாக, இயற்கையான காற்றோட்டத்துடனும் வியர்வை அவ்வப்போது வெளியேறும் வகையிலும் வாழ்ந்தவர்களில், குறுக்கு வழிகளில் அதிவேக பணக்காரராகி .சி வாழ்க்கையில் வாழத்தொடங்கியவர்களில் 60 வயதைக் கடந்தவர்கள் எல்லாம், சிறுநீரக பாதிப்பு(Kidney damage), சர்க்க‌ரை நோய் (diabetes) இருதய பாதிப்பு (Heart damage), மூளை பாதிப்பு (Brain Damage) உடலின் முக்கிய உறுப்புகள் பாதிக்கப்பட்ட நோயாளிகளாகவே வெளிப்பட்டுள்ளனர். அத்தகையோரின் நோய் எதிர்ப்பின்மை காரணமான, கொரோனா நோயில் சிக்கி விட்டால் தப்பிப்பது கடினமாகும்.

முதல்வர் பொறுப்பில் இருந்த அண்ணா தாம் விரைவில் மரணமடைய விரும்பியதற்கும், அவரை உருவாக்கிய தலைவராக இருந்த .வெ.ரா மனம் வெறுத்து, தாம் முனிவராக விரும்பியதற்கும், காரணமான ஊழல் குடும்பங்கள் எல்லாம், இயற்கையின் போக்கில் அவரவருக்கான தண்டனைகளை அனுபவிக்கும் படலமும் தொடங்கி விட்டது
(https://tamilsdirection.blogspot.com/2016/12/normal-0-false-false-false-en-us-x-none_30.html)

கொரோனா நோய்த்தடுப்பு மருந்துகளின் மற்றும் நோய் தீர்க்கும் மருந்துகளின் யோக்கியதை தெளிவாக எவ்வளவு காலம் ஆகும்? என்பது தெரியவில்லை. ஆனால் உடலின் நோய் எதிர்ப்புத்திறனை (immunity)  அதிகரிக்கச் செய்வதே, கொரோனா நோயில் இருந்து தப்பிக்கும் ஒரே வழிமுறையாக கருத்து வேறுபாடின்றி எல்லா நிபுணர்களாலும் பரிந்துரைக்கப்படுகிறது.

அதன்படி இயற்கையான காற்றோட்டத்துடனும் வியர்வை அவ்வப்போது வெளியேறும் வகையிலும் வாழ்வது உடல் அளவில் பின்பற்ற வேண்டிய வழிமுறையாகும்.

அதைவிட முக்கியமாக, நல்ல மனத்தொகுப்புடன் (Good Mindset) வாழ்வதும் மிக முக்கிய வழிமுறையாக நிபுணர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.

Researchers have, for example, noticed that students with an optimistic outlook show healthier levels of immune markers during stressful exams.

Similarly, depression has been linked to a drop in immune function.; 

தீய எண்ணங்களின் உறைவிடமான தீய‌ மனநிலையைத் தவிர்த்து, நல்ல எண்ணங்களின் உறைவிடமாக நாம் வாழ்வதன் மூலமாக, எவ்வாறு நமது நோய் எதிர்ப்புத் திறனை கூட்டுவது? என்பதைக் கீழ்வரும் காணொளி விளக்கியுள்ளது.


மற்றவர் காரை விட, அதிக விலையுள்ள கார் தம்மிடம் இருக்கிறதா? மற்றவர் வீட்டை விட, அதிக மதிப்புள்ள வீடு தம்மிடம் இருக்கிறதா? மற்ற குடும்ப குழந்தைகளை விட, நமது குழந்தைகள் (அவர்களை உடைமைக் கூண்டில்- possessive prison- சிறைப்படுத்தி) படிப்பில்/விளையாட்டுகளில் 'அதிகம் சாதிக்கிறார்களா? மற்றவரை விட, குறுகிய காலத்தில், அதிகமாக சம்பாதிக்க முடிகிறதா? என்பது போன்ற இன்னும் பல 'போட்டிகளில்' சாகும் வரை, 'ஓடி'க் கொண்டிருக்க வேண்டிய 'கட்டாயத்தில்' சிக்கி வாழ்பவர்கள் எல்லாம் நோய் எதிர்ப்பின்மை குறைந்து எளிதில் கொரோனா நோயில் சிக்கும் வகையில் வாழ்பவர்கள் ஆவார்கள். 

அத்தகையோரைத் தவிர்த்து வாழ்வதன் மூலமாக, நாம் நமது நோய் எதிர்ப்பு வலிமையை வளர்க்க முடியும்.

நல்ல மனத்தொகுப்பு உள்ளவர்கள் சூழ வாழ்வதும், தீய மனத்தொகுப்பு உள்ளவர்களைத் தவிர்த்து வாழ்வதும், நமது நோய் எதிர்ப்புத் திறனை வளர்க்க உதவும். ஏற்கனவே நோயுடன் வாழ்ந்தவர்கள் எல்லாம், அந்த நோய்களில் இருந்து விடுபடும் வாய்ப்புகளும் கூடும்நோய் எதிர்ப்பு வலிமை தரும் உணவுகளை, நல்ல மனநிலையில் சாப்பிடும் போது தான், அவை நல்ல பலனைத் தரும்.

Immunity is the ability to fight against bacteria and viruses that cause illness in our body and help to protect our bodies and keep them healthy.

the immune system of the mind can not grow alone. It occurs when we accept the mind of people who fight against problems and when we remain in the company of people with a positive mindset continually.

எனவே மேற்குறிப்பிட்ட ஓட்டப்பந்தயத்தில் ஓடிக்கொண்டிருப்பவர்கள் எல்லாம், சமூக அளவில் கொரோனா தொற்றை பரப்ப வாய்ப்புள்ள சமூகக் கொரோனா நோய்க்கிருமிகள் ஆவார்கள்.

தமிழ்நாட்டு அரசியல் தாதாக்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் ஒன்றாக தமது குடும்பம் இல்லையே என்ற துணிச்சலுடன், அவர்களை ஆதரித்த அனைவருமே கேடுகளுக்குப் பங்களித்த‌ 'சமூகக்கொரோனா' நோய்க்கிருமிகள் ஆவார்கள்; நாமாயிருந்தாலும்; நமக்கு வேண்டியவர்களாயிருந்தாலும்.

தெரிந்தோ தெரியாமலோ தவறு புரிந்தவர்கள் எல்லாம், தமது தவறை பகிரங்கமாக ஒப்புக்கொண்டு, மேற்குறிப்பிட்ட தாதாக்களை விட்டு விலகி, அவர்களால் விளைந்த பாதிப்புகளில் இருந்து தமிழையும் தமிழ்நாட்டையும் மீட்க, சுயலாப நோக்கின்றி தம்மால் இயன்ற முயற்சிகள் மேற்கொள்வதன் மூலமாகவே, இயற்கையின் மற்றும் சமூகத்தின் சாபத்தில் இருந்து தப்பிக்க முடியும்

பணம், புகழ் சம்பாதிப்பதற்காக, அகத்தில் சீரழிந்து, தமது 'சுயலாப கணக்குகளை' புத்திசாலித்தனமாக மறைத்து, தமது முதுகுக்குப் பின்னால் தமது 'யோக்கியதையை' சிசுகிசுப்பது தெரிந்தும், தெரியாதது போல;

தமது உற்றம், சுற்றம் உள்ளிட்ட சமூக வட்டங்களில் வெளிப்படும் 'போலி' மரியாதைகளில், கள்ளுண்ட வண்டு போல;

மிதந்து வாழ்பவர்கள் எல்லாம் வடிகட்டின சமூக முட்டாள்கள் ஆவார்கள்.

அத்தகையோர் எல்லாம் வாழும்போதே மரணித்தவர்கள் ஆவார்கள்;

என்பதையும் கீழ்வருமாறு விளக்கியுள்ளேன்.

ஓரு அழிவுபூர்வ அலையியற்றியான(Negative Oscillator) நபர், தமது சமுக வட்டத்தில் ஒப்பீடு நோயைப் பரப்பும், நோய்க்கிருமியாகி விடுவார். அவரது சமூக வட்டத்தில் இயல்போடு ஒட்டிய உள்ளார்ந்த ஈடுபாடுகளுடன் வாழ்பவர்கள், அவரை விட்டு விலகி விடுவார்கள். அதன் விளைவாக, அவரது சமூக வட்டமே ஒப்பீடு நோயில் சிக்கிய, 'எந்த வழியிலும்' பணம் சம்பாதிக்க முயலும்  வட்டமாகி , சமூகத்திற்கே கேடாக அமையவும் வாய்ப்புண்டு.

அவ்வாறு 'அழிவுபூர்வ அலையியற்றி' போல இருப்பவர்களை எல்லாம், மனிதத்தில் மரணித்து வாழும் மனிதர்களாக அடையாளம் கண்டு, அத்தகையோரின் வாடையின்றி வாழ்வதும், எனது ஆய்வுகளின் வெற்றியின் இரகசியமாகும். 
(https://tamilsdirection.blogspot.com/2018/09/normal-0-false-false-false-en-us-x-none.html)


எனவே கொரோனாவில் இருந்து தப்பிக்க வேண்டுமானால், நமது நோய் எதிர்ப்புத் திறனின் வலிமையைக் கூட்ட வேண்டும். அதற்கு நாம் தீய எண்ணங்களைத் தவிர்த்து நல்ல எண்ணங்களுடன் வாழ வேண்டும். தீய எண்ணங்களுடன் வாழ்பவர்களின் வாடையின்றி வாழ வேண்டும். அவ்வாறு வாழத் தொடங்கினால், நமது நோய் எதிர்ப்புத் திறனின் வலிமை கூடுவதுடன், நம்ப முடியாத அளவுக்கு சாதனைகளைப் படைக்கும் வாழ்க்கையில், திட்டமிடாமலேயே, இயற்கையின் போக்கில் நாம் பயணிப்போம்
(https://tamilsdirection.blogspot.com/2018/08/normal-0-false-false-false-en-us-x-none_3.html)

No comments:

Post a Comment